tag:blogger.com,1999:blog-6888000028665507402024-03-13T19:32:00.883+05:30என்னில் உணர்ந்தவைஎன்னை நான் உணர துவங்கியதன் பலனாக என்னை நீங்கள் உணர ஒரு வாய்ப்புஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comBlogger346125tag:blogger.com,1999:blog-688800002866550740.post-44671506290375188982019-08-01T14:32:00.003+05:302019-08-01T14:33:32.689+05:30துர்கா மாதா - நோக்கும் போக்கும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
புது சிந்தனை புகட்டி புத்துணர்ச்சி புத்துணர்வு ஆகியவற்றை புகுத்தி மனிதன் மனிதனாக மலர்வதற்கு வழி வகுக்கும் மகோன்னத இலக்கிய வடிவம் புதினம். மேகம், கடல் நீரில் இருந்து உருவாகிறது. உயரே கிளம்பி வானத்தில் வட்டமிட்டு கடலிலும் மற்ற நில பரப்பிலும் மழை பொழிந்து பயன்படுகிறது. அவ்வாறே புதினம் கூட சமூகத்தில் இருந்து உருவாகி சமூகத்திற்கே பயன் அளிக்கிறது. மனித இயல்பும் மனித வாழ்வும் தன்னகத்தே கொண்டுள்ளதால் மனித மனங்களையும் சில சமயங்களில் இதயங்களையும் தொடுகிறது. எனவே புதினத்திற்கு வாசகர்கள் இடையே மிகுந்த வரவேற்பு. <br /><br />கல்கி, சாண்டில்யன் போன்றோர் வரலாற்றை படம் பிடித்து காட்டினர். வரலாற்று போக்கை புரிந்து கொண்டு அதில் இருந்து நன்மை பெற வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம் போலும். அகிலன், நா. பார்த்த சாரதி, ராஜவேலு போன்றோர் சுதந்திர போராட்டத்தை சித்தரித்து வாசகர்கள் மனங்களில் தேச பக்தி விதைத்தனர். அவ்வாறே சமூக சிந்தனை உள்ள பலரும் சமூகத்தில் அவ்வப்போது தலைத்தூக்கும் அவலங்களையும் மூட நம்பிக்கைகளையும் சீர்கேடுகளையும் சித்தரித்து சீர்திருத்ததிற்கு வழிவகுத்தனர். <br /><br />இத்தகைய சமூக பார்வை கொண்ட எழுத்தாளர்களில் சகோதரி ஜீவா சிறந்த இடத்தை பிடித்து துர்கா மாதா என்னும் புதினத்தை சிறப்புற படைத்திருக்கிறார். மனங்களை கவர்ந்து சிந்திக்கச் செய்யும் ஆற்றல் படைத்த சில புதினங்களில் துர்கா மாதாவுக்கும் சிறப்பிடம் இருக்கிறது என்பதில் மிகை இருக்க முடியாது. வாட்டி வதைக்கும் இக்கால பிரச்சனைகளை தன்னகத்தை கொண்டு தீர்வை நோக்கி புதினம் நடை போடுகிறது. பிரச்சனைகளை நன்கு புரிய வைத்து தீர்வுகளை திணிக்காமல் திறம்பட சிந்திக்க செய்ய இந்த புதினம் முயல்கிறது. எழுத்தாளர் சிந்தித்தவாறே வாசகரும் சிந்திப்பாரேயானால் எழுத்தாளர் எடுக்கும் செய்தியினை ஏற்பது மட்டுமன்றி கடைபிடிக்க இயல்பாயாயின் அதுதான் ஒரு படைப்பின் வெற்றி என்று அழுத்தம் திருத்தமாக அருதியிட்டு கூறலாம். இந்த வகையில் பார்க்கும்போது வெற்றி புதினம் என்றே துர்கா மாதாவை சொல்ல வேண்டி இருக்கிறது. <br /><br />துர்கா மாதா புதினத்தை எழுதிய சகோதரி ஜீவா இலக்கிய துறையை சார்ந்தவர் அல்ல. முழுக்க முழுக்க விஞ்ஞான துறையை சார்ந்தவர். மாணவர்களுக்கு மைக்ரோபயாலஜி பயிற்றுவிப்பவர். அத்தகைய ஆசிரியரும் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு சிறப்புற செயல்பட்டிருப்பது சிந்தனைக்குரியது; பாராட்டிற்குரியது. <br /><br />அண்மையில் பெண் எழுத்தாளர்கள் தங்களது நற்பார்வையை வீட்டோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் வெளி உலகத்திற்கும் பரப்புகிறார்கள். சமூகத்தில் ஊறிக் கிடக்கும் அவலங்களையும்; அநீதிகளையும் கண்டு கொதித்தெழுகிறார்கள். மிகவும் பலம் பொருந்திய தங்கள் பேனா முனைகளை கொண்டு அவற்றை தகர்த்தெரிய ஓயாமல் போராடுகிறார்கள். அத்தகைய வீர பெண் எழுத்தாளர்களில் ஜீவாவும் ஜீவித்திருக்கிறார். இவருக்கு நமது மனம் கனிந்த பாராட்டுக்கள் உரித்தாகுக. <br /><br />எழுத்தாளர் ஜீவாவும் அவரது நண்பரும் ஒரு சிற்றுண்டி சாலையில் வேலை செய்யும் பெண் மனியை பார்த்தனர். அவரை ஒரு புரட்சிகாரியாக உருவகப்படுத்திக் கொண்டனர். அவர்தான் துர்கா. அப்படி தொடங்கிய துர்காவின் பயணம் புதினம் முழுவதும் இடைவிடாமல் தொடர்கிறது. துர்காவின் செல்வாக்கு மற்ற பாத்திரங்கள் மீதும் பலமாக படர்ந்திருக்கிறது. பார்த்து, கவனித்து அனுசரிக்க வேண்டிய பாத்திரமாகவே துர்கா இந்த புதினத்தில் படைக்க பட்டிருக்கிறாள். <br /><br />துர்கா பாத்திரத்தை முதன்மையாக கொண்டு படைக்கப்பட்ட இப்புதினத்திற்கு துர்கா மாதா என்ற பெயர் மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது. புதினத்தின் இறுதி பகுதியில் துர்காவை துர்காமாதா என்றழைப்பதில் உள்ள ஞாயத்தை ஒரு பாத்திரத்தால் எடுத்தியம்பினார் ஆசிரியை. <br /><br />துர்கா மாதா புதினத்தில் இடம் பெற்றிருக்கும் பிரச்சனைகள் முற்றிலும் இக்காலத்திற்கும் பொருந்துபவை. அன்றாடம் செய்தித் தாள்களிலும் டீவி நியூஸ் சேனல்களிலும் பெண்கள் மேல் நடத்தப்படும் பாலியல் கொடுமைகள் பளிச்சிடுகின்றன. அவற்றை அனைவரும் பார்க்கிறார்கள் கேட்கிறார்கள் ஆனால் உரிய முறையில் சிந்திப்பது கிடையாது. எனவே வாசகர்கள் சிந்தனை அவற்றின் பால் ஈர்ப்பதற்கு இந்த புதினம் முயல்கிறது. <br /><br />வளர்ச்சி குன்றீய வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு போன்ற வளர்ச்சி பெற்ற மாநிலங்களுக்கு பஞ்சம் பிழைக்க பலர் புலம்பெயர்கிறார்கள். அங்கிருந்து இங்கு வரும் அவர்கள் மொழி பிரச்சனை உட்பட பல பிரச்சனைகளை சந்திக்க நேர்கிறது. சந்தேகத்திற்கு ஆளாகிறார்கள். எங்கு எத்தகைய கொடுமை நடந்தாலும் அது அவர்களுடைய செயலாகத்தான் இருக்க வேண்டும் என்று மக்கள் குருட்டுத்தனமாகவே முடிவு செய்கிறார்கள். விளைவாக பஞ்சம் பிழைக்க வந்தவர்களுக்கு நேரும் தொல்லைகளுக்கு எல்லையே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இந்த அவல நிலை எழுத்தாளரின் இதயத்தை பிழிந்திருக்க வேண்டும். அத்தகைய வருத்தத்தில் இருந்து உதித்ததுதான் இந்த புதினம். <br /><br />வசந்தாவின் இரவு நேர வேலை, அவளது குழந்தையின் பாலியல் வன்கொடுமையும் அதை தொடர்ந்த கொலையுமாய் புதினத்தில் திரையை விலக்குகிறது. இந்த நிகழ்ச்சி அதிகபடி என்றுதான் தோன்றுகிறது. இதை தவிர்த்திருந்தாலும் பாதகம் இல்லை. மகாலெச்சுமியின் ஆறு வயது குழந்தையை வன்புணர்ந்து கொலைசெய்வதில் இருந்துதான் உண்மை புதினம் ஆரம்பம் ஆகிறது. <br /><br />போலிஸ் கெடுபுடி மக்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து சிறையில் போடுவது, தேவைக்கு அதிகமாக தண்டனை கொடுப்பது, குற்றத்தை நிருபிக்க அங்கும் இங்கும் பறந்து படாத பாடுபடுவது மிக நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளன. <br /><br />லெட்சியத்தோடு வெளியே வந்த துர்கா அந்த லெட்சியத்திற்காகவே தன்னை ஒரு ஏழை தொழிலாளியாக மாற்றிக்கொள்வதும் அதனால் விளையும் கொடுமைகளை பொறுமையுடனே ஏற்றுக் கொள்வதும் போற்றற்குரியது. <br /><br />நம் சமூகத்தின் அவலங்கள் அவை ஏற்படுவதற்கான காரணங்கள் போக்குவதற்கான முயற்சிகள் ஆகியவற்றை பற்றி நீண்ட விவாதங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அவையும் பல முறை இடம் பெற்றிருக்கின்றன. அவ்வாரில்லாமல் சுருக்கமாகவும் உருக்கமாகவும் இதயத்திற்கு நெருக்கமாகவும் சொல்லி இருக்க முடியும். <br /><br />சில நிகழ்ச்சிகள் ஒரு எழுத்து கூட பிசகாமல் இரண்டு மூன்று இடங்களில் இடம் பெற்றிருப்பது சாமான்ய வாசகர்களுக்கு குழப்பமாகவும் மற்றும் பல வாசகர்களுக்கு சலிப்பு தட்டும் வகையிலும் இருக்கலாம். எனவே அவற்றை பற்றி எழுத்தாளர் ஒருமுறைக்கிருமுறை சிந்தித்து பார்க்க வேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவரது மொழி அருமை. குறைக் கூற எப்படி முயன்றாலும் முடியாதென்றே சொல்லலாம். <br /><br />இந்த புதினத்தை படித்த ஆண் வாசகர்கள் பெண்களை பாலியல் கொடுமைப்படுத்த கூடாதென்று உறுதி மேற்கொள்ள நினைக்க தோன்றுகிறது. இதுவே இந்த புதினத்தின் வெற்றி என்று சற்றும் சளைக்காமல் கூறலாம். <br /><br />சகோதரி ஜீவா அவர்கள் மேன்மேலும் இத்தகைய புதினங்களை படைக்கவேண்டும். அவற்றை அவரே ஒருமுறைக்கு இருமுறை ஒரு திறனாய்வாளராக படிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் புதினத்தின் தரம் வரவர உயர்ந்துவிடும். <br /><br />மறுபடியும் சகோதரி ஜீவாவுக்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவிக்க விரும்புகிறேன். <br /><br /><br />- முனிரெத்தினம் </div>
<div style="text-align: justify;">
...........................</div>
<div style="text-align: justify;">
.<br /><br />நாவலை பெற: <br /><br /><br /> விலை: ரூ: 150 மற்றும் கூரியர்செலவு மட்டும் <br /> தொடர்புக்கு: பொன்னுலகம் புத்தக நிலையம், திருப்பூர். <br /> அலைபேசி எண்கள்: 70104 84465, 88707 33434 <br /> வங்கி கணக்கு: PONNULAGM PUTHTHAGA NILAIYAM, Karur Vysya Bank, Thiruppur, P N Road Branch, A/C -No-1235115000041544, IFSC KVBL0001235 </div>
</div>
ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-688800002866550740.post-21835762959224154652019-07-31T00:22:00.001+05:302019-07-31T18:29:44.413+05:30துர்கா மாதா - நாவல் விமர்சனம் (அப்ஸரன் ஃபெர்ணாண்டொ)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்புள்ள ஜீவா அக்காவுக்கு,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சென்னையிலிருந்து அப்ஸரன் ஃபெர்ணாண்டொ எழுதுகிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனது நண்பர் திருப்பதி மகேஷ் மூலமாகத்தான் உங்கள் ப்ளாக் [blog] அறிமுகம் கிடைத்தது. அவ்வப்போது உங்களின் பதிவுகளை வாசித்து வருகிறேன். உங்களின் புரட்சிகரமான சிந்தனையும் வித்தியாசமான அணுகுமுறைகளும் உங்கள் எழுத்துக்கு என்னை இரசிகனாக்கியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உங்களின் முதல்படைப்பான தற்கொலை கடிதம் என்ற சிறுகதைத் தொகுப்பை படித்திருக்கிறேன், அப்போதே உங்களுக்கு கடிதம் எழுதவேண்டும் என நினைத்தேன் ஆனால் இயலாமல் போனது. இப்போது நீங்கள் புதினம் [Novel] எழுதியிருக்கிறீர்கள் என்று நண்பர் மகேஷ் மூலம் கேள்விப் பட்டதும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். உடனடியாக படிக்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு, நண்பரிடம் கேட்டுப் பெற்று, படித்தும் முடித்துவிட்டேன். இதைக் குறித்து திரு மகேஷிடம் கூறியபோது, நூல் குறித்த என்னுடய பார்வையை / கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாமே என்று யோசனை தெரிவித்தார். அவரது யோசனையும், இந்த நாவலை படித்த பிறகு அது ஏற்படுத்திய விளைவுகளுமே என்னை இக்கடிதம் எழுதத் தூண்டியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நூல் குறித்து பேசுவதற்கு முன் சில விஷயங்கள்:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதலில் என்னைப் போன்ற பார்வையற்றவர்களும் படிக்கக் கூடியவகையில் இந்தப் படைப்பையும் [துர்கா மாதா] இதற்கு முந்தய படைப்பையும் [தற்கொலை கடிதம்] மின் புத்தகமாக [E-Book] அளித்தமைக்கு மிக்க நன்றிகள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதனை தன் தொடர் வாசிப்பின் மூலமாகவும், உங்களைப் போன்ற சான்றோர்கள் நட்பின் மூலமாகவும் சாத்தியமாக்கிய மகேஷ் அவர்களுக்கும் நன்றிகள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விஷயத்திற்கு வந்துவிடுகிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*************</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
துர்கா மாதா!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதலில் இத்தகைய புதினத்தைப் படைத்ததற்கு என் நன்றிகள். ஏனெனில் உங்களைப் போன்ற புரட்சிகரமான எழுத்தாளர்களின் சீர்மிகு எழுத்துக்கள்தான் சமுதாயத்தைச் சீரமைக்கும் கருவியாக அமையும் என்பது என் கருத்து. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நூல் ஆரம்பத்திலிருந்தே [ஒரு சில வார்த்தைகள்] சுவாரஸ்யத்தையும் ஆர்வத்தையும் தூண்டுகிறது. கூடவே இழையோடும் வலிகளும் துயரங்களும் விரைவில் இதற்கெல்லாம் ஒரு தீர்வு வராதா! என்ற ஏக்கத்தையும் தோற்றுவிக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கதையின் ஆரம்பத்தில் வரும் சிறுமி மலர் குறித்த காட்சிகளிலேயே, மலரையொத்த பெண்களும் சிறுமிகளும் கறுக்கி / கசக்கி போடப்படும் அவலத்தை நம் கண்முன்னே நிறுத்தி, இக்கதை கையாளப் போகும் கருவை மெதுவாய் நமக்குள் விளக்கும் / விதைக்கும் வித்தை சிறப்பு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதலில் ஒரு கோணத்தில் தொடங்கி பயணித்து, பின்னர் அதை முக்கிய இடத்தில் நிறுத்திவிட்டு, மற்றொரு கோணத்திலிருந்து கதையை விளக்கி முடிச்சிக்களை அவிழ்த்திருக்கும் விதம் சுவையாக இருந்தது. இக்கதையின் நாயகியான துர்கா பெண்களின் திடமான ஆளுமைக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்னும் சொல்ல வேண்டுமென்றால், தொட்டதற்கெல்லாம் கோபப்படும், அழுதுவிடும், இன்னும் இத்யாதி இத்யாதி இயல்புகளையெல்லாம் கொண்டிருக்கும் பெண்களிலிருந்து இவள் நிரம்பவே மாறுபட்டவள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தணக்கு ஆசுவாசம் தேவைப்பட்டதால் பாபுவைப் பற்றிச் சொல்லுவது, கழிவறைக்கு சென்றுவந்த பிறகு தன் வலியை உதட்டை அழுத்தி அடக்கிக் கொள்வது போன்ற இடங்களில் துர்காவின் தன்நம்பிக்கையும் மனதைரியமும் பயங்கரமாய் வெளிப்படுகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சீருடையை களைவதே தான் நிர்வாணமாக இருப்பதாக நினைக்குமளவிற்கு உணர்வுபூர்வமாய் தான் நேசித்த இயக்கத்தையே போதிய விளைவுகளை ஏற்படுத்தாத காரணத்தாலும் அதிலுள்ள குறைகளையும் பகிரங்கமாய்ச் சுட்டிக் காட்டிவிட்டு வெளியேறுவதும், தன் மேலாளரை நயமாய் கேன்டீனுக்கு அழைத்து தண்டிக்கும் இடத்திலும் துர்கா எந்த அளவிற்கு தான் தீர்க்கமானவள் என்றும் உடனடி விளைவுகளை விரும்புபவள் என்றும் புலப்படுத்துகிறாள். துர்கா மட்டுமின்றி, சுடரும் நிஷாவும் துணிச்சலான பெண்களுக்கு சிறந்த எடுத்துகாட்டாய் விளங்குகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
_________</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நண்பர் மகேஷ் இந்தக் கதையைப் பற்றி கூறும்போது இது கம்யூனிசமும் ஃபெமினிசமும் கலந்ததொரு கதையென்றார். அது எப்படி சாத்தியம்!!! என வியந்தேன் நான். ஆனால் அதை மிகச் சிறப்பாய் சாத்தியமாக்கியிருக்கிறது உங்கள் எழுத்தும் நீங்கள் எடுத்துக் கொண்ட கதைக்கருவும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கதையின் முதல் சில வரிகளிலேயே அந்த கால ஆணாதிக்கம் பெண்களை வீட்டிலேயே அடைத்துவைத்தது ஆனால் இந்தக் கால ஆணாதிக்கம் பெண்களை வேலைக்கு அனுப்பி சோம்பேறிகளாகவும் சுகபோகமாகவும் வாழ்ந்து கொன்டிருக்கிறது என்ற வித்தியாசத்தை சிறப்பாய் உணர்த்தியிருக்கிறீர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கதாபாத்திர அமைப்பும் அவர்களின் குணாதிசயங்களும் நம் அன்றாட வாழ்க்கையின் ஏதாவதொரு தருணத்தில் சந்தித்த / சந்திப்பவர்கள் போன்றேயிருப்பதால் கதை மனதிற்கு இன்னும் நெருக்கமாகிவிடுகிறது. இடைஇடையே வரும் ஹிந்தி சொற்களும் வட இந்திய தமிழ் உச்சரிப்புகளும் அந்த மாந்தர்களூடே நம்மையும் உணர்வுபூர்வமாக உலவ விடுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வட இந்தியர்கள் பெட்ஷீட் & பாத்திரங்கள் விற்க வந்தால்கூட ஒருவித பயத்தோடே அவர்களை பார்க்க வைத்த சில திரைபட காட்சிகளிலிருந்தும் பல செய்தித்தாள் செய்திகளிலிருந்தும் மாறுபட்டு, அவர்களுக்கு பின்னால் இருக்கும் வலிகளையும் வேதனைகளையும் சிந்திக்க வைக்கிறது இந்த நாவல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதலாளித்துவ நெருக்கடி & ஆளும் வர்க்கங்களின் அதிகார வெறியாட்டம் போன்ற விஷயங்களைப் பட்டவர்த்தனமாய் பேசி, எத்தகைய கிடுக்குபிடிகளில் சிக்கிக் கொன்டு நம் சமூகம் முன்னேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்நாவல். ஒரு முக்கியமான இடத்தில் [“இவ்ளோ சீரியசானப் பிரச்சினையை உங்க தமிழ்ச்சமூகம் எப்படி பார்க்குது தோழர்?” “தமிழன் உயர்ந்த பண்பாடும் நாகரீகமும் கொண்ட மூத்தக்குடி என்னும் பெருமிதத்தோடுதான்...” டாக்டர் கூச்சத்தோடு சிரித்தார்.] இரண்டே வரிகளில் கலாச்சாரம் பண்பாடு என்ற பொய் பிரச்சாரத்தின் கன்னத்தில் ஓங்கி அறைகிறது இந்த கதை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அருப்புக் கோட்டை விவகாரம், பொள்ளாச்சி விவகாரம் போன்றவற்றை இக்கதை தொட்டுச் செல்வதாலும் அவற்றிற்கான தீர்வுகளை பேசுவதாலும் நாவலை வாசிக்கிறோம் என்பதைத் தாண்டி, எதார்த்த உலகில் நாம் சில முக்கிய நண்பர்களோடு இவற்றை விவாதித்துக் கொன்டிருக்கிறோம் என்று உணரவைப்பதில் இந்நாவல் வெற்றிப் பெற்றிருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குட் டச் [Good touch] பேட் டச் [bad touch] போன்ற விஷயங்களை விரிவாகவும் விவேகத்துடனும் பேசுவதால் அனைத்துத் தரப்பினரும் நிச்சயம் படிக்கவேண்டிய நாவல் என்ற தரத்திற்கு உயர்ந்து, இவற்றைக் குறித்த வழக்கமான கற்பிதங்களையும் கருத்து பிம்பங்களையும் உடைத்து, வேறொரு புதிய கோணத்திலும், வித்தியாசமான, சரியான மற்றும் நியாயமான அணுகுமுறையைக் கற்பித்து பெரியவர்கள் பெரியவர்களாக இருந்தால் குழந்தைகளும் குழந்தைகளாகவே இருப்பார்கள் என்ற கருத்தை அழகாய் புரியவைப்பதில் இந்நாவல் தனித்து நிற்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உரிமைகள், கடமைகள், வாழ்வியல் போன்ற இத்தியாதிகளில் ஆண்களிடமிருந்து தனித்து நிற்பதோ அல்லது ஆண்களை மிஞ்சி நிற்பதோ அல்ல பெண்ணியம், மாறாக அவர்களுக்குச் சமமாய் / நிகராய் நிற்பதே நிஜமான பெண்ணியம் என்றக் கருத்தைத் தரமாய்ப் புரியவைப்பதில் இந்நாவல் உயர்ந்து நிற்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாவலின் இறுதியில் துர்கா புல்லட்டில் கம்பீரமாக வரும் காட்சி வேட்டைக்கு புறப்பட்ட சாமி குதிரையேறி செல்வதை கண்முன்னே கொண்டுவருகிறது. கதை அதிகாலை நேரத்தில் ஒரு துயரக் காட்சியோடு தொடங்கி, ஒரு இரவு வேளையில் மகிழ்ச்சியோடும் துர்காவின் புன்னகையோடும் முடிவடைந்ததாக சித்தரித்திருந்த விதம் இந்நாவல் இருட்டில் மறைந்திருக்கிற / மறைக்கப்பட்டிருக்கிற துயரங்களையும் வேதனைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, அவைகளுக்கான தீர்வையும், இவற்றிற்கு காரணமானவர்களுக்கே இருளை திருப்பித் தரவேண்டும் என்ற கருத்தை அழகாய் விளக்குகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இறுதியாகச் சொல்ல வேண்டுமென்றா்ல்,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
துஷ்டர்களை துடைத்தெரிய துரிதமாய் புறப்பட்டால், இனி துன்பங்களைத் துடைக்காமல் துளியும் ஓயமாட்டாள் இந்த துர்கா மாதா.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
- அப்ஸரன் ஃபெர்ணாண்டொ</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<u>நாவலை பெற: </u></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விலை: ரூ: 150 மற்றும் கூரியர்செலவு மட்டும்</div>
<div style="text-align: justify;">
தொடர்புக்கு: பொன்னுலகம் புத்தக நிலையம், திருப்பூர்.</div>
<div style="text-align: justify;">
அலைபேசி எண்கள்: 70104 84465, 88707 33434</div>
<div style="text-align: justify;">
வங்கி கணக்கு: PONNULAGM PUTHTHAGA NILAIYAM, Karur Vysya Bank, Thiruppur,
P N Road Branch, A/C -No-1235115000041544, IFSC KVBL0001235 </div>
</div>
ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-688800002866550740.post-30755411963252815472019-06-18T13:44:00.002+05:302019-06-18T13:47:59.944+05:30துர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
இது நாகர்கோவிலைச் சேர்ந்த உதவிப்பேராசிரியையாய் பணியாற்றும் ஜீவாவின் முதல் புதினமா? நம்ப முடியவில்லை (என்ன ஆழமான கருத்துச்செறிவுமிக்க விவாதங்கள்)! <br /><br /> இவரது “தற்கொலைக்கடிதம்” கதைத்தொகுப்பிலும், வலைப்பதிவுகளிலும் முகநூலிலும் சிரிப்பு நடையில் தனது சொந்த அனுபவங்களையும் சீரியசான நடையில் பெண்களின் துன்பங்களையும் இன்னபிற சமூகச்சிக்கல்களையும் தீர்வுகளோடு அலசுவதை நாம் படித்திருக்கிறோம். <br /><br /> தோழர்களுடனான விவாதங்களுக்குப்பின் மேலும் எவ்வளவு ஆழமாக சமூகச்சிக்கல்களை புரிந்திருக்கிறார் என்பதற்கு இப்புதினமே சான்று. <br /><br /> வட இந்தியர்களை நம் பொழப்பிற்கு வேட்டு வைப்பவர்கள், நம் வேலைகளையெல்லாம் பறிப்பவர்கள், பாலியல் குற்றமிழைப்பவர்கள் என்ற பிரச்சாரங்கள் வைக்கப்படும் இந்த காலக்கட்டத்திற்கு மிகப்பொருத்தமான புத்தகம் இது. <br /><br /> வட இந்திய ஏழைகள் யார்? எந்தெந்த சூழ்நிலைகளில் வேலைக்கு இங்கே வருகிறார்கள்? அரசியலும் அதிகாரவர்க்கமும் கொண்ட முதலாளித்துவ சமூகம் அவர்களை எந்தெந்த இழிநிலைகளுக்கு தள்ளுகிறது? கணத்திற்கு கணம் பெருகிவரும் பாலியல் குற்றங்களை எப்படி தடுப்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையே இப்புத்தகம். <br /><br /> "உத்திரப்பிரதேசம் குலாபி கேங்க்" இயக்கம் போன்ற ஜார்க்கன்டில் ஒரு போராளி இயக்கத்தில் உன்னத லட்சியத்தோடு போராடுபவள் குறும்பும் குதூகலமும் தைரியமும் நிறைந்த கதாநாயகி துர்கா. அதிகாரவர்க்கச்சுரண்டலை எதிர்த்து யாரைக்காக்க முனைகிறார்களோ அம்மக்களே இவர்களை நம்பாமல் ஏன் எங்கே போகிறார்கள் என்ற கேள்வியோடு ரியாசோடு தனக்கிருந்த காதலையும் தியாகம் செய்து தமிழகம் நோக்கி காண்ட்டிராக்டர்களோடு புறப்படுகிறாள் நாயகி. <br /><br /> இங்கு வந்தப்பிறகு அவள் சந்திக்கும் தொழிலாளர்கள், எதிர்ப்பார்ப்புகளோடு வந்தவர்களை மனசாட்சிக்கு புறம்பானவேலைகளை நோக்கி தள்ளப்படும் நிலைமைகள், பணமும் அதிகாரமும் அவர்களை பந்தாடும் விதங்கள், தோழர்களோடு விரிவாக விவாதித்து அவள் கண்டடையும் தீர்வுகள், இதற்கிடையில் அவளே ஒரு மாபெரும் அரசியல் சூதாட்டவழக்கில் சிக்கி என்ன ஆகிறாள் என்பதே கதைச்சுருக்கம். <br /><br /> சமூகநீதியை வலியுறுத்தும் உயரிய போராளி இயக்கங்களையும் மீறி நுகர்வுவெறியை தூண்டிலாகக் கொண்டு முதலாளித்துவம் எப்படி மக்களை பணத்தை நோக்கி பைத்தியமாக ஓடவைத்து எந்த எல்லைக்கும் சென்று எப்பாவத்தையும் செய்யவைக்கிறது என்று தோழர்களால் மிகத்தீவிரமாக விவாதிக்கப்படும் பக்கங்கள் இன்றைய சமூகம் முழுமையும் படிக்கவேண்டிய பொக்கிஷங்கள். <br /><br /> இரண்டு வயதுக் குழந்தைகளுக்கே தொடுகைகளின் வகைகளை (good touch, bad touch) கற்றுக்கொடுப்பதன் அறிவீனத்தை எடுத்துக்காட்டி இவ்வகை விஷயங்கள் எப்படி நம் பண்பாட்டிலேயே விளையாட்டுச் சீண்டல்களாக மனதில் பதிய வைக்கப்பட்டுகின்றது என்று நிஷா எடுத்துரைக்கும் காட்சி படைப்பின் உச்சம். <br /><br /> துர்காவைக் காக்க ரியாஸ் உட்பட நண்பர்கள் செய்யும் தந்திரங்கள் பக்கங்களின் வேகத்தைப் பெருக்கி வாசகர்களை ஒரே மூச்சில் வாசித்து முடிக்க வைக்கிறது. <br /><br /> புதினம் மிக விரைவாக முடிந்துவிட்ட உணர்வால் அடுத்த புத்தகங்களில் எங்கள் எதிர்ப்பார்ப்புகளை இங்கே பதிவுசெய்கிறோம். <br /><br /> 1. பாலியல் குற்றங்கள் பெருகிவிட்ட புள்ளிவிவரங்களை வைக்கும் ஆசிரியரின் பிரதிபலிப்பாக தெரியும் சுடரொளியின் கூற்றுகள் "சமூக ஊடகங்களின் பெருக்கத்தாலேயே இயல்பாக இருப்பவை பெரிதுபடுத்தப்படுகின்றன" என்ற சிலரின் கூற்றுகளுக்கு பதிலளிப்பதாக அடுத்த படைப்பு இருக்கவேன்டும். <br /><br /> 2. பாலியல் குற்றங்களை செய்யும் ஆண்களை கன்டுகொள்ளாமல் பெண்களே மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்தப்படுகிறார்கள் என்று கூறும் நாம் இதே நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமையாகி சுரன்டலின் பிரதிதிகளாய் செயல்படும் சில மேல்தட்டுவர்க்கப் பெண்களையும் எப்படி தூய சிந்தனையுள்ளவர்களாக மாற்றுவது என்பதையும் எடுத்துக்காட்டுவதாக உங்களின் அடுத்தடுத்த படைப்புகள் இருக்கவேண்டும். <br /><br /> 3. கல்வியை விளையாட்டோடும் உடற்பயிற்சியோடும் சுவாரசியமாக தரவேண்டும் என்று பள்ளிகளுக்கு சொல்லும் நாம், செயலிகளும் ரோபோக்களும் பயிற்றுவிக்கப்போகும் வரும் யுகத்தில் எப்படி இச்சிந்தனைகளை செயலாக்கப்போகிறோம் என்பதை பேசும் படைப்புகளை எதிர்ப்பார்க்கிறோம். <br /><br /> 4. தனிநபர் தரவுகளைக்கொண்டு தனிநபர் விருப்பங்களை வடிவமைக்கும் வல்லமையுள்ள இன்றைய முதலாளித்துவ கருவிகளை நம் உயர்ந்த பாலியல் குற்றமற்ற சீரியசிந்னைகள் கொன்ட மாந்தர்களை உருவாக்க எப்படி உபயோகிக்கப்போகிறோம் என்று எடுத்துக்காட்டும் உயரிய படைப்புகளை எதிர்ப்பார்கிறோம். <br /><br /> இத்தகைய ஆழ்ந்த சின்தனைகளையும் எக்கச்செக்க எதிர்ப்பார்ப்புகளையும் தூண்டிய உங்கள் துர்காமாதாவிற்கு எங்கள் வாழ்த்துக்களும் வந்தனங்களும். <br /><br />நீங்கள் மென்மேலும் பற்பல படைப்புகளை உருவாக்கி சமூகத்தைச் செப்பனிட்டு வெற்றிபெற எங்கள் உளம்கனிந்த வாழ்த்துக்கள். <br /><br /><br /><br /><br />நன்றியுடன் அரவிந்த் </div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<u>நாவலை பெற: </u><br />
<br />
விலை: ரூ: 150 மற்றும் கூரியர்செலவு மட்டும்<br />
தொடர்புக்கு: பொன்னுலகம் புத்தக நிலையம், திருப்பூர்.<br />
அலைபேசி எண்கள்: 70104 84465, 88707 33434<br />
வங்கி கணக்கு: PONNULAGM PUTHTHAGA NILAIYAM, Karur Vysya Bank, Thiruppur,
P N Road Branch, A/C -No-1235115000041544, IFSC KVBL0001235</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<a href="http://3.bp.blogspot.com/-csrbOb2t1PU/XQidRIiw-lI/AAAAAAAADH4/fGsvGzsIaGc2SERgp-eIQsHHvv4ZWf8aQCK4BGAYYCw/s1600/Untitled-1%2Bcopy.jpg" imageanchor="1"><img border="0" height="252" src="https://3.bp.blogspot.com/-csrbOb2t1PU/XQidRIiw-lI/AAAAAAAADH4/fGsvGzsIaGc2SERgp-eIQsHHvv4ZWf8aQCK4BGAYYCw/s640/Untitled-1%2Bcopy.jpg" width="640" /></a><br /></div>
</div>
ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-688800002866550740.post-38228874808581591102019-06-12T00:37:00.001+05:302019-06-18T13:47:26.275+05:30ஜீவாவின் துர்கா மாதா - எனது பார்வையில்... கவிப்பூரணி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
என்னோட நாவலோட word format மகேஷ்கிட்ட குடுத்து படிச்சிட்டு கருத்து சொல்லுமானு கேட்டுருந்தேன். </div>
<div style="text-align: justify;">
அவன் அத அவன் நண்பர்களோட பகிர, இப்போ அவன் நட்பு கவி பூரணி அத படிச்சிட்டு ரிவியூ எழுதி அனுப்பி இருக்காங்க. </div>
<div style="text-align: justify;">
என் நாவலுக்கு வந்த முதல் ரிவியூ இது. படிச்சதும் அவ்ளோ சந்தோசம் எனக்கு. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்ல உற்சாகமான வார்த்தைகளோடு துவங்குகிறது இந்நாள்....<br /> ...................</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
Novel என்ற ஆங்கிலச் சொல் ‘புதுமை’யைக் குறிப்பதாகும். அந்த சொல்லிற்கு
ஏற்றார்போலவே தோழி ஜீவா அவர்களால் எழுதப்பட்ட ‘துர்கா மாதா’ எனும் இந்த
நாவல் நான் இதுவரை படித்திருப்பதில் மிகவும் புதுமையான கதைக்களத்தையும்
தற்கால நடைமுறையைக் குறித்த மிக வித்தியாசமான மற்றும் ஆழமான பார்வையையும்
கொண்டு ஒரு புரட்சிகரமான படைப்பாக வெளிவந்திருக்கிறது.<br />
<a href="https://www.blogger.com/u/2/null" name="more"></a><br />
<br />
எனக்கு தோழி ஜீவா அவர்களை அறிமுகம் செய்து அவர்களது வலைத்தளத்தில் வெளிவந்த<a href="http://gayathrid.blogspot.com/search/label/sex%20education" target="_blank">‘பாலியல் கல்வி’</a>
தொடரையும் படிக்கத் தூண்டியது தம்பி திருப்பதி மஹேஷ்தான். அந்த தொடர்
குறித்தே எனது கருத்துக்களை எழுதி ஜீவா அவர்களுக்கு மின்னஞ்சலாவது
அனுப்பிவிட வேண்டுமென மிகவும் ஆர்வத்தோடு இருந்தேன். சில காரணங்களால் அது
நடைபெறாமலே போய்விட்டது. அவர்களது ‘தற்கொலைக் கடிதம்’ புத்தகம் கூட
என்னிடம் இருக்கிறது. அதற்கும் கூட என்னுடைய கருத்துக்களைச் சொல்லிவிட
எண்ணி இருந்தேன். இன்னும் படித்த பாடுதான் இல்லை. ஆனால், அதைவிடவும் ஒரு
பெரிய ப்ராஜெக்ட்டில் அவர்களது எழுத்து குறித்ததான எனது பார்வையை முன்வைக்க
நல்லதொரு வாய்ப்பு மீண்டும் தம்பி மஹேஷ் மூலமே கிடைத்திருக்கிறது. ‘துர்கா
மாதா’ எனும் இந்த நாவலையும் அவரே என்னிடம் கொடுத்து நேரம் கிடைக்கையில்
படிக்கும்படி சொல்லி இருந்தார்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br />
தன்னுடைய முதல் நாவலை இவ்வளவு குறுகிய காலத்தில் சிறப்பானதொரு படைப்பாக
அமைப்பது என்பது எல்லோருக்கும் சாத்தியம் கிடையாது. ஆனால் தோழி ஜீவாவிற்கு
அது மிக நன்றாகவே தன்னுடைய ஆர்வத்தோடும் பலரது துணையோடும் சாத்தியமாகி
இருப்பதற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.<br />
<br />
முன்னுரையைப் படிக்கும் போதே படைப்பு பற்றிய ஆர்வமும் எதிர்பார்ப்பும்
மாற்றங்களை எதிர்நோக்கும் ஒரு பெண்ணாக எனக்குள் எழுந்திருந்தது.<br />
பொதுவாகவே நாவல்கள் என்றதும் ஒரு சாதாரணமான அல்லது ஒரு பாமர வாசகியாக நான்
எப்போதூமே கதைக்கருவைவிட கதையைத்தான் அதிகம் எதிர்பார்ப்பது வழக்கம்.
படிக்கும் மகிழ்விற்காக மட்டும் படிப்பதுதான் எனது மனப்போக்கு. ஆனால் முதல்
முறையாக இந்த நாவலின் முன்னுரையைப் படித்த போது கதைக்கருதான் இந்த நாவல்
படிப்பதற்கே ஒரு பெரிய உந்துதலைக் கொடுத்தது என்பேன்.<br />
<br />
முழு படைப்பையும் வாசித்தாகிவிட்டது. ஒரு த்ரில்லர் படம் போல சீட் நுனியில்
உட்கார வைத்து மிக மிக அழுத்தமான பெண்ணியம் பேசி இருக்கிறார் எழுத்தாளர்.<br />
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் சமீப காலத்தில் மிக அதிகமான அளவில் தலை
தூக்கி இருப்பதற்கான ஆணி வேர் காரணங்களாக பணபலம், முதலாளித்துவம், நுகர்வு
கலாச்சாரம், அரசியல், சமூகப்போக்கு என்று பலதரப்பட்ட விசயங்களை மிகத்
தெளிவாகவும் துல்லியமாகவும் நடைமுறையைப் படம் பிடித்துக் காட்டி
இருக்கிறார். பெரும்பாலும் இறந்தகால படைப்புகளையே படித்து வந்த எனக்கு,
இந்த நிகழ்காலப் படைப்பு படிப்பதற்கு ஸ்வாரஸ்யமாக மட்டுமல்லாமல்
சிந்திக்கவும் தூண்டுகோலாய் அமைந்திருக்கிறது.<br />
<br />
2 இடங்களை மிகவும் குறிப்பிட்டுப் பாராட்டியே ஆக வேண்டும் என்று எனக்குத் தோன்றிய விசயங்களை இங்கே பகிர விழைகிறேன்.<br />
பாலியல் வன்முறைகளுக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து அதை விவரித்திருக்கும்
இடம் மிகச் சிறப்பு. அதன்பின்னர், good touch bad touch பற்றி துர்கா
முன்வைப்பதாக ஆசிரியர் முன்வைத்த இடம் சபாஷ். safe zone என்ற பெயரில் நமது
சமு்தாய அமைப்புதான் காமம் குறித்தான தூண்டுதலைப் பிள்ளைகளிடம்
உருவாக்குகிறது என்பதும் சுமை ஆகிவிட்ட கல்வி முறை பற்றியும் மறந்து
போய்விட்ட விளையாட்டுலகம் பற்றியும் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும்
புறக்கணிக்கப்படும் குழந்தைகள் உலகம் குறித்தும் மிகச் சிறப்பாக மனோதத்துவ
முறையில் நடைமுறைக்கேற்ற பரந்துபட்ட பார்வையை வைத்திருக்கிறார் ஆசிரியர்.
குழந்தைகளைக் குழந்தைகளாகப் பார்க்காத ஒரு சமுதாய அமைப்பில் நிச்சயம்
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை அந்த சமூகமேதான் திணித்து அதன் விளைவாக
அவர்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக வழிவகுக்கிறது என்பதை சிறப்பாக
அணுகி இருப்பதோடு பள்ளிக்கூடங்கள் குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க
அனுமதிக்கும் ஒரு இடமாக இருக்க வேண்டும் என்பதையும் மிகவும் ஆணித்தனமாகக்
கூறி இருக்கிறார்.<br />
<br />
இப்போது கதைக்கு வரலாம். புலம்பெயர்ந்து தமிழகம் வந்து பிழைப்புத் தேடும்
தன் மாநிலத்தவர் படும் துன்பங்களை நேரடியாக தானே அனுபவித்துப் பார்த்து
அவர்களது உணர்வுகளைப் புரிந்து அவர்களைப் பாதுகாக்க ஏதாவது ஒரு வழி செய்ய
வேண்டும் என்ற தவிப்போடு வரும் ஒரு ஜார்கண்டியப் பழங்குடிப்பெண்ணான துர்கா
சந்திக்கும் போராட்டமே இப்புதினத்தின் சுருக்கமான கதைக்களம். கதாநாயகி
துர்காவை மிகவும் எளிமையான துணிச்சலான, குரும்புக்காரத்தனமான மற்றும் அன்பு
வாய்ந்த இயல்பான பெண்ணாகப் படைத்திருப்பது சிறப்பு. அநேகம் பெண்கள் காணும்
சுதந்திரக் கனவை துர்காவைப் பார்த்ததில் நிஜத்தில் கண்ட திருப்தி எனக்கு.<br />
<br />
சு்டரொளி, நிஷா மற்றும் மருத்துவர் கதாப்பாத்திரங்களும் கதைக்கு பலமூட்டின.
என்னவோ தெரியவில்லை, இதை வெறும் கதையாக மட்டும் என்னால் ஏதோ கடந்துவிட்டு
போக முடியாது என்று தோன்றுகிறது. படித்துவிட்டு சுடச்சுட எழுதித் தீர்க்க
வேண்டும் என்பதுபோல் ஏதோ தோன்றுகிறது. ஆனால் அவை கூட வார்த்தைகள் கொண்டு
சொல்லுவது மிகக் கடினம்தான். உணர்வுப்பூர்வமாக எங்கேயோ மிகவும் ஆழமாகத்
தொட்டுவிட்டீர்கள் ஜீவா.<br />
பழமைவாதத்தை பெண்களால் வெறுக்க மட்டுமே முடிகிறதே தவிர, அதிலிருந்து எப்படி
அவர்களுக்கான வாழ்வை அவர்களே தேர்ந்தெடுப்பது என்று புரியாமல் அந்த
பழமைவாதத்திலேயே ஊறிப்போய்விடுகிறார்கள் என்று எதார்த்தத்தை சுதந்திர
உணர்வை நேசிக்கும் பெண்களின் ப்ரதிநிதியாக எடுத்துரைத்திருக்கிறீர்கள்.
அருமை...<br />
<br />
அதே போல் குடும்ப சூழ்நிலைகளால் எப்படி பாலியல் தொழிலில் பெண்கள்
தள்ளப்படுகிறார்கள் என்பதை சஞ்சனா மற்றும் மகா பாத்திரங்களின் வாயிலாகப்
பேசி இருக்கிறார். வட மாநிலத்தவர் நம் ஊரில் சந்திக்கும் ப்ரச்சனைகள்
அல்லது நமது ஆட்கள் அவர்கள் குறித்து முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்
போன்றவற்றை எல்லாக் கோணங்களிலும் இயல்பாக அலட்டலில்லாமல் சொல்லி
இருக்கிறார். ஒரு பக்கம் பிழைப்பு தேடி வந்து அடிமைப்பட்டிருப்பவர்கள்,
மறுபக்கம் வடக்கிலிருந்து இங்கு வந்து அதிகாரம் செலுத்துபவர்கள் என்று வட
மாநிலத்தவரின் இரு துருவங்களையும் கதை படம் பிடித்துக் காட்டுவது நேர்மை.<br />
<br />
பெரும்பாலும் கதைகளில் வரும் காதல் கூட மிகவும் பழமைவாத சாயப்பூச்சான
possessive - ஆகவே இருக்கும். ஆனால், துர்கா ரியாஸ் காதல் மிகவும்
வெளிப்படையாகவும் சு்தந்திரமானதாகவும் இருந்தது குறித்து மகிழ்ச்சி.
கதையில் ஒரு சமுதாயத்தின் இயக்கத்திலிருக்கும் ஏறக்குறைய எல்லா அம்சங்களும்
இடம் பெற்றிருந்ததோடல்லாமல் அன்றாட வாழ்வில் நடக்கும் சிறு சிறு விசயங்கள்
கூட அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.<br />
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br />
மொத்தத்தில் ஒரு நல்ல படைப்பைப் படித்த மகிழ்ச்சி மட்டுமல்லாது ஒரு நல்ல
ஆழமான பார்வையும் பொறுப்பும் கொண்ட துணிச்சலான, நேர்மையான பெண்
எழுத்தாளரின் உணர்வை உணர்ந்த திருப்தி இந்த நாவலைப் படிக்கும் ஒத்த
சிந்தனாவாதிகளுக்கு ஏற்படும் என்றுதான் சொல்ல வேண்டும். என் சிற்றறிவிற்கு
எட்டிய வரையில் பாரதியார், ஜெயகாந்தன் வரிசையில் ஜீவாவின் துணிச்சல்
பாராட்டிற்குரியது. இந்த நாவல் நிறைய பெண்கள் படிக்கும்படியாக சேர வேண்டும்
என்பதும் தோழி ஜீவா மென்மேலும் பல படைப்புக்களைத் தமிழ் இலக்கிய
உலகிற்குத் தர வேண்டும் என்பதும் அவரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு
துணிச்சல் மிக்க பெண் எழுத்தாளர்கள் மென்மேலும் சுதந்திரமா்க
எழுத்துலகிற்கு வர வேண்டும் என்பதும் எனது ஆசை. hats of to you jeeva...
வாழ்த்துக்கள். </div>
</div>
ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-688800002866550740.post-78666398738917715952019-06-08T21:34:00.000+05:302019-06-08T22:55:20.895+05:30ஜீவாவின் "துர்கா மாதா" - நாவல் வெளியீடு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-gTWzvYEAcaw/XPvXiDl-CgI/AAAAAAAADGc/n7CKxa5bTqwrcWiOv-z4d3w1fcTev3VBwCLcBGAs/s1600/cover.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="411" data-original-width="816" height="322" src="https://1.bp.blogspot.com/-gTWzvYEAcaw/XPvXiDl-CgI/AAAAAAAADGc/n7CKxa5bTqwrcWiOv-z4d3w1fcTev3VBwCLcBGAs/s640/cover.jpg" width="640" /></a></div>
<br />
<div style="text-align: justify;">
சிறு வயதில் எனக்குள் சிந்திக்கும் விதையை தூவியது இன்று சொத்துடமை சமூகத்தின் ஒரு பிரதிநிதியாய் இருக்கும் என் அப்பா தான். சொத்தில் எனக்கும் சமபங்கு உண்டென பேசித்திரிந்த காலங்களில் தட்டிக்கொடுப்பார். அது ஒருகாலம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காலமாற்றத்தில் சிக்கி சூழ்நிலைக்கைதியாக அடைந்துக் கிடந்த நேரம் இந்த சமூகம் பெண்களை பகடைக்காயாய் வைத்து ஏன் காய் நகர்த்துகிறதென்று என் மனதுக்குள் நிறைய கேள்விகள் எழும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு குடும்பத்தின் மொத்த மானமும் அந்த வீட்டின் பெண்களின் தொடைகளுக்கிடையில் இருப்பதாய் பூச்சி காட்டும் இந்த சமூகத்திலிருந்து விலகி என் பார்வை விசாலமான போது நான் சில பாடங்களை கற்க ஆரம்பித்தேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெண் என்பவள் அவளுடைய சிரிப்பு, கோபம், அழுகை, காதல், காமம் அத்தனையையும் இயல்பாய் கடக்க வேண்டுமென்ற புரிதல் கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாய் என்னை நான் மீட்டெடுத்தேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாம் மீள்வது பெரிதல்ல, ஆனால் அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பவர்களுக்கு கைகொடுத்தாக வேண்டும். அதுதானே சரியாக இருக்க முடியும்? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் எங்கிருந்து துவங்குவது, எப்படி செய்வதென்ற சரியான பாதை தெரியாமல் திணறிக் கிடந்தேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெண்களுக்கு எதிரான ஒவ்வொரு பாலியல் வேட்டையின் போதும் அதற்கு காரணகர்த்தாவாக இந்த சமூகம் பெண்களையே கைகாட்டும். அவர்களுக்கே தடைகளிடும். அக்கறை என்கிற பெயராய் அடக்குமுறையை ஏவி விடும். இவை என்னை பெரும் அச்சத்தில் ஆழ்த்தும். எனக்கு இந்த அச்சத்துக்குள் மூழ்கிக்கிடக்க விருப்பம் இல்லை. தண்ணீருக்குள் இருந்து திமிறி எழுந்து பெரும் ஆசுவாசம் கொள்ளவே விரும்பினேன் நான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முற்போக்கு சிந்தனைவாதிகள் என சில ஆண்களின் பெண் விடுதலை குறித்த கருத்துக்களில் உடன்பாடில்லாமல் பின் என்னதான் விடுதலை என மூச்சுத் திணறியிருக்கிறேன். ஏனெனில் அவை அத்தனையும் பெண்ணை இன்னும் அவர்களுக்கு அடிமையாய், மேலும் சொல்லப்போனால் பாலியல் சுரண்டலுக்கு தான் வழிவகுக்கும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜெனவரி மாதத்துவக்கத்தில் இது குறித்து தோழர் திருப்பூர் குணா அவர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். அவர் புரட்சிகர கட்சிகளில் பெண்களை மதிக்கும் விதம் பற்றி கூறினார். அதோடு தோழர் இரா. பாரதிநாதன் எழுதிய “தறி” நாவலையும் படிக்க கொடுத்தார். இதன் மூலம் புரட்சிகர கட்சிகளின் முக்கியத்துவமும் அவற்றின் அவசியமும் எனக்கு மெல்ல மெல்ல புரிபட ஆரம்பித்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பின் ஒரு நாள் அவரும் நானும் ஒரு உணவகத்தில் அமர்ந்து உணவுண்டு கொண்டிருந்த போது ஒரு வடநாட்டு பெண் உழைப்பாளியை பாத்தேன். எங்களுக்கு முன்னே எச்சில் தட்டுகளை அடுக்கி மேசைகளை சுத்தம் செய்துக்கொண்டிருந்தார். பேச்சுவாக்கில் தோழர் திருப்பூர் குணாவின் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வந்து விழுந்தன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“இந்த பெண்ணும் கூட ஒரு போராளியாக இருக்கலாம். யார் கண்டது?” </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த வார்த்தைகள் தான் எனக்குள் முதலில் ஒரு சிறுகதையை தோற்றுவித்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆம். இந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் என் மண்டையை குடைந்துகொண்டிருந்த போது, என்மனதில் சட்டென வந்து ஒட்டிக்கொண்டது “குலாபி கேங்க்”. ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநில எல்லைகளில் அமைந்துள்ள பூந்தேல்கண்ட் பகுதியில் பெண்களால் பெண்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு அது. தற்போது 55 வயதாகும் சம்பத் பால் என்கிற பெண்மணியால் 25 வருடங்களுக்கு முன்னால் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் கிட்டதட்ட ஒன்றரை இலட்சம் பேர் வரை உறுப்பினர்களாக இருக்கிறார்களாம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
துர்கா என்னும் பெயருடைய அன்று நாங்கள் பார்த்த அந்த வடநாட்டுப் பெண்ணையே கதாநாயகியாக கொண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடூரத்தை நான் அந்த சித்தரித்திருந்தேன். அதனை அவரிடம் பகிர்ந்துக்கொண்டேன். அதைக்கேட்டதும் அவர் அது ஒரு நாவலின் தன்மையை கொண்டிருப்பதாக கூறினார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்பொழுது தான் சில குரல்கள் அனைவரின் மனங்களையும் ஆட்டிப்பார்த்தன. பொள்ளாச்சி பாலியல் கொடூரங்களால் எப்படி சூழப்பட்டுள்ளது என்பதை வெட்டவெளிச்சமாக்கிய குரல்கள் அவை. உடலும் மனமும் நடுங்கிப் போனது. ஒருபுறம் அதை பற்றிய கொந்தளிப்புகள் இருந்தாலும் அதற்கு காரணக்கர்த்தாவாக பெண்களின் ஒழுக்க விழுமியங்கள் மீதே விரல்கள் சுட்டப்பட்டன. மிகப்பெரிய கொடூரத்தை, அதன் மீதான கொந்தளிப்பை இந்த குற்றசாட்டு எப்படி நீர்த்துப் போக வைத்து விடுகிறது? அதிர்ச்சி தான் இல்லையா? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மூன்று இரவுகள் உறக்கமில்லாமல் கழிய அந்த இரவின் ஒரு நாள் நானும் தோழர் திருப்பூர் குணாவும் நீண்ட விவாதத்தில் இருந்தோம். அமைப்பு, அரசியல், இலக்கு, நடைமுறை என விவாதமும் விமர்சனமும் சண்டையும் நடந்ததுகொண்டேயிருந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த சண்டையில் கொஞ்சம் அரசியல் பிடிபட தொடங்கியது. பெண்களின் அதிகாரத்தை உத்தரவாதபடுத்துகிற அமைப்பினால் மட்டும்தான் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்கிற உண்மை புரியவந்தது. இப்போது சண்டை ஓய்ந்து இந்திய புரட்சிகர இயக்கங்கள் மீது அக்கறை உருவானது. இந்த பிரச்சனைக்கு நம்மால் என்ன செய்ய முடியுமென யோசித்தோம். அதனை “பொள்ளாச்சி பயங்கரம் – என்ன செய்ய வேண்டும்” என்ற புத்தகமாக்கினோம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த புத்தகம் என் சிந்தனைகளை மேலும் வலுவாக்கியது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முடிந்தவரை சட்ட ரீதியாகவும் தேவைப்பட்டால் தடி கொண்டும் காரியம் சாதிக்கும் இந்த “குலாபி கேங்க்” போன்ற ஒரு அமைப்பு தமிழ்நாட்டிற்கும் வேண்டுமென்ற எனது விருப்பத்தை தோழர் திருப்பூர் குணாவிடம் தெரிவித்தேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்புறமென்ன? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதன்பிறகு பொள்ளாச்சி பயங்கரம் மட்டுமில்லாது பெண்களின் பிரச்சினைகள் அனைத்தையும் எப்படி பார்ப்பது என்ற எனது பார்வை மாறியது. பின் அதை குறித்து தொடர் விவாதங்கள் செய்தோம். தோழர் திருப்பூர் குணா அவருடைய கட்டுரைகள் சிலவற்றை அனுப்பித் தந்து படிக்கத் தந்தார். சிறுகதை மெல்ல மெல்ல ஒரு நாவலாக கருக்கொள்ள துவங்கியது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதோ அந்த சிறுகதை இப்பொழுது ஒரு நாவலாக மாறிவிட்டது. கதாப்பாத்திரங்களுக்கு பெயர்கள் தேவைப்பட்ட பொழுது திருப்பூர் குணாவே அவர் நண்பர்களின் பெயர்களை பரிந்துரைத்தார். அதை தடைசொல்லாமல் அங்கீகரித்த நண்பர்களுக்கு அன்பும் நன்றிகளும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆரம்பத்தில் மிகவும் தயங்கி தயங்கித்தான் எழுதினேன். ஆனால் அதை இடைவிடாது நச்சரித்து முழுமையாக்கியதில் திருப்பூர் குணாவின் பங்கு முக்கியமானது.அவருக்கு என் அன்பும் நன்றியும்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதோ வரும் 16/06/2019 அன்று லயோலா தொழிற்கல்வி வளாகம், ஏ ஏ ரோடு, மதுரை (தேம்பாவனி இல்லம் அருகில்) வைத்து மாலை நான்கு மணிக்கு நாவல் வெளியிடப்படுகிறது.</div>
<br />
<span style="font-size: x-small;">தலைமை:</span> தோழர் சுரேஷ் <br />
<br />
<span style="font-size: x-small;">நிகழ்ச்சித் தொகுப்பு:</span> தோழர் முத்துகிருஷ்ணன்<br />
- <span style="font-size: x-small;">மாநில ஒருங்கிணைப்பாளர், - </span><br />
<span style="font-size: x-small;"> ஜனநாயக உரிமை பாதுகாப்புப் பேரவை </span> <br />
<br />
<span style="font-size: x-small;">வரவேற்புரை: </span> தோழர் நிஷா - <span style="font-size: x-small;">WSB Rebels - பெண்கள் குழு</span><br />
<br />
<span style="font-size: x-small;">வாழ்த்துரை: </span> தோழர் ஸ்ரீரசா - மாநில துணைச்செயலாளர் <br />
<div style="text-align: left;">
- <span style="font-size: x-small;">தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்</span></div>
<br />
தோழர் முரளி - <span style="font-size: x-small;">அகில இந்தியச் செயலாளர் <br /> - மக்கள் சிவில் உரிமைக் கழகம்</span><br />
<br />
<span style="font-size: x-small;">நூல் அறிமுகம்:</span> தோழர் மதி கண்ணன் - <span style="font-size: x-small;">அமைப்புச் செயலர் <br /> - மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்</span><br />
<br />
<span style="font-size: x-small;">வெளியிட்டு உரையாற்றுபவர்:</span> தோழர் செல்வி - <span style="font-size: x-small;">மனிதி - பெண்கள் அமைப்பு</span><br />
<br />
<span style="font-size: x-small;">பெற்றுக்கொண்டு உரையாற்றுபவர்:</span> தோழர் இரா. காமராசு - <span style="font-size: x-small;">பொதுச்செயலாளர் - </span> <span style="font-size: x-small;">தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்</span><br />
<br />
<span style="font-size: x-small;">ஏற்புரை: </span> தோழர் ஜீவா - <span style="font-size: x-small;">நூலாசிரியர் </span><br />
<br />
<span style="font-size: x-small;">நன்றியுரை: </span> தோழர் திருப்பூர் குணா<br />
- <span style="font-size: x-small;">பொன்னுலகம் புத்தக நிலையம் </span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">வாய்ப்புள்ளவர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.... </span><br />
<br />
<br />
<u>நாவலை பெற: </u><br />
<br />
விலை: ரூ: 150 மற்றும் கூரியர்செலவு மட்டும்<br />
தொடர்புக்கு: பொன்னுலகம் புத்தக நிலையம், திருப்பூர்.<br />
அலைபேசி எண்கள்: 70104 84465, 88707 33434<br />
வங்கி கணக்கு: PONNULAGM PUTHTHAGA NILAIYAM, Karur Vysya Bank, Thiruppur, P N Road Branch, A/C -No-1235115000041544, IFSC KVBL0001235<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="font-size: x-small;"><a href="https://1.bp.blogspot.com/-XGrwD6UGJc4/XPvbzY-U1xI/AAAAAAAADGo/QsO3ygbbrBYNvSvgFz41kfn07JAR2nvsACLcBGAs/s1600/invitation%2Bcopy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1449" data-original-width="1038" height="640" src="https://1.bp.blogspot.com/-XGrwD6UGJc4/XPvbzY-U1xI/AAAAAAAADGo/QsO3ygbbrBYNvSvgFz41kfn07JAR2nvsACLcBGAs/s640/invitation%2Bcopy.jpg" width="458" /></a></span></div>
<br />
<br /></div>
ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-688800002866550740.post-50239771349318080812019-01-10T20:57:00.000+05:302019-01-10T20:57:29.244+05:30கடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
கடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை<br />
.....................................................<br />
ஆசிரியர் சப்திகா <br />
............................<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://www.vosizneias.com/wp-content/uploads/2018/12/2018-12-23T041725Z_1_LYNXNPEEBM01T_RTROPTP_4_INDONESIA-TSUNAMI.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://www.vosizneias.com/wp-content/uploads/2018/12/2018-12-23T041725Z_1_LYNXNPEEBM01T_RTROPTP_4_INDONESIA-TSUNAMI.jpg" data-original-height="525" data-original-width="800" height="419" width="640" /></a></div>
<br />
<br />
<div style="text-align: justify;">
முதல்ல கடலோடி கதைகள் எழுதின சப்திகாவுக்கு என்னோட வாழ்த்துகள். எழுதுறதுக்கு ஆர்வம் இருக்குற பலபேர் அத எழுதி புத்தகமாக்குற முயற்சியில ஈடுபடுறது இல்ல. சப்திகா அந்த ஆர்வத்த புத்தகமாக்கி இருக்கிறார். அந்த முயற்சிக்கு என்னோட பாராட்டுகள். ஒரு கதையை பத்து பதினஞ்சு பக்கம் எழுதி சிறுகதைன்னு சொல்றவங்க மத்தியில அறுபத்தி ஆறு பக்கங்கள்ல பத்து கதைகள குடுத்து சிறுகதைகள தன்னால திறம்பட எழுத முடியும்னு நிரூபிச்சு இருக்குறாங்க சப்திகா.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதுமட்டுமில்லாம காலம்காலமா மக்கள்கிட்ட வாய்வழி புழங்கிகிட்டு இருக்குற கதைகள மீனவ மக்களோட வட்டார பேச்சு வழக்குலயே ஆவணப்படுத்துற அற்புதமான முயற்சியில ஈடுப்பட்டுருக்கார். முக்கியமா “போக்காளி குடும்பம்”த்தை சொல்லலாம். பேய், பிசாசு பூதம் பத்தியான கதைகள் காலாகாலமா நம்மோடவே உலவிட்டு வர்ற கதைகள். இப்படி மக்கள்கிட்ட இருக்குற நாட்டுப்புற கதைகளை ஆவணப்படுத்துறதுங்குறது பாராட்டுக்குரியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இனி கதைகள எடுத்துகிட்டா அது கிருஸ்தவ மத நம்பிக்கை கொண்டதாவும் அத உயர்த்தி பிடிக்குறதாகவும் அது மேல எழுத்தாளர் கொண்ட அதீத பற்றாவும் வெளிப்படுது. இது எழுத்தாளர் கிருஸ்தவரா இருக்குறது ஒரு காரணம்னா, இன்னொரு காரணம் குமரி மாவட்டத்துல மத அரசியல் மக்கள்கிட்ட அதிகமா செல்வாக்கு செலுத்துறது இன்னொரு காரணம். ஏன்னா ஒரு மதத்தை சார்ந்த ஒருத்தர் அவர் மதத்தை மட்டுமே சார்ந்து எழுதணும்னா மதம் தாண்டிய கருத்துகள் எதுவுமே வர முடியாது. ஆனா மதம் தாண்டிய கருத்துக்கள் தான் சமூகத்துல நல்ல விசயங்கள கொண்டு வருது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எழுத்தாளர் சப்திகாவ பொருத்தவரைக்கும் அவர்கிட்ட மதம் சார்ந்த கருத்துகள் இருக்குறது எத குறிக்குதுனா குமரி மாவட்டத்துல மதம் சார்ந்த விசயங்கள் பெரிய அளவுல தாக்கம் செலுத்துறத குறிக்குது. அதை தாண்டிய பார்வை இன்னும் சப்திகாவுக்கு வரல.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு எழுத்தாளரோட கடமை என்னனா தான் காதால கேட்டது, தான் உணர்ந்தது, இத எல்லாத்தையும் மட்டும் மக்களுக்கு சொல்றது இல்ல. இதனால மக்களுக்கு என்ன பயன் வருது அப்படிங்குறதயும் சேர்த்து தான் எழுதணும். அப்படி எழுதலனா இவங்க ஒரு விசயத்த அப்படியே இன்னொருத்தருக்கு கடத்துறவங்களா மட்டும் தான் இருக்க முடியும். இதுவே எழுத்தாளர்ன்னு வரும் போது வெறும் அழகியலை மட்டும் சொல்லாம மக்களுக்கு அத பயனுள்ளதா மாத்துறதாகவும் இருக்கணும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்றைய சூழல்ல இந்தியாவும் தமிழ்நாடும் என்ன பிரச்சனைய எதிர்க்கொண்டுட்டு இருக்குதுனா மத பயங்கர வாதத்த எதிர்கொள்ளுது, கார்பரேட் கம்பனிகளோட நெருக்கடிகள எதிர்கொள்ளுது, இத அடிப்படையா கொண்ட சக்திகள் மக்கள்கிட்ட பண்ணிட்டு இருக்குற மோதல்கள எதிர்கொள்ளுது, முக்கியமா ஜாதி பயங்கரமா செல்வாக்கு செலுத்திகிட்டு இருக்கு, ஜாதிய அடிப்படையா கொண்டு அன்றாடம் கொலைகள் நடந்துட்டு இருக்க கூடியதா இருக்கு, இப்போ இருக்குற சமூக சூழல்கள், வேலை நெருக்கடிகள்னால குடும்பங்கள் சிதையுற போக்கு அதிகரிச்சுட்டு இருக்கு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த விசயங்கள மக்கள்கிட்ட கொண்டுப்போய் சேர்க்கணும், இந்த மாதிரியான சூழல்கள மக்கள் புரிஞ்சுக்கணும், புரிஞ்சுகிட்டு தங்களுக்கான வாழ்க்கைய ஒழுங்குப் படுத்திக்கணும்ங்குற அக்கறை பெரும்பாலான எழுத்தாளர்கள்கிட்ட இருக்கு. ஆனா அதே நேரத்துல குமரி மாவட்டத்துல அந்த சூழல் கம்மியா தான் இருக்கு. ஏன்னா குமரி மாவட்டம், அதோட விசேஷ தன்மை மதத்தை அடிப்படையா கொண்டிருக்குது. இங்க இருக்க கூடிய எல்லாமே வந்து மத தன்மையோட தான் இருக்குது. அது ஏழைகள் பணக்காரர்கள்னு இருந்தாலும் அப்படி தான் இருக்குது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதுக்கு காரணம் என்னன்னா பெரும்பாலும் இந்த மதங்கள் பாவ புண்ணியத்தையே தான் அடிப்படையா கொண்டு இயங்குது. புண்ணியம் செய்தவன் எல்லாம் பணக்காரனா இருப்பான், பாவம் செய்தவன் எல்லாம் ஏழையா இருப்பான்ங்குற எண்ணம் இருக்குறதால பணம் இருக்குறவன் அவனுக்கு துணையா இருக்குற கடவுளை தூக்கி பிடிக்குறதும் அந்த மதத்தை பரப்புறதும் இயல்பான ஒண்ணு. குமரி மாவட்டத்தை பொருத்தவரைக்கும் சர்சுகள், சர்சுகளோட சொத்துகள், பள்ளி, கல்லூரிகள் எல்லாமே மதத்தை வளர்த்து எடுக்குது. இந்த குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவங்களோட படிப்பு, வேலைன்னு வாழ்வாதாரத்துக்கு உத்திரவாதம் அளிக்கப்படுறதால மக்களும் மதத்தை கெட்டியா பிடிச்சுக்குறாங்க. அதனால தான் குமரி மாவட்டத்த பொருத்தவரைக்கும் அரசியல் அதிகாரத்த தீர்மானிக்குற இடத்துல கிருஸ்தவ மதத்துக்கு இருக்குது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்படிப்பட்ட மதம் மக்கள்கிட்ட ஆழமா பிடிப்புகள ஏற்படுத்துறது தவிர்க்க முடியாதது. அந்த பிடிப்பு எழுத்தாளரையும் ஆட்டி வச்சிருக்குது. அவங்க கதைகள நாம வாசிக்குறப்ப கிருஸ்தவ நடவடிக்கைகள் எல்லாம் சரியானதாகவும், கிருஸ்தவ மதம் சொல்ற மூட நம்பிக்கைகள பெருமையாகவும் அதையே மற்ற மதங்கள் பண்ணுறப்ப அது மேல ஒரு அருவெறுப்போ இல்ல எள்ளலோ இருக்கக் கூடிய வகையில அது வெளிப்படுது. இது ஆரோக்கியமான போக்கு இல்லைங்குறது என்னோட கருத்து. சமூகத்துல பொறுப்பா எழுத வந்துட்டா மதங்கள் சொல்ற தவறான கருத்த உடைக்குறதா இருக்கணும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எழுத்தாளர் ஒரு பெண்ணா இருக்குறதால மதங்கள் சொல்லக்கூடிய கருத்துக்கள கெட்டியா பிடிச்சுக்குறாங்க. அதனால தான் வீட்ல மாமனார் மாமியார் என்ன பண்ணினாலும் அத சகிச்சுக்கணும், அவங்கள அனுசரிச்சு போகணும், அவங்கள சம்மதிக்க வைக்கணும், அவங்க சம்மதமில்லாம எதுவும் செய்ய கூடாது, சம்மதிக்க வைக்க என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு அவங்களால நினைக்க முடியுது. ஆனா இன்னிக்கி இருக்குற வாழ்க்கை முறையில ஒவ்வொருத்தரும் வெவ்வேற இடங்கள்ல ஓடி ஓடி உழைக்க வேண்டிய தேவை அதிகரிச்சுட்டு இருக்குறப்ப கூட்டுக் குடும்ப முறையினுடைய தேவை குறைஞ்கட்டு வருது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவங்களோட கதையில கூட்டுக்குடும்பத்துல ஏதோ ஒரு வகை புனிதம் இருக்குற மாதிரியும் அப்படி இல்லனா தங்களோட கவுரவம் குறைஞ்சி போயிடும்னு சொல்ற மாதிரியான தொனி வெளிப்படுது. எல்லா குடும்ப அமைப்பும் வாழ்க்கையோடு தான் இணைஞ்சி இருக்கும். வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட குடும்ப முறைன்னு எதுவும் கிடையாது. விவசாய குடும்பமா வாழ்ந்த காலங்கள்ல கூட்டு உழைப்பும் ஒத்துழைப்பும் அவசியமா இருந்துச்சு. இப்போ ஒவ்வொருத்தருக்கும் ஒரு விதமான படிப்பு, ஒரு விதமான வேலைன்னு இருக்குறப்ப எல்லாரும் ஒரே இடத்துல சேர்ந்து இருக்க முடியாது. அவங்களோட வருமானமும் வேற மாதிரி தான் இருக்கும். மாறுபட்ட வருமானத்த எல்லாரும் சேர்ந்து பகிர்ந்துக்குறது இப்போதைய சூழ்நிலைல சாத்தியப்படாது. ஏன்னா அந்தந்த வருமானத்த பொறுத்து தான் தங்களோட வாரிசுகள அவங்க தங்களோட தகுதிக்கேற்ப வளர்ப்பாங்க. இதெல்லாம் கூட்டுக்குடும்பத்த காலாவதியாக்கிகிட்டு இருக்குற முறை. ஆனாலும் இந்த கூட்டு குடும்ப முறை குமரி மாவட்டத்துல இன்னமும் நீடிக்குது. எல்லாரும் குறிப்பிட்ட எல்லைக்குள்ள சுருண்டுக்குறதும் அதிகமான வரதட்சணை வாங்குறதும் இங்க இருக்குறது. அதோட தாக்கம் தான் “மாமியார் தோரணை” கதைல வெளிப்படுது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆவண படு கொலைகள், ஸ்டெர்லைட் பிரச்னை, மீத்தேன் ஹைட்ரோ கார்பன் பிரச்னை, இயற்கை சீரழிவு பற்றிய எழுத்துகள் குமரி மாவட்டத்துல பிரதிபலிக்குறது குறைவா இருக்கு. இங்க பெரும்பாலானோர் ஒரு வட்டத்துக்குள்ளயே இருக்குறோம். இன்னும் நாஞ்சில் நாடுங்குற ஒரு தனி ராஜ்யத்துக்குள்ள தான் இருக்குறோம். எழுத்தாளருக்கு தான் சார்ந்த சமூகத்தைப் பத்தி சொல்றதுல இருக்குற ஆர்வம் அதுல இருக்குற பிற்போக்கு எண்ணங்களையும் சேர்த்து பிரதிபலிக்குறது தான் யோசிக்க வைக்குது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடல் மீனவனுக்கு சொந்தமானது. மீனவர்கள் கடலுக்கு அதிபதியா இருந்தாங்க. ஆனா இன்னிக்கி பெரிய பெரிய முதலாளிகள் மீன்பிடியில செல்வாக்கு செலுத்த ஆரம்பிச்சுட்டாங்க. கடற்கரைகள் எல்லாமே சுற்றுலா தலங்களா, வணிக மண்டலமா மாற ஆரம்பிச்சிடுச்சு. மீனவ மக்களை அங்க இருந்து வெளியேற்றிக்கிட்டு இருக்காங்க. கடற்கரை பாதுகாப்பு சட்டம்ங்குற பெயர்ல கடற்கரை சார்ந்த வாழ்வாதாரம் அந்நியப்படுது. மீனவர்கள் துறைமுகத் திட்டம், அணுஉலை பூங்கா திட்டம் எல்லாம் மீனவர்கள் வாழ்க்கை முறைய அழிக்க கூடியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மீனவ மக்களிடமும் கிருஸ்தவ மக்களிடம் அன்பா இருக்குற எழுத்தாளர் பத்து கதைகளிலும் அவங்க பிரச்சனையை சரியா பேசலன்னு நினைக்குறேன். முதல் கதையான “கடலோடி” தவிர்த்து வேற கதைகள் எதுவும் சமூக பிரச்சனைகள பெருசா சொல்லல.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குமரி மாவட்டத்தை பொருத்தவரைக்கும் கிருஸ்த்தவ மதம் மீனவர்களோடு இணைஞ்சு இருக்கு. மீனவர்கள் சர்ச்சுகள நம்பித்தான் வாழ்க்கைய நடத்துறாங்க. அவங்களோட அதிகார மையமா சர்ச் இருக்குது. அதே நேரம் மீனவ மக்களுக்கு நிறைய பிரச்சனை இருக்கு. அணுஉலை தொடங்கி துறைமுகம் பிரச்சனைகள்ல இருந்து கடற்கரை பாதுகாப்பு மன்றம்ங்குற வகையில எல்லா இடத்துலயும் பிரச்சனை இருக்கு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த பிரச்சனைகள் எல்லாம் தீராததுக்கு காரணமும் இருக்கு. மீனவ மக்கள் குடும்ப பிரச்சனையையும் மீனவ சமூக பிரச்சனையும் தீத்து வைக்க சர்ச்சுகள தான் நம்புறாங்க. குமரி மாவட்டத்தில் கிருஸ்த்தவர்கள் அரச தீர்மானிக்குறதுல முக்கியமானவங்களா இருக்காங்க. அப்புறம் ஏன் இந்த பிரச்சனைகள் தீரல? ஏன்னா, சர்சுகள் சொத்துடைய நிறுவனங்கள். சொத்துடைய நிறுவனங்கள் அரசுடைய அங்கம். அரசு என்பதே சொத்துடைய நிறுவனங்களோட கூட்டதிகாரம் தான். அவங்க பிரதிநிதிகள் தான் செல்வாக்கு செலுத்துறாங்க. அதனால சர்ச்சுகள் அரசோட இணைஞ்சு தான் செயல்படும். மீனவர்கள பாதிக்குற எந்த விஷயத்தையுமே முழுசா தீர்த்து வைக்க முடியாத சூழல தான் சர்சுகள் உருவாக்கும். பணக்காரர்கள் பணக்காரர்களோட தான் சேருவாங்க. அதனால தான் பெரிய பெரிய மீன்பிடி நிறுவனங்கள் சாதாரண விசைப்பிடி படகுகள், கட்டுமரங்கள்ல தொழில் செய்றவங்களோட வாழ்வாதாரத்த அழிக்குறத கட்டுப்படுத்த முடியாத நிலைமை இருக்குது. நம்ம பிரச்சனைய நாமளே தீர்க்கணும்ங்குறது எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி அதை மத்தவங்களோட சேர்ந்து தான் தீர்க்க முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மக்களோட பிரச்சனையான நீட், ஜி.எஸ்.டி, பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு தொடங்கி, ஜாதி பிரச்சனைகள், கவுரவ கொலைகள்னு பல்வேறு பிரச்சனைகள் இருக்குது. ஆனா குமரி மாவட்டத்தை பொருத்தவரைக்கும் மதம் செல்வாக்கு செலுத்திட்டு இருக்குறது கவலையான விஷயம் தான். எல்லாத்தயும் கடவுளே தீர்ப்பார்ங்குற நம்பிக்கை இருக்குறதால இந்த பிரச்சனைகள சமூக பிரச்சனையாக எழுத்தாளர் சரியா புரிஞ்சுக்கல. தன்னோட “இரு மனம்” கதையில ரெண்டு வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் காதலிக்கும் போது “எங்களுக்கு எங்க மதம் முக்கியம்”னு மதத்தையே தூக்கிப் பிடிக்குறார். கடவுள்ங்குற இலக்கை அடைய எந்த பாதைல போனா என்னன்னு கேக்குற அதே சப்திகா காதலை விட மதம் பெரிசுன்னு சொல்ற கிருஸ்தவத்த பெருமையா பாக்குறார். மத பயங்கரவாதம் எப்படி மக்களிடையே செல்வாக்கு செலுத்திக்கிட்டு இருக்குங்குறதும் அவருக்கு புரியல.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதே மாதிரி பாத்த உடனே ஒரு தெய்வீக காதல்ல விழ முடியும்ங்குற நம்பிக்கையும் அவருக்கு இருக்கு. தோற்றத்தை பாத்து ஒரு நொடியில வரக் கூடிய கவர்ச்சி எப்படி காதலாக முடியும்? இந்தக் கதை இன்னமும் குமரி மாவட்டத்துல தோற்றம் சார்ந்த கவர்ச்சி மிச்சம் இருக்குறத எடுத்துக் காட்டுது. இரண்டு மனங்களோட புரிதல் தான் உறுதியான காதலா பரிணமிக்க முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதையெல்லாம் உற்று நோக்க வேண்டியது எழுத்தாளர்களோட கடமை. சப்திகா இப்போ தான் எழுத தொடங்கி இருக்காங்க. அவங்களோட வளர்ச்சிங்குறது இந்த பிரச்சனைகள எல்லாம் உற்று நோக்குறது மூலமா தான் இருக்க முடியும். கிருஸ்தவ மத பின்புலம், மீனவ மத பின்புலத்த தாண்டி இந்த சமூகத்தோட அனைத்து மக்களோட பிரதிநிதியா இந்த எழுத்தாளர் வளரணும். அதுல இருந்து விசயத்த பாக்கணும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மக்கள்கிட்ட இருக்கக் கூடிய கதைகளையும் மக்கள்கிட்ட இருக்குற சாதாரண பிரச்சனைகளையும் வெளிப்படுத்த தெரிஞ்ச சப்திகாவுக்கு மக்கள்கிட்ட செல்வாக்கு செலுத்தக் கூடிய பிரச்சனைகள புரிஞ்சிகிட்டா அதையும் சிறப்பா வெளிப்படுத்த முடியும். அந்த ஆற்றல் சப்திகாவுக்கு இருக்குது. அவங்களோட கண்ணோட்டம் விரிவடையணும், ஒரு நல்ல படைப்புகள் அவங்ககிட்ட இருந்து வரணும், அது மீனவ மக்களுக்கு மட்டுமில்லாம எல்லாருக்கும் பயன்படணும். ஒரு சமூகத்துக்கான இலக்கியம்ங்குறது மற்ற சமூகத்தையும் ஆட்கொள்றதா இருக்கணும். அந்த வகையில அவங்களுக்கு அந்த திறமை இருக்குது. அது வளரணும்னு வாழ்த்துறேன்.</div>
</div>
ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-688800002866550740.post-12532572328960331462019-01-05T22:09:00.002+05:302019-01-05T22:10:57.051+05:30பெண்ணியத்துக்கு அளவு கோல் இருக்கா? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://cdn.shopify.com/s/files/1/1677/7431/products/apparel-i-m-a-feminist-on-my-own-side-shirt-1.jpg?v=1527289039" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="800" height="640" src="https://cdn.shopify.com/s/files/1/1677/7431/products/apparel-i-m-a-feminist-on-my-own-side-shirt-1.jpg?v=1527289039" width="640" /></a></div>
<br /><div style="text-align: justify;">
<br />மதத்தை கடந்து வராத வரைக்கும் என்ன தான் பெண்கள் முற்போக்கு பேசி திரிஞ்சாலும் வீண் தான். எந்த மதமும் பெண்களுக்கு துணையா நிக்குறது இல்ல. மாறா அவள தெய்வமாக்கி, தியாகியாக்கி, புனிதமாக்கி காலடியில கிடக்க வைக்குது.<br /><br />ஜாதி இன்னும் வெறி கொண்டு அவள் உணர்வுகள, உரிமைகள தட்டிப்பறிக்குது. கவுரவ கொலையும் பண்ணுது. </div>
<div style="text-align: justify;">
<br />ஆனா இந்த பெண் அடிமைத்தனமும் பெண்ணியமும் ஒரே அளவுகோலோட எல்லா பெண்களுக்கும் இருக்குதா?<br /><br /> மதங்கள் ஜாதிகள் அடுத்து பெண்களோட அடிமைத்தனத்துக்கு முக்கிய காரணியா இருக்குறது சொத்துக்கள். சொத்துள்ள எந்த பெண்ணும் அந்த சமூகத்துக்கும், குடும்பத்துக்கும் அடிமையாகி போறா. சுய முடிவுகள் எடுக்க முடியாதபடி அவள முதலாளித்துவ வர்க்கம் சொத்துக்காக அடிமைப்படுத்துது. <br /><br /> ஆக, மதங்களை கடக்குறது மட்டுமில்லாம பொருளாதார விடுதலையும் ஒரு பெண் அடையணும். இங்கயும் பொருளாதார விடுதலைங்குற வார்த்தையோட அளவுகோல் பெண்ணுக்கு பெண் மாறுபடுது. <br /><br /> சொத்துள்ள பெண் தன்னோட பொருளாதார விடுதலையா பெரிய பெரிய கார்பரேட் கம்பனிகள்லயும், அரசாங்க அலுவலகங்கள்லயும், தனியார் நிறுவனக்கள்லயும் உடல்வலி இல்லாத வேலையையே கவுரவமிக்க வேலையா எண்ணுறா. அதனால அவளால மனசளவுல திருப்தி அடைய முடியல. இதுவே உழைக்கும் வர்க்கத்த சார்ந்த பெண் ரொம்ப சுலபமா தனக்கான பொருளாதார தேவையை உடல் உழைப்பு மூலமா தீர்த்துக்குறா. அவளுக்கு கவுரவம் ஒரு பொருட்டல்ல, தன்னோட சுய மரியாதை மட்டுமே அவளோட இலக்கு. <br /><br /> என் உடல் என் உரிமைங்குற முழக்கம் சொத்துடமை பெண்களோட கண்ணோட்டத்துலயும் உழைக்கும் பெண்களோட கண்ணோட்டத்துலயும் மாறுபடுது. தன்னோட பொருளாதார தேவைக்காக ஒரு ஆணை சார்ந்திருக்கும் சொத்துடைய பெண் தன்னோட வசதி வாய்ப்புக்காக ஒருத்தனோட வாழ்ந்துகிட்டு என் உடல் என் உரிமைங்குற முழக்கத்த பிற ஆண்களோட உறவு வச்சுக்குறது மூலம் நிறைவேத்திக்க நினைக்குறா.<br /><br /> தனக்கான சொத்தை தைரியமா கேட்டு வாங்குற தைரியம் அவளுக்கு இருக்காது. மாறா, தன் மேலான சுய அனுதாபத்தையும் கழிவிரக்கத்தையும் ஆயுதமா பயன்படுத்த நினைப்பா. அப்படியே ஒரு உறவு முறிவை சுலபமா கையாண்டு மீண்டு வரது சொற்பமான பேர் தான். <br /><br /> இதுவே உழைக்கும் பெண் உறவு முறிவை சுலபமா கடப்பா. என் உடல் என் உரிமைங்குற முழக்கம் அவளை பொருத்தவரைக்கும் சேர்ந்து வாழ இயலாதவனை தூக்கி எறிஞ்சுகிட்டு மனசுக்கு பிடிச்சவனோட அடுத்த வாழ்க்கையை நோக்கி நகர்தல். அவளுக்கு யாரையும் அண்டிப்பிழைக்க அவசியம் இருக்காது. <br /><br /> இங்க பெரும்பான்மையான சமூகம் உழைக்கும் வர்க்கம் தான். ஆக, அடுத்து பெண்கள் நகர வேண்டியது அரசியல். <br /><br /> இதுவும் சொகுசு அடிமைத்தன வாழ்க்கை பழகிப்போன சொத்துடைய பெண் வீதிக்கு வந்து தன்னோட உரிமைக்காக போராட தயங்கவே செய்வா. அதுவே உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பெண் சுலபமா வீதிக்கு வந்து தன்னோட உரிமைக்காக போராடுவா. <br /><br /> என்னதான் சொத்துடைய சமூகப்பெண் உரிமைக்காக போராட தயங்கிவான்னு சொன்னாலும் படிச்சி, சமூக அறிவு பெற்று பல்வேறு மக்கள பாக்குற வாய்ப்பு அவங்களுக்கு இருக்கு. உழைக்கும் வர்க்கத்தோட பெண்கள் பிரச்சனை பெருசா, சொத்துடைய பெண்கள் பிரச்சனை பெருசான்னு அலச வேண்டியது வரும். அதனால போராட்டத்துக்கு வர்ற சொத்துடைய பெண்ணுக்கு முன்னால ஏகப்பட்ட சவால்கள் காத்துக்கிட்டு இருக்கும். <br /><br /> அவங்க முன்னாடி பொதுவா எல்லா பெண்களோட பிரச்சனையையும் எடுத்து போராடுறதா, இல்ல தான் சார்ந்த சொத்துடைய பெண்களோட பிரச்சனை மட்டுமே பெண்கள் பிரச்சனைனு நம்பிட்டு இருக்குறதாங்குற கேள்வி முன்னால நிக்கும். <br /><br /> தான் சார்ந்த சொத்துடைய பெண்களோட நலன் மட்டுமே பெருசுன்னு நினைக்குற பெண்கள் இந்த போராட்டத்துல தடுமாறுறாங்க. பெரும்பான்மையான பெண்களுக்கு என்ன பிரச்சனைனு யோசிக்குறவங்க சரியான இடத்த நோக்கி நகருறாங்க. <br /><br /> இப்படி, இந்த சவால்கள எதிர்கொள்ளாம பெண்ணுரிமைனு ஒண்ண தீர்க்கமா கண்டறிய முடியாது. <br /><br /> ஆக இங்க போராட்டம்ங்குறது மக்களோட மக்களா இணைந்து தான் செய்ய முடியும். பெண்ணுரிமை புரிஞ்சுக்க நாம எல்லா வர்க்கத்து பெண்களையும் புரிஞ்சுக்கணும். <br /><br /> ஜாதி கடந்து, மதம் கடந்து, வர்க்கம் கடந்து, சுய சார்புள்ள அரசியல் படுத்தப்பட்ட பெண்ணே நமக்கு தேவை.<br /></div>
</div>
ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-688800002866550740.post-61346386761108850982018-09-07T19:33:00.002+05:302018-09-07T19:34:37.731+05:30மன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<img alt="Image result for girl in depression images" class="irc_mi" height="484" src="https://confessionsofaglamorousgirl.files.wordpress.com/2015/06/black-and-white-cry-cry-girl-depressed-depression-depressive-favim-com-39869.jpg" style="margin-top: 0px;" width="640" /><div style="text-align: justify;">
<br /> </div>
<div style="text-align: justify;">
செக்சுவல் லைப் தோல்வியடைஞ்ச முழுக்க முழுக்க மன அழுத்தத்துக்குள்ள வாழுற மூணு பேரை பாத்து நான் நிறைய அதிர்ச்சி அடைஞ்சிருக்கேன். <br /><br />அதுல குறிப்பா ஒருத்தர் தன்னை சுத்தி எல்லாருமே தனக்கு எதிரா சதி பண்றதா நினச்சு அத்தனை பேரையும் துன்புறுத்தவும் ஆரம்பிச்சுட்டாங்க. ரெண்டு கல்யாணம் பண்ணியும் திருப்தி இல்லாத நிலைமை அவங்களுக்கு. ஒவ்வொருத்தர் மூலமா ரெண்டு பசங்க வேற. அவங்களுக்கு உதவி பண்ண போய் கடைசில நீ சொகுசா வாழுற, உனக்கு எங்க என் பிரச்சனை தெரியும்னுட்டு ஆரம்பிச்சுட்டாங்க. அவங்களால நான் நிறைய மன அழுத்தங்களுக்கு போய், இப்ப கடைசியா விட்டா போதும்னு ஓடி வந்தாச்சு. அடுத்தவங்கள எந்த அளவு மனசாலயோ உடலாலயோ துன்புறுத்த கொஞ்சமும் தயங்காதவங்க அவங்க. அவங்க அந்த நிலைமைக்கு போன பிறகு அவங்கள மீட்டு எடுக்குறது ரொம்ப கஷ்டம். </div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
இத நான் ஏன் சொல்றேன்னா அவங்களோட தேவைகள் என்னன்னு காது குடுத்து கேக்க நம்ம சமூகத்துல யாரும் தயாரா இருக்க மாட்டாங்க. அவங்கள திருத்துறதா நினச்சு தன்னோட சொந்த கருத்துக்கள அவங்க மேல திணிச்சு அவங்கள மேலும் மேலும் காயப்படுத்த தான் செய்வாங்க. இது அவங்கள சுய நினைவுக்கு கொண்டு வர்றத விட்டுட்டு இன்னும் பெரிய மன அழுத்தத்துக்குள்ள தள்ளி விடும். </div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
இந்த மாதிரி மன அழுத்தத்துக்குள்ள வாழுற பெண்கள் மீள என்ன வழின்னு கேட்டா எல்லாருமே இந்த மாதிரியான நபர்களுக்கு முதல்ல பொருளாதார தீர்வு தான் அவசியம்னு சொல்வாங்க. ஆனா என்னை கேட்டா அவங்களுக்கு தேவை பொருளாதார தீர்வு இல்ல, உடனடி தீர்வு. பொருளாதாரத்துல ஜெய்க்குற வரைக்கும் எப்படி மன அழுத்தத்துல அழுந்தி போய் இருக்க முடியும்? <br /><br />இத யாரும் புரிஞ்சுக்க மாட்டாங்க. அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்குங்குறத இந்த சமூகம் இன்னும் ஒத்துக்கவே இல்ல. மறுபடி மறுபடி பொருளாதார விடுதலை தான் உனக்கான தீர்வுன்னு சொல்லிட்டே இருக்கோம். இப்போதைய இந்த இந்திய சமூக சூழ்நிலைல இதெல்லாம் உடனடி சாத்தியமா என்ன? <br /><br />எனக்கு ரொம்ப வலிக்குது, இதோ இந்த நொடி செத்துருவேன்னு சொல்றவங்ககிட்ட போய், முதல்ல உனக்கு தேவை பணம், அத சம்பாதிச்சுட்டு வா, அப்புறமா நீ சாக மாட்டன்னு சொன்னா என்ன அர்த்தம்? <br /><br />இது வலி இல்ல, ஜஸ்ட் ரிலாக்ஸ்ன்னு ரிலாக்ஸ் பண்ண வச்சு, அவங்க வாழ்க்கைல சந்தோசமான தருணங்கள மனசுல கொண்டு வந்து, அவங்க சந்தோசம் அவங்க கைலதான்னு புரிய வச்சுட்டாலே போதும். <br /><br />காசு முக்கியம் தான், ஆனா காசு மட்டுமே முக்கியம் கிடையாது. <br /><br />ஒவ்வொருத்தருக்கும் உள்மனசுல நிறைய ஆசைகள் இருக்கும். விருப்புகள் இருக்கும். அத வெளில கொண்டு வரலாம். <br /><br />அட, இப்போதைய என் விருப்பம் செக்ஸ் மட்டும் தான்னு அவங்க ஆழ்மனசுல இருந்து கூச்சல் வரும். ஆனா அத புரிஞ்சுக்குற நிலைமைல இங்க யாரும் இருக்க மாட்டாங்க. <br /><br />எல்லா தேவைகளை விடவும் இந்த செக்ஸ் தேவை ரொம்ப கொடூரமானது. அதுக்கான தீர்வு கிடைச்சுட்டாலே இந்த பொருளாதார சிக்கல் எல்லாம் பெரிய விசயமே இல்ல. <br /><br />ஆனா இது அத்தனை சுலபத்துல நடந்துடுற காரியமா? என்னை கேட்டா சுலபம் இல்லனாலும் அதொண்ணும் பெரிய கஷ்டம் கிடையாது. <br /><br />முதல்ல மனச ரொமாண்டிக்கா வச்சுக்கணும். யார் என்ன சொல்லுவாங்கன்னு கவலைப்படுறத முதல்ல நிறுத்தணும். பாட்டு பாடுறது நமக்கு பிடிக்கும்னா சுத்தி உள்ளவங்கள பத்தி கவலையேபடாம பாட ஆரம்பிச்சுடணும். <br /><br />"ஹ்க்கும்... இவ இருக்குற கேட்டுக்கு இவளுக்கு சந்தோசம் வேற. அவனெல்லாம் இவள நல்லா தான் வச்சிருப்பான், இவ தான் இவ வாழ்க்கைய தொலைச்சிருப்பா"ங்குற மாதிரியான கூரான ஆயுதம் தாக்க கூடும். <br /><br />"ஆமா, அப்படித்தான்"னு சொல்ற பழக்கத்த முதல்ல ஏற்படுத்திக்கணும். <br /><br />மனச ரொமாண்டிக்கா வச்சுகிட்டு mastrubate பண்ண முயற்சி பண்ணனும். இதெல்லாம் எந்த துணையும் இல்லாத பட்சத்துல இல்லனா துணை தேவையில்லன்னு நினைக்குற பட்சத்துல தான். <br /><br />முக்கியமான விஷயம், மனச எப்பவும் நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள வச்சுக்கணும். <br /><br />இல்ல, அப்படி யாரையும் emotional parterரா ஏத்துக்காம வெறும் sex partner-ரா சேர்த்துக்க முடியாதுன்னு சொல்றவங்களுக்கு வேற வழி இருக்கு. <br /><br />சின்ன வயசுல நாம ஒரு பொம்மைய கண்டா ரொம்ப குதூகலிச்சிருப்போம். ஆனா நாள் போக போக ஏன் அந்த உற்சாகம் வடிஞ்சு போகுது? <br /><br />காரணம் சின்ன வயசுல நாம எத எல்லாம் முக்கியம்னு நினைக்குறோமோ, அது எதையும் முக்கியமானதா நாம நினைக்குறதே இல்ல. ஆனா இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா? நாம சின்ன வயசுல முக்கியம்னு நினைக்குற விசயங்கள் மட்டும் தான் நிஜம். அதுல எந்த பாசாங்கும் இருக்காது. எதிர்பார்ப்பே இல்லாம நாம அன்பு செலுத்த முடியும். <br /><br />அதனால தான் நான் அடிக்கடி எனக்குள்ள ஒரு சபதம் எடுத்துப்பேன், "எத இழந்தாலும் என் குழந்தைத் தன்மைய மட்டும் இழந்துடவே கூடாது"ன்னு. <br /><br />இதனால தான் எனக்கு தன்மேல தனக்கு எதுவுமே இல்லையேன்னு ஏங்குற பெண்கள நெருங்கவே பயமா இருக்கும். ஏன்னா தீவிர மன அழுத்தத்துல அவங்க கிட்டத்தட்ட ஒரு பயங்கரவாதிகள் மாதிரி தான். அவங்களுக்கு எப்பவுமே தன்னை பத்தியே பேசிக்கிட்டு இருக்கணும். தன்னையே எல்லாரும் கேர் எடுக்கணும்னு நினைப்பாங்க. நாமளும் அவங்கள புரிஞ்சுகிட்டு அவங்களுக்காக விட்டுக்குடுக்க ஆரம்பிச்சா அப்புறம் நம்மள அவங்கள மாதிரியே நினச்சு, நம்மள அவங்க கண்ரோலுக்குள்ள கொண்டு வர பாப்பாங்க. இதனால நம்ம நிம்மதி தான் பறிபோகும். <br /><br />இதுக்கு தீர்வு, முதல்ல அவங்க தன் மேல சுய பச்சாதாபம் படுறத நிறுத்தணும். வாழ்க்கைய கொண்டாட்டமா வாழ கத்துக்கணும். மனசுக்கு பிடிச்ச விசயங்கள செய்யணும். <br /><br />இத எல்லாம் சொன்னா மறுபடி நம்மள தான் தாக்குவாங்க. உன்கிட்ட காசு இருக்கு, அதனால சுலபமா சொல்லுவ, என்கிட்ட என்ன இருக்குன்னு. <br /><br />எனக்கெல்லாம் ஒரு சின்ன பூவ பாத்தாலே மனசு கொண்டாட்டமாகிடும். அத விதம் விதமா போட்டோ எடுத்தாலே ரிலாக்ஸ் ஆகிருவேன். அப்படியும் இல்லையா வீட்டை விட்டு கொஞ்ச நேரம் வெளில போய்ட்டு வரலாம். இப்படி கூட ரிலாக்ஸ் பண்ணலாம். <br /><br />காசு முக்கியம் தான், ஆனா காசு இல்லாத பட்சத்துல அதுக்காக இறுகி போக கூடாது. நம்மள சுத்தி எது நம்மள கொண்டாட்டமா வச்சிருக்குமோ அதுல மூழ்கிடலாம். இசையோ, புத்தகமோ இல்ல வேற ஏதோ. <br /><br />அப்படியும் இல்லையா, நல்லா அடி மனசுல இருந்து கொஞ்ச நேரம் அழ கூட செய்யலாம். அதுவும் மனச ரிலாக்ஸ் பண்ணும். <br /><br />என்கிட்ட ஒரு சின்ன பொண்ணு வந்து கேட்டாள் "உங்க கவிதைகள படிச்சா அவ்ளோ வலிகள் இருக்கு. ஆனா உங்கள நேர்ல பாத்தா அப்படி தெரியவே இல்ல, ரொம்ப உற்சாகமான ஆளா இருக்கீங்க? இவ்ளோ சந்தோசமா இருக்குற நீங்க எப்படி அவ்வளவு வலிகளோட கவிதைகள் எழுதுனீங்க?ன்னு. <br /><br />அவகிட்ட நான் சொன்னேன் "இதோ நீ பாத்துட்டு இருக்குற நானும் நிஜம் தான், என் கவிதைகள்ல நீ பாத்த நானும் நிஜம் தான். சந்தோசமோ துக்கமோ நான் அதோட எல்கை வரை போய் பாக்குறேன். என்னால ரெண்டையுமே ஒரே அளவு கொண்டாட முடியும். இப்போ நாம எந்த நொடியில வாழ்ந்துட்டு இருக்கோமோ அந்த நொடி வாழ்க்கை தான் நிஜம். இப்ப நான் சந்தோசமா இருக்கேன். அத நீ பாத்துட்டு இருக்க"ன்னு சொன்னேன். <br /><br />லோ-பிரசர் வந்து என்னாச்சோ ஏதாச்சோன்னு சுத்தி இருக்குறவங்கள பதற வைப்பேன். அடுத்த பத்தாவது நிமிஷம் அவங்களையே கிண்டல் பண்ணி சிரிச்சுட்டு இருப்பேன். என்னோட இந்த மனநிலைய எத்தனை பேர் புரிஞ்சுப்பாங்கன்னு எனக்கு தெரியாது. ஆனா நான் அப்படிதான். <br /><br />மறுபடியும் சொல்றேன், ஒரு வேளை இத எல்லாம் கொண்டாட்டமா வாழுற நான் சொல்ல தகுதி இல்லன்னு யாராவது நினைக்கலாம். ஆனா எனக்குத் தான் தெரியும் இத சொல்ல எனக்கு முழு தகுதி உண்டுன்னு. <br /><br />ஏன்னா, நான் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவன்னு நிரூபிக்க பெரும் முயற்சி எடுக்கப்பட்டு, நானும் கிட்டத்தட்ட என் நம்பிக்கை எல்லாத்தையும் இழந்து சோர்ந்து போய் என்னை விட்டுக் குடுக்க ஆரம்பிச்சப்ப தான் ஒரு நாள் அமைதியா இருந்து யோசிக்க ஆரம்பிச்சேன். <br /><br />நான் யார்? நான் எப்படிப்பட்டவள்? எனக்கான ப்ளஸ் என்ன? எனக்கான மைனஸ் என்ன? நான் ஏன் அத எல்லாம் இழந்தேன்? இப்ப எனக்கு என்ன தேவை? <br /><br />இத்தன கேள்விகளுக்குமான விடைகள் தான் என்னை மறுபடி மீட்டெடுத்தது. ஏன்னா அப்ப எனக்கு மாரல் சப்போர்ட்டுக்கு கூட ஒருத்தரும் கிடையாது. குடும்பத்தார் எல்லாருமே இந்த சமூக கோட்பாடுகள்ள புதைஞ்சு போனாங்க. <br /><br />அதனால தான் சொல்றேன், நமக்கான தேவை என்னன்னு நாம தான் முடிவு பண்ணனும். அதை நோக்கிய நகர்தலும் முக்கியம். அப்புறம் என்ன, நம்ம வாழ்க்கை நம்ம கையில தான். </div>
</div>
ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-688800002866550740.post-32906704862863975882018-08-23T09:36:00.001+05:302018-08-23T09:37:45.111+05:30எது நேர்மை?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-nLuYRbFgV8w/W34ypP0LizI/AAAAAAAADEo/df_h_IjnU7kPwiaTEPToEb6gBVkws23IQCLcBGAs/s1600/kamal-hassan-.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="422" data-original-width="508" height="331" src="https://2.bp.blogspot.com/-nLuYRbFgV8w/W34ypP0LizI/AAAAAAAADEo/df_h_IjnU7kPwiaTEPToEb6gBVkws23IQCLcBGAs/s400/kamal-hassan-.jpg" width="400" /></a></div>
<br />
<div style="text-align: justify;">
<br />
நேத்து தோழியும் அவங்க அம்மா கூடவும் பேசிட்டு இருக்கும் போது கமலோட கல்யாண வாழ்க்கை பத்தின பேச்சு வந்துச்சு. <br />
<br />
அவன் ஒழுக்கம் கெட்டவன், இப்படி ஒவ்வொரு பொண்ணா பாத்துட்டு திரியுறது எந்த வகைல நியாயம்னு கேட்டாங்க அம்மா. <br />
<br />
அவர் யார் கூட வாழுறார்ங்குறது முக்கியம் இல்ல, அது யாரா இருந்தாலும் அவங்களையும் மதிச்சு, பப்ளிக்ல அவங்க கூட வெளிப்படையா வராரே, அந்த நேர்மை தான் முக்கியம்னு நாங்க சொன்னோம். <br />
<br />
<br />
இங்க இந்த சமூகம் எதை ஒழுக்கம்னு சொல்லுது? <br />
<br />
மனைவி தவிர பிற பெண்களோடு ஆண்களுக்கு தொடர்புகளே இருந்தது இல்லயா? <br />
<br />
அப்படியே தொடர்பு இருந்தாலும் அந்த பெண்களை வெறும் sex toy மாதிரி use பண்ணிட்டு மனைவிக்கு மட்டும் முக்கியத்துவம் குடுத்தா அவங்க சமூகத்துல நல்ல குடிமகன் அதானே...<br />
<br />
என்னைக் கேட்டா எந்த விசயமா இருந்தாலும் அதுல ஒரு அடிப்படை நேர்மை வேணும்னு நினைப்பேன். நம்மோட சம்மந்தப்பட்ட, நாம் நேசிக்குறவங்கள வெளில இந்த சமூக பார்வைக்கு கொண்டு வந்து வெளிப்படையா இருக்குறதுல என்ன தப்பு இருந்துற போகுது? <br />
<br />
ஒருத்தங்கள பிடிக்கலனா நேர்மையா விலகி இன்னொரு இணையை தேர்ந்தெடுக்குற உரிமை ஏன் ஆண், பெண் இருபாலருக்கும் இருக்க கூடாது? <br />
<br />
இது பத்தின கேள்வி ஒண்ணை நண்பர் ஒருத்தர்கிட்ட கேட்டேன். அவர் சொன்னார், "நீ மேல் தட்டு பெண்களையே மனசுல வச்சுட்டு பேசிட்டு இருக்குற. சமூகத்துல கீழ் நிலைல இருக்குற பெண்களை யோசிச்சு பாரு, கணவன் பிடிக்கலனு கைவிட்டு போனா அவளோட நிலமை என்ன? அவளோட வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வா"னு கேட்டார். அவரை பொருத்தவரைக்கும் மட்டுமில்ல, இந்த சமூகத்த பொருத்தவரைக்கும் இது நியாயமான கேள்வி தான் இல்லயா? <br />
<br />
ஆனா என்னோட சிந்தனை இதுல இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கு. <br />
<br />
பெண்களை அடக்குமுறைக்கு கீழ வைக்குறதுனா அது வன்முறையாலயும், ஆதிக்கத்தாலும் மட்டுமில்ல, இந்த மாதிரி பாவம்னு சொல்றதும் தான். <br />
<br />
அதாவது இன்னமும் நம்ம சமூகத்துல பெண் போற்றி பாதுகாக்கப்பட வேண்டியங்குற எண்ணம் தான் மேலோங்கி இருக்கு. எல்லாரையும் போல அவ ஒரு சுதந்திர பறவைங்குறதையே மறந்துடுறாங்க. அதனால தான் பெண் பாவம், அவள் தெய்வம்ங்குற எண்ணம் எல்லாம். <br />
<br />
நான் அந்த நண்பர்கிட்ட சொன்னேன், " அவ பாவம்னு தான் அவள விட்டுர சொல்றேன். ஒரு பிரச்சனைய face பண்ற வரைக்கும் தான் பயம் இருக்கும். அதுவே அத அவ face பண்ணிட்டா தைரியமா வெளில வந்துருவா. நாலு வீட்ல சமையல், வீட்டு வேலை செய்தாவது பொழைச்சுப்பா. குழந்தைகள கவனிக்க பயந்து தான் இந்த ஆண்கள் பெண்கள் பாவம்னு சும்மா அடக்கி வைக்க பாக்குறாங்கன்னு. <br />
<br />
என்ன ஒண்ணு, இந்த so called சமூகம் அவள தினமும் கேள்விகளால துளைச்சு எடுக்கும். அய்யோ பாவம்ன்னு ஒரு உச்சு கொட்டி அவ பரிதாபத்துக்குரியவள்ன்னு அவளையே நம்ப வைக்கும். ஒரு பெண் தனியா வாழ்ந்தா அவள கண்டுக்காம கடக்க பழகுங்க, இல்லயா நிஜமான அக்கறை இருந்தா அவளுக்கான பொருளாதார விடுதலைக்கு உதவி பண்ண முடிஞ்சா பண்ணுங்க... அவ்ளோதான்.<br />
<br />
பெண் அவள அவளே பாத்துப்பா... இந்த ஆண் சமூகம் சுமக்க பயப்படுற குழந்தைகளையும் சேர்த்து....</div>
</div>
ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-688800002866550740.post-38363221062038069472017-11-25T00:43:00.002+05:302017-11-25T00:50:43.943+05:30மனிதம் எப்போ மலரும்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /><br /><a href="http://4.bp.blogspot.com/-BULKDsOvVIE/Whhu9ako63I/AAAAAAAADDQ/W9d9iQucvMUQQVouhRtXtpWAA9K86KS0gCK4BGAYYCw/s1600/feminism_icon.jpg"><img border="0" src="https://4.bp.blogspot.com/-BULKDsOvVIE/Whhu9ako63I/AAAAAAAADDQ/W9d9iQucvMUQQVouhRtXtpWAA9K86KS0gCK4BGAYYCw/s640/feminism_icon.jpg" /></a> <br /><br /> <br /><br />Pink படத்துல ஒரு காட்சி வரும். <br /><br />ஃபலக் (Falak)ங்குற பெண் ஒரு வயசான ஆண் கூட relationship வச்சிருக்குறதாகவும், அதுக்காக அவ அவர்கிட்ட இருந்து காசு வாங்கினதாவும் சொல்லுவார் எதிர்தரப்பு வக்கீல். அதே மாதிரி அவர் கட்சிக்காரர்கிட்ட sexual relationship வச்சுக்க காசு வாங்கிட்டு, அவர தாக்கினார்ங்குறது குற்றசாட்டு. <br /><br />அந்த குற்றசாட்டு உண்மை இல்லங்குறதால Falak துடிதுடிச்சு போவா. அதெல்லாம் பொய், நிஜமில்லன்னு அழுதுட்டே இருக்குறவ, ஒரு கட்டத்துல “ஆமா, நான் காசு வாங்கினேன், அதுக்கென்ன இப்ப? அதுக்காக அவன் கூட படுத்துட முடியுமா?”ன்னு கத்துவா. <br /> <br />அதோட அந்த குற்றசாட்டு ஒரு முடிவுக்கு வரும். <br /><br /> அதே படத்துல குற்றவாளி ராஜ்வீர் பெண்கள குடிக்குறாங்க, அதனால அவங்க மோசமானவங்க, குடும்பத்து பொண்ணுங்க குடிக்க மாட்டாங்கன்னு சொல்லுவான். அவன் தங்கச்சி குடிக்குற போட்டோவ எடுத்து காட்டினதும் என் குடும்பத்த ஏன் அசிங்கப்படுத்துறீங்க, அது family party-ன்னு கதறுவான். <br /><br />சமீபத்திய தரமணி படத்துல ரெண்டு காட்சிகள் வரும். <br /><br /> தன்னை மதிச்சு பாக்க வந்த ஆண்கிட்ட மனசுவிட்டு தன்னோட வேதனைகள பகிர்ந்துகிட்டு இருக்குற நேரம் பாத்து அவளோட புருஷன் உள்ள வந்துருவான். பதறிப்போய் அவன ஒழிச்சு வைப்பாங்க அந்தம்மா. ஆனாலும் புருஷன் கண்டுபுடிச்சிருவான். அவங்க character மேல பழி போட்டு தொடர்ந்து அவன் டார்ச்சர் பண்ண, ஒரு கட்டத்துல, “ஆமாடா, அவன் சூப்பரா பண்ணினான்”ன்னு சொல்வாங்க. <br /><br />அதே மாதிரி தான் ஹீரோயின்கிட்ட அவளோட காதலன் சந்தேகப்பட்டு பழி போடுவான். அவளும் பொறுத்து பொறுத்து பாத்துட்டு “ஆமா. அப்படித்தான் பண்ணினேன்”ன்னு சொல்லுவா. <br /><br />இதெல்லாம் படங்கள்ல வந்த சீன்ஸ். சம்மந்தப்பட்ட பெண்களை tension-னோட உச்சக்கட்டத்துக்கு கொண்டு போய் அவங்கள கதற வைக்குற சீன்ஸ். மத்தவங்கள குத்தம் சொல்லி சந்தோசப்படுற sadist மனோப்பான்மை இதுல வெளிப்படும். பதற்றமும் கோபமும் கண்ணீருமா இத அந்த பெண்கள் சொல்றப்ப நாம உச்சுக்கொட்டுறோம், பரிதாப்படுறோம், கண்ணீர் வடிக்குறோம்.... <br /><br />ஆனா நிஜத்துல ஒருத்தங்க மேல பழி போடுறப்ப, திரும்ப திரும்ப அவங்க character பத்தியே பேசுறப்ப, அசரம, கண்ணீர் விடாம, கதறாம, கோபப்படாம நக்கலா “ஆமாடே, அப்படித்தான். அப்படி ட்ரை பண்ணியும் ஒருத்தனும் வொர்த் இல்ல”ன்னு பதிலடி குடுத்தா, அப்போ என்ன பொம்பள இவன்னு நமக்கு சம்மந்தப்பட்ட பெண் மேல கோபம் வரும், தாக்குற எதிராளி ஹீரோவாகி போவான் அதானே. இதெல்லாம் ஒரு sadist மனப்பான்மை தவிர வேற என்ன? <br /><br />நம்ம மனசு இந்த மாதிரியான வார்த்தைகளை கேட்டா ஒரு பொண்ணு அழணும், கண்ணீர் விடணும், ஆற்றாமைல நிலைகுலையணும்னே விரும்புது. அதுக்கு எதிரா ஒரு சம்பவம் நடந்தாலும் நம்மோட சாடிஸ்ட் மனோபாவம் அத ஒத்துக்குறதே இல்ல. <br /><br />இதுக்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? <br /><br /> ஒரு பொண்ணை, எல்லா கெட்ட வார்த்தையாலும் திட்டி, என்கூட வந்து படுடின்னு கூப்ட்டு, இன்னும் டாஷ் டாஷ் வார்த்தைகள் எல்லாம் சொன்னா, ஒரு சராசரி பொண்ணு என்ன செய்வா? பதறி துடிச்சு, முடங்கி போவா, இல்ல தற்கொலை பண்ணிப்பா... அது தான் நம்மோட பண்பாடு, கலாச்சாரம். <br /><br />ஆனா ஒரு பெண்ணை கருத்தியல் ரீதியா எதிர்க்காம கெட்ட வார்த்தைகள் பேசி அடக்கலாம்னு ஒரு சிலர் முயற்சி பண்ணினப்ப அவங்க அதே வார்த்தைகள திருப்பி எதிராளிய நோக்கி வீச, ஒரு பெண் இப்படி எல்லாம் பேசலாமான்னு பதற ஆரம்பிச்சாங்க. <br /><br />ஒரு பெண்ணை முடக்க இந்த ஆயுதத்த தானே ஆண்கள் கையில எடுக்குறாங்க. அதுவே, ஆமாடா, நான் அப்படித்தாண்டான்னு சொன்னதும் இல்லாம, நானும் பலபேர்கிட்ட try பண்ணி பாத்துட்டேன், ஆனா ஒருத்தனும் வொர்த் இல்லன்னு அவனோட ஆண்மை மேல ஒரு அடி குடுத்து பாருங்க, ஆடிப் போவாங்க. <br /><br /> அதுக்கு மேல அவங்களால என்ன குற்றம் சாட்ட முடியும். அப்புறம் அவங்க செய்றது முழுக்க புலம்பல்கள், கழிவிரக்கம், சுயபட்சாதாபம் தான். ஒரே வார்த்தைகள திரும்ப திரும்ப சொல்லி புலம்புவாங்க. என்ன செய்தாலும் அடங்க மாட்டேங்குறாளேன்னு எரிச்சல் படுவாங்க. அடுத்து எடுத்து தாக்க அவங்ககிட்ட ஆயுதமும் இருக்காது. <br /><br />எல்லாம் சரிதான், இப்படி ஒருத்தன் எறியுற சாக்கடைய எதுக்கு நாமளும் எடுத்து வீசணும்? அது நமக்கு தானே அசிங்கம்னு இப்ப தோணலாம். <br /><br />பெண்ணியம் பேசுறவங்களும், அவன் ஆண், அவன் ஆயிரம் பேர் கூட போகலாம், ஆனா ஒரு பெண் எப்படி அப்படி நடந்துக்க முடியும்ன்னு பதறுறாங்க. வெறும் வாய் வார்த்தைகளுக்கே ஏன் இத்தனை பதட்டம்? <br /><br />ஆனா எத்தனை நாள் மவுனமாவே இருந்துட முடியும்? அப்படியே மவுனமா இருந்துட்டா மட்டும் சும்மா விட்டுட போறாங்களா என்ன? நாம மவுனமா இருக்குறது தானே அவங்களுக்கு advantage? <br /><br />இப்போ இதெல்லாம் நமக்கு கலாச்சார பண்பாட்டு சீரழிவா தான் தெரியும். ஆனா அடங்கி கிடந்த ஒவ்வொரு பெண்ணும் பேச ஆரம்பிச்சா, கொஞ்சம் கொஞ்சமா ஒரு சமத்துவம் மலரும். இதுக்காக யாராவது ஒருத்தங்க எங்கயோ ஒரு விதைய போட்டு தானே ஆகணும்.... <br /><br />உடனே அப்படி ஒவ்வொரு பொண்ணும் வேற ஒரு ஆண் கூட போய் தான் சமத்துவம் மலரணும்னா அப்படி ஒரு சமத்துவமே எங்களுக்கு வேணாம்னு பதறாதீங்க. <br /><br />பெண்ணியவாதிகளின் அடிப்படை கோரிக்கையே, விரும்பியவனுடன் உறவு கொள்வதுன்னு நிறைய பேர் புரிஞ்சு வச்சிருக்காங்க. அது அப்படி இல்ல, எப்போ ஒரு ஆண் ஒரு பெண்ணை புரிஞ்சுக்குறானோ அப்பவே அந்த பெண்ணுக்கான தேடல் சரியான விகிதத்துல நிறைவேற ஆரம்பிச்சுடும். நீங்களே புடிச்சு தள்ளினாலும், நான் எப்படி இருக்கணும்னு எனக்கு தெரியும்னு அவ கெத்தோட வீறு நடை போடுவா. <br /><br />இங்க எண்ணங்கள் தான் பிழை, பதறுதல் தான் பிழை. அவங்கவங்க வாழ்க்கைய தீர்மானிக்க வேண்டியது நாம இல்ல, அவங்கவங்க தான்னு புரிஞ்சாலே போதும், நமக்கு பதறல் வராது. யாரையும் தப்பா எண்ணவோ பாக்கவோ தோணாது. யாரும் யாருக்கும் துரோகங்கள் செய்ய தோணாது... <br /><br />புரிதல்களோட உள்ள இணைகள் தோன்ற ஆரம்பிக்கும்.... <br /><br /> அவ்வளவே.... <br /><br /> <br /><br /> <br /></div>
ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-688800002866550740.post-54600778726198836692017-08-15T22:04:00.001+05:302017-08-15T22:04:08.259+05:30“தற்கொலைக் கடிதம்” ஒரு பார்வை – கிருஷ்ண கோபால்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-Rj5fTB-aaoc/WZMiUYQqLSI/AAAAAAAADCE/YmD8i-Eo-UElCKFwW8wVCjiqPuxIgUvCQCLcBGAs/s1600/19424416_1564165873618144_4114187117510793444_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="608" height="640" src="https://4.bp.blogspot.com/-Rj5fTB-aaoc/WZMiUYQqLSI/AAAAAAAADCE/YmD8i-Eo-UElCKFwW8wVCjiqPuxIgUvCQCLcBGAs/s640/19424416_1564165873618144_4114187117510793444_n.jpg" width="403" /></a></div>
<br /><br />
02/ 07/ 2017 இலைகள் இலக்கிய இயக்கத்தில் வாசிக்கப்பட்டது<br />
.......................................................................................................................................<br /><br /> தமிழ் சிறுகதை உலகம் உலகச் சிறுகதைகளுக்கு இணையான பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. புதுமைப்பித்தன் தொடங்கி ஜானகிராமன், சுந்தர ராமசாமி, அம்பை, ராம கிருஷ்ணன், ஜே.பி. சாணக்கியா, பாலசுப்பிரமணியம் பொன்ராஜ், எஸ்.செந்தில்குமார், எஸ்.ஜே.சிவசங்கர் வரையிலும் புதிது புதிதாய் எழுத்தாளர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். படைப்பாளிக்கான எழுத்துச்சுதந்திரம் பாதிக்கப்படும் வரை இந்த பாய்ச்சல் நிகழ்ந்துக் கொண்டேயிருக்கும். <br /><br /> தமிழில் யதார்த்த எழுத்தின் காலம் முடிந்துவிட்டது என்றால் இல்லை. அதை விவாதத்திற்குள்ளாக்கி புரிந்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஜீவாவின் கதை உலகம் என்னப் பேசுகிறது, அவரின் கதை மாந்தர்கள் யார், நவீன கதைச்சொல்லியாக இருக்கிறாரா இல்லையா, பாடுபொருள் என்ன என்பதைப் பற்றிப் பேசலாம். <br /><br /> வலி, வேதனை, துயர், புறக்கணிப்பு, அன்பு, காதல், பாசம், கொண்டாட்டம், பழமை, மரபை விடாமை என உணர்வுகளின் சங்கமமாக அவரின் அக உலகம் பெண்ணின் வெளியாக கதையில் விரிவுக்கொள்கிறது. <br /><br /> இத்தொகுப்பில் மொத்தம் பெரியதும் சிறியதுமாக 20 கதைகள் இருக்கின்றன. இக்கதைகளில் நான் பொருட்படுத்தி பேசும் கதைகளாக கன்னிப்பூசை, சாகசப்பயணம், அப்பா, இருப்புக்குழி, ராக்காயி வீட்டு மருமக, மாதவன் சார் நலம் போன்ற கதைகளைச் சொல்வேன். <br /><br /> சிறுகதைகளுக்கான வடிவம் வேறு, கதைக்கான வடிவம் வேறு. தற்கொலைக் கடிதம் தொகுப்பில் அனேகமாக எல்லாம் கதைகள் தான் ராக்காயி வீட்டு மருமவ மற்றும் சாகசப்பயணம் போன்ற கதைகள் சிறுகதையின் கூறுகளை சிறிது கொண்டிருப்பதாக நினைக்கிறேன். <br /><br /> சில நேரங்களில் இது கதைகளா இல்லை சுயவரலாறா என்கிற சந்தேகம் உண்டு. பொதுவாக அனேக கதைகளில் ஆசிரியர் தன் வாழ்வில் எதிர்கொண்ட பிரச்சனைகளை அப்படியே இன்னொருவரிடம் சொல்லும் யுக்தியை தான் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். இது பெரும்பாலும் ஒருவரின் கதைதான் என்கிறபோது சற்று சலிப்பு மேலிடுகிறது. <br /><br /> எழுத்தாளர் தன் சொந்த அனுபவங்களை எழுதக் கூடாதா என்றால் எழுதலாம். ஆனால் வேறு வேறு வடிவத்தில் கதைகள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். உண்மையைச் சொன்னால் கதைகளில் உயிர் இருக்கிறது, உடல் இல்லை. இதை இப்படி வேண்டுமானால் சொல்லலாம், உள்ளடக்கம் உள்ளது, வடிவம் இல்லை எனலாம். <br /><br /> ஜீவாவின் கதைகளில் எனக்கு பிடித்த அம்சமம் கதை வாசிக்க தடையில்லாத ஒரு ப்ளோவைதான் சொல்ல வேண்டும். அதுக் கூட பொது மொழிதான் என்றாலும் நாம் அதை ஏற்றுக் கொள்ளலாம். நினைத்ததை எழுத்தில் கொண்டு வந்துவிடும் மொழி ஆளுமை இருப்பதாகவே நம்புகிறேன். ஜீவாவின் வாழ்வின் அனுபவங்களை மதிக்க வேண்டும். அவர்தம் வாழ்வியல் சூழலுக்குள் அவரின் இடம் என்ன என்பது புரிகிறது. <br /><br /> பழமை மரபு மீது ஆசிரியருக்கு இருக்கும் ஈடுபாடும் மதிப்பையும் இருப்புக்குழி மற்றும் கன்னிப்பூசை கதைகள் சொல்லிச் செல்கிறது. வட்டார மரபை உயர்த்திப்பேசும் சிறுகதைகள் இவைகள் எனலாம். முதலில் கன்னி பூசை பற்றி விரிவாக பேசலாம். <br /><br /> ஒரு குடும்பத்தில் உள்ள ஆணோ பெண்ணோ இறந்துப் போனால் அவர்களை தெய்வமாக நினைத்து வழிபடும் மரபு தென்புலத்தில் உண்டு. கன்னியாக வழிபடத் தொடங்கியதும் குடும்பத்தில் உள்ள ஒரு நபரின் மீது கன்னி வந்து குடும்பத்தில் உள்ள நல்லது கெட்டது சொல்லும். குடும்பத்தை வாழ வைக்கும் கன்னிக்கு தென்மேற்கு மூலை எனப்படும் கன்னி மூலையில் மேடை எழுப்பி, கன்னிக்கு பிடித்தமான பொருட்களை படையலிட்டு வருடத்திற்கொரு முறை பூசைக் கொடுப்பார்கள். <br /><br /> கணேசன் மாமா சிறுவயதில் இறந்து விடுகிறார். அவரை கன்னியாக வழிபட தொடங்குகிறார்கள். குடும்பத்தில் உள்ள பிற மாமாமார்களுக்கு கல்யாணமாகிறது. கூட்டுக்குடும்பம் தனித்தனியே பிரிந்துச் செல்கிறது. கணேசன் மாமாவின் அண்ணன் நாராயணன். நாராயணனின் மனைவி சங்கரி. சங்கரி மீது கன்னித் தெய்வம் வந்து அருள் சொல்கிறது. குடும்ப பிரிவினை காரணமாக தனியே இருக்கிறார் நாராயணன் மாமா. கன்னிக்கு பூசை கொடுக்கும் போது சங்கரி மாமி மீது ஆராதனை வந்து தொலைவிலிருக்கும் வீட்டுக்கு வந்து விடுவாள். சிதறிப் போன கூட்டுகுடும்பத்தை எப்படி கன்னி தெய்வம் இணைத்து வைக்கிறது என்பது தான் கதையோட ஜீவனாக நான் கருதுகிறேன். <br /><br /> அடுத்து இருப்புகுழி கதையைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். இருப்புகுழி என்பது அய்யா வழி மரபில் உள்ள ஒரு மரணச் சடங்கின் முக்கிய கூறு. இறந்து போன ஒருவர் ஊரில் முக்கிய நபராக இருக்கிறார். வயதானவர், மதிப்புமிக்கவர், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கால் பெருவிரலை இழந்து சாக்ஸ் காலோடு அலைபவர். விரலை இழந்தவர் தன் மானத்தை இழந்ததை போல் நொந்துப் போகிறார். நோய் முற்றி ஒரு காலை எடுக்க வேண்டும் என்கிற சூழலில் காலை இழப்பதற்கு முன்பே இயல்பாக மரணம் அவரை தழுவிக் கொள்கிறது. இது சிறுகதையின் மேல் சரடு. இறந்து போனவரை இருப்புக் குழிக்குள் புதைத்து கல்லறை தோட்டம் அமைத்தார்கள் என்பது இன்னொரு சரடு. <br /><br /> பொதுவாக கிறிஸ்ட்டியானிட்டியின் பாதிப்பால் அய்யா வழியில் கூட இறந்தவரை புதைப்பதற்கு இருப்புக்குழி எடுத்துப் புதைக்க மெனக்கெடுவதில்லை. அவர்கள் படுக்கை நிலையிலுள்ள கல்லறைப்பெட்டியையே பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். ஏனெனில் அய்யாவழிக்காரர் ஒருவர் இறந்துவிட்டார் என்றால் உடனே அவரை சம்மண நிலையில் கால்களை மடித்து வைத்து, கைகளை மார்பு கூடோடு ஒட்டி, தவநிலையில் உக்கார வைத்து விடுவார்கள். இது துரிதமாக நடக்க வேண்டியப் பணி. சற்று தாமதித்தாலும் கைகால்களை நாம் நினைத்தப்படி நிமிர்த்தமுடியாது. உலகமயமாக்கலின் தாக்குதல் நிகழ்ந்தபின் மீடியாக்களின் பெருக்கத்தால் பொருள் மட்டுமே வாழ்க்கையில் முக்கியமென்றும், மனித மதிப்பீடுகள் வீழ்ச்சியடைந்தபின் எவருமே மரணசடங்கில் இருப்புக்குழி மரபை பேணுவதில்லை. <br /><br /> என் தாத்தாவையும் பாட்டியையும் இருப்புக்குழி அமைத்துதான் அடக்கம் செய்தார்கள். என் மாமா இறந்தபோது அவரை கிருஸ்டியானிட்டி முறைப்படி கல்லறைப் பெட்டியில் வைத்து அடக்கம் செய்தார்கள். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் மாமா இறந்தது வெள்ளிக்கிழமை, அவரை அடக்கம் செய்தது சனிக்கிழமை. அடக்கம் செய்யும் போது ஊர்க்காரர்கள் சனிப்பிணம் தனியே போகக்கூடாது என்றுச் சொல்லி ஒரு சேவல் கோழியை உயிரோடு குழிக்குள் போட்டுப் புதைத்து விட்டார்கள். உயிர்பலிக்கு எதிரான அய்யாவழியில் சிறுதெய்வ வழிபாட்டின் மரபில் பின்பற்றப்படும் உயிர்பலியை இங்கே ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. <br /><br /> வாழ்வே ஒரு புதிர் நிறைந்தது. முரண்நகையோடுதான் இயங்குகிறது போலும். மரபு என்பது இனக்குழு வாழ்வில்தான் பராமரிக்கப்படுகிறது. ஜீவாவின் இருப்புக்குழி கதையில் இரண்டு விஷயங்கள் முரண் நகையாக தோன்றியது. ஒன்று இறந்து போன பெரியவரை வடக்குப்பார்த்து தவநிலையில் வீட்டிற்குள் வைத்திருக்கும் போது பக்கத்தில் பத்தி மணத்துக்கொண்டிருக்கிறது. இரண்டாவது இருப்புக்குழி அமைத்து சடலத்தை மூடியபின் மார்பிள் கல் கொண்ட கல்லறைத் தோட்டம் அமைத்தார்கள் என்று வருகிறது. இது பத்தி கொளுத்தி வைத்திருக்கிறது என்பது பிராமண மதமான இந்துமத மரபையும், கல்லறைதோட்டம் அமைத்தல் என்பது கிறிஸ்ட்டியானிட்டி மரபோடு தொடர்பும் கொண்டது. கால மாற்றம் இனக்குழுவாழ்வின் வீழ்ச்சி இவை எப்படி ஒரு பூர்வீக மரபை உடைத்து ஒரு நகலாக உருமாறுகிறது என்பதை கதை வழியே உணர முடிந்தது. இந்தத் தொகுப்பில் உள்ள முக்கியமான கதையாக நான் இதை உணர்கிறேன். இருப்புக்குழி கதையில் மிளிரும் முரண் நகை ஒரு பெரும் கலாச்சார மாற்றத்தை மறைமுகமாக குறிப்பிடுகிறது என்பது கதையின் சிறப்பம்சங்களில் ஒன்று. <br /><br /> பானிபூரியும் மசாலாபூரியும் ஒரு விளையாட்டான சிறுகதை தான். நவீன மனிதர்கள் தங்கள் உணவு வகைகளில் பல மாற்றங்களை விரும்புகிறார்கள். உலகமயமாக்கலுக்குப்பின் பிராய்லர் கோழிகளின் வருகை அது எப்படி உருவாக்கப்படுகிறது, அதன் சதை ஏன் இவ்வளவு மிருதுவாக இருக்கிறது, ஏன் இவ்வளவு சுவையாக இருக்கிறது என்கிற வரலாறுத் தெரியாமலேயே நம் தலைமுறைகள் தொடர்ந்து உட்கொண்டதன் விளைவு ஆண்மை குறைபாடு, பெண்கள் சீக்கிரமே பூப்பெய்தல், மாதவிடாய் கோளாறுகள், உடல் குண்டாகுதல் போன்ற செயற்கையான நோய்களுக்கு நாம் ஆளாகவேண்டியிருந்தது. இந்த உணவை உண்டதின் நீட்சியாகவே பரோட்டா, பானிப்பூரி, மசாலாப்பூரி போன்ற நம் கலாச்சாரத்திற்கு ஒத்துக் கொள்ளாத உணவு வகைகளை நான் உட்கொள்கிறோம். நான் குறிப்பிட்டது இந்த சிறுகதைக்கு வெளியே நிற்கிறது என்றாலும் இதைக் குறிப்பிட்டாகவேண்டியிருக்கிறது. <br /><br /> தற்கொலைக்கடிதம் கதை, கதையின் சாராம்சத்திலிருந்து சிறிதும் மாறாமல் அழுத்தமான வடிவமாக, இப்புத்தகத்தில் பிரசுரிக்கப்படாத பரோட்டாவுக்கு பின்னால் உள்ள ரகசியம் சிறுகதையில் அழுத்தமாக வெளிப்படுகிறது. <br /><br /> சாகசப்பெண் கதையில் கொடுமையான நோயிலிருந்து மீண்டு வரும் பெண் கார் ஓட்டுகிறாள், அப்பாவிடம் அன்பு கொண்டவளாக இருக்கிறாள். இக்கதையில் வாழ்வை எதிர்கொள்ளும் விதம் அலாதியானது. <br /><br /> ஒரு கேன்சர் நோய்க்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பெண் எப்படி அவளைப் போல் கேன்சர் ஆரம்ப நிலையில் இருக்கும் மனதளவில் சோர்ந்து போயிருக்கும் ஒருவருக்கு கவுன்சிலிங் கொடுக்கிறாள், எப்படி படிப்படியாக அவன் நம்பிக்கைக் கொண்டு சிகிச்சைப் பெறுகிறான், சிகிச்சைப் பெற்று அவன் குணமாகிறான் என்பதை உளவியல் பார்வையில் அணுகியிருக்கும் சிறுகதை இது. <br /><br /> கதாசிரியரின் பாடுபொருள் அனேகமாக குடும்ப உறவுகளைச் சார்ந்தே இயங்குகிறது. அப்பா, அம்மா, தம்பி, மாமா, மாமி, மாடுகளோடு உள்ள உறவுகள் என்றே நீள்கிறது. லெச்சுமி என்ற பசுமாடு கன்றுக்குட்டி ஈனும்போது நெஞ்சடியையும் தூக்கமின்மையும் கதாபாத்திரங்கள் உணர்ந்ததுபோல் வாசகனும் அந்த உணர்வை பெற வைத்தச் சிறுகதை. <br /><br /> பழம் நம்பிக்கையோடு பின்னிப்பிணைந்து வாழும் உறவுகள் கிராமத்து எளிமையான மனிதர்கள், ஒரு பெண் சுதந்திரப்பறவையாக ஊர்சுற்ற நினைக்கிறாள், அவளை அடக்கி வைக்க நினைக்கிறது குடும்பம். கட்டுப்பாட்டை உடைத்து இளங்கன்று பயமறியாது என்பது போல் திக்கற்று சுற்றுகிறாள். பட்டாம்பூச்சியை கண்டு குழந்தைப்போல் குதூகலிக்கிறாள், வழியில் நடந்து செல்லும் யானையைக் கண்டதும் மகிழ்வுக் கொள்கிறாள். கட்டியணைக்கத் துடிக்கிறாள். இப்படியாக பெண் வெளி தன் ஒடுக்கப்பட்ட சமூக அமைப்பிலிருந்து வெளியேறத் துடிக்கும் கதை பானிபூரியும் மசாலா பூரியும். <br /><br /> இவ்வாறு பல கதைகளில் வெவ்வேறு பெயர் தாங்கி வரும் பெண் கதாபாத்திரம் ஆசிரியரே என்பதை கதை வாசிக்கும் போதே எளிமையாக உணர முடிகிறது. இந்த சிறுகதைகளை ஒன்றாக்கி சற்று கூடுதலான காலங்கள் எடுத்து ஒரு நாவல் எழுதியிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. நாவல் எழுதுவதற்கான ஒரு ப்ளோ எழுத்து மொழியில் ஜீவாவுக்கு கைகூடியிருக்கிறது என்றே நம்புகிறேன். <br /><br /> ராக்காயி வீட்டு மருமவ கதை பெண்ணின் மாதவிடாய் பிரச்சனையைப் பற்றிப் பேசிப் போகிறது. சமீபத்தில் முகநூலில் மாதவிடாய் பற்றி ஒரு ஆணிடம் ஏன் பேசக்கூடாது என்ற கட்டுரையையும் இச்சிறுகதையோடு இணைத்துப்பார்க்கிறேன். இரண்டும் வெவ்வேறு தளம் என்றாலும் ஒரே பிரச்சனையைப்பற்றிப் பேசிச் செல்கிறது. பொதுவாக கதைகள் அனேகமாக பாதியிலேயே முடிந்து போய் விடுகிறதோ என்று நினைக்கிற அளவுக்குச் செல்கிறது. அது இன்னும் நீண்டுச் செல்லலாம். அதற்கான வெளி அக்கதைகளில் இருக்கிறது. நாம் சொல்ல வந்ததை சொல்லிவிட்டோம் என்கிற குழப்பம் ஆசிரியருக்கு இருப்பதாக உணர்கிறேன். <br /><br /> கிட்டத்தட்ட எல்லா கதைகளிலும் ஆசிரியர் ஒளிந்திருந்து எல்லாவற்றையும் சொல்முறை யுக்தியிலும் நினைவோடை யுக்தியிலும் உரையாடுகிறார். ஆனால் சிறந்த சிறுகதையில் ஆசிரியர் யார் என்று வாசகன் கண்டுபிடிக்க இடம்கொடுக்க கூடாது என்பது என் எண்ணம். <br /><br /> என்னுடைய கதைத்தொகுப்பை விமர்சனம் வைக்கின்ற அளவுக்கு தீவிரமாக எதுவும் இல்லையென்று ஒருமுறை சொல்லியிருக்கிறார் கதை ஆசிரியர் ஜீவா. ஆனால் எந்த ஒரு படைப்பாக இருந்தாலும் அது வெளியில் வந்ததும் அதுப்பற்றி ஒரு சரியான விமர்சனம் வந்தால்தான் ஆரோக்கியமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அப்பொழுது தான் படைப்பாளி அடுத்தக் கட்டத்திற்கு போக முடியும். படைப்பு ஆழமும் விரிவும் கொள்ளும். அதனால் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். <br /><br /> இன்னும் கொஞ்சம் பொறுமையாக இந்தத் தொகுப்பை கொண்டு வந்திருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம். உங்களை சுற்றி இருந்தவர்கள் இதை உங்களிடம் சொல்லியிருக்கலாம். சற்று தாமதித்து கொண்டு வந்திருந்தால் இன்னும் சிறப்பாக பேசப்பட்டிருக்கும். <br /><br /> தொடர்ந்து வாசியுங்கள், எழுதுங்கள், இதைவிடவும் சிறப்பான கதையை பதிவுச் செய்யுங்கள். <br /><br /> இலக்கிய உலகிற்கு அடியெடுத்து வைத்து சிறுகதை தொகுப்பை கொண்டு வந்த உங்களுக்கு அன்பும் வாழ்த்தும்.</div>
ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-688800002866550740.post-83226387838329817482017-03-04T09:09:00.002+05:302017-03-04T09:10:12.753+05:30செல்ல சண்டைகள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /><a href="http://2.bp.blogspot.com/-IIYSYFVwzJA/WLo27R_0P9I/AAAAAAAADAE/SHowxN-vBeE9LbJjs5cd-hRd7Pb2kRfSwCK4B/s1600/IMG_20161128_193022.jpg" imageanchor="1"><img border="0" height="360" src="https://2.bp.blogspot.com/-IIYSYFVwzJA/WLo27R_0P9I/AAAAAAAADAE/SHowxN-vBeE9LbJjs5cd-hRd7Pb2kRfSwCK4B/s640/IMG_20161128_193022.jpg" width="640" /></a><br /><br />நாகர்கோவில்ல நடக்குற தேசிய புத்தக கண்காட்சிக்கு பொன்னீலன் சார் கூட போயிருந்தேன்... <br /><br /><br />காலேஜ்ல இருந்து வீட்டுக்கு வந்து, அவர கூப்பிட கிளம்பி போகவே ரொம்ப லேட் ஆகிடுச்சு. என்னை பாத்ததும் பொன்னீலன் சார் மனைவி, எம்மா நல்லா இருக்கியான்னு கேட்டதோட, கொஞ்சம் இரு, என்னை இருளப்பப்புரம் கோவில்ல இறக்கி விட்டுருவியான்னு கேட்டாங்க... <br /><br /><br />சரின்னு அவங்களையும் கார்ல ஏத்திகிட்டு, வர்ற வழில வர்சுவையும் ஏத்திகிட்டு கிளம்பினோம். <br /><br /><br />சில நேரம் ரெண்டு பேர் பேசுறத வேடிக்கை பாக்குறதே அத்தன சந்தோசமா இருக்கும். அதுவும் முகவாய தோள்ல இடிச்சுக்குற மாதிரி செல்ல சண்டைகள் நடந்தா கேக்கவே வேணாம், செமையா வேடிக்கை பாக்கலாம்...<br /><br /><br />"இந்தா ஒரு ஜன்னல மட்டும் பூட்டிகிட்டு கோயிலுக்கு காணிக்க வைக்க ஒரு தேங்காயும் உரிச்சுகிட்டு இப்ப ஓடி வரேன்"ன்னு போனவங்கள கொஞ்ச நேரமா காணோம். ஒருவழியா அவங்க வந்ததும் "நம்ம ஊரு பொம்பளைங்க நேரம் காலம் பாக்க மாட்டாங்க"ன்னு சொல்லிகிட்டே பொன்னீலன் சார் கூடவே ஒரு பழமொழியும் சொன்னார். <br /><br /><br />அதென்னமோ தெரியல, அந்த பழமொழி எனக்கு இப்ப மறந்து போச்சு. அடுத்த தடவ அவர பாக்குறப்ப நெனவு வச்சு அது என்னன்னு கண்டிப்பா கேக்கணும். <br /><br /><br />"இன்னிக்கி பிள்ள வந்ததால என்னால கோயிலுக்கு போவ முடியுவு"ன்னு சிரிச்சுகிட்டே அவர சட்டைப்பண்ணாம கார்ல ஏறி உக்காந்தாங்க. <br /><br /><br />"நீ அந்த சிவன் கோயிலுக்கு போயிருக்கியாமா? ரொம்ப சிறப்பு வாய்ந்த கோவில் அது"ன்னு அவங்க கேட்டதும் எனக்கு கொஞ்சம் திணற ஆரம்பிச்சுது. பின்ன, நாம தான் எந்த கோவிலுக்கும் போக மாட்டோம்ல.... <br /><br /><br />"இல்லல, நான் கோயிலுக்கெல்லாம் போறது இல்ல"ன்னு சொன்னேன். அதுக்குள்ள சாமி பத்தி பெருமையா அவங்களும், "நல்ல வேளை, நீ கோவிலுக்கு போக மாட்ட. இப்படியே இருமா"ன்னு இவரும் சொல்ல எனக்கு என்னோட பூட்டா, பூட்டி நியாபகம் வந்துச்சு... <br /><br /><br />பூட்டாவும் பூட்டியும் பாக்க எப்பவும் எலியும் பூனையுமா தான் இருப்பாங்க. ஆனா அவங்களுக்குள்ள ஒரு மெல்லிய காதல் ஓடிகிட்டே இருக்கும். <br /><br /><br />சும்மா ஒருத்தருக்கொருத்தர் கிண்டல் பண்ணியும், நக்கல் பண்ணியும்.... அத எல்லாம் கூடவே இருந்து பாக்க அவ்வளவு ஜாலியா இருக்கும். <br /><br /><br />அப்புறம் அவங்கள கோவில்ல இறக்கி விடுறப்ப தான் முதல் தடவையா அந்த கோவில பாத்தேன். நல்லா பெருசாவே கட்டியிருக்காங்க. எட்டிப் பாத்தா ஒரு சர்ச் வேற இருக்கு பக்கத்துலயே... <br /><br /><br />அதோட பிரம்மாண்டத்த பாத்து கொஞ்சம் மலைச்சு அங்க இருந்து ராஜாஸ் மால் போனோம். <br /><br /><br />தன்னோட பேத்திய பாக்க நாளைக்கு பாண்டிச்சேரிக்கு போறதாகவும், அதனால பேத்திக்கு ஒரு பொம்மை வாங்கணும்னும் ஏற்கனவே பொன்னீலன் சார் சொல்லி இருந்தார். <br /><br /><br />நான் கார் பார்க்கிங்லயே இருக்க, அவரும் வர்சுவும் போய் பொம்மை வாங்கிட்டு வந்தாங்க. <br /><br /><br />அங்க இருந்து கிளம்பி புக் ஃபேர் போய், கொஞ்ச நேரம் புத்தகங்கள புரட்டிட்டு இருக்குறப்ப ராம் வந்தார். <br /><br /><br />அதென்னமோ தெரியல, எனக்கு இன்னமும் ஆட்கள பாத்தா சிநேகமா புன்னகைக்கவும், நல்லா இருக்கீங்களான்னு நலம் விசாரிக்கவும் வரவே மாட்டேங்குது. ஆனாலும் பேச்சுக்கிடைல எப்படியோ நானும் கொஞ்சம் பூந்துகிட்டேன். <br /><br /><br />என்னோட சிறுகதை தொகுப்பு "தற்கொலைக் கடிதம்" பத்தி நிறைய பேர் அவருக்கு கால் பண்ணி பாராட்டினதா சொன்னார். அதுவும் புத்தகத்தோட தலைப்பு ரொம்ப அருமையா இருக்குன்னு சொன்னாங்களாம். <br /><br /><br />கூடவே 2016 வருடத்துல "தெற்கு" விருதுகள் வழங்கும் விழாவுல சிறந்த சிறுகதைக்காக என்னோட சிறுகதை தொகுப்பு தேர்வாகி இருக்குறதாவும் சொன்னார். <br /><br /><br />ஆக மொத்தம் நிறைய பேசி, ரெண்டே ரெண்டு புத்தகத்த வாங்கிட்டு அப்படியே கிளம்பி வர்ற வழியில பொன்னீலன் சாரோட மனைவியையும் கார்ல ஏத்திகிட்டு வந்தோம். <br /><br /><br />இடையில, வர்சு சாக்லேட் வேணும்னு அடம்பிடிக்க, அவள கடைக்கு அனுப்பி வச்சுட்டு நாங்க கார்லயே உக்காந்து பேசிட்டு இருந்தோம். <br /><br /><br />வர்சுவ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ரொம்ப தைரியசாலியா வளந்துருக்கான்னு சாரோட மனைவி சொன்னாங்க. <br /><br /><br />முன்னாடி இத விட டெரரா இருப்பா. இப்ப பொம்பள புள்ள அடக்க ஒடுக்கமா இருன்னு வீட்ல சொல்லிக்குடுத்து கொஞ்சம் அமைதி ஆகிட்டான்னு நான் சொன்னதும் தான் தாமதம், அப்படியே கோபத்துல வெடிச்சுட்டாங்க... <br /><br /><br />"பொம்பள புள்ளைங்க இன்னிக்கி காலத்துக்கு எங்க எல்லாம் போறாங்க, இங்க என்ன அடக்க ஒடுக்கமா இருக்கணும்மாம்ல, அதெல்லாம் வேணாம், அவ நல்ல தைரியசாலியா தான் வளரணும்"ன்னு பொரிஞ்சி தள்ளிட்டாங்க... <br /><br /><br />தெய்வ நம்பிக்கையோட கோவில் கோவிலா போற ஒரு டிபிக்கல் குடும்ப பெண்ணான அவங்களுக்குள்ள இப்படி ஒரு புரட்சியாளர் இருப்பார்ன்னு நான் நினைக்கவேயில்ல... <br /><br /><br />ஹாஹா..... சரியான ஜோடிங்க தான் ரெண்டு பேரும்.... <br /><br /><br />அப்புறம், வர்சு ஒரு கராத்தே kid -ன்னு அவங்களுக்கு எடுத்து சொல்லி, அவ செய்ற ரவுடியிசத்த எல்லாம் சொன்னதும் அவங்களுக்கு அவ்வளவு சந்தோசம்... "எனக்கு இந்த புள்ளைய ரொம்ப பிடிச்சிருக்குமா"ன்னு சொல்றப்ப அவங்க வாயெல்லாம் பல்லு.... <br /><br /><br />அவங்க ரெண்டு பேரையும் இறக்கி விட்டுட்டு வர்றப்ப வர்சு சொன்னா "அந்த தாத்தா நிஜமாவே கிரேட் தெரியுமா?"<br /><br /><br />நான் ஏன்னு கேட்டேன்... <br /><br /><br />"அவர் பேத்திக்காக பார்பி பொம்மை வாங்கிக் குடுக்குறார். பேத்தி என்ன கேட்டாலும் வாங்கி குடுக்குறார்ல, அப்ப அவர் கிரேட் தான"ன்னு சொன்னா. <br /><br /><br />"அந்த பேத்தி வயசு என்ன தெரியுமா"ன்னு திருப்பி கேட்டேன். <br /><br /><br />"தெரியலயே"ன்னா... <br /><br /><br />"மெடிக்கல் காலேஜ் first year student"ன்னு சொன்னதும் "ஆஆஆஆ"ன்னு வாய பொளந்தவ தான், வீட்ல அவள இறக்கி விடுற வர மூடல. <br /><br /><br />ஆக, ஒரு மாபெரும் எழுத்தாளரோடு பயணிக்குறத விட அவர் குடும்பத்தோட பயணிக்குறது அத்தன சுவாரஸ்யமா இருக்கு.... <br /><br /><br />இன்னும் இன்னும் எங்க பயணம் தொடர்ந்துகிட்டே தான் இருக்கப்போகுது....<br /></div>
ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-688800002866550740.post-74025442301470209562017-02-20T18:11:00.000+05:302017-02-20T18:11:25.694+05:30தொடுதல் பழக்குவோம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<!--[if gte mso 9]><xml>
<w:WordDocument>
<w:View>Normal</w:View>
<w:Zoom>0</w:Zoom>
<w:TrackMoves/>
<w:TrackFormatting/>
<w:PunctuationKerning/>
<w:ValidateAgainstSchemas/>
<w:SaveIfXMLInvalid>false</w:SaveIfXMLInvalid>
<w:IgnoreMixedContent>false</w:IgnoreMixedContent>
<w:AlwaysShowPlaceholderText>false</w:AlwaysShowPlaceholderText>
<w:DoNotPromoteQF/>
<w:LidThemeOther>EN-US</w:LidThemeOther>
<w:LidThemeAsian>X-NONE</w:LidThemeAsian>
<w:LidThemeComplexScript>TA</w:LidThemeComplexScript>
<w:Compatibility>
<w:BreakWrappedTables/>
<w:SnapToGridInCell/>
<w:WrapTextWithPunct/>
<w:UseAsianBreakRules/>
<w:DontGrowAutofit/>
<w:SplitPgBreakAndParaMark/>
<w:DontVertAlignCellWithSp/>
<w:DontBreakConstrainedForcedTables/>
<w:DontVertAlignInTxbx/>
<w:Word11KerningPairs/>
<w:CachedColBalance/>
</w:Compatibility>
<w:BrowserLevel>MicrosoftInternetExplorer4</w:BrowserLevel>
<m:mathPr>
<m:mathFont m:val="Cambria Math"/>
<m:brkBin m:val="before"/>
<m:brkBinSub m:val="--"/>
<m:smallFrac m:val="off"/>
<m:dispDef/>
<m:lMargin m:val="0"/>
<m:rMargin m:val="0"/>
<m:defJc m:val="centerGroup"/>
<m:wrapIndent m:val="1440"/>
<m:intLim m:val="subSup"/>
<m:naryLim m:val="undOvr"/>
</m:mathPr></w:WordDocument>
</xml><![endif]--></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://i.ytimg.com/vi/UBLRD0MzVGs/hqdefault.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="https://i.ytimg.com/vi/UBLRD0MzVGs/hqdefault.jpg" width="640" /> </a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
எந்த பக்கம் திரும்பினாலும் மனசுக்கு அச்சுறுத்துற மாதிரி தான் செய்திகள்
வந்துட்டு இருக்கு. இதெல்லாம் பாக்குறப்ப மனசுக்குள்ள ஒரு மாதிரியான பயம்
வர்றத தடுக்கவே முடியல. <br />
<br />
மூணு வயசு, அஞ்சு வயசு குழந்தைங்க எல்லாம் எப்படி தான் சில பேரோட கண்ணுக்கு போகப் பொருளா தெரியுறாங்களோ புரியல.... <br />
<br />
ரொம்ப
சுதந்திரமா வளந்தவன்னு பெருமையா நினைச்சுப்பேன் சில நேரம். ஆனா இப்ப தான்
தெரியுது நானெல்லாம் ஏதோ ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள்ள ரொம்ப ரொம்ப
ஜாக்கிரதையா பொத்தி பொத்தி வளர்க்கப் பட்டுருக்கேன்ன்னு... <br />
<br />
எனக்கு
தெரிஞ்ச ஆண்கள் ஒரு சகமனுசியா தான் பெண்கள நடத்தி இருக்காங்க. ஒரு
கூட்டுக் குடும்பத்துக்குள்ள வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு வரம் வாங்கி
வந்ததுன்னு புரிய ஆரம்பிக்குது எனக்கு. <br />
<br />
எங்க பாத்தாலும்
பெண்கள் அப்படி இருக்கணும், ஆண்கள் அப்படி நடந்துக்கணும்ங்குற மாதிரியான
கருத்துக்கள பாத்து பாத்து சலிப்பா இருக்கு. பயமா இருக்கு, அத செய்யாத,
அடக்கி வை-ன்னு சொல்ற அத்தன வார்த்தைகளும் எனக்கு அசூயையா இருக்கு. <br />
<br />
அதுக்காக நம்ம வீட்ல நடக்காத வரைக்கும் நாம பத்திரமா தான் இருக்கோம்னும் அசால்ட்டா விட்டுற முடியாது. <br />
<br />
பாலியல் ரீதியான அச்சுறுத்தல்கள் பெருகி வர்ற இந்த நேரத்துல, நமக்கு எது தேவைங்குற புரிதல் முதல்ல வேணும்னு நினைக்குறேன்.... <br />
<br />
பொம்பள
புள்ளைகிட்ட அப்படி இரு, இப்படி இரு, ஜாக்கிரதையா இருன்னு சொல்றதோ, ஆம்பள
பசங்ககிட்ட பொண்ணுங்கள தொடாதன்னு சொல்றதோ இன்னும் ஒரு அச்சுறுத்தலான
மனநிலைக்கு தான் கொண்டு போகும்ன்னு நான் நினைக்குறேன்... <br />
<br />
எத பாத்தாலும் சந்தேகத்தோடவும் விரக்தியோடவும் பாத்துகிட்டு இருந்தா அதுக்கப்புறம் வாழ்ந்து தான் என்ன பிரயோஜனம்? <br />
<br />
அதுக்கு பதிலா பாலியல் ரீதியா பாகுபாடு இல்லாத ஒரு சமூகத்த நாம உருவாக்க முயற்சிக்கலாம்.... <br />
<br />
பள்ளிகள்ல
ஆண் பெண் குழந்தைகள பிரிச்சி உக்கார வைக்காம கலந்து உக்கார வைக்கலாம்.
ஒருத்தருக்கொருத்தர் பாராட்டுற நேரம் கை குடுத்துக்குறது, தோள்
தட்டிக்குறது மாதிரியான நண்பர்களுக்குள்ள நடக்குற தொடுதல்கள அனுமதிக்கலாம்,
encourage பண்ணலாம்... <br />
<br />
இந்த தொடுதல்கள் மூலமா இவங்க
நம்மோட சக மனுசி, மனுஷன், நமக்கும் இவங்களுக்கும் வித்யாசம் கிடையாதுங்குற
எண்ணம் குழந்தைகள அறியாமலே அவங்களுக்குள்ள புகுந்துடும்... <br />
<br />
நாம கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இது தான்.... <br />
<br />
எத
நாம செய்யக் கூடாதுன்னு சொல்றமோ அத தான் பிள்ளைங்க செய்ய நினைப்பாங்க. ஒரு
ஆர்வமும் குறுகுறுப்பும் அதுல தான் வரும். அதுக்கு மாறா, ஆண், பெண் நட்பு
தப்பேயில்லன்னு சின்ன வயசுலயே புரிய வச்சுட்டா bad touch-க்கு உள்ளாகுற
குழந்தைக்கு தானே வித்யாசம் புரிய ஆரம்பிக்கும். மெது மெதுவா bad touch
பத்தி அவங்க மனசுல புரிய வைக்கலாம்... அப்படியே ஜாக்கிரதை உணர்வுகளையும்
அவங்க புரிய ஆரம்பிச்சுடுவாங்க... <br />
<br />
ஆணும் பெண்ணும் சக
மனுசங்களா பழகுறது உளவியல் ரீதியா சரின்னு தோணினாலும் விஞ்ஞான ரீதியா இது
சரியா வருமா? ஒரு ஆணையும் பெண்ணையும் கலந்து பழக விட்டா அவங்களுக்குள்ள
காமம் சுரக்காம இருக்க வாய்ப்பு இருக்கான்னு ஒரு கேள்வி எழலாம். <br />
<br />
அதுக்கு
என்னோட பதில் இது தான். உளவியல் ரீதியா ஒரு ஆணும் பெண்ணும் பாலின வேறுபாடு
பாக்காம பழக ஆரம்பிச்சுட்டாலே அவங்களுக்குள்ள மனக் கட்டுப்பாடுங்குறது
தானா வந்துடும். பாக்குற எல்லா ஆண்கள் மேலயும், அல்லது பெண்கள் மேலயும்
காமம் பெருக்கெடுத்து ஓட வாய்ப்பே இல்ல. <br />
<br />
அப்படி யாருக்கோ
யார் மேலயோ ஈர்ப்பு வந்துச்சுனா அவங்களால அத எந்தவித கூச்சமும் இல்லாம
வெளிப்படையா கேக்க முடியும். அப்படி கேக்குறப்ப பெண் “No” சொன்னா அத அந்த
ஆண் சுலபமா புரிஞ்சுப்பான். அத ஒரு “take it easy”யா அவனால ஏத்துக்க
முடியும். அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி அவள அடையணும்னு நினைக்க மாட்டான். <br />
<br />
எப்படி
ஒரு பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ தன்னை பாலியல் ரீதியா நெருங்குரவங்ககிட்ட
“NO” சொல்ல உரிமை இருக்கோ, அதே அளவு “YES” சொல்லவும் உரிமை இருக்கு. அத நாம
புரிஞ்சுக்க தான் வேணும். ஏத்துகிட்டு தான் ஆகணும். காமமும் காதலும்
தனிமனித சுதந்திரம். அடுத்தவங்கள காயப்படுத்தாத, அடுத்தவங்களுக்கு தீமை
குடுக்காத, அடுத்தவங்கள புரிஞ்சுக்குற எந்த காதலும் காமமும் சரி தான். <br />
<br />
<br />
மறைச்சு
வைக்கப்படுற காமம் தான் எதயாவது செய்து அத அடைஞ்சே ஆகணும்னு பிடிவாதம்
பிடிக்க வைக்குது. தைரியம் உள்ளவன் பெண்களை கற்பழிக்குறான், கோழை குழந்தைகள
சீரளிக்குறான். இதுல ரெண்டு வகையினருமே கடைசில உண்மை வெளில வந்துடக்
கூடாதுன்னு கொலையும் பண்ணிடுறாங்க. <br />
<br />
தங்களோட உணர்வுகள
பரிமாறிக்க, கலந்து ஆலோசனை பெற வழியே இல்லாத ஒரு தனித்து விடப்பட்ட
சமுதாயம் தான் உயிர்களோட மதிப்பும் உணர்வும் தெரியாம விளையாடிகிட்டு
இருக்குங்குறது தான் உண்மை. இயந்திர உலகத்துல கூட்டு குடும்ப வாழ்க்கை
சிதறி போனது கூட ஒரு காரணமா இருக்கலாம். அதனால தான் சொல்றேன், குழந்தைகள்
அதிகநேரம் செலவிடுற பள்ளிகள்ல ஆண் பெண் சமத்துவத்த அங்கீகரிக்கலாம். <br />
<br />
அத
விட்டுட்டு, ஆண்கள் அத்தனை பேரும் வெட்கப்படணும், வேதனைப்படனும், ஆண்கள்
அத்தனை பேரும் மோசமானவர்கள், கருவிலயே ஆண்களை அழிக்கணும்ங்குற மாதிரியான
பொங்குதலோ, ஒரு பையன இப்படி வளத்தது அவன் தாயோட தப்பு, அவன் இப்படி இருந்தா
அவன் அம்மா எப்படி பட்டவளா இருப்பாங்குற இழிநிலை ஆராய்ச்சிகளோ தேவையே
இல்ல... <br />
<br />
ஒரே ஒரு விசயத்த எல்லாரும் புரிஞ்சுகிட்டா சரி.... <br />
<br />
ஆணில்லாம
பெண் இல்ல, பெண் இல்லாம ஆண் இல்லவே இல்ல. ஒருத்தருகொருத்தர் வடிகாலா
இருந்தே ஆகணும். அத சரியானபடி புரிதல்களோட இருக்கணும்ங்குறது மட்டும் தான்
இப்போதைய வேண்டுதல் எல்லாமே.... </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br /></div>
ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-688800002866550740.post-60952966878376612682017-02-12T12:52:00.001+05:302017-02-12T12:53:00.429+05:30பாம்பும் நானும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://www.australiazoo.com.au/our-animals/amazing-animals/images/profile_167_600.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="https://www.australiazoo.com.au/our-animals/amazing-animals/images/profile_167_600.jpg" width="640" /></a></div>
<br />
"நம்ம வீட்ல பாம்பு இருக்கு தெரியுமா?"ன்னு கேட்டுகிட்டே வந்தான் ராஜீவ்... <br /><br />
"ஐ, பாம்பா... சூப்பர், எங்க பாத்த?"ன்னு கேட்டேன்... <br /><br />"உன் கார் முன்னால தான் ஊந்து போயிட்டு இருந்துச்சு"ன்னான்... <br /><br />எனக்கு சாயங்காலமா பீச் போவமான்னு தங்கச்சி கேட்டது நியாபகம் வந்துச்சு. ஒரு கும்பலா போய் சில பல செல்ஃபிக்கள் எடுக்கணும்னு ப்ளான். <br /><br />கார் கண்ணாடி எல்லாம் ஏத்தி விட்டுருக்கான்னு தெரியல. இந்த எருமைங்க யார் ஏறினாலும் ஒழுங்கா கண்ணாடிய பூட்டுறதும் இல்ல, கதவ சரியா லாக் பண்றதும் இல்ல. <br /><br />நிறைய தடவ அவசர அவசரமா கிளம்பி காலேஜ் போறப்ப, இதுக்காகவே நான் வண்டிய இடைல நிறுத்தி கதவ ஒழுங்கா லாக் பண்ண வேண்டியிருக்கும்...<br /><br />இவன் வேற பாம்பு பாத்தேன்னு சொன்னானா, எனக்கு பாம்பு காருக்குள்ள இருந்து, சாயங்காலம் நாங்க வண்டிய எடுத்துட்டு போயிட்டு இருக்குறப்ப, திடீர்னு அது முன்னால வந்து தரிசனம் தந்தா எப்படி இருக்கும்னு கற்பனை எல்லாம் ஓட ஆரம்பிச்சிடுச்சு.<br />
<br />
<br />
<br />ஏற்கனவே இப்படி தான், காலேஜ்ல லேப்க்குள்ள பாம்பு வந்துரும்னு லேப் அசிஸ்டென்ட் பயந்தப்ப எனக்கு மட்டும் ஒரே சந்தோசமா இருந்துச்சு.<br />
<br />"தாத்தாகிட்ட வீட்டை சுத்தி இருக்குற செடி எல்லாம் வெட்ட சொல்லிட்டேன். இப்ப ஆள் வந்துருவாங்க"ன்னு அவன் குரல் கேட்டதும் தான் கற்பனை குதிரை என்னை தூக்கி வாரி போட்டுட்டு ஓடி போச்சு... <br /><br />"என்னது, செடிய வெட்டப் போறாங்களா?"ன்னு அதிர்ச்சியில நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்... <br /><br />"பின்ன, பாம்பு வந்தா பயமா இருக்காதா, அதான் அந்த பிச்சி செடி, ரோஜா செடி எல்லாம் வெட்டிற சொல்லிட்டேன்"ன்னான்.... <br /><br />அவன் அதோட விடல, "இந்த காக்டெயில், finches எல்லாத்தையும் தூக்கி வெளில பறக்க விட சொல்லிட்டேன். அதோட நாத்ததுக்கு தான் பாம்பு வீட்டுக்கு வருது"ன்னு கூலா சொன்னான். <br /><br />எனக்கு பி.பி எல்லாம் கோக்குமாறா எகிற ஆரம்பிச்சுது. <br /><br />"ஒரு செடிய வளர்த்து கொண்டு வர்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா, இப்படி அருவா எடுத்து ஒரே வெட்டுல வெட்டணும்னு சொல்றியே, ஒரு உயிரோட அருமை தெரியுமாடா உனக்கு"ன்னு கத்த ஆரம்பிச்சுட்டேன்... <br /><br />"பாம்பை பாத்தேன்னு சொன்ன, நான் எவ்வளவு சந்தோசப்பட்டேன் தெரியுமா? இன்னிக்கி ஒரு பாம்பு நம்மளால பாக்க முடியுதா, இயற்கை எல்லாம் இப்படியே அழிஞ்சு போயிட்டு இருந்தா கடைசில வெட்ட வெளில சுடுற சூரியன்ல நீயும் நானும் கரிஞ்சு தான் போகணும்:ன்னு படபடன்னு பொரிஞ்சு தள்ளிட்டேன். <br /><br />மொபைல் எடுத்து அப்பாவுக்கு கால் பண்ணி வெட்ட வேணாம்னு சொல்லிறலாம்னா அப்பா கால் அட்டென்ட் பண்ணவே இல்ல. அப்புறம் அண்ணனுக்கு கூப்ட்டு விசயத்த சொல்லி, "அப்பாகிட்ட செடிங்ககள வெட்ட வேணாம்னு சொல்லுண்ணே... வீட்டுக்கு வந்தாலே தனிமைல வெறிச்சுன்னு இருக்குற எனக்கு தொணையா இருக்குறது இந்த செடிங்களும் பறவைங்களும் தான். அதுகளும் இல்லனா எனக்கு பைத்தியமே பிடிச்சுடும்"ன்னு அழுதுட்டேன்... <br /><br />"அதெல்லாம் நீ பயப்படாத, பாம்பு வந்தா இப்ப என்ன, எப்பவும் செடி மூட்டுக்குள்ளயா நாம போய் இருக்கோம். நான் சித்தப்பாகிட்ட சொல்றேன், சித்தப்பா சும்மா ராஜீவ சமாதானப் படுத்த சொல்லி இருக்காரு, அப்படி எல்லாம் பண்ண மாட்டாரு"ன்னு அவன் சொன்னதுக்கு அப்புறம் தான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனேன்... <br /><br />நிஜமாவே யாருமே இல்லாத தனிமை எவ்வளவு கொடுமையா இருக்கும்னு அனுபவிச்சு பாத்தா தான் தெரியும். காலேஜ்ல இருந்து வீட்டுக்கு வந்தாலே, அங்க நமக்குன்னு யாரு இருக்காங்குற நெனப்பு அவ்வளவு இம்சையா இருக்கும். கிட்டத்தட்ட ஒரு ஜெயில் மாதிரின்னு தான் சொல்லணும். <br /><br />நிறைய பேரு கேப்பாங்க, எப்படி இப்படி தன்னந்தனியா உன்னால இருக்க முடியுது, பேசாம உன் அப்பாகூட போய் இருக்க வேண்டியது தானே"ன்னு. அதுக்கு நான் இப்படியே இருந்துடுவேன்னு பதில் சொல்லிடுவேன். <br /><br />அப்பப்ப வர்ற கிளிகள் சத்தம், கீச் கீச்ன்னு கத்துற அணில்கள் சத்தம், குயில், காக்கான்னு எல்லாரோட சத்தமும் தான் எனக்கு ஐ லவ் யூ சொல்லிகிட்டே இருக்கும். <br /><br />பாக்யா அடிக்கடி சொல்லுவா, உங்க வீட்ல உருப்படியா இருக்குற விசயமே அந்த பிச்சி செடிங்க தான்னு.... அது உண்மை தான். காரை கொண்டு வந்து பார்க் பண்ணினாலே, பச்சை பசேல்ன்னு அதோட செழுமையும், வெள்ளை வெள்ளையா பூத்து கிடக்குற பறிக்காத பூவும், கூடவே வர்ற வாசமும் மனசுக்கு அப்படி ஒரு இதம். சிகப்பு, மஞ்சள், வெள்ளைன்னு அப்பப்ப மொட்டு விடுற ரோஜாக்கள பாத்தா அது ஒரு பெருமை. சந்தோசம். "ஹாய் டா பசங்களா, நல்லா இருக்கீங்களா"ன்னு ஒரு விசாரிப்பு விசாரிக்க தோணும்.<br /><br />கதவ தொறந்துட்டு ஹால் உள்ள வந்தா இரை கேட்டு கண்ணாடிய முட்டிக்கிட்டு நிக்குற மீன்கள பாத்தா ஒரு சிரிப்பு வரும். "இந்தா வந்துட்டேன்"ன்னு அதுக்கு ரெண்டு இரை எடுத்து போட்டுட்டு இருக்குறப்பவே ப்ரித்வி கழுத்தை ஒரு பக்கமா சாய்ச்சு என்னை பாத்துகிட்டே "க்க்க்க்கேஏஏஏ"ன்னு ஒரு குரல் குடுப்பான். நாமளும் எதிர்குரல் அவன் குரல் மாதிரியே குடுக்கணும். நல்ல மிமிக்கிரி ப்ராக்டிஸ்... சம்யூ குறுகுறுன்னு என்னையே பாத்துட்டு இருப்பா... இவங்க தான் என்னோட காக்டெயில். அவங்கள பாத்து சிரிச்சு ரசிச்சுட்டு என்னோட ரூமுக்குள்ள நுழைவேன். <br /><br />அங்க எனக்கு எப்பவும் துணையா இருக்குறது finches. உங்களுக்கு புரியணும்னு தான் finchesன்னு சொன்னேன். மத்தப்படி, அவங்க தான் என்னோட போர்ப்படை தளபதிகள். யுவா, கயல், நவீன், மிருதுள், பாரதி, நளன், தமயந்தின்னு அவங்க பேரு. <br /><br />இப்படி ஒரு உலகத்துல வாழ்ந்துட்டு இருக்குற என்கிட்ட வந்து செடிய வெட்டப் போறோம், பறவைங்கள விரட்டப் போறோம்னு விளையாட்டா சொன்னா கூட டென்சன் வருமா வராதா?<br /><br />"நீ சின்னப் புள்ளைல பாம்பு பின்னால தொரத்திகிட்டு ஒடுவியாம், உண்மையா?"ன்னு ராஜீவ் அடுத்த கேள்வி கேட்டான்.<br />
<br />
<br />
அதென்னடா சின்னப்புள்ளையிலன்னு சொல்ற, இப்பவும் பாம்பு பின்னால ஓட ஆசை தான், ஆனா உடல்நிலை ஒத்துழைக்க மாட்டேங்குறதேன்னு மனசுல நினைச்சுகிட்டே "ஆமா... எனக்கு எல்லா உயிர்களுமே ரொம்ப புடிக்கும். அதுங்க கூட பழகுறதும் நேசிக்குறதும், பேசுறதும் ஒரு சாகசம். உனக்கு புரியாது. நீ என்னடான்னா ஒரு பாம்பை பாத்ததுக்கு பயந்து நடுங்கி, இப்படி எல்லாத்தையும் அழிக்கணும்னு அழிசாட்டியம் பண்ணிட்டு வந்துருக்க"ன்னு மூக்கை பிடிச்சு இழுத்தேன். <br /><br />"ஏன் எனக்கு இதெல்லாம் தெரியல"ன்னு கேட்டான். <br /><br />"நேசிக்க ஆரம்பி, அதுக்கும் வலிக்கும், அதுக்கும் ஏதாவது பிடிக்கும், அதுக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்கும்ன்னு நீ புரிஞ்சுகிட்டாலே அதுங்க கூட பேச ஆரம்பிச்சுடலாம்"னு சொன்னேன். <br /><br />"ரொம்ப மொக்கப் போடாத"ன்னு சொல்லிட்டு போய்ட்டான்... இப்ப பழையபடி தனிமை. <br /><br /> "க்க்க்க்கேஏஏஏ, ரூம்ல என்ன பண்ணிட்டு இருக்க"ன்னு ப்ரித்வி இந்தா கூப்டுறான்.... <br /></div>
ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-688800002866550740.post-34159565500145010962017-02-06T09:41:00.001+05:302017-02-06T09:41:43.312+05:30சவாதி அண்ணன் - வேர்களை தேடி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="http://4.bp.blogspot.com/-sxP4LsWKtno/WJf2oBLyO0I/AAAAAAAAC-4/FS-C6BLyn8k0xR-n6D2TYic1Vd5V55dRACK4B/s1600/n.jpg" imageanchor="1"><img border="0" height="360" src="https://4.bp.blogspot.com/-sxP4LsWKtno/WJf2oBLyO0I/AAAAAAAAC-4/FS-C6BLyn8k0xR-n6D2TYic1Vd5V55dRACK4B/s640/n.jpg" width="640" /></a><br /><br />மூத்தம்மாவ பாக்க வீட்டுக்கு போயிருந்தேன்... <br /><br /> அம்மா அப்பாவ நல்லா வச்சு காப்பாத்தணும்னு சவாதி அண்ணன் ஆச ஆசையா கட்டின வீடு அது...<br /><br /> நான் போனதுமே, பரபரன்னு ஓடி வந்து கதவ தொறந்தாங்க.... <br /><br /> "ஏ மக்ளே, சோமா இருக்கியா? வா மோளே, பாத்து வா, மெதுவா வா..."ன்னு பரவசத்தோடயே வரவேற்றாங்க... <br /><br /> "ஒண்ணுமில்ல மூத்தம்மா, நம்ம குடும்பத்துல உள்ள அத்தன பேர் பத்தின விவரங்களையும் தேடிட்டு இருக்கேன்... அதுல பெண் வாரிசுங்கள பத்தின குறிப்புகள் இல்ல, அதான் உங்ககிட்ட கேட்டுட்டு போவலாம்னு வந்தேன்" நேரா விசயத்துக்கு வந்துருந்தேன்... <br /><br /> அதென்னவோ, எப்படி இருக்கீங்க, நல்லா இருக்கீங்களா?ன்னு யார பத்தியும் குசலம் விசாரிக்குற பழக்கம் எனக்கு வரவே மாட்டேங்குவு... <br /><br /> அப்படியே ஒவ்வொரு விபரமா கேட்டுகேட்டு பேப்பர்ல எழுதிட்டு இருந்தேன். <br /><br /> மூத்தம்மாவுக்கு நிரம்ப சந்தோசம். பல கதைகளும் பேசினதுக்கு அப்புறம் பேச்சு சவாதி அண்ணன் பத்தி திரும்பிச்சு... <br /><br /> அவன் பேரு கனக சபாபதி. எனக்கு அவன் சவாதி அண்ணன். <br /><br /> இங்க பொதுவா எல்லார் வீட்லயும் show case இருக்கும். அண்ணனோட show case ரொம்ப பெருசு. ஒரு பெரிய சுவர் முழுக்க show caseசா மாத்தி வச்சிருந்தான். அதுல புத்தகங்கள தவிர வேற எதுவும் இருக்கவும் இருக்காது... <br /><br /> என்னோட புத்தகம் ஒண்ண எடுத்துட்டு போயிருந்தேன். அண்ணனுக்கு தான் புத்தகம் பிடிக்கும்ல மூத்தம்மா, அதான் கொண்டு வந்தேன், இது அவனுக்குன்னு அத மூத்தம்மாகிட்ட குடுத்தேன்... <br /><br /> அந்த புத்தக அலமாரியில இருந்த சில புத்தகங்கள எடுத்து பாத்தேன். அம்மா அப்பாவ பாராமரிக்குற முறைகள அடிகோடு போட்டு வச்சிருக்கான்... <br /><br /> பின்ன இந்த பய ஏன் இப்படி திடீர்னு செத்துப் போனான்னு தொண்டைக்குள்ள துக்கம் அடைக்க ஆரம்பிச்சுது... <br /><br /> கணவன் மனைவி சண்டை, சந்தேகம், மனநிலை பாதிப்புன்னு ஆளாளுக்கு பேச விட்டுட்டு அவன் பாட்டுக்கு போய் சேர்ந்துட்டான்... <br /><br /> அவன் செத்து போனதுக்கு யாரு வேணா ஆயிரம் காரணம் சொல்லலாம், ஆனா அந்த உண்மை அவனுக்கும், அவன் கூடவே எரிஞ்சி போன அண்ணிக்கும் தான் தெரிஞ்சிருக்கும்... <br /><br /> "அவன் அப்படி போனான்னு நினைக்கல மோளே, அவன் நேரம் போகணும்னு இருக்கு, போய்ட்டான்... உன் அண்ணி இருக்காளே, அவளும் ஒரு வார்த்த சொல்லல. என் முன்னால தான் ரெண்டு பேரும் உள்ள போனாங்க, கதவடைச்சுகிட்டாங்க. அவனுக்கு கொல்லாங்கொட்டை தவுத்து குடுத்துட்டு இருந்த சத்தம் கூட கேட்டுச்சு. அத தின்னுகிட்டு இருக்கும் போது தான் இப்படி ஒரு சம்பவம் நடந்து போச்சு"ன்னு சொன்னப்ப மூத்தம்மா கண்ணுல கண்ணீரே இல்ல. எல்லாமே வத்தி போயிருக்கும். <br /><br /> நின்ன இடத்துலயே நின்னு எரிஞ்சி செத்துப் போனான் அண்ணன். யாரையும் பழி சொல்லாம, வீரப்பா அதிகார தோரணைலயே பதில் சொல்லிட்டு அண்ணியும் செத்து போனாங்க. <br /><br /> "உன் அண்ணன் போனப்ப உன் மூத்தப்பா கொஞ்சமும் கலங்கல. இன்னிக்கி போகலனா இன்னொருநாள் தனியா போயிருப்பான், இப்ப தொணைக்கு பொண்டாட்டியையும் கூட்டிட்டு போயிட்டான்னு மட்டும் சொல்லுவார்" மூத்தம்மா மூத்தப்பா பத்தி சொன்னாங்க. அண்ணன் செத்த ஒரு வருசத்துல மூத்தப்பாவும் செத்துப் போய்ட்டார்... <br /><br /> "இந்த வீட்ல தனியா இருக்க உங்களுக்கு பயமா இல்லையா மூத்தம்மா"ன்னு கேட்டா, "நான் தனியா எல்லாம் இல்ல மோளே, அதான் உன் அண்ணன் கூட தானே இருக்கான். எனக்கு ஏதாவது பிரச்சனைனா அவன் இப்பவும் வந்து நிப்பான்"ன்னு சொன்னாங்க. <br /><br /> அவனுக்கு பிடிக்காத எதுவும் அந்த வீட்ல நடக்கவே முடியாது. அவன் நடக்க விடவும் மாட்டான். மூத்தமாவ நல்லா கவனிக்கணும்ன்னு வீட்டு வேலை செய்ற கோமதி பாட்டிகிட்ட கனவுல வந்து அடிக்கடி சொல்லுவானாம். <br /><br /> மூத்தப்பா சாகுறதுக்கு முன்னாடி லீவ் போட்டுட்டு போன நர்ஸ் கனவுல போய் அப்பாவுக்கு உடம்பு சரியில்ல, உடனே எங்கப்பாவ போய் கவனிங்கன்னு சொல்லி இருக்கான்... ஆச்சர்யமா இப்பவும் பாப்பா சித்தி (நர்ஸ்) சொல்ற விஷயம் இது... <br /><br /> ஆமா, நம்புறவங்க நம்பட்டும், நம்பாதவங்க நம்ப வேணாம், ஆனா அண்ணன் இன்னமும் இங்கயே தான் இருக்கான். அதுவும் பொண்டாட்டியோட சந்தோசமாவே இருக்கான்...</div>
ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-688800002866550740.post-17980865341623444502017-01-31T10:28:00.002+05:302017-01-31T10:28:28.086+05:30தற்கொலைக் கடிதம்- Review<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-JYBmIDzmL4k/WJAYrEUvfmI/AAAAAAAAC-o/HvTIDwZouvgXpHoIQQBjkChbbxjkjLaZwCK4B/s1600/16265670_1397936700241063_6019719999992012403_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://2.bp.blogspot.com/-JYBmIDzmL4k/WJAYrEUvfmI/AAAAAAAAC-o/HvTIDwZouvgXpHoIQQBjkChbbxjkjLaZwCK4B/s640/16265670_1397936700241063_6019719999992012403_n.jpg" width="422" /></a></div>
<br />
<br />
என்னோட புத்தகத்துக்கு வந்த ஒரு review இது..... <br />
...................................... <br />
<br />
வணக்கம் மேடம். <br />
<br />
உங்களின் தற்கொலைக்கடிதம் புத்தகம் படித்த ஒரு சாதாரண மனிதன் நான். <br />
<br />
எனக்கு review எல்லாம் எழுதத்தெரியாது. <br />
<br />
தமிழ் தட்டச்சும் தகராறுதான். <br />
<br />
புத்தகம் படிக்கப்படிக்க மனதில் தோன்றியதை எழுதுகிறேன். <br />
<a name='more'></a><br />
<br />
பொதுவாக, சென்னையில் வாழும் அரவிந்தாகிய நான் கிராம வாழ்க்கையின் என்னவெல்லாம் தொலைத்திருக்கிறேன் என்பதை நூல் நெடுகிலும் உணர்ந்தேன். <br />
<br />
கணேசன் மாமா அஞ்சு வயசுலயே தோப்புக்கணக்கு முழுசா போடுறது கால்குலேட்டர் வச்சே காலத்த ஓட்டுர எங்களுக்கு எட்டாவது உலக அதிசயம். <br />
<br />
கன்னி பூஜை கதைல வருசத்தில ஒருதடவ சாமி கும்பிடுற விசயம் ஒரு பெரும் விழாவா மாறுறது எனக்கு உங்கமேல பொறாமைய உண்டாக்கிரிச்சு ஏன்னா சென்னையில ஒரு பண்டிகைனா கூட டீவீ பார்க்குறதுதான் எங்க செலிபிரேஷன். <br />
<br />
தற்கொலைக்கடிதம் பெண்களின் சுதந்திரமின்மையையும் அவர்களின் ஏக்கங்களையும் அப்பட்டமாய் காட்டிருச்சு. ஒரு வாசகனாக இனி என் சகோதரியை கல்யாண விசயமாக எந்த கட்டாயமும் படுத்தக்கூடாது என்ற முடிவு எடுத்திருக்கிறேன் இந்த கடிதத்தால். <br />
<br />
அநுபவம் புதுசு கதையில் ஒரு கால் முறிஞ்சா வரும் சிரமங்களை அப்படியே கண்முன் கொண்டுவந்துட்டிங்க. என்னதான் டாக்டர்கள் தெய்வங்கள்னு நாம சொன்னாலும் அவங்களும் மனுசங்கதான், சராசரி பிரச்சனைகள் அவங்களுக்கும் இருக்கும்னு ஆப்ரேஷன் தியேட்டர் உரையாடல் காட்டுது. இது உங்க சொந்த அனுபவமாக இருக்கலாம்னு தோணுறதால லேசா தடுக்கி விழுந்தாலேயே கால் முறியும் அளவு உங்க பேஸ்மென்ட் வீக்கா இருக்கக்கூடாது என்பது எங்கள் கவலை. சரியாக உடற்பயிற்சியும் கால்சியம் உணவும் சேர்த்து உங்களின் அல்லது அந்த பெண்ணின் பேஸ்மென்ட்டை வலுப்படுத்துவது உங்கள் பொறுப்பு. அறிவியல் பேராசிரியை உங்களைவிட வங்கி அதிகாரிக்கு இந்த விசயத்தில் குறைவாகவே தெரியும் so take care of this. <br />
<br />
ராக்காயி மருமக மாதிரி ஒரு அநுபவம் உங்க வலைதளத்தில் ஏற்கனவே படிச்ச நியாபகம். பெண்களின் இத்தகைய பெருந்துன்பங்களுக்கு ஆண்களைவிட முந்தின தலைமுறைப் பெண்கள் காரணமாய் இருப்பது மிகமிக கவலை அளிக்கிறது. அவர்களுக்கு இந்தகால முன்னேற்றங்களை புரியவைப்பது மிகப்பெரும் சவால். இது ஆண்களை நியாயப்படுத்த நான் செய்யும் தந்திரம்னு நீங்க என்னை அசிங்கமா திட்டலாம். but பெண்களுக்குள் உள்ள இயல்பான பொறாமையால் விளையும் அறியாமையின் செயல்களையே ராக்காயி செய்கிறாள். அப்படிப்பட்ட மாமியாரின் பயங்களை மருமகள் எப்படி படிப்படியாய் களைந்து அவளை நெருங்கி ராக்காயியின் பழங்கால அடிமை சிந்தனைகளை மாற்றுகிறாள் என்ற ஒரு புதினம் உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறேன். அப்படிப்பட்ட ஒரு எதார்த்த தீர்வு சொல்லும் நாவல் பெண்களை புலம்புபவர்கள் நிலையிலிருந்து புது உலகை படைக்கும் வீராங்கனைகளாய் மாற்றும். <br />
<br />
மாதவன் சார் நலம் எழுதிய உங்களுக்கு இன்னொரு உளவியல் தீர்வு புதினம் அஸாத்தியம் இல்லை. <br />
<br />
உங்கள் இணையம் படித்து வெகுநாட்களாய் என் அலுவலகப்பெண் பணியாளர்கள் சம்மந்தமில்லாமல் என்னிடம் கத்துவதாக தெரிந்தாலும் இதுபோன்ற உடல்பலவீனங்கள் இருக்கக்கூடும் என்றெண்ணி சற்று பொறுமையாகவே அவர்களை கையாளுகிறேன். <br />
<br />
அடுத்த புத்தகங்களில் பாலியல் கல்வி அவசியம் பற்றிய உங்கள் செரிந்த கருத்துகளை எதிர்ப்பார்க்கிறேன். <br />
<br />
உங்கள் ஹீரோவுக்கு டெடிக்கேட் பண்ணினதா தெரியுற அப்பா மாடுகளை பார்த்துக்கொள்ளும் விதம் ஜல்லிக்கட்டு தடை கோரும் மாடர்ன் பெடா அமைப்பு மேனாமினிக்கிகள் படிக்கவேண்டிய ஒன்று.பெண்கள் தங்கள் கணவர்களிடம் எதிர்பார்க்கும் அம்சங்களை அப்பா வடிவில் அழகாக காட்டியிருக்கிறீர்கள். <br />
<br />
தீவிரமாக பெண்ணியம் எழுதும் நீங்க ஆண்களின் மனதில் எவ்வளவு ஆழக் குழி தோண்டி அவர்களின் உணர்வுகளை புரிந்துவைத்திருக்கிறீர்கள் என்பதை இருப்புக்குழி காட்டுது. <br />
<br />
அப்பாவில் நாயகி குடும்பம் படிப்புக்காக வெளியூர் சென்று திரும்பும்போது அந்த நாயகியை அன்புள்ள ராமையா மட்டுமே அடையாளம் காண்கிறார். சும்மா லூசுத்தனமா ஒரு கனெக்ஷன் பண்ணிப்பார்த்தேன், என் மூளை வரைபடம் அப்படி இயங்குது. நன்கு முன்னேறும் அடுத்தவீட்டுப்பெண்ணை கொன்டாடும் ராமையா ஏன் சொந்த பெண்ணை இப்படி விட்டுவிட்டார் என்று எனக்கு புரியலை. ஒருவேளை அவருக்கு ஆசை இருந்திருக்கும் ஆனால் பல சிக்கலான காரணங்கள் அவரை இப்படி ஆக்கி இருக்கணும். <br />
<br />
ஒவ்வொரு மனிதருக்கும் பின்னால் ஒரு குடும்பம் இருக்கலாம், மிகப்பெரும் சோகம் இருக்கலாம்னு "அது ஒரு விபத்து" சிறப்பாக எடுத்துக்காட்டுது. ரோட்டில் ஒருத்தன் அல்லது ஒருத்தி தேவையில்லாமல் சண்டை போட்டால் அவர்களை இம்சையாக கருதாமல் ஏதோ குடும்பப்பிரச்சனையின் வெளிப்பாடு என்று புரிந்துகொண்டு அவர்களை பதிலுக்கு குறைந்தது காயப்படுத்தாமலாவது இருக்கலாம். <br />
<br />
ப்ரியம்வதனா போன்ற சம்பவங்களை சுற்றி நிறைய பார்த்து எனக்கு எப்பவும் ஏளனச் சிரிப்புதான் வரும் காதலிப்பவர்களை பார்த்தால். மனுசனுக்கு பிரச்சனையே இல்லனா இப்படி புதுசா உருவாக்குவார்கள். இது ஆண்களும் செய்வதுதான். <br />
<br />
தற்கொலைக் கடிதத்தில் சுதந்திர முடிவெடுக்கும் உரிமைக்காக துடிக்கிறாள் நாயகி. இங்கே, நகர்புற நாயகிக்கு அது கிடைத்தும் எப்படி தன்னையே குழப்பிக்கொள்கிறாள்? எனக்கு MBA இல் இதேபோன்று ஒரு தோழி அமைந்தாள். அவளைப் பற்றி விரிவாக பேசுவது எழுத்து மூலம் எனக்கு சாத்தியம் இல்லை. அவள் துயர் துடைக்கமுடியாத பாவி ஆகிவிட்டேன் என்ற குற்ற உணர்வு என் இறப்புவரை என் அடிமனதை அரித்துக்கொன்டுதான் இருக்கும். எனினும் ப்ரியம்வதனா கடைசியில் எடுத்த முடிவு சரிதான். சீக்கிரம் மாறிவிடுவாள். <br />
<br />
அநுபவம் புதுசு, சாகசப்பயணம் இரண்டும் சொந்த அனுபவங்களாக இருக்கக்கூடும். <br />
<br />
தினமும் பதினைந்து ரூபாய்க்கு பால் பாக்கெட் வாங்கும் எங்களுக்கு அதற்குப் பின்னால் உள்ள வலியை புரிந்துகொள்ள உங்களைப் போன்றவர்கள் நிறைய லட்சுமி ப்ரசவம் எழுதணும். <br />
<br />
காட்டுப்பசங்களின் பின்னால் இருக்கும் வறுமை குடும்பமும் கண்ணீரையும்அருமையாக சித்தரித்துள்ளீர்கள். அவர்களை சரியாக வழிகாட்டும் பொறுப்பு அரசாங்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு நிறைய இருக்கு. <br />
<br />
உங்கள் குறும்பு கொப்பளிக்கும் இதர கதைகள், பீஸா செஞ்சு, சாப்பிட்ட வாய்களை பீஸ்பீஸாக்கிய சம்பவங்கள் எல்லாம் ஸூப்பர். <br />
<br />
அப்பா அம்மா இடையில் ஓடிய நுணுக்கமான காதலை அற்புதமாக ஆங்காங்கே காட்டி இருக்கிறீர்கள். <br />
<br />
தற்கொலைக்கடிதம் போல் பாதிக்கப்படும் இன்றைய பெண்கள் ராக்காயி போல் மாறாமல் என் செல்ல அம்முக்குட்டி அம்மா போல் மாறவேன்டும் என்பதே என் அவா. அதை நோக்கியே நம் கல்விக்கொள்கைகள் மாற்றியமைக்கப்படவேன்டும். <br />
<br />
சூப்பர்ஸ்டார் படங்களில் பெஸ்ட் ஃபைட் கடைசியில் வருவதுபோல் கடைசியாய் வந்த மாதவன் சார் நலம் மனதில் ஆழமாய் பதிந்தது. <br />
<br />
எழுத்தாளருக்கு எல்லா துறைகளிலும் அடிப்படை ஞானம் இருக்கணும்னு சொல்வாங்க. உளவியல் துறையில் தன்னைவிட வயதில் பெரியவர்களை ட்ரீட்மென்ட் செய்யும் சிக்கல்களை அனாயசமாக காட்டிவிட்டீர்கள். <br />
<br />
வாழ்த்துக்கள் மேடம். <br />
<br />
இது நல்ல தொடக்கம். <br />
<br />
இன்னும் பல புத்தகங்களின் மூலம் நீங்கள் நிச்சயம் புகழ் பெறுவீர்கள் என்னும் நம்பிக்கை எனக்கு நூறு சதவிகிதம் இருக்கிறது. <br />
<br />
நன்றி.<br />
-------------------------------------------<br />
<br />
<br />
<br />
ரொம்ப நன்றி <a href="https://www.facebook.com/aravind.rajendran.35">Aravind Rajendran</a>...<br />
<br />
<br />
<br />
<br /></div>
ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-688800002866550740.post-90574322041288051062017-01-26T20:16:00.001+05:302017-01-26T20:17:18.548+05:30புத்தக வெளியீட்டு விழா - தற்கொலைக் கடிதம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-VAgCjyI61oo/WIoHncXW7LI/AAAAAAAAC98/zxodD3gDNPEfenEvmPpMljHpMOd179rnwCK4B/s1600/invitation.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://4.bp.blogspot.com/-VAgCjyI61oo/WIoHncXW7LI/AAAAAAAAC98/zxodD3gDNPEfenEvmPpMljHpMOd179rnwCK4B/s640/invitation.jpg" width="452" /></a></div>
<br /> <br /><br />நாள்: 22/01/2017 (ஞாயிறு) <br /><br />இடம்: தமிழ் அரங்கம் <br /><br />நேரம்: மாலை 4.30 <br />………………………………………………………….. <br /><br />இந்த நாளையும் இடத்தையும் நேரத்தையும் என்னால எப்பவுமே மறக்க முடியாது. காரணம், அன்னிக்கி தான் என்னோட முதல் சிறுகதை தொகுப்பு “தற்கொலைக் கடிதம்” வெளியாகின நாள். <br />
<br /> அதென்னமோ தெரியல, உடம்பு சரியில்லாததாலோ என்னவோ ரொம்ப லேட்டா தான் கிளம்பினேன். ஏற்கனவே பொன்னீலன் சார் என்னை காணோம்னு போன் வேற பண்ணிட்டார். அவசர அவசரமா கிளம்பி அவர கூட்டிட்டு விழா நடக்குற இடத்துக்கு போனப்ப மணி அஞ்சு. அதிகமான பேர் வரலைனாலும் சொந்த பந்தங்கள், நட்புகள், அப்பா, மாமான்னு எல்லாரும் முன்கூட்டியே அங்க உக்காந்துட்டு இருக்காங்க. <br /><br /> <br />விழா நாயகி நீ, இப்படி லேட்டா வரலாமான்னு கேட்டுகிட்டே படபடன்னு மேடைல கூப்ட்டு உக்கார வச்சுட்டாங்க. எனக்கு ஒரே பயம். என்னடா இது, வந்த உடனே மேடைல ஏத்திட்டாங்களேன்னு. அப்பாவும் மேடைக்கு வருவார்ன்னு பாத்தா, அவர் கீழே உக்காந்துட்டு இருந்தார். சரிதான், ஆள் மேல வர மாட்டேன்னு அடம்பிடிச்சிருப்பார்ன்னு நினைச்சுகிட்டேன். <br /><br />..................................................................... <br /><br />புத்தகம் ரெடி ஆனதுமே உடனே வெளியீட்டு விழா வச்சுடணும்ன்னு ரொம்ப துடிச்சேன். ஆனா பதிப்பாளர் ஜெபா தான் ஜனவரி இருபத்தி ரெண்டை தேர்வு செய்தார். அந்த நாள்ல தான் பொன்னீலன் சார் ப்ரீயா இருப்பார்ன்னு சொன்னார். நமக்கு நாள் கிழமை எல்லாம் முக்கியம் இல்ல, ஆனா பொன்னீலன் சார் வந்தே ஆகணும்ன்னு அடம். அதனால சரின்னு சொல்லிட்டேன். நூல் ஆய்வுரை சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் அவார்ட் வாங்கின மலர்வதி பண்ணினா நல்லா இருக்கும்னு ஜெபா விருப்பபட்டார். <br /><br /> <br />திடீர்னு ஒருநாள் ஜெபா, நம்ம program கூடவே இன்னொருத்தர் புக்கும் ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கோம். நீங்க என்ன சொல்றீங்கன்னு கேட்டார். எனக்கு திடீர்னு என்ன சொல்லன்னு தெரியல. அன்னிக்கி சாயங்காலமே ஜெபாவும் ராமும் வீட்டுக்கு வந்து, இப்படி வைக்குறதால நமக்கு நல்லது தான். முத்தலக்குறிச்சி காமராசு சார் நிறைய புத்தகங்கள் எழுதினவர். அவர் கூட நம்மோட புத்தகத்த வெளியிடுறது ரொம்ப நல்லதுன்னு புரிய வச்சாங்க. வேலைகள் மளமளன்னு நடக்க ஆரம்பிச்சுது. <br /><br />........................................................ <br /><br />இரண்டு புத்தகங்களோட வெளியீட்டு விழா இது. <br /><br /> முதல் புத்தகம் “தற்கொலைக் கடிதம்” நான் எழுதினது. இன்னொன்னு முத்தலக்குறிச்சி காமராசு சார் எழுதின “எனது பயணங்கள்” நூல். <br /><br />இரண்டு புத்தகங்களையும் வெளியிட்டது எழுத்தாளர் பொன்னீலன். தற்கொலைக் கடிதத்த பெற்றுக் கொண்டது சாட்சாத் என்னோட அப்பா, ஸ்ரீதரன் குமாரபெருமாள். நூல் ஆய்வுரை செய்தது எழுத்தாளர் மலர்வதி. எனது பயணங்கள பெற்றுக் கொண்டது டாக்டர். ச. மனக்காவல பெருமாள். அவரோட நூலை ஆய்வு செய்தவர் எழுத்தாளர் குமரி எழிலன். <br /><br />தலைமை: யுத்தப்பிரசங்கி ஜாண்முறே <br /><br />வரவேற்புரை: கடிகை ஆன்றனி <br /><br />முன்னிலை: வழக்கறிஞர். இராதாகிருஷ்ணன் <br /><br />வாழ்த்துரை: ஜே.இ. ஜெபா <br /><br />நன்றியுரை: கார்த்திக் புகழேந்தி <br /><br />விழா ஏற்பாடு: திரிவேணி இலக்கிய சங்கமம் <br /><br /> <br />நிகழ்ச்சி சரியா அஞ்சு மணிக்கு ஆரம்பிச்சு எட்டே காலுக்கு முடிஞ்சுது. நானெல்லாம் புத்தகம் எழுதுவேனா அப்படிங்குற சந்தேகம் இருந்ததால கடிகை ஆன்றனி என்னை பத்தி என்ன சொல்லன்னு தெரியாம பாவம் நிறைய சமாளிச்சார். புத்தகத்தோட தலைப்பு பத்தி தான் அதிகமா கேட்டாங்க, எப்படி ஒரு எதிர்மறை தலைப்பை வைக்க முடிஞ்சுதுன்னு. <br /><br /> ராம் பேசுறப்ப, இந்த புத்தகத்த நான் தான் எடிட் பண்ணினேன். அதுக்கு என்ன தலைப்பு வைக்கன்னு தெரியாம இருந்தப்ப மனசுல தோணினது தான் இந்த தலைப்புன்னு சொன்னார். <br /><br /> முத்தலக்குறிச்சி காமராசு சார் ஏற்கனவே மேடைல இருந்தவங்களுக்கு அறிமுகம் ஆனவர்ங்குறதால அவர பத்தின நிறைய விஷயங்கள் பேசினாங்க. அவர் எழுதின புத்தகங்கள், சாதனைகள்ன்னு நிறைய சொன்னாங்க. அதனால என்னோட புத்தகத்த பத்தியும் விழாவ பத்தியும் நான் இங்க சொல்லிக்குறேனே. முத்தலக்குறிச்சி காமராசு சார் என்னை மன்னிக்கணும். <br /><br />............................................. <br /><br />பொன்னீலன் சார் பேச ஆரம்பிச்சப்ப தான் நான் கொஞ்சம் நிமிர்ந்து உக்காந்தேன். மேடைல இருந்தவங்கள்ல நமக்கு அவர மட்டும் தான தெரியும். என்னோட புத்தகத்த கைல வச்சுட்டு பக்கத்துக்கு பக்கம் அவர் குறிப்பு எழுதி வச்சிருந்தார். மெல்ல எட்டிப் பாத்தேன், என்ன எழுதி இருக்கார்ன்னு. ஆனா எதுவுமே தெரியல. மேடைல பேசுறப்ப, இந்த புத்தகத்த பத்தி பேச நிறைய விஷயம் இருக்குன்னு ஆரம்பிச்சு, முதல் கதை கன்னி பூஜை பத்தி பேச ஆரம்பிச்சார். பேச ஆரம்பிச்சார்ன்னு சொல்றத விட வரிவரியா வாசிக்க ஆரம்பிச்சார். இது தான் உன் மொழி. யாராலயும் சொல்ல முடியாத மொழின்னு பாராட்டினார். அதோட “இறந்து போன கன்னி பெண்களுக்கு பூஜை செய்வாங்க, ஆனா கன்னியா இறந்த ஒரு ஆணுக்கு நடக்குற பூஜையை நீ தான் முதல் முதல்ல பதிவு பண்ணியிருக்க”ன்னு சொன்னப்ப நான் என்னோட சித்திகள், மாமாக்கள் முகத்த கவனிச்சேன். அவங்க முகத்துல ஒரு பெருமிதம். பின்ன, எங்க வீட்ல நடக்குற கன்னி பூஜைய தான நான் எழுதி இருந்தேன். அப்புறமா, “இருப்புக் குழி” சிறுகதை பத்தி பேசினார். “அன்புள்ள ராமையாவுக்கு” எழுதின கடிதத்த பாராட்டித் தள்ளினார். நான் வாயடைச்சு போய் எல்லாத்தையும் கவனிச்சுட்டு இருந்தேன். <br /><br /> <br /><br />அடுத்ததா என்னோட நூலை ஆய்வு செய்த எழுத்தாளர் மலர்வதி என்ன சொல்லுவாங்களோன்னு பதட்டத்தோட இருந்தேன். ஆனா எடுத்ததுமே “தற்கொலைக் கடிதம்” பத்தி பேச ஆரம்பிச்சு என் பதட்டத்த தணிச்சுட்டாங்க. “எனக்கு வாழணும். மனசுல இருக்குற வெறி அடங்க அடங்க வாழணும்”ன்னு நான் எழுதி இருந்தத குறிப்பிட்டு அவ்வளவு தான், இது தான் மொத்த சாராம்சமும்ன்னு சொன்னாங்க. அப்பா பத்தி எழுதி இருந்தத குறிப்பிட்டு, தன்னோட பூனை குட்டி நியாபகம் வந்ததாகவும், தீனிப் பண்டாரங்கள் படிச்சுட்டு கருவாட்டுக் குழம்ப பத்தி பேசினாங்க. மொத்தத்துல நிறைய பாராட்டினாங்க. ஒரு மாதிரி நான் காத்துல மிதந்துட்டு இருந்ததால அதெல்லாம் இங்க என்னால எழுத்துல குடுக்க முடியல. <br /><br /> ஜெபா பேசுறப்ப, என்னோட மனைவி தலைவலிக்குதுன்னு இப்ப சொன்னா எனக்கு பதறுது. அது தான் இந்த புத்தகத்தோட வெற்றின்னு சொன்னார். ஜெபா, அடுத்த முறை உங்க மனைவி தலைவலிக்குதுன்னு சொன்னா கண்டிப்பா நீங்க அவங்க பக்கத்துல இருப்பீங்க. எனக்கு தெரியும். <br /><br />........................................ <br /><br />நிகழ்ச்சி முடிஞ்சதும் எல்லாரும் வந்து கைக்குடுத்தாங்க. என்னோட மாமா, மாமி, சித்தின்னு ஒட்டு மொத்த குடும்பமும் சந்தோசமா கிளம்பி போனாங்க. எனக்கு அது தான் வெற்றியா தோணிச்சு. <br /><br />சொக்கலிங்கம் சார் நான் ரொம்ப நல்லா பேசினேன், மனசுல இருக்குறத யதார்த்தமா பேசினேன்னு சொன்னார். இந்த இடத்துல என்னையும் அவங்கள்ல ஒருத்தியா மதிக்குற “கலை இலக்கிய பெருமன்ற”த்துக்கு என்னோட நன்றிய கண்டிப்பா நான் சொல்லியாகனும். <br /><br /> .......................................<br /><br />இந்த பதிவ எழுதிட்டு இருக்கும் போது இந்தா இப்ப தான் பொன்னீலன் சார்கிட்ட இருந்து போன்.... <br /><br />கால் அட்டென்ட் பண்ணி "ஹலோ"ன்னு சொன்னதுமே "எம்மா உன் புத்தகத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கு"ன்னு சொன்னார். குரல்ல அவ்வளவு உற்சாகம்... <br /><br />"மனக்காவல பெருமாளே உன்னோட புத்தகத்துல அஞ்சு காப்பி வேணும்னு சொன்னாராம். இப்படியே உன் புக் வித்து தீர்க்குது. உன்கிட்ட இருக்குற மொழி அப்படிப்பட்டது"ன்னு பாராட்டினார். <br /><br /> "எழுத்துலகத்தில் நீ அங்கீகரிக்கப்பட்டு விட்டாய்"ன்னு அவர் சொல்றது எல்லாம் சாதாரணமான விசயமா என்ன? <br /><br />"இனி நீ படிபடியா உன்னை முன்னேற்றி உன் மொழிய உன் ஊருக்குள்ள இழுத்துட்டு வா. வேற எவனும் சொல்ல முடியாத மொழிக்கு போயிரு. அந்த மொழில நீ நின்னுட்டா ஒருத்தராலயும் நிக்க முடியாதுல"ன்னு சொன்னப்ப நன்றி சொன்னேன். <br /><br /> "நன்றி எல்லாம் வேணாம் மா. நீ ஆரம்பி"ன்னு சொல்லிட்டு அடுத்த கூட்டங்களுக்கு கண்டிப்பா கூட்டிட்டு போறேன்மான்னு சொல்லி போன வச்சார். <br /><br />இதுக்கு மேல வேறென்ன வேணும்? <br /><br />................................................................ <br /><br /><br />கொசுறு தகவல்: அன்னிக்கி மொத்தமா வித்த என்னோட புத்தகத்து எண்ணிக்கை அறுபது <br /><br />புத்தகத்தை வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய ஆன்லைன் முகவரி: <a href="http://www.marinabooks.com/detailed?id=5%200280">http://www.marinabooks.com/detailed?id=5%200280</a> <br /><br /><a href="http://www.wecanshopping.com/products/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html">http://www.wecanshopping.com/products/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html</a><br />
<br />
<br />
<a href="http://3.bp.blogspot.com/-v160u5v3TYk/WIoK63arM5I/AAAAAAAAC-I/kaTKWzqTYC8WnMS9dJ9yLnyn-nesk42HQCK4B/s1600/Untitled-1%2Bcopy.jpg" imageanchor="1"><img border="0" height="198" src="https://3.bp.blogspot.com/-v160u5v3TYk/WIoK63arM5I/AAAAAAAAC-I/kaTKWzqTYC8WnMS9dJ9yLnyn-nesk42HQCK4B/s640/Untitled-1%2Bcopy.jpg" width="640" /></a> <br /></div>
ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-688800002866550740.post-34661675293879222192017-01-13T22:25:00.001+05:302017-01-13T23:13:18.800+05:30சென்னை புக் ஃபேர்: - தற்கொலைக் கடிதம் review <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="http://4.bp.blogspot.com/-pAaiBHvrAvU/WHkGLKjc1TI/AAAAAAAAC9o/tQ1CQXM4K3UwfdLO9jQnJBKpy0f5J1NeACK4B/s1600/IMG_20170103_202401.jpg" imageanchor="1"><img border="0" height="360" src="https://4.bp.blogspot.com/-pAaiBHvrAvU/WHkGLKjc1TI/AAAAAAAAC9o/tQ1CQXM4K3UwfdLO9jQnJBKpy0f5J1NeACK4B/s640/IMG_20170103_202401.jpg" width="640" /></a><br />
<br />
நான் blog எழுதுறது, பேஸ்புக்ல page வச்சிருக்குறது எதுவும் என் நெருங்கிய சொந்தங்களுக்கு தெரியவே தெரியாது...<br />
<br />
சொந்தக்காரங்க யார் ஐடி கண்ணுல பட்டாலும் block பண்ணிட்டு, facebook-கா அப்படினா என்னதுன்னு அவங்ககிட்டயே திருப்பி கேப்பேன்...<br />
<br />
ஆனா முதல் தடவையா துணிச்சலோட என்னோட எழுத்துக்கள ஒரு சிறுகதை தொகுப்பு புத்தகமா போடலாம்ன்னு முடிவெடுத்து, நானாவே தான் எழுத்தாளர் பொன்னீலன்<a href="https://www.facebook.com/ponneelan.baktavatchalan">Bhaktavatsalan Ponneelan</a> சார்கிட்ட போய் காமிச்சேன்.<br />
<br />
படிச்சு பாத்துட்டு நிறைய பாராட்டினார். அவரே அதுக்கான அணிந்துரையும் எழுதி குடுத்து, அத எப்படி புத்தகமாக்குறதுன்னு வழி முறையும் காட்டித் தந்தார்.<br />
<br />
அவரோட வழிகாட்டுதல்ல என்னோட புத்தகம் வெளிவந்து இப்ப சென்னை புக் ஃபேர்ல விற்பனைக்கும் வந்துடுச்சு.<br />
<br />
என்னதான் துணிச்சலோட நான் இத எல்லாம் செய்தாலும் சொந்தக்காரங்க மத்தியில எனக்கு எந்த விதமான ரியாக்சன் இருக்குமோன்னு பயந்துட்டே இருந்தேன்...<br />
<br />
அதனால தான் யார் கண்ணுலயும் என்னோட புத்தகத்த காட்டாம எல்லாத்தையும் அல்மாராவுல வச்சு பூட்டி வச்சேன்...<br />
<br />
அப்படி இருக்குறப்ப தான் என் மாமா பொண்ணு என்கிட்ட என் புத்தகத்த படிக்க கேட்டா. பயம் தான், என் எழுத்த படிச்சுட்டு என்ன சொல்லுவாங்களோன்னு. ஆனாலும் ஏதோ ஒரு துணிச்சல்ல எடுத்து குடுத்தேன்...<br />
<br />
புத்தகத்த முழுசா படிச்சுட்டு அவ குடுத்த review இனி....<br />
______________________________<br />
<br />
ஒரு வித்யாசமான உணர்ச்சிகள புரிஞ்சுக்குற மாதிரி ஒரு புக் அண்ணி. நம்ம ஊரு ஸ்டைல படிக்குறது ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு.<br />
<br />
சிரிப்பு, அழுகை ரெண்டையும் ஒரே புத்தகத்துல கொண்டு வந்துட்டீங்க. நம்ம ஊருல இருக்குற specialities-சும் வித்தியாசமான விதத்துல சொல்லியிருக்கீங்க. என்னோட generation-கே இதெல்லாம் தெரியல...<br />
<br />
Food items- ச சாப்பிடுறது மட்டும் இல்லாம அதையும் தாண்டி.... ரொம்ப சுவாரஸ்யம்.<br />
<br />
உங்கள சின்ன வயசுல இருந்து தெரிஞ்சதால உங்களோட பார்வை & எண்ணங்கள், மாமா, அத்தை எல்லாரையும் உங்க எழுத்துக்கள்ல புதுசா உணர முடிஞ்சுது...<br />
<br />
உங்க மேல இன்னும் பெரிய மரியாதை வந்துருக்கு.<br />
<br />
கதைகள்ல என்னோட favorites by order.... 2,5,1,13,20,10,14,17<br />
<br />
மத்த எல்லா கதைகளும் பிடிச்சிருந்துச்சு. ஆனா இதெல்லாம் என்னோட உணர்ச்சிய வெளிப்பட வச்சது...<br />
<br />
12-ல நீங்க சொல்லியிருக்குற திமிரான உணர்ச்சி பூர்வமான காதல் கலக்கல்...<br />
<br />
இந்த review -லாம் சொல்றதுக்கு எனக்கு தகுதி இருக்குதானு எனக்கு தெரியாது. but சொல்லலனா என் மனசு கேக்காது.<br />
<br />
உங்கள் அடுத்த புத்தகத்திற்காக காத்திருக்கிறேன்.... <br />
______________________________<br />
<br />
இத படிச்சதும் நிஜமா எனக்கு கண்ணுல தண்ணி வந்துடுச்சு... அப்படியும் என்னால நம்ப முடியாம "அப்போ துணிஞ்சு அடுத்த புக் ரெடி பண்ணலாம்ல. பயந்துட்டே இருந்தேன்"ன்னு கேட்டேன்...<br />
<br />
"கண்டிப்பா அண்ணி. நம்ம ஊரு ஸ்டைல்ல எங்கள மாதிரி பிள்ளைகளுக்கு தெரியாத விசயத்த வித்யாசமான கண்ணோட்டத்துல சுவாரஸ்யமா சொல்ல ரொம்ப கஷ்டம். அத எதார்த்தமா படிக்கவும் உணரவும் முடியுது. இன்னும் எதிர்பார்ப்பு கூடியிருக்கு. கண்டிப்பா ரெடி பண்ணுங்க, நாங்க இருக்கோம்"ன்னு சொன்னா. <br />
_______________________<br />
<br />
அவ குடுத்த review தைரியத்துல நான் இன்னும் சத்தமா உங்களுக்கு எல்லாம் சொல்லிக்குறேன்....<br />
<br />
சென்னை புக் ஃபேர்ல என்னோட புத்தகம் கிடைக்குற அரங்குகள்<br />
<br />
புதினம் புக்ஸ் : ஸ்டால் எண் 35B<br />
நூலகம் பேசுகிறது: ஸ்டால் எண் 409<br />
வீ கேன் புக்ஸ்: ஸ்டால் எண் 536<br />
<br />
___________________________<br />
<br />
என்னை பத்தி எதுவுமே தெரியாத போதும் துணிச்சலா இந்த புத்தகத்த அழகா வடிவமைச்சு, அச்சிலேற்றி குடுத்துருக்குற <a href="https://www.facebook.com/profile.php?id=100009019209610">J.e. Jebha</a>-வுக்கும் உறுதுணையா இருந்த <a href="https://www.facebook.com/ram.vinoth.589">Ram Thangam</a>- அவர்களுக்கும் என்னோட நன்றி.</div>
ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-688800002866550740.post-6572596072617952812017-01-05T00:42:00.000+05:302017-01-05T00:42:17.641+05:30தலைகால் புரியாத தருணம் - தற்கொலைக் கடிதம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<a href="http://1.bp.blogspot.com/-8viY1ldhT_Q/WG1It8x6ttI/AAAAAAAAC9U/Lo9ehAdjfjAvbSZOnM98i6CfQ9-B7NjQgCK4B/s1600/1.jpg" imageanchor="1"><img border="0" height="360" src="https://1.bp.blogspot.com/-8viY1ldhT_Q/WG1It8x6ttI/AAAAAAAAC9U/Lo9ehAdjfjAvbSZOnM98i6CfQ9-B7NjQgCK4B/s640/1.jpg" width="640" /></a><br />
நாலு பேரு நாலு வார்த்த நல்லதா சொன்னா நம்ம மனசுக்குள்ள வர்ற சந்தோசமே தனி. என்னதான் புகழ்ச்சிக்கு மயங்கக் கூடாதுன்னு சொன்னாலும் நம்மள தூக்கி கொண்டாடவும் சில உறவுகள் வேணும் கண்டிப்பா... சோர்ந்து போற நேரத்துல எல்லாம் அவங்க வார்த்தைகள் தான் நமக்கு உற்சாக டானிக்... <br />
<br />
நம்மோட நலன் விரும்பிகள நாம தேர்வு செய்ற விதம் ரொம்ப அவசியம். நாம எது செய்தாலும் சரின்னு சொல்றவங்க சில பேரு இருப்பாங்க. கிட்டதட்ட கண்மூடித்தனமா நம்மள நம்புறவங்க அவங்க. அவங்களோட அன்பு மெய்சிலிர்க்க வைக்கும், அதே நேரம் நிறைய கூச்சத்தையும் தயக்கத்தையும் குடுக்கும். என்ன இவங்க இப்படி பாராட்டுறாங்க, இதுக்கெல்லாம் நாம வொர்த் இல்லையே அப்படின்னு மனசுக்குள்ள ஒரு பயம் எட்டிப் பாக்கும். இவங்கள எல்லாம் நான் தள்ளி நின்னே அன்பு செய்வேன். நிறைய அன்பு செய்வேன், அவங்க பாராட்டினா கூச்சத்தோட ஒரு ஓரமா ஒதுங்கிடுவேன்... <br />
<br />
இன்னொரு வகை உண்டு. நாம செய்ற செயல் அவங்கள ஈர்க்கலன்னா அப்படியே கடந்து போய்டுவாங்க. அதே நேரம், அவங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு வார்த்தை பாராட்டாம போக மாட்டாங்க. அப்படி ஒருத்தர் வெற்றி விடியல் சீனிவாசன் சார். மனுஷன் நச்சுன்னு ஒரு கமன்ட் தான் போடுவார், அத பாத்தாலே ஜிவ்வுன்னு மனசுக்குள்ள ஒரு சந்தோசம் எட்டிப்பாக்கும் பாருங்க... அத எல்லாம் எழுத்துல விவரிக்கவே முடியாது. <br />
<br />
அடுத்தது, நாம செய்ற நல்ல விசயங்கள பாராட்டவும், தப்பு செய்தா நச்சுன்னு குட்டவும் செய்ற தோழமைகள். Academic side –ல எனக்கு அப்படி ரெண்டு பேர் வாய்ச்சிருக்காங்க. ஆள் பெரிய ஆள், multitalented- ன்னு பாராட்டவும் செய்வாங்க, லூசாப்பா நீயி, உனக்கு அறிவே கிடையாதான்னு பளிச்சுன்னு கேட்டுறவும் செய்வாங்க. <br />
<br />
ஒரு விஞ்ஞானியாகணும்ன்னு கண்ட கனவெல்லாம் சாத்தியமேயில்லன்னு ஆனதுக்கப்புறம், எழுத்துப் பக்கம் என் கவனம் திரும்பிய போது, பாராட்டவும் குட்டவும் சரியான ஒரு ஆள் இல்லாம நிறைய திணறியிருக்கேன். இங்க இருக்குற நட்புக்கள் எல்லாம் எனக்கு உற்சாகத்த மட்டுமே குடுக்குறவங்களா அமைஞ்சு போய்ட்டாங்க. யார்கிட்ட போய் என் நிறை குறைகள கேக்குறதுன்னு புரியவும் இல்ல. <br />
<br />
ஏன்னா, குறைகள் சொல்லணும்னே நிறைய பேர் இருப்பாங்க. அவங்க வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுத்தோம்னா நம்மோட வீழ்ச்சி ஆரம்பிச்சிடுச்சுன்னு அர்த்தம். அதே நேரம், நாம நல்லா இருக்கணும்ன்னு நம்மோட குறைகள சுட்டிக் காட்டுறவங்க இருப்பாங்க. அவங்க தான் நம்மோட வரம். அவங்கள விட்டுடவே கூடாது. ஏதோ ஒரு தருணத்துல மனசு வலிச்சாலும் எதார்த்தத்த புரிஞ்சுக்குற பக்குவத்த நாம வளத்துக்க இவங்க பக்கபலமா இருப்பாங்க. <br />
<br />
வட்டார வழக்குல தான் எழுதுறேன் அப்படின்னு நான் நம்பிட்டு இருந்த நேரத்துல, “எம்மா, நேத்து ரொம்ப நேரம் உன்னை பத்தி தான் பேசிட்டு இருந்தேன், ரொம்ப ரொம்ப நேரம்... நல்லா எழுதுற, ஆனா உன்கிட்ட ஒரு கொற இருக்கு. உன் ஊரு மொழி இருக்கே, அது ஒலகத்துல எந்த இடத்துலயும் இல்லாதது, நீ அத தவற விட்டுருக்க. வட்டார மொழிய படி, அத பிடி, அத எழுது” அப்படின்னு பொன்னீலன் ஐயா சொன்னதுக்கப்புறம் தான் ஆஹா இப்படி தான ஒரு மனுசன தேடிட்டு இருந்தேன்-ன்னு ஒரே சந்தோசமாகிடுச்சு. <br />
<br />
“என்னைப் பத்தி அப்படி என்ன பேசுனீங்க”ன்னு கேக்க ஆச தான். ஆனாலும் என்னவோ ஒரு தயக்கம் தடுத்துடுச்சு. எல்லாமே வெளியீட்டு விழா அன்னிக்கி கேக்கத் தானே போறேன்னு மனச தேத்திகிட்டேன். <br />
<br />
“இந்த நிமிஷம், இந்த நொடி வரைக்கும் எனக்கு பயமாவே இருக்கு. நான் எழுதினத மக்கள் ஏத்துக்குவாங்களாங்குற ஒரு உதறல் மனசுக்குள்ள இருந்துகிட்டே இருக்கு. பயத்துல கையெல்லாம் நடுங்கிட்டு இருக்கு. என்னோட புத்தக வெளியீட்டு விழாவுல நீங்க பேசப் போறத கேட்டு தான் என்னை பத்தி நானே ஒரு முடிவுக்கு வர முடியும்” அப்படின்னு சொல்லிட்டு வேற என்ன பேசன்னு கூட தெரியாம வார்த்தைகளற்று நின்னுட்டேன். <br />
<br />
“அந்த பயம் இருக்கத்தானே செய்யும். இது உன்னோட பிரசவம்ல. பிரசவ நேரத்துல ஒரு தாய்க்கு எவ்வளவு பயம் இருக்கும். அந்த பயம் தான் உனக்கும் இருக்கு. போக போக பழகிடுவ. அனுபவங்கள ஆசானா எடுத்துக்கோ”ன்னு ஆறுதலும் சொன்னார். <br />
<br />
புத்தகம் ரொம்ப நல்லா வந்துருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. என்ன, அந்த ஒவ்வொரு கதை ஆரம்பத்துலயும் வர்ற டிசைன் கருப்பா இருக்கு. அத வெள்ளையா போட்டுருக்கலாம், சரி, அடுத்த புத்தகத்துல சரி பண்ணிப்போம்” அப்படினார். <br />
<br />
நீ எழுதணும்ன்னு வந்துட்ட. இனி நீ நிறைய புத்தகங்கள படிக்கணும், அப்ப தான் ஒவ்வொருத்தரும் என்னென்ன கண்ணோட்டத்துல எழுதுறாங்கன்னு உனக்கு பிடிபடும். அத தொடர்ந்து உனக்குன்னு ஒரு பாணிய பிடிச்சுக்கோ, நீ நல்லா வருவ”ன்னார். <br />
<br />
நான் சொன்னேன் “எனக்கு புத்தகங்கள படிக்குறத விட மனுசங்கள படிக்கணும்னு ஆச. நேரடியா அந்த மக்களோட கலந்து இருக்கணும்னு ஆச”ன்னு சொன்னேன். <br />
<br />
“எம்மா, இது பெரிய விஷயம். நீ தாராளமா செய்”ன்னு சொன்ன ஆசீர்வாதத்த பிடிச்சுட்டு கொஞ்சமாவது மேல வரணும்னு ஒரு ஆச துளிக்க ஆரம்பிச்சிடுச்சு. <br />
<br />
கடைசியா கிளம்பும் போது என் புத்தகத்த அவர் கைல குடுத்து, உங்களோட “ஆட்டோகிராப்” வேணும். எழுதி குடுங்கன்னு கேட்டேன். <br />
<br />
அவர் எழுதினது இது தான்.... <br />
<br />
<b>“பொட்டல் வட்டாரத்தில் என் தொடர்ச்சியாக வளரும் இனிய படைப்பாளி Dr. ஜீவாவுக்கு <br /><br />- அன்புடன் பொன்னீலன் <br /><br />4-1-2017</b></div>
ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-688800002866550740.post-44084327145690588752016-12-23T01:05:00.001+05:302016-12-23T01:08:34.594+05:30சுயபச்சாதாபமும் பழிகளும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-smnoNSGEQdM/WFwqrBwWk1I/AAAAAAAAC80/KDSdfYde-lkU9chpzMJL6jW-gbFYKtO9wCLcB/s1600/Baby-Girl-With-Pink-Rose-624x390.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="398" src="https://2.bp.blogspot.com/-smnoNSGEQdM/WFwqrBwWk1I/AAAAAAAAC80/KDSdfYde-lkU9chpzMJL6jW-gbFYKtO9wCLcB/s640/Baby-Girl-With-Pink-Rose-624x390.jpg" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br /><br />நேத்து எனக்கும் என் lab assistant- க்கும் நிறைய வாக்குவாதம்.<br /><br />தனக்கு பாத்து வச்ச மாப்பிளை சரியில்லன்னும் வேணும்னே சதி செய்து நாசம் பண்ணி தன்னோட குடும்பத்து ஆளுங்க தன்னை நடுத்தெருவுல விட்டுட்டாங்கன்னு புலம்பிகிட்டே இருந்தாங்க. <br />இடையிடைல “அவ மட்டும் சந்தோசமா இருக்கா. எப்பவும் என் அண்ணன்கிட்ட போன்ல பேசிகிட்டே இருக்கா. நானும் இப்படி மாப்பிள்ளை கூட பேசணும்னு ஆசைப்படுறேனே, ஆனா நான் இப்படி பாதிக்கப்பட்டு இருக்கேனே”னு அண்ணன் மனைவி மேல ஆவேசம் வேற.<br /><br />இத்தனைக்கும் இவங்கள காத்திருந்து ஸ்கூட்டில கூப்ட்டுட்டு ரெண்டு பேரும் ஒண்ணா தான் காலேஜ் வராங்க.<br /><br />" யாரும் வேணும்னே யாரையும் நாசமா போகணும்னு நினைக்க மாட்டாங்க. நீங்க நல்லா இருக்கணும்னு நினச்சி பண்ணினது இப்படி ஆகிடுச்சு. "நடந்தது நடந்தாச்சு, முதல்ல அடுத்தவங்கள குறை சொல்றத நிறுத்துங்க. அப்பதான் வாழ்க்கைல உருப்பட முடியும்" னு சொன்னதும் "எப்பவும் ஈஈஈ்னு இளிச்சுகிட்டு இருக்குற உங்களுக்கு என் கஷ்டம் புரியாது"ன்னு பட்டுன்னு சொல்லிட்டாங்க.<br />சரிதான், இனி வாயக்குடுத்தா நமக்கு தான் அசிங்கம்னு வாய மூடிகிட்டு Bell அடிச்சு பிள்ளைங்க வரவும் class எடுக்க ஆரம்பிச்சேன்.<br /><br />கொஞ்ச நேரத்துல dehydration, low bp- னு எனக்கு படபடன்னு மயக்கமா வர "madam கொஞ்சம் கேண்ட்டீன்ல சுடு தண்ணி வாங்கிட்டு வாங்களேன்"னு கேக்க "அதெல்லாம் என்னால முடியாது"னு சொல்லிட்டாங்க. நான் நாக்கு குழறி மெதுவா சாய்றத பாத்த பிள்ளைங்க தான் ஓடி போய் சுடு தண்ணி வாங்கி குடுத்து கூடவே இருந்து பாத்துக்கிட்டாங்க. இத்தனைக்கும் ஒழுங்கா படிக்குறது இல்ல, ஒரு practical உருப்படியா பண்றது இல்லன்னு அப்ப தான் திட்டி தீத்துருந்தேன்.<br /><br />இன்னிக்கி lab- ல நுழைஞ்சதும் “ஹிஹி... தண்ணி வாங்கி தரலைன்னு கோபமா”ன்னு கேட்டாங்க. நான் கொஞ்சம் முறைச்கிகிட்டே seat –ல போய் உக்காந்துகிட்டு class adjustment, official phone calls-ன்னு வேலைய பாக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச நேரத்துல மனசுக்கு என்னவோ தோண, அவங்கள பாத்தேன். என்னையே பாத்துகிட்டு இருந்தாங்க. பட்டுன்னு சிரிச்சுட்டு, “உங்களுக்கு கொழுப்பு கொஞ்சம் ஓவரா போச்சு, காலைல சாப்ட்டீங்களா இல்லையா, இல்லனா முதல்ல போய் சாப்டுங்க போங்க”ன்னு சொன்னேன். அது வரைக்கும் உம்ம்முனு இருந்த அவங்க முகம் பிரகாசமாகி, சரின்னு போய்ட்டாங்க.<br /><br />Practical பண்ண வந்த பிள்ளைங்க இத கவனிச்கிட்டே இருந்தாங்க. “ஏன் மேடம் அவங்ககிட்ட பேசுனீங்க? எல்லாம் நீங்க வச்சு குடுக்குற இடம். நாங்க கவனிச்சுட்டு தான் வரோம், அவங்க உங்கள நிறைய எதிர்த்து பேசுறாங்க, மதிக்க மாட்டேங்குறாங்க, எங்ககிட்ட கூட ரொம்ப கோபப்படுறாங்க மேடம்”ன்னு சொல்லவும் “நேத்து நானும் தான் உங்கள நிறைய திட்டினேன், ஆனாலும் நீங்க எனக்கு help பண்ணுனீங்க தானே, அப்படி வச்சுக்கோங்க இதையும். நடந்து முடிஞ்ச சம்பவங்களுக்காக கோபப்பட்டுகிட்டே இருந்தா அப்புறம் வாழ்ந்து என்ன பிரயோஜனம்”ன்னு கேட்டுகிட்டே, “சரி சரி, வேலைய பாருங்க, வந்துட்டாங்க கதை கேக்க”ன்னு மறுபடியும் திட்டி தொரத்தி விட்டுட்டேன்.<br /><br />என் lab assistant மாதிரியான பெண்கள் அநேகம் பேர் இங்க இருக்காங்க. வாழ்க்கைல அவங்களுக்கு வர்ற stress, அதனால தொடர்ந்து வர்ற மன அழுத்தங்கள். ஏன், நானே கூட இந்த வகையறா தான். நிறைய கோபம், நிறைய அழுகைன்னு ஏதோ ஒரு சூழல்ல சிக்கி, அதுல இருந்து வெளிவர போராடிகிட்டு இருக்குற ஒரு சராசரியான மனுஷ ஜென்மம் தான் நானும்.<br /><br />ஒருத்தங்க மேல ஒரு பழிய போடுறதுக்கு முன்னாடி, அவங்க என்ன நிலைமைல இருக்காங்க, இத அவங்க செய்திருப்பாங்களா, அப்படியே செய்திருந்தாலும் எதுக்காக செய்திருப்பாங்கன்னு அவங்கள சார்ந்து அவங்க மனநிலைல இருந்து யோசிச்சோம்னாலே பல நேரம் பல misunderstanding சரியா போக வாய்ப்பு இருக்கு. எனக்கு என் lab assistant பத்தி தெரியும். அதனால அவங்கள என்னால adjust பண்ண முடியுது. என்னைப் பத்தி பசங்களுக்கு தெரியும், என் நண்பர்களுக்கு தெரியும், அதனால அவங்களால என்னை adjust பண்ணி போக முடியுது அவ்வளவு தான்.<br /><br />ஆனா இதெல்லாம் எத்தனைபேருக்கு சரியா புரியும்னு நம்மால சொல்ல முடியாது. காரணம் இயலாமையும் ஆற்றாமையும் அதிகம் ஆகிடுச்சுனா நாம உடனே கைல எடுக்குற ஆயுதம், நம்மோட நிலைமைக்கு காரணகர்த்தாவா அடுத்தவங்கள கைக்காட்டுறது தான்.<br /><br />“என் வாழ்க்கைய கெடுத்ததே அவன்/ அவள் தான்”ன்னு ரொம்ப ஈசியா அடுத்தவங்கள கைகாட்டிகிட்டு நம்மோட இந்த நிலைமைக்கு நாம காரணம் இல்லன்னு நமக்கு நாமே சமாதானம் செய்துக்குறோம். ஆக மொத்தத்துல பெரும்பாலும் நம்மோட கற்பனைப்படி நாம எப்பவும் நல்லவங்களாவே இருப்போம். ஆனா நமக்கு ஒரு பெரும் பிரச்சனை இருக்கும். அதாவது நம்மள தவிர்த்து எல்லாருமே கெட்டவங்களா இருப்பாங்க, எப்படா நம்ம காலைவாரி விடலாம்னு காத்துகிட்டு இருப்பாங்க. <div>
<br />இப்படி அதீத கற்பனைகுள்ள சிக்கிகிட்டவங்களால அவ்வளவு சீக்கிரம் அதுல இருந்து வெளிவர முடியாம போய்டுது.<br /><br />தன்னோட கஷ்டங்களுக்கு யார் மேலயாவது பழி போடுறவங்க அடுத்து நாடுறது கோவில் பூசாரிகளையும் ஜோசியக்காரர்களையும் தான். சில பேர் ஒரு படி மேல போய் சாமி மேலயே பழி போடுவாங்க. “என் வாழ்க்கைய கெடுத்தது முத்தாரம்மன் தான், அவ தான் என்னை நாசம் பண்ணிட்டா. என்னை வாழ விடாம பண்ணிட்டா”ன்னு எல்லாம் காதுல விழுறப்ப பாவம் இந்த அம்மன்மார்கள்ன்னு அவங்களுக்காக பரிதாபப்பட மட்டும் தான் முடியுது என்னால. மிஞ்சி மிஞ்சி போனா எனக்கு அத குடு, இத குடுன்னு அவங்கள disturb பண்ணாம இருக்கேன். பாவம், மேல குறிப்பிட்ட என் lab assistant மாதிரியானவங்ககிட்ட மாட்டிகிட்டு முழி பிதுங்கி இருக்குற முத்தரம்மன நான் வேற தொல்லை பண்ணனுமா என்ன?<br /><br />பெண்கள்ல இன்னும் சில வகைகள் உண்டு. இந்த மாதிரி stress, depression –ல இருக்குறவங்கள உக்கார வச்சு நல்லா கதை கேட்டுகிட்டு, “ஐயோ பாவம், நீ எவ்வளவு நல்லவ. உன் மாமியார்/ புருஷன் இவ்வளவு மோசமானவங்களா? உன்னால தான் இதெல்லாம் சமாளிக்க முடியுது, உனக்கொரு விடிவு வராதா”ன்னு ரொம்ப பரிதாபப்படுவாங்க. சிலபேரு இன்னும் ஒரு படி மேல போய் “அந்த கோவிலுக்கு போனா பரிகாரம் பண்ணலாம், இந்த சோசியர்கிட்ட போனா நல்ல பலன் உண்டு”ன்னு ஏத்தி விடுவாங்க. அவங்க அந்தப் பக்கம் போனதும், அவங்கள பத்தின கேலிகளும் கிண்டல்களுக்கும் அவங்களுக்கு நல்ல time pass –சா இருக்கும்.<br /><br />இந்த விசயத்துல தான் நான் ரொம்ப முரண்படுவேன். அவங்களா என்கிட்ட ஏதாவது சொல்ல வந்தா காது குடுத்து கேக்காம இருக்க மாட்டேன். கேப்பேன். ஆனா நிறைய குறுக்கு விசாரணை பண்ணுவேன். தப்பு பெரும்பாலும் இவங்க பெயர்லயே இருக்கும். “நீங்க செய்றது தப்பு”ன்னு முகத்துக்கு நேரா காரண காரியங்களோட விளக்கிடுவேன். ரொம்பவே argue பண்ணிட்டு இருந்தா, “போங்க, போய் வேலைய பாருங்க”ன்னு தொரத்தி விடுவேன். பெரும்பாலும் நான் அவங்ககிட்ட முகத்துல கடுமை தான் காட்டியிருக்கேன். அப்படியும் ரெண்டு பேரும் மறுபடியும் புன்னகையோட வலம்வர முடியுதுனா அவங்களுக்கு என் மேல ஏதோ ஈர்ப்பு, இவங்க என்னவோ சொல்ல வராங்கன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்.<br /><br />ஒரு தடவ வாய்விட்டே கேட்டேன், “இவ்வளவு திட்டியும் எப்படி என் பின்னாலயே வரீங்க”ன்னு. “நான் நல்லா இருக்கணும்னு நீங்க மனசார நினைக்குறீங்க. அது எனக்கு நல்லா புரியுது”ன்னு சொன்னாங்க.<br /><br />அவ்வளவு தான் வாழ்க்கை. அவ்வளவு தான் புரிதல். <div>
<br />என்ன கஷ்டம் வந்தாலும் “ஐயோ என் நிலைமை இப்படி ஆகிபோச்சே”னு சுய இரக்கமோ அனுதாபமோ நம்ம மேலே நமக்கு வந்துடவே கூடாது. அதுல மட்டும் சரியா இருந்துடணும். அந்த விசயத்துல நான் வரம் வாங்கி வந்துருக்கேன்.</div>
</div>
</div>
ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-688800002866550740.post-4220654779404691792016-12-13T14:12:00.000+05:302016-12-13T14:13:09.818+05:30தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றமும் நானும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-ePjp9GR0-9Y/WE1VYE2O2YI/AAAAAAAAC8Y/6mWC0gV9j2cUVtWYrX-AX4LAhMr1klquQCLcB/s1600/IMG_20161210_194838%255B1%255D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="360" src="https://1.bp.blogspot.com/-ePjp9GR0-9Y/WE1VYE2O2YI/AAAAAAAAC8Y/6mWC0gV9j2cUVtWYrX-AX4LAhMr1klquQCLcB/s640/IMG_20161210_194838%255B1%255D.jpg" width="640" /></a></div>
<br />
<br />
போன வாரத்துல திடீர்னு ஒரு போன் கால். <br />
<br />
“எம்மா, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பா பத்தாம் தேதி ஒரு மீட்டிங் இருக்கு. அதுக்கு போய்ட்டு வாயேன்”ன்னு சொன்னது சாட்சாத் எழுத்தாளர் பொன்னீலன் தான். <br />
<br />
“ஏதாவது மீட்டிங் போனா என்கிட்டயும் சொல்லுங்க, நானும் வரேன்”ன்னு நான் தான் அவர்கிட்ட சொல்லி வச்சிருந்தேன். <br />
<br />
“சரி, நான் போறேன், அது எங்க நடக்குது”ன்னு நான் கேட்டதும், “நீ போறியனா என்னெயும் கூட்டிட்டு போய்டேன், நானும் உன்கூட வந்துடுறேன்”ன்னார். <br />
<br />
“ஹப்பாடா, நல்லவேளை, வழி தெரியாம நாகர்கோவில்ல திணற வேணாம், தப்பிச்சோம்”ன்னு மனசுல நினச்சுட்டே, “ஐயோ கண்டிப்பா கூட்டிட்டு போறேன், எத்தன மணிக்கு உங்கள கூப்ட வரணும்”ன்னு விவரம் எல்லாம் கேட்டுகிட்டேன். <br />
<br />
அவர்கிட்ட சொன்ன மாதிரியே அஞ்சு மணிக்கு அவர் வீட்டு வாசல்ல போய் நிக்க, அவர் கூட அவர் மனைவியும் வந்தார். ஏற்கனவே ரெண்டு மூணு நாள் அவர் வீட்டுக்கு போயிருக்குறதால அவங்க கூடவும் நல்ல அறிமுகம். அதுவும் பத்து நாள் முன்னால வீட்டுக்கு போனப்ப அவங்க போட்டு தந்த டீ பிரமாதம். பொன்னீலன் சாருக்கு குடுக்காம நாங்க மட்டும் குடிச்சுட்டு வந்துருந்தோம். <br />
<br />
“சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவிலுக்கு போறா, அவள செட்டிகுளத்துல இறக்கி விடணும்மா”ன்னு இவர் சொன்னதும் பரஸ்பரம் சிரிச்சுகிட்டே சரின்னு தலையாட்டிகிட்டேன். கார்ல வர்றப்ப ரோடும், அத உடச்சி போட்டுருக்குற விதத்தையும் பத்தி தான் பேசிகிட்டே வந்தோம். அவங்கள இறக்கி விட்டுட்டு நாங்க அப்படியே டதி ஸ்கூல் பக்கத்துல இருந்த ஓய்வு பெற்றோர் சங்கம் இருந்த இடத்துக்கு போனோம். <br />
<br />
அது சா. தேவதாஸ் அவர்களோட இரண்டு நூல்கள் பத்தின கருத்தரங்கம். <br />
<br />
தலைமை கவிஞர் நட. சிவக்குமார். <br />
<br />
சா. தேவதாசோட “கால்வினோ கதைகள், கட்டுரைகள், நேர்முகம்” புத்தகத்த விவரிச்சு ஹச். முஜீப் ரஹ்மானும், “மரண தண்டனையின் இறுதி தருணங்கள்” பற்றி சிவசங்கர் எஸ்.ஜே அவர்களும் பேசினாங்க. கடைசியா உரை சா. தேவதாஸ். <br />
<br />
கவிஞர் நட. சிவகுமார் பேசினப்ப கால்வினோ கால்வினோனு நிறைய பேசினார். கால்வினோவோட ரெண்டு குட்டி கதைகளையும் சொன்னார். கால்வினோவோட காதலன்னும், அவர படிச்சி வாழ்ந்தவன்னு பெருமையா பேசினார். ஹச். முஜீப் ரஹ்மானுக்கும் அவருக்கும் உள்ள நட்பை பத்தி பேசினார். கால்வினோ இல்லனா தன்னோட மூளை செத்துப் போயிருக்கும்னு சொன்னார். நிஜமாவே எனக்கு அவர் சொன்ன ரெண்டு கதைகளோட முடிவுல என்ன சொல்ல வந்தாங்கன்னு புரியவே இல்ல. என்னை மாதிரி ஆட்களுக்கு அவங்க இவ்வளவு பரவசப்பட்டு சிலாகிச்ச கால்வினோவோட அருமைகள கொஞ்சம் புரிய வச்சிருக்கலாம். <br />
<br />
ஹச். முஜீப் ரஹ்மான் பேசினப்ப, எவ்வளவு தான் நாம இதிகாசங்கள படிச்சிருந்தாலும் உலக இலக்கியம் படிச்சா தான் ஒரு விரிவான பார்வை கிடைக்கும்னு சொன்னார். கால்வினோவ தெரிஞ்சுக்கணும்னா க்யூபாவ அறிஞ்சிருக்கணும், லத்தீன் மொழிய அறிஞ்சிருக்கணும், லத்தீன் பாரம்பரியத்த அறிஞ்சிருக்கணும், இத்தாலிய அறிஞ்சிருக்கணும், இத்தாலிய எழுத்தாளர்களை அறிஞ்சிருக்கணும், அப்ப தான் கால்வினோ பத்தி அறிஞ்சிக்க முடியும்னு சொன்னார். <br />
<br />
ரியலிசம் என்னும் எதார்த்தவாதம் சமூகத்தில் உள்ளதை உள்ளப்படி காட்டுற விதம். ரியோ-ரியலிசம் விளிம்பு நிலை மக்களை காட்டுகின்ற முறை. இதுல இலத்தீன் அமெரிக்க பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் ஒரு புதிய மாய யதார்த்தம்ங்குற முறையை பயன்படுத்தி உலகத்துக்கு அறிமுகப்படுத்தினவர் கால்வினோ. அதனாலேயே இத்தாலிய வரலாற்றில் கால்வினோ ரொம்ப முக்கியமானவர்னு ஹச். முஜீப் ரஹ்மான் சொன்னார். <br />
<br />
கால்வினோ கதைகள, புத்தகங்கள நாலு பக்கத்துக்கு மேல யாராலும் படிக்க முடியாதுன்னு அடிக்கடி சொல்லிட்டே இருந்தார். ஏன்னா அந்த முறையே ஒரு அதிர்ச்சிகரமான முறையாம். இப்படியான முறைல கதை சொன்னா அத எப்படி வாசகர்கள் ஏத்துக்குவாங்கங்குற கேள்வி ஆசிரியருக்கு இருந்துருக்கணும், ஆனா அந்த காலகட்டத்துல லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்காவோட ஏகாதிபத்தியத்தால நிறைய பாதிக்கப்பட்டதுனும், அப்படி பாதிச்சதால தான் வித்யாசமான கதைகள் எல்லாம் அமைஞ்சதுனும், மேற்கத்திய நாடுகள் இலக்கிய தரங்கள்ல சிறந்து விளங்கினதால அவங்களால அத புரிஞ்சுக்க முடிஞ்சுதுனும் சொன்னார். <br />
<br />
அரசுக்கு எதிரான, ஸ்தாபனங்களுக்கு எதிரான கதைகள கால்வினோ நேரடியா சொல்லாம மாற்று விஞ்ஞான முறை மூலமாகவும் விர்சுவல் பிக்சன் மூலமாகவும் வேற முறைகள்ல சொல்ல ஆரம்பிக்குறார். இத ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அவருடைய குரலா பதிவு செய்றார். அவர் எந்த மாதிரியான எழுத்தாளர், அவருடைய தேடல்கள் என்னவா இருந்துச்சுங்குற விவரங்கள் எல்லாமே சா. தேவதாசோட “கால்வினோ கதைகள், கட்டுரைகள், நேர்முகம்” புத்தகத்த படிச்சதுக்கு அப்புறம் தான் புரிய ஆரம்பிச்சதுனும், கால்வினோவோட இன்னும் நெருக்கமாக இந்த புத்தகம் உதவிச்சுன்னும் ஹச். முஜீப் ரஹ்மான் தெரிவிச்சார். <br />
<br />
அடுத்து “மரண தண்டனையின் இறுதி தருணங்கள்” பற்றி சிவசங்கர் எஸ்.ஜே பேச வந்தார். மனுசர் நிஜமாவே நிறைய சுவாரஸ்யங்களோட பேசினார். பாக்தாத் அழகி ஒருத்தியை காதலிக்குற மூணு பேர் பத்தின கதை சொன்னார். காதலனோட வேலை காதலிச்சுட்டே இருக்குறது தான். அத தவிர்த்து மாயாஜாலங்களை செய்பவன் காதலனாக முடியாதுன்னு சொன்னார். ஒரு மரண தண்டனை கைதி எப்படி தப்பிக்குறார், எப்படி வீட்டுக்கு போறார், கடைசி காட்சியில தூக்குல போடப்படுறார் அப்படிங்குற ஒரு குறும்படம் பத்தி சொல்லிட்டு, “மரண தண்டனையின் இறுதி தருணங்கள்” பற்றி பேச ஆரம்பிக்குறார். <br />
<br />
அந்த புத்தகத்துல பதினோரு கட்டுரைகள் இருக்குறதாவும் மரணத்தண்டனைக்கான சட்டத் திருத்தத்துக்கான அவசியம் பத்தியும் பேசினார். பேரறிவாளன், யாகூப் மேனன் பற்றி பேசி, மரணத் தண்டனையை எதிர்த்து முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய அவசியத்த எடுத்து சொன்னார். <br />
<br />
பிறப்பும், இறப்பும் யாராலயும் முன்பதிவு செய்யவே முடியாது. ஆனா தனியறைல அடைக்கப்பட்ட, மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒருவனின் மனநிலை என்னவாயிருக்கும்?. சிவசங்கர், ஒரு பத்து நிமிஷம் தனித்துவிடப்பட்ட தன்னோட சொந்த அனுபவத்த சொல்லி, அது எத்தனை கொடுமையானதுன்னு உணர வச்சார். மனிதன் ஒரு சமூக பிராணி, இந்த விலங்குக்குள்ள பல விலங்குகள் இருக்கும். இப்படியான மனுசன மறுபடியும் ஒரு விலங்கு நிலைக்கு கொண்டு போறது தான் மரணத்தண்டனை, ஆயுள் தண்டனைய விட மிக கொடுமையானது மரணத் தண்டனைனு விவரிச்சார். <br />
<br />
இன்னிக்கி இந்தியாவுல ஜாதி அடிப்படையான தண்டனைகள் தான் அதிகம்னும், கொடுக்கப்படுற தண்டனைகள்ல 94 சதவிதத்த தலித் மக்களும், பாட்டாளி மக்களும் தான் அனுபவிக்குறாங்கன்னு புள்ளி விவரங்கள் சொன்னார். <br />
<br />
இந்திய இறையாண்மைக்கு எதிரான விசயங்கள், பயங்கரவாத தாக்குதல், கூட்டு மனசாட்சின்னு மரண தண்டனைக்கு ஆதரவா பேசுறவங்க சொல்லலாம், ஆனா தண்டனைகள் குடுத்துட்டா மட்டும் குற்றங்கள் குறைஞ்சிடுமா? அப்படின்னு கேள்விகள் கேட்டுட்டு, இங்கிலாந்துல நூற்று அம்பது திருடர்கள பொதுவெளில தூக்குல போடுறப்ப, வேடிக்கை பாக்க வந்த மக்கள்கிட்டயே திருடின திருடர்கள் பத்தி சொல்லி, அதனால குற்றங்கள் தண்டனைகளால ஒரு போதும் குறைக்க முடியாதுன்னு சொன்னார். <br />
<br />
சா. தேவதாஸ் கடைசியா பேசினப்ப, கால்வினோவோட பள்ளி நாட்கள்ல முசோலினி சர்வாதிகாரியா இருந்ததாகவும் அவர கிண்டல் பண்ணி கால்வினோ ஒரு கவிதை எழுதினதாகவும், இளமை காலத்துல பாசிசத்துக்கு எதிரா தன் நண்பனோட சேர்ந்து இயங்கினதாவும் சொன்னார். மக்கள் மேல தனக்கிருந்த அக்கறையையும் நலனையும் வேறு கலைவடிவங்கள்ல சொல்ல முடியாத நிலைல எழுத்து மூலமா, புனைவுகள் மூலமா, இலக்கியம் மூலமா குடுத்ததால கால்வினோவ தனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொன்னார். <br />
<br />
அடுத்ததா, “மரண தண்டனையின் இறுதி தருணங்கள்” பத்தி பேசுறப்ப, ஒரு சட்டவாதி எடுக்க வேண்டிய ஒரு விசயத்த ஒரு இலக்கியவாதி ஏன் எடுக்கணும்னா ஒரு அரசியல் சார்ந்த பிரச்சனைய ஒரு இலக்கியவாதி கைல எடுக்குறப்ப அவங்களால அத வேற கோணத்துல அணுக முடியும்னு சொன்னார். <br />
<br />
தீவிரவாத செயல்கள எடுத்துகிட்டா கூட, பலம் உள்ளவங்க தப்பிச்சிடுவாங்க, அப்பாவிகளும், நேரடி சம்மந்தம் இல்லாதவங்களும் தான் பாதிக்கப்படுறாங்க. மனித உரிமை அடிப்படைல மரணத்தண்டனை என்பது இருக்க கூடாது. ஏன்னா, அது குற்றவாளிக்கு எந்த வித சந்தர்ப்பமும் தர்றது இல்ல. அவன ஒரு நல்ல மனுசனா மாறுறதுக்கு வாய்ப்பு குடுக்காம அரசு கொலை செய்து விடுது. மனித உரிமையை ஆதரிக்குற எல்லா நாடுகளும் மரண தண்டனைய எதிர்க்குது. இந்த நேரத்துல மரணதண்டனைய ஆதரிக்குறது சரியில்லங்குறது தான் ஒரு இலக்கியவாதியோட பார்வைன்னு சொல்லி உக்காந்தார். <br />
<br />
கூட்டம் முடிஞ்சதும் ஒவ்வொருத்தருகொருத்தர் அறிமுகம் பண்ணிகிட்டாங்க. பொன்னீலன் சார் எனக்கு நிறைய பேரை அறிமுகப்படுத்தி வச்சார். ஆனா முதல் சந்திப்புங்குறதால தலையசைச்சு சிரிக்க மட்டும் தான் என்னால முடிஞ்சுது. <br />
<br />
இந்த கூட்டத்துல வந்தவங்கள்ல மொத்தமே ரெண்டு பெண்கள் தான். ஒண்ணு நான். இப்ப தான் எட்டிப்பாக்கவே செய்துருக்கேன். இன்னொருத்தங்க உஷா தேவி. அவங்களும் இந்த கூட்டத்துக்கு இப்ப தான் முதல் தடவையா வந்துருக்காங்களாம். மலையாளத்துல மூணு புத்தகம், தமிழ்ல ரெண்டு புத்தகம் எழுதி முடிச்சாச்சு. அதுவும் அவரோட “பள்ளத்தில் இருக்கும் வீடு” சிறுகதை தொகுப்புக்கு கலை இலக்கிய பெருமன்றம், புதுகோட்டை சார்பா விருது கிடைச்சிருக்கு. <br />
<br />
மொத்தத்துல கூட்டம் கலைஞ்சு, கார்ல ஏறி வீட்டுக்கு வந்துட்டு இருந்தப்ப நிறைய பிரமிப்பு. இறை நம்பிக்கை, கூட்டம் பத்தின அலசல்ன்னு பேசி களைச்சு, பொன்னீலன் சார அவர் வீட்ல இறக்கி விட்டப்ப, “உனக்கு ஒரு புது உலகத்த அறிமுகப்படுத்தி இருக்கேன். அத நீ கூர்ந்து கவனிச்சுக்கோ. இதுல உனக்கு தேவையானத மட்டும் கிரகிச்சுட்டு, மத்தத சேமிப்புல வை”ன்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள போனார். <br />
<br />
அடுத்தடுத்து இன்னும் என்னோட பயணத்த தொடரணும்ன்னு முடிவு எடுத்துட்டு நானும் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். <br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-688800002866550740.post-16189582309259756542016-09-20T21:47:00.001+05:302016-11-24T12:51:21.844+05:30அடுத்து நேரப் போறது என்னன்னு தெரியாது <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<a href="http://4.bp.blogspot.com/-5QPHvUf349I/V-Fg7q0KvyI/AAAAAAAAC7Q/n-TCUJDtIHYOsqlcbby4HbvmhSGmsHaYwCK4B/s1600/girl-05.jpg" imageanchor="1"><img border="0" height="456" src="https://4.bp.blogspot.com/-5QPHvUf349I/V-Fg7q0KvyI/AAAAAAAAC7Q/n-TCUJDtIHYOsqlcbby4HbvmhSGmsHaYwCK4B/s640/girl-05.jpg" width="640" /></a></div>
நான் யூ.ஜி பண்ணினப்ப தான் அவங்கள பாத்தேன். கருப்பா, ஒல்லியா இருப்பாங்க. அவங்க நடை உடை பாவனைல ஒரு மிடுக்கு இருக்கும். அவங்க சேலை கட்டுற விதமே அத்தனை பிரமிப்பா இருக்கும். ஆங்கிலம் அவங்க நுனி நாக்குல விளையாடும்.<br /><br />அவங்கள பொருத்தவரைக்கும் பொண்ணுங்க நல்லா படிச்சா அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதோட அவங்களுக்கு இன்னும் நிறைய திறமைகள் இருந்தா சொல்லவே வேணாம், அவ்வளவு இஷ்டம். செமினார் க்ளாஸ் எடுக்குறதுல எனக்கு ரொம்ப இஷ்டம்ங்குறதால நான் எப்பவும் அவங்களுக்கு செல்லம். அடிக்கடி என்னை க்ளாஸ் எடுக்க சொல்லி அவங்க கவனிச்சுட்டு இருப்பாங்க. என் கூட இன்னொருத்தியும் உண்டு. நான், அவ, அவங்க மூணு பேரும் தான் மாத்தி மாத்தி க்ளாஸ் எடுத்துட்டு இருப்போம்.<br /><br />இப்படி இருக்குறப்ப ஒரு நாள் காலேஜ்ல இருந்து டூர் கூட்டிட்டு போனாங்க. போன இடத்துல நாங்க மூணு பேரும் தான் ஒரு ரூம்ல தங்க வேண்டிய சூழ்நிலை. அன்னிக்கி ராத்திரி மூணு பேருமே தூங்கல. விடிய விடிய மேடம் அவங்க கதைய சொல்லிட்டே இருந்தாங்க. நாங்க ரெண்டு பேரும் பிரமிப்போட அத கவனிச்சுகிட்டே இருந்தோம். இது நாள் வரைக்கும் வெறும் ஆசிரியையா இருந்த அவங்கள நாங்க தோழி ஆக்கிகிட்டது அன்னிக்கி தான்.<br /><br />அவங்க அப்பா ஒரு கவர்மென்ட் வெட்னரி டாக்டர். வேலைக்கு போன இடத்துல இவங்கள விட ரெண்டே வயசு பெரிய பெண் (பதினாறு வயசு)கிட்ட தப்பா நடந்து, அந்த பொண்ணு கர்ப்பம் ஆகி, ஊர்ல எல்லாரும் சேர்ந்து அவருக்கே அந்த பொண்ணை கட்டி வச்சுட்டாங்க. இவங்க அம்மாவுக்கு பைத்தியம்னு சொல்லி ரெண்டு வருஷம் ரூமுக்குள்ள அடச்சு வச்சு, ஒரு நாள் அவங்களும் செத்துப் போய்ட்டாங்க.<br /><br />மிரட்சியோட கேட்டுகிட்டு இருந்த எங்கள பாத்து அவங்க சொன்னாங்க, “ஊர்ல எல்லோருக்கும் எங்க அம்மாவ விச ஊசி போட்டு கொன்னது எங்க அப்பான்னு தெரியும். என்னையும் சாட்சி சொல்ல கூப்பிட்டாங்க. அம்மா செத்தப்ப எனக்கு பதினாறு வயசு. என் தங்கச்சிக்கு பத்து வயசு. அந்த நிலைமைல என் அப்பாவ நான் காட்டி குடுத்தா அவர் ஜெயிலுக்கு போய்டுவார், நாங்க ரெண்டுபேரும் யாருமே இல்லாத அநாதை ஆகியிருப்போம். ஊர்ல யாருமே உதவிக்கு வந்துருக்க மாட்டாங்க. அதனால எங்க அம்மா பைத்தியம் முத்தி தான் செத்து போனாங்கன்னு சாட்சி சொல்லிட்டேன்”னு அவங்க சொன்னதும் மனசு கனத்து போச்சு.<br /><br />அப்பாவ ஜெயிலுக்கு போகாம காப்பாத்தி விட்டாலும் அப்புறம் அவர் மேல இருந்த வன்மம் அவங்களுக்கு கூடி போச்சு. அப்பாவோட அத்தனை சொத்தையும் ஊர்காரங்க, சொந்தக்காரங்க சாட்சியா வச்சு தன்னோட பெயர்ல எழுதி வாங்கிகிட்டாங்க. இதனாலயே அவங்க ஒவ்வொரு பரீட்சை நேரத்துலயும் அவங்க அப்பா புக்ஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டு, சொத்தை எழுதி குடு, அப்போ தான் புக்ஸ் தருவேன்னு மிரட்டுவாராம். நல்லா படிக்குறவங்க, அதனாலயே படிக்காமலே பரீட்சை எழுத பழகிட்டாங்களாம்.<br /><br />விரும்பி ஒருத்தர் கல்யாணம் பண்ணிக்குறேன்னு பொண்ணு கேட்டு வந்தப்ப அவங்க எம்.எஸ்.சி படிச்சுட்டு இருந்துருக்காங்க. அவங்க படிப்புக்கு எந்த தடையும் வரக்கூடாதுன்னு கட்டளை போட்டுக்கிட்டு தான் கல்யாணமே பண்ணிகிட்டாங்களாம். கல்யாணத்துக்கு அடுத்த நாள் யூனிவர்சிட்டி எக்ஸாம். அதையும் போய் எழுதி இருக்காங்க. தங்கச்சிக்கு பதினெட்டு வயசு வந்ததும் அவங்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரிச்சு குடுத்து கல்யாணமும் முடிச்சு வச்சிட்டு அப்புறம் ஒரு பங்கை அப்போவோட ரெண்டாவது மனைவி மூலமா பிறந்த தம்பிக்கே திருப்பி குடுத்துட்டாங்க. <br /><br />“அன்னிக்கி நான் இப்படி ஒரு முடிவை எடுக்கலைனா நானும் என் தங்கச்சியும் சின்னாபின்னமாகி இருப்போம்”னு சொல்ற அவங்கள பாத்தா எங்களுக்கு நிஜமாவே மலைப்பா இருக்கும். ஒவ்வொரு மாசம் பீரியட்ஸ் நேரத்துல மரண அவஸ்த்தைப்படுவாங்க. பொண்ணுங்கனா இத விட எவ்வளவோ கஷ்டங்கள் உண்டு. இதெல்லாம் ஜுஜுபின்னு சொல்லுவாங்க. கிட்டத்தட்ட மனோ தைரியத்த அதிகமா நான் கத்துகிட்டது அவங்க கிட்ட தான்.<br /><br />திடீர்னு ஒரு நாள் வேற வேலைக்கு போறேன்னு சொன்னாங்க. அழுதுகிட்டே பிரியாவிடை குடுத்தோம். <br /><br />அப்புறம் அவங்கள பத்தி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டோம். திடீர்னு அவங்க மால்தீவ்ஸ்ல இருக்காங்கன்னு செய்தி வரும். அடுத்து இந்தோனேசியான்னு சொல்லுவாங்க. அப்புறம் ஒரு நாள் அவங்களுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சுன்னு சொன்னாங்க. என்னால அத ஜீரணிக்கவே முடியல. ஆனா செய்தி உண்மை தான்னு எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட பெண் ஒருத்தி சொன்னப்ப நொறுங்கி போனேன். <br /><br />எப்படி பட்ட பெண் அவங்க. கிட்டத்தட்ட அவங்க பாடம் எடுத்த எல்லோருக்குமே அவங்க தான் ரோல் மாடல். கல்யாணம் ஆகி, ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகி, குடும்பத்து பிரச்சனை அவங்கள எப்படி எல்லாம் புரட்டி போட்டுருக்கு.<br /><br />எனக்கு அவங்க கணவரையும் தெரியும். கிட்டத்தட்ட எனக்கும் அவருக்கும் ஒரே மாதிரியான ரசனை. நான் வீட்ல மீன் வளர்த்துட்டு இருந்தேன். ஒரு நாள் எதேச்சையா வீட்டுக்கு வந்த அவர் நான் மீன்கள பராமரிக்குற விதத்த பாத்துட்டு நானும் மீன் வளர்க்க போறேன்னு கிளம்பிட்டார். உனக்கும் என் வீட்டுக்காரருக்கும் வேற வேலையே இல்ல. மீன் வளர்க்குறேன்னு என் உயிரை வாங்குறார்னு என்கிட்ட சிரிச்சுகிட்டே சலிச்சுப்பாங்க மேடம். எப்பவும் வீட்டுக்காரர விட்டுக்குடுத்தது இல்ல, அவரும் அப்படியே தான். <br /><br />நம்ம சமுதாயத்துல தான் ஒரு ஆணும் பெண்ணும் நிம்மதியா இருக்க, காதலோட இருக்க அவங்க ரெண்டு பேர் மட்டும் சம்மந்தப்பட்டா போதாதே, குடும்பம், உற்றார், உறவினர்னு ஆளாளுக்கு சொல்ற மாதிரி தானே குடும்பம் நடத்த வேண்டியது இருக்கு. காதலிக்கவும் வேண்டியிருக்கு. <br /><br />ஆக, ஒரு காதல் முடிவுக்கு வந்துடுச்சு. அவங்களுக்கும் பைத்தியம் முத்தி போய்டுச்சு. ஒன்னரை வருஷம் முன்னாடி வரைக்கும் அவங்கள பத்தி அரைகுறையா கேள்விபட்டுட்டு இருந்தோம். அப்புறம் அவங்க என்ன ஆனாங்கன்னு எங்களுக்கு தெரியவே இல்ல. <br />.............<br /><br />இன்னிக்கி எங்க காலேஜ் பிரின்சிபால்கிட்ட ஒரு கையெழுத்து வாங்க அவங்க வீட்டுக்கு நானும் என்னோட சூப்பர் ஜூனியர் பொண்ணும் போயிருந்தோம். போயிட்டு திரும்பி வர்றப்ப தான் அவர பாத்தோம். மேடத்தோட அப்பா. கார விட்டு இறங்கி போய் பேசலாம்னு சொன்னா அவ. எனக்கோ அவர் மேல இருந்த வெறுப்பு துளியும் குறையல. வேண்டா வெறுப்பா காரை விட்டு இறங்கி முகத்தை வேற பக்கமா திருப்பிகிட்டு நின்னேன். <br /><br />அவ போய் பேசிட்டு இருந்தப்பவே அவர் என்கிட்ட வந்துட்டார். நீ இன்னாரோட பொண்ணு தானே, உங்க வீட்டு மாட்டுக்கு ஊசி எல்லாம் போட உங்க வீட்டுக்கு அடிக்கடி வருவேன்னு சொன்னார். வலிய வந்து பேசுறவர்கிட்ட பேசாம எப்படி போக? ஒப்புக்கு மேடம் நல்லா இருக்காங்களான்னு கேட்டேன். உடனே மளமளன்னு ஆரம்பிச்சுட்டார்.<br /><br />அவ கத உனக்கு தெரியுமாமா, அவளால நான் நிறைய கஷ்டப்பட்டுட்டேன்னு அவர் கண்ணு கலங்கி போச்சு. அத்தன வயசான மனுஷன், என்ன தான் அவர பத்தி தப்பா கேள்விப்பட்டுருந்தாலும் அவர் கண்கலங்கினத பாத்து மனசு பதறி போச்சு. மேடம் இப்ப எப்படி இருக்காங்க, எங்க இருக்காங்கன்னு கேட்டேன். <br /><br />“She is perfectly alright”னு தான் முதல் வார்த்தையே சொன்னார். மனநிலை ரொம்ப பாதிக்கப்பட்டு நட்டநடு ராத்திரியில ஊர்ல ஒரு கோடில இருந்து மறுகோடிக்கு அலறிகிட்டே ஓடுவாங்களாம். பாக்குற சுவர்ல எல்லாம் அவங்க பெயர் எழுதி முன்னால Dr னு போட்டு வைப்பாங்களாம். எத்தனையோ நாள் பக்கத்து போலிஸ் ஸ்டேசன்ல ராத்திரி நேரம் போய் கலாட்டா பண்ணி, நிறைய தடவ அரெஸ்ட் பண்ணி உள்ள வச்சிருக்காங்களாம். <br /><br />“நான் ஒரு ஆத்தீகன்மா. எனக்கு தெய்வ நம்பிக்கை எல்லாம் சுத்தமா கிடையாது. மனசாட்சிய மட்டும் நம்புறவன். ஆனா வாழ்க்கைல எல்லாத்தையும் இழந்துட்டு ஏதோ ஒரு வழி பிறந்துடாதான்னு ஏக்கத்துல இருந்தப்ப, பக்கத்து ஊரு பூசாரி என்னை வலுக்கட்டாயமா அவரோட கோவிலுக்கு இழுத்துட்டு போனார். உங்க பொண்ணு புத்திக்கு எதுவுமே இல்ல, செய்வினை கோளாறு தான். நான் சரி பண்றேன்னு சொல்லி கொஞ்சமா திருநீறு, குங்குமம் வச்சு சின்னதா பூஜை பண்ணினார். அன்னிக்கே அவ சென்னை போய்ட்டா. மறுபடி அவ திரும்பி வந்தப்ப அப்படியே மாறி இருந்தா. இன்னிக்கி அவ ஒரு காலேஜ்ல வேலை பாக்குறா. டிபார்ட்மென்ட் ஹச்.ஓ.டி அவ. காலேஜ் வைஸ்-ப்ரின்சிபால் கூட”ன்னு அவர் சொன்னதும் என் முகம் எல்லாம் மலர்ந்துடுச்சு. கூட இருந்தவள பாத்தேன், அவளும் அப்படியே ஒரு பரவச நிலைல தான் இருந்தா.<br /><br />எனக்கு இந்த செய்வினை, பூசாரி எதுவுமே காதுல விழல. எத்தனையோ வைத்தியங்கள் மத்தியில ஏதோ ஒரு வகைல அவங்க சரி ஆகிட்டாங்க. என்னோட மேடம் நல்லா இருக்காங்க. அது போதும். <br /><br />அவங்க பிள்ளைங்க எங்க இருக்காங்கன்னு இழுத்தேன். இதோ, பொண்ணு என் கிட்ட தான் சின்னதுல இருந்தே வளருறா. அப்படியே அவ அம்மா மாதிரி. புக் எடுத்து படிக்கவே மாட்டா, ஆனா மார்க் தொன்னுத்து எட்டுக்கு கீழ குறையாதுன்னு சொன்னப்ப அவர் முகத்துல அத்தன பெருமை. இதோ, இதான்மா எங்க வீடுன்னு சொல்லி, அந்த பொண்ணையும் கூப்பிட்டு எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். தாத்தா இடுப்பை கட்டிக்கிட்டு அந்த சின்னப் பொண்ணு சிரிச்ச சிரிப்புல ஒரு நிறைவு இருந்துச்சு. அவ தலைய அவர் வருடி விட்டதுல ஒரு ஆன்ம நெருக்கம் இருந்துச்சு. என்னோட அத்தனை தவறுகளுக்கும் பிராயசித்தமா இவள நான் வளர்த்துட்டு இருக்கேன்னு அவரே சொன்னார். <br /><br />அடியே செல்லமே, உனக்கு ஒரு லவ், உன் அம்மாவுக்கும் ஒரு லவ். <br /><br />மேடத்தோட நம்பர் குடுங்கன்னு கேட்டு வாங்கிட்டு வீட்டுக்கு வந்தோம். அவ இன்னும் என் மேல கோபமா தான் இருக்கா. நான் நம்பர் குடுத்தேன்னு சொல்லிடாதீங்கன்னு சொல்லி அனுப்பி வச்சார் அவர்.<br /><br />வீட்ல வந்து உக்காந்து யோசிச்சுகிட்டே இருக்கேன். அவங்களுக்கு கால் பண்ணலாமா வேணாமான்னு. இல்ல வேணாம். வாழ்க்கைல நானும் ஒரு நாள் ஜெய்ச்சுட்டு பெருமிதமா தான் அவங்க கிட்ட பேசணும். அப்ப தான் நான் அவங்க மாணவிங்குறது சரியா இருக்கும்.<br /><br />........................</div>
ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-688800002866550740.post-14179445678318712062016-08-29T22:19:00.002+05:302016-08-29T22:20:34.659+05:30விக்கி டோனார் (Vicky donor) - திரைவிமர்சனம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="http://1.bp.blogspot.com/-t27KQ4F4E-g/V8Rm8cyNmsI/AAAAAAAAC6o/oNCMLfEgQnIP5OCa1YmGaOMWeIi5WRnPQCK4B/s1600/vicky-donor-1a.jpg" imageanchor="1"><img border="0" height="480" src="https://1.bp.blogspot.com/-t27KQ4F4E-g/V8Rm8cyNmsI/AAAAAAAAC6o/oNCMLfEgQnIP5OCa1YmGaOMWeIi5WRnPQCK4B/s640/vicky-donor-1a.jpg" width="640" /></a><br /><br />படம்: விக்கி டோனார். ரொம்ப நாள் முன்னால இந்த படம் பாத்தேன். அப்பவே மனசுல ஒரு தாக்கத்த உண்டாக்கின படம். ஆனா ஏனோ அத பத்தி எழுதாம விட்டு போய்டுச்சு. <br /><br />வழக்கம் போலவே எனக்கு ஹீரோ பேரு, ஹீரோயின் பேரு எதுவும் தெரியாது. அதுவும் நன்மைக்கே. கதை மாந்தர்களா மட்டுமே அவங்கள என்னால பாக்க முடிஞ்சி, கதையோட ஒன்றி போக அதுவும் ஒரு காரணம். <br /><br />கதை ரொம்ப சிம்பிள். <br /><br />எந்த விதமான கமிட்ஸ்மென்ட்லயும் சிக்கிக்க விரும்பாத ஹீரோ. ஆர்ப்பாட்டமே இல்லாம அவன் காதலிக்குற பொண்ணு, அவனயும் தன்னோட வயசான மாமியாரையும் பராமரிக்குற அவனோட அம்மா, அல்ட்ரா மாடர்னா யோசிக்குற அவனோட பாட்டி. இவங்கள சுத்தி நடக்குறது தான் கதை. <br /><br />கதாநாயகன் விக்கி ஒரு கொடையாளி. அதனால அவனுக்கு கிடைக்குற பணம், அப்புறம் அதனால அவன் படுற கஷ்டம், அதுக்கு பிறகு அவன் நிலைமை என்னன்னு சொல்றது தான் படம். <br /><br />சரி, கதாநாயகன் என்ன கொடையாளினு சொல்லலயே, அவன் ஒரு ஸ்பேர்ம் அதான் விந்து கொடையாளி. <br /><br />படம் ஆரம்பிக்குறப்பவே டாக்டர் கிட்ட இன்னும் தன்னோட மனைவி ஏன் கற்பமாகலன்னு விவாதம் புரியுற கணவனை காட்டுறாங்க. ஒரு குழந்தை எப்படி உருவாகுதுன்னு டாக்டர் அவங்களுக்கு விளக்குற காட்சி எல்லோருக்கும் சேர்த்து தான். <br /><br />இந்த படத்துல மக்களோட பேராசையையும் கூட சொல்லி இருக்காங்க. சச்சின் போல பையன் வேணும், ஐஸ்வர்யா போல பொண்ணு வேணும்னு இன்னைய காலக் கட்டத்துல குழந்தை பெத்துக்குரத கூட கமேர்சியல் ஆக்கிடுறாங்க. <br /><br />தான் ஒரு டைவேர்சி, முதல் ராத்திரியே வீட்டை விட்டு வந்துட்டேன்னு சொல்ற ஹீரோயின் ஆய்ஸ்மா கிட்ட விக்கி சொல்ற பதில் எனக்கு பிடிச்சிருந்துச்சு. அவனுக்கு அவ யாரா, எப்படி இருந்தாலும் பரவால, சிங்கிளா இருந்தாலும் ஓகே, டபுளா இருந்தாலும் ஓகே, டைவேர்ஸ் ஆகியிருந்தாலும் ஓகே. “உன்னை பாத்த நிமிசத்துல இருந்து நீ இல்லாம வாழ முடியாதுன்னு தோணிச்சு. நீ எப்படி இருந்தாலும் ஓகே. உன்னை பாக்கும் போதெல்லாம் உன்னோட புன்னகைக்கு நான் பொறுப்பா இருக்கணும்னு தோணிச்சு. நீ என் கூட இல்லாத பொழுதுகள் நகரவே இல்ல”ன்னு அவன் சொல்ற இடம் சூப்பர். <br /><br />நான் இந்த படத்துல ரொம்ப ரசிச்சது ரெண்டு வித்யாசமான இனங்களோட பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், பிடிவாதங்கள். ஹீரோ பஞ்சாபி, ஹீரோயின் பெங்காலி. ஒருத்தங்கள பத்தி இன்னொருத்தங்க வச்சிருக்குற கருத்துகள், எண்ணங்கள், எல்லாம் தாண்டி எப்படி ரெண்டு குடும்பமும் ஒண்ணா இணையுதுன்னு சொல்ற இடங்கள் எல்லாமே நான் ரொம்ப ரசிச்சேன். அதுவும் அந்த கல்யாண சீன்ஸ் அசத்தல். <br /><br />ஒரு பஞ்சாபி பையன எல்லாம் மருமகனா என்னால ஏத்துக்க முடியாதுன்னு காச் மூச்ன்னு கத்துற அப்பாகிட்ட கூலா பக்கத்துல வந்து “அவன எப்போ மீட் பண்ண போறீங்க”ன்னு ஆய்ஸ்மா கேக்குறது அசத்தல். அது கண்டிப்பா ஒரு டிப்பிகல் அப்பாவையும் மகளையும் நம்ம கண்ணு முன்னால நிறுத்திடும். அவ அப்படி கேட்டதும் பக் பக்னு வாயடைக்குறவர் தான், அடுத்த சீன் ஒபென்னிங் ஹீரோ வீட்ல எல்லாரும் காப்பி குடிக்குற சீன் தான். டைரக்டர் டச். அடுத்து பெரிய சண்டை நடக்கும்னு நினைக்குற நம்ம எதிர்பார்ப்புல பூச்சாண்டி காட்டிடுறார். <br /><br />பிடிச்ச, ரசிச்ச டயலாக்ஸ்னு பாத்தா, நிறைய இருக்கு. ஆனாலும் “அடுத்தவங்களுக்கு விந்து குடுக்குறது, யாருனே தெரியாத குழந்தைங்களுக்கெல்லாம் அப்பா ஆகுறது எல்லாம் நம்ம கலாச்சாரத்துல ஒத்துக்க முடியுமா நீங்களே சொல்லுங்க”ன்னு விக்கியோட அம்மா, அவன் பாட்டி கிட்ட கேக்குறப்ப, “அதெல்லாம் என்னால சொல்ல முடியல, ஆனா ஒரே ஒரு விஷயம் சொல்ல முடியும். குழந்தை இல்லாத எத்தனையோ பேருக்கு இன்னிக்கி குழந்தை இருக்குதுனா அதுக்கு காரணம் விக்கி”ன்னு அவங்க சொல்ற இடம் சூப்பர். <br /><br />இன்னொரு இடம், தன்கிட்ட தான் ஒரு ஸ்பேர்ம் டோனர்னு ஏன் சொல்லலன்னு கோவிச்சுட்டு போற ஆய்ஸ்மாவ பாத்து அவ அப்பா கேள்வி கேக்குற இடம். “இப்ப பிரச்சனை அவன் உன்கிட்ட இத மறைச்சான்ங்குறதா, இல்ல நீ அம்மா ஆக முடியல, அவன் அப்பா ஆகிட்டான்ங்குறதா?ன்னு கேட்டு அவள அப்படியே நிலைகுலைய வைக்குறார். <br /><br />அதே மாதிரி மாமியாருக்கும் மருமகளுக்கும் உள்ள அந்த கெமிஸ்ட்ரி. அல்ட்ரா மாடனா யோசிக்குற மாமியார், மாமியாருக்காகவும் மகனுக்காகவும் மாடா உழைக்குற மருமகள். ரெண்டு பேரும் சேர்ந்து உக்காந்து தண்ணியடிச்சுட்டு பேசுற இடம் எல்லாமே அவங்க ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்குற ஒட்டுதல காட்டுது. இதுவே தமிழ் படங்கள்ல காட்டியிருந்தா என்னாகியிருக்கும்ங்குற யூகத்த உங்ககிட்டயே விட்டுடுறேன். <br /><br />உங்கம்மா குடிப்பாங்களான்னு கேக்குற ஆய்ஸ்மாகிட்ட, “அப்பாவோட மரணத்துக்கு பிறகு, அவங்க ரொம்ப தனிமைல வாடினாங்க. அவங்க ஸ்ட்ரெஸ் போக ஒண்ணோ ரெண்டோ பெக் அடிச்சு பழகிட்டாங்க”ன்னு சொல்ற இடமாகட்டும், “கல்யாணம் ஆகி நீ ஒரு தடவ கூட செக்ஸ் வச்சுக்கலையா”ன்னு ஆய்ஸ்மாகிட்ட ஆச்சர்யமா கேக்குற இடமாகட்டும், ஆய்ஸ்மாவுக்கு குழந்தையே பிறக்காதுன்னு தெரிஞ்சதும் அவன் காட்டுற முகபாவமாகட்டும், விக்கி தான் எப்பவும் கூல்ங்குறத நிரூபிச்சுகிட்டே இருப்பான். அதே மாதிரி கல்யாணத்துக்கு முன்னாடி விக்கிய எதிர்க்குற ஆய்ஸ்மாவோட அப்பா, அப்புறம் மருமகனுக்கு காட்டுற சப்போர்ட் அசத்தல். <br /><br />இந்த விந்து கொடை அளிக்குறது எல்லாமே அறிவியல் சார்ந்த விஷயம், அதுல தப்பே இல்லன்னு புரிய வைக்க எடுக்கப்பட்ட படம். அதுல பலவிதமான கருத்துக்கள். இது ஹிந்தி படம்ங்குறதாலயோ என்னவோ, இதுல விந்து வேணும்னு கேட்டு வர்ற எல்லாம் ஜோடிகளுமே ரொம்ப தைரியமா கிளினிக் வராங்க. அதுலயும் பெண்கள் முகங்கள்ல ஒரு நிமிர்ந்த பார்வை, தெளிந்த கண்ணோட்டம் தெரியுது. எனக்கு விந்து தேவை, இத விந்து வங்கில வாங்கிக்குறதுல தப்பேயில்ல அப்படிங்குற சரியான கண்ணோட்டத்த இந்த படத்துல அவங்க நடத்தைகள் மூலமாவே டைரக்டர் காட்டிடுறார். <br /><br />டாக்டர் கிளினிக்ல குழந்தைகளோட கூடியிருக்குற ஐம்பத்தி மூணு குடும்பங்களையும் பாத்து “அவங்க எல்லாரும் சந்தோசமா இருக்காங்க, அவங்களோட குடும்பம் குழந்தைகளோட முழுமையா இருக்கு, ஆனா எனக்கு ஏன் அப்படி ஒரு முழுமை இல்ல”ன்னு ஆயிஸ்மா சோகத்தோட ஒரு கேள்வி கேக்குறா. “இதோ நீ கேக்குற இதே கேள்விய தான் இங்க கூடி இருந்த எல்லாருமே ஒரு காலத்துல கேட்டாங்க. இதே உணர்வு தான் அவங்களுக்கும் இருந்துச்சு. ஆனா விக்கி அவங்க வாழ்க்கைல வந்த பிறகு அவங்க வாழ்க்கையே சந்தோசமா மாறிடுச்சு. ஏன்னா இந்த குழந்தைகள் எல்லாம் விக்கியோட விந்துல இருந்து உருவாக்கப்பட்டவை”ன்னு டாக்டர் சொன்னப்ப விக்கியும் ஆய்ஸ்மாவும் காட்டுற உணர்ச்சி, கண்ணீர் எல்லாம் நமக்கும் தொத்திக்குது. நாலு வருசத்துல அம்பத்து மூணு குழந்தைங்க. அடேங்கப்பா.... <br /><br />இந்த படத்தோட க்ளைமாக்ஸ் அப்படி இருந்துருக்கலாம், இப்படி இருந்துருக்கலாம்னு நானா பல யூகங்கள யோசிச்சுட்டே இருந்தேன். ஆனா நாம நினைச்ச கிளைமாக்ஸ் எல்லாம் படத்துல வைக்க முடியாதுல, சரி விடுங்க, டைரக்டர் வச்ச க்ளைமாக்ஸ்கே ஓகே சொல்லிடுவோம். ஆனாலும் ஆய்ஸ்மாவுக்கு குழந்தை பிறக்காதுங்குறதால ஒரு வாடகை தாய் மூலமா குழந்தை பெத்துகிட்டதா முடிச்சி இருந்துருக்கலாம். ஏன்னா, ஆய்ஸ்மாவோட கருக்குழாய்கள்ல தான் அடைப்பு இருக்கும். அவளால ஒரு ஆரோக்கியமான கரு முட்டையை உருவாக்க முடியுமே. இப்படி ஒரு க்ளைமாக்ஸ் வச்சிருந்தா, விந்து கொடை, வாடகை தாய் ரெண்டையும் ஆதரிச்ச மாதிரி இருந்துருக்கும். <br /><br />ரொம்ப நாள் முன்னால தமிழ்ல வாடகை தாய் பத்தி ஒரு படம் வந்ததா ஒரு நியாபகம். ஆனா அது என்ன படம்னு பெயர் நியாபகத்துல இல்ல. கடைசியில புருசன விட்டுட்டு அந்த குழந்தையோட அவ போறதா படம் முடியும். நம்மோட லெவல் எல்லாம் இவ்வளவு தான் யோசிக்க முடியுது. புருசன காப்பாத்த பணம் வேணும். அதுக்காக வேற வழியே இல்லாம ஒரு குழந்தைய வயித்துல சுமக்குறா. ஆனா முடிவு, யார காப்பாத்த அவ அத செய்வாளோ அவனே அவள ஏத்துக்க மாட்டான். இதயே ஒரு பாசிட்டிவ் முடிவா குடுத்துருந்தா எவ்வளவு நல்லா இருந்துருக்கும்? “விக்கி டோனார்” அப்படி ஒரு பாசிட்டிவான படம். <div>
<br /></div>
<div>
<a href="http://2.bp.blogspot.com/-it_kVo9S6kE/V8RnNR1a-DI/AAAAAAAAC6w/Sa0x46AvLWwDQ2xGU3jWyLv9FXSxoLhbACK4B/s1600/Untitled-1%2Bcopy.jpg" imageanchor="1"><img border="0" height="236" src="https://2.bp.blogspot.com/-it_kVo9S6kE/V8RnNR1a-DI/AAAAAAAAC6w/Sa0x46AvLWwDQ2xGU3jWyLv9FXSxoLhbACK4B/s640/Untitled-1%2Bcopy.jpg" width="640" /></a></div>
</div>
ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-688800002866550740.post-7987504764626143842016-08-28T12:37:00.000+05:302016-08-28T12:37:46.656+05:30பொது கழிப்பறை - public toilet <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-1I7YtR7vbfA/V8KKrMnOqLI/AAAAAAAAC6U/3N401wPT8SYhvNAaZZlJbyP-pHDc5mjZgCK4B/s1600/google-village.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="432" src="https://3.bp.blogspot.com/-1I7YtR7vbfA/V8KKrMnOqLI/AAAAAAAAC6U/3N401wPT8SYhvNAaZZlJbyP-pHDc5mjZgCK4B/s640/google-village.jpg" width="640" /></a></div>
<br />
<br />
<br />
ஒரு வருஷம் ஆகிப் போச்சு <a href="http://gayathrid.blogspot.com/2015/08/blog-post.html" target="_blank">நாப்கின்</a> பத்தி நான் எழுதி. கிட்டத்தட்ட நிறைய பேர் கிட்ட இருந்து நிறைய பாசிட்டிவ் கருத்துகள், விமர்சனங்கள். இப்போ ரெண்டுமூணு நாளா மறுபடியும் அத ஷேர் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. எல்லாம் மார்க்கோட “ஆன் திஸ் டே” மார்க்கத்தால தான். தேங்க்ஸ் டு மார்க். <br />
<br />
இது பத்தி எழுதணும் எழுதணும்னு நானும் ஒரு வாரமா நினச்சுட்டு தான் இருக்கேன், ஆனா இருக்குற சோம்பேறித்தனம் எழுத விடுறதே இல்ல. ஆனா பாருங்க, நேத்து விகடன்ல வந்த நியூஸ் இன்னிக்கி என் கண்ணுல பட்டுச்சு “மாணவர்களே கட்டிய கழிப்பறை – மலைக்க வைத்த மனித நேயம்”ங்குற தலைப்புல. <br />
<br />
இதுக்கு முன்னாடியே ப்ரெண்ட்ஸ் சில பேரு பேசிட்டு இருக்குறப்ப இந்த பப்ளிக் டாய்லட் பத்தி கொஞ்சம் எழுதேன்னு கேட்டாங்க. இந்த கழிப்பறை பத்தி எல்லாம் எனக்கு பேச தகுதி இருக்கா இல்லையான்னு சரியா தெரியல, ஏன்னா அதிகமா நான் வீட்டை விட்டு வெளில போறதே இல்ல. அதோட, பொது இடங்கள்ல இருக்குற கழிப்பறைகள் எல்லாம் பயன்படுத்தினதே இல்ல, ஒரு ரெண்டு மூணு சம்பவங்கள் தவிர்த்து.<br />
<br />
எனக்கு தெரிஞ்சி முதலாவது சம்பவம் ஒரு பஸ்ஸ்டாண்ட்ல வச்சு நடந்துச்சு. கூட வந்த ப்ரெண்ட்ஸ் எல்லாம் அவசரம்னு போனாங்களேன்னு நானும் போனேன். பக்கத்துலயே போக முடியல, அவ்வளவு நாத்தம். மூக்க புடிச்சுட்டு உவ்வேன்னு எட்டிப் பாக்காமலே ஓடி வந்துட்டேன். கண்டிப்பா எட்டிப்பாத்துருந்தா அலங்கோலம் தான். இதுல பப்ளிக் டாய்லெட்ல சில வாசகங்களும் போன் நம்பர்களும் வேற மூஞ்ச சுளிக்குற மாதிரி இருக்குமாம். <br />
<br />
அடுத்ததா மென்சஸ் பிரச்சனை வந்தப்ப அதுக்காக ஸ்கேன் பண்ண போயிருந்தோம். இந்த ஸ்கேன் உடம்புல வேற எந்த பகுதினாலும் ஈசியா எடுத்துரலாம், ஆனா இந்த வயித்துல, அதுவும் கர்ப்பப்பைல எடுக்குறது எல்லாம் கர்ண கொடூரம். வயிறு முட்ட தண்ணி குடிச்சிருக்கணும். அதுவும் கர்ப்பப்பை முழுக்க தண்ணி நிரம்பி நிக்கலனா ரிபோர்ட் ஒழுங்கா வராது. கஷ்டப்பட்டு எப்படியோ ஸ்கேன் எடுக்க ஒத்துழைச்சு வெளில வந்தா, ஒரு அடி கூட நகர முடியாது. அப்படியே அங்கயே பாத்ரூம் போய்ட்டா என்னன்னு தோணும். அட, அங்கேயாவது பாத்ரூம் எல்லாம் சுகாதாரமா இருக்குமான்னு பாத்தா அதுவும் கிடையாது. <br />
<br />
அதுக்காக நான் ஸ்கேன் செண்டர்கள குறை சொல்றேன்னு அர்த்தம் கிடையாது. எனக்கு நேர்ந்த அனுபவம் வேற. ஸ்கேன் செண்டர் மாடியில. பாத்ரூம் கீழ இருந்துச்சு. அதுவும் கொஞ்ச தூரம் ஒரு சந்துக்குள்ள வேற போகணும். பாத்ரூம் எல்லாம் போகாம அப்படியே வீட்ல போய் பாத்துக்கலாமான்னு யோசிக்க கூட முடியல, காரணம் அவ்வளவு அவஸ்த்தை. சரின்னு தத்தி தாவி பாத்ரூம் போய், கதவ தொறந்தா, உவேக்... அப்படியே மூத்திர வாடை.<br />
<br />
வேற வழியே இல்லன்னு உள்ள மெல்ல எட்டிப்பாத்தா, யாரோ ஆய் போயிட்டு அரைகுறையா தண்ணி விட்டுட்டு அப்படியே போயிருக்காங்க. உள்ள கால் கூட எடுத்து வைக்க முடியாத நிலைமை. ஆனா அங்கயே தண்ணி, விளக்குமாறு எல்லாம் இருந்துச்சு. பாத்து பதமா கால் எடுத்து வச்சு, முதல்ல தண்ணிய பாத்து பாத்து விட்டு, அப்புறம் விளக்குமாறு எடுத்து லேசா கழுவி விட்டு, எல்லாம் கிளீன்ன்னு ஆனதுக்கு அப்புறம் தான் என்னால நிம்மதியா பாத்ரூமே போக முடிஞ்சுது.<br />
<br />
இதுல இருந்து நான் சொல்ல வர்ற விஷயம் என்னன்னா, சில பொது கழிப்பறைகள், பள்ளிகள்ல தண்ணி வசதியே இருக்காது. இங்க தாராளமா தண்ணி வசதி இருந்தும் உள்ள காலடி எடுத்து வைக்க முடியல. அட, நாம போன ஆய நாமளே கழுவக் கூடாதாக்கும். நமக்கு காரியம் முடிஞ்சுதா, ரைட்டு, அடுத்தவன் எப்படி போனா நமக்கென்னங்குற மனோபாவம். எனக்கு அன்னிக்கி விளக்குமாறு எடுத்து கழுவி விட ஒரு நிமிஷம் கூட ஆகி இருக்காது. சுத்தம் ஆகிடுச்சு. இப்படியே கிடக்கட்டும் ஒண்ணுக்கு தானே போகணும்னு நினச்சு நானும் அப்படியே மூக்க புடிச்சு போயிட்டு வந்துருந்தா இன்னும் நாறி இருக்கும். அதுக்காக எல்லாரும் பப்ளிக் டாய்லெட்ட கழுவுங்கன்னு நான் சொல்லல. நீங்க போனா, தண்ணி வசதி எல்லாம் இருந்தா, சுத்தமா கழுவி விட்டுட்டு வாங்கன்னு தான் சொல்றேன்.<br />
<br />
அப்புறம், நான் எல்லாரையும் மொத்தமா எல்லாம் குறை சொல்லல. நிறைய பேருக்கு இந்த சமூக அக்கறை இருக்கத் தான் செய்யுது. ஏன், நான் போன பாத்ரூம்ல எனக்கு முன்னால பாத்ரூம் போயிட்டு வந்த ஆணுக்கு கூட அந்த சமூக அக்கறை இருந்துருக்கு. அதனால தான் அவர் ஆய் போயிட்டு தண்ணி விட்டுட்டு போயிருக்கார். ஆனா அவருக்கு எப்படி தண்ணி விடணும்னு தெரியல. ஒரு பக்கெட் தண்ணியையும் அப்படியே அது மேல வேகமா விட்டு எல்லாத்தையும் சிதறடிச்சுட்டு போயிருக்கார். பாத்ரூம் நாறிடுச்சு.<br />
<br />
நான் பிறந்து வளர்ந்தது, இருக்குறது எல்லாமே கிராமம் தான். அப்போ எல்லாம் டாய்லெட்ங்குற வார்த்தையே யாருக்கும் தெரியாது, அப்புறம் எங்க டாய்லெட்ல போக? எல்லாம் திறந்தவெளி புல்கலைக்கழகம் தான். வீட்ல சொல்லிட்டு போகணும்னா “அம்மா நான் பூமிக்கு உரம் போடப் போறேன்”ன்னு சொல்லிட்டு போக வேண்டியது தான்.<br />
<br />
அப்படி தான் ஒருநாளு வீட்ல சொல்லிட்டு வாழைத் தோப்புக்குள்ள ஒதுங்கி இருந்தேன். ஏழு எட்டு வயசுல கை துறுதுறுப்பு சும்மா இருக்காதே. ஒரு குச்சிய எடுத்து பக்கத்துல இருந்த கரையான் புற்றை நோண்டிகிட்டு இருந்தேன். திடீர்னு உள்ள இருந்து ஒண்ணு சீறிக்கிட்டு வந்துச்சு பாருங்க.... அரண்டு, மெரண்டு அங்க இருந்து ஓட்டம் புடிச்சவ தான், அப்புறம் கொஞ்ச நாள் அம்மா முந்தானைய புடிச்சுகிட்டே தான் எங்கயும் வெளில போறது.<br />
<br />
அதுக்கப்புறம் அந்த ஜந்துவ தோட்டத்துல அரசல்புரசலா பாத்து அப்பப்ப ஹாய் சொல்லி இருந்தாலும், ஆய் போகணும்னா எங்க ஆயா துணை வேணும். இதுனால எங்க அம்மாவுக்கும் பாட்டிக்கும் என்னால ஏகப்பட்ட டார்ச்சர். ஆக, ஒரு பாம்பினால் எங்க வீட்ல பாத்ரூம் கட்டியே ஆகணும்னு நிலைமை உருவாகிச்சு. <br />
<br />
அப்பா கொஞ்சம் யோசிச்சு, ரெண்டு பாத்ரூம் கட்டலாம்னும், ஒண்ணு வீட்டுக்கு உள்ளேயும், இன்னொன்னு வெளியேயும்னு முடிவு பண்ணினார். ரெண்டு பாத்ரூம் இருந்தாலும் எல்லாரும் பொதுவா ஒரே பாத்ரூம தான் யூஸ் பண்றது. இதுல கொஞ்ச நாள் எனக்கு வித்யாசம் தெரியல. ஏன்னா நான் எழுந்து வர எப்படியும் காலைல எட்டு மணி ஆகிடும். அம்மா அதுக்குள்ள பாத்ரூம் எல்லாம் நல்லா கிளீன் பண்ணி போட்ருவா. <br />
<br />
அப்போ நான் அஞ்சாவது படிச்சுட்டு இருந்தேன்னு நினைக்குறேன். திடீர்னு ஒருநாள் சீக்கிரமே எழுந்து பாத்ரூம் போன நான் அலற ஆரம்பிச்சுட்டேன். அவ்வளவு அசிங்கம். எல்லா இடமும் சிதறி கிடக்கு. “யார் போனா, வந்து கிளீன் பண்ண சொல்லுங்க”ன்னு அலறல். சத்தம் கேட்டு எட்டிப் பாத்த அப்பா, “நான் தான் போனேன், நல்லா தண்ணி விட்டுட்டு தான் வந்தேன், அலறாத”ன்னு சொல்ல, அப்ப தான் இவங்க எல்லாம் எப்படி தண்ணி விடுறாங்கன்னு புரிஞ்சுகிட்டேன். <br />
<br />
அப்புறமா அப்பாவ தனியா வெளி பாத்ரூம் துரத்தி விட்டது எல்லாம் தனி கதை. தம்பிய தனியா கூப்ட்டு, பாத்ரூம் எப்படி யூஸ் பண்ணனும், எப்படி சிதறாம தண்ணி விடணும்னு டியூசன் எடுத்தது எல்லாம் தனியோ தனிக்கதை. ஆக, இத நான் ஏன் சொல்ல வர்றேன்னா, பாத்ரூம் எப்படி யூஸ் பண்றதுன்னு கூட தெரியாமலே இன்னமும் சிலபேர் இருக்கத் தான் செய்றாங்க. நாம என்ன பண்றோம்னு எல்லாரும் ஒரு தடவ யோசிச்சுப் பாத்துக்குறது நல்லது. <br />
<br />
ரொம்ப சமீபத்துல என்னோட ப்ரென்ட் ஒருத்தி தன்னோட பையன பக்கத்துல இருக்குற அரசாங்க பள்ளியில சேர்த்துருக்குறதா சொன்னா. அஞ்சு வயசு ஆகிடுச்சு, இன்னமும் வாயத்தொறந்து பேசல. இங்க சேர்த்தா நல்லா இருக்கும்னு சொன்னாங்க, சேர்த்தேன், இப்ப பரவால, ரெண்டு மூணு வார்த்தை பேசுறான். முன்னாடி ரொம்ப சேட்டை பண்ணுவான், இப்ப பொறுப்பா அவனே பல்லு விளக்குறான்ன்னு அவ பெருமையா சொன்னா. ஆனாலும் உற்றாரும் உறவினரும் இப்படி ஒரு ஸ்கூல்லயா சேர்ப்பன்னு தினமும் கேட்டு ரொம்ப டார்ச்சர் பண்றாங்களாம். நமக்கு தான் அடுத்தவங்க என்ன பண்றாங்க, ஏது பண்றாங்கன்னு பாத்து, அதுல ஆயிரம் நொரநாட்டியம் சொல்றது தான் அல்வா சாப்டுற மாதிரி ஆச்சே. <br />
<br />
சரி, இப்ப இந்த டாபிக் கீழ, இந்த விஷயம் ஏன் வந்துச்சுன்னு சொல்றேன். அவ அந்த ஸ்கூல அவ்வளவு சிலாகிச்சு சொன்னாலும், வருத்தப்படுற ஒரு விஷயம் ஒண்ணு இருக்கு. அது தான் அங்க இருக்குற டாய்லெட். பக்கத்துல போனாலே நாறுது. பையனால அங்க நிம்மதியா போக முடியல. பலநாள் உக்காந்த இடத்துலயே பயந்து போயிடுறான். இல்லனா அடக்கி வச்சுட்டு வீட்ல வந்து அவஸ்த்தப்படுறான்னு சொன்னா. <br />
<br />
“இதுக்கெல்லாம் என்ன தான் வழி”ன்னு கேட்டேன். இப்ப நாங்களே பாத்ரூம் கிளீன் பண்ண தேவையான சாதனம் எல்லாம் வாங்கி குடுத்து, அத கழுவி விடவும் ஒரு ஆள் வைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம். பையன் இப்ப பேச ஆரம்பிச்சுட்டான். அவன் நடவடிக்கைகளும் மரியாதையா மாறி இருக்கு. இந்த பாத்ரூம்க்காக அத எல்லாம் இழக்க நாங்க தயாரா இல்லன்னு சொன்னா. அதோட, மத்த பிள்ளைங்களும் நிம்மதியா பாத்ரூம் போவாங்களேன்னு அவ சொன்னப்ப நிஜமாவே பெருமையா இருந்துச்சு. அவ நினைச்சிருந்தா மத்தவங்க பேச்சை கேட்டுட்டு ஒரு ஹை-டெக் ஸ்கூல்ல கொண்டு போய் சேர்த்துருக்க முடியும். ஆனா அவ பையனுக்காக ஒரு ஸ்கூல் சூழ்நிலையையே மாத்தி இருக்கா. <br />
<br />
இப்ப நான் காலைல படிச்ச நியூஸ்சுக்கு வர்றேன். தன்னோட நண்பனுக்காக நாகப்பட்டினத்துல மாணவர்களால ஒரு கழிப்பறைய கட்ட முடிஞ்சுச்சுனா, தன்னோட மகனுக்காக ஒருத்தி ஸ்கூல் பாத்ரூம்ம கிளீன் பண்ற பொறுப்ப எடுத்துருக்கானா, நம்மால முடிஞ்ச அளவு நாம ஏன் பண்ண முடியாது? அட, அட்லீஸ்ட் நாம போற பொது கழிப்பறையையாவது கொஞ்சம் சுத்தமா வச்சுக்க முடியாதா? <br />
<br />
இன்னும் நிறைய எழுதலாம் தான். ஆனா அதெல்லாம் இன்னொரு நாள் பாத்துக்கலாம். இன்னமும் ஒதுங்க ஒரு கழிப்பறை இல்லாம ஆத்தங்கரை, குளத்தங்கரை, ரோட்டு பக்கம்னு ஒதுங்குற ஜனங்க எவ்வளவோ பேர் இருக்காங்க. கிராமம் தாண்டி நகரம்னு வந்தா அவசரத்துக்கு ஒதுங்க மண்ணு கூட கிடையாது. முதல்ல கிளீன் இந்தியான்னு சொல்ற நம்ம அரசாங்கம் ஸ்டெப்ஸ் எடுக்குதோ இல்லையோ, நாம ஏதாவது ஸ்டெப்ஸ் எடுக்கலாம். இதுக்கு என்னென்ன பண்ணலாம்னு ஆக்கபூர்வமா நாம யோசிக்க ஆரம்பிச்சாலே அடுத்தகட்ட செயல்முறை சுலபமா இருக்கும். </div>
ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-688800002866550740.post-34255578469674265452016-08-25T23:27:00.000+05:302016-08-25T23:31:35.213+05:30வெறும் முத்தமென்று நினைத்தாயா? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-Gnq2cAAtkxA/V78wVB7o3oI/AAAAAAAAC6E/oAY0oBWlO9AJrcRr685t3ADqZwGv3FbrACK4B/s1600/tumblr_mihz5rYkl31roc1mro1_250.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="199" src="https://2.bp.blogspot.com/-Gnq2cAAtkxA/V78wVB7o3oI/AAAAAAAAC6E/oAY0oBWlO9AJrcRr685t3ADqZwGv3FbrACK4B/s320/tumblr_mihz5rYkl31roc1mro1_250.gif" width="320" /></a></div>
<br />
<br /><br /><br /><div>
அதை வெறும் முத்தமென்று நினைத்தாயா? <br /><br />என் கோபம், வெறுப்பு,<br />ஆற்றாமை அத்தனையையும்<br />கூர்முனை கொண்டு குத்தி கிழித்து விட்டது...<br /><br />உன் முத்தம் ஒவ்வொன்றாய் என்னை <br />சேர்ந்த பொழுது நான்<br />சில்லு சில்லாய் உடைந்து கொண்டிருந்தேன்...<br /><br />முத்தமிட்டு நீ அப்பால் சென்றதும்<br />ஓ-வென நான் வெடித்து சிதறியதை<br />நீ அறிவாயா?<br /><br />என் உணர்வுகள் கட்டப்பட்டுள்ளன...<br /><br />என் கண்கள் பொய்யாய் மலர <br />கற்றுக் கொண்டுள்ளன...<br /><br />உன் முன் எவ்வகை உணர்வை <br />காண்பிப்பதென்ற எந்த தெளிவையும்<br />எடுக்க முடியாதவளாய் நான்<br />சித்தம் கலங்கி நிற்கின்றேன்...<br /><br />உன்னிடம் கேட்பதற்கோ என்னிடம்<br />ஏராளமாய் கேள்விகள்<br />கொட்டிக் கிடக்கின்றன...<br /><br />கண்சிவந்து கோபப்பார்வை பார்த்து <br />நான் அவற்றையெல்லாம் உன்<br />கண்பார்த்து கேட்க வேண்டும்...<br /><br />ரவுத்திரம் கொண்டு உன்னை <br />அடித்து தாக்கும் ஆத்திரமெனக்கு...<br /><br />இருந்தும் என்ன பயன்? <br /><br />என் கண்ணீரின் காரணகர்த்தாவாகிய <br />நீ தான் இந்த முத்தங்களையும் இட்டு சென்றாய்...<br /><br />உன் மேல் நான் கோபமாய் இருக்கிறேன்...<br /><br />உன் தலை மயிர் பற்றி <br />உன்னை ஆவேசமாய் பிடித்து தள்ள வேண்டும்...<br /><br />என் கோபங்கள் அத்தனையும் சேர்த்து<br />உன்னோடு மல்லுகட்ட வேண்டும்...<br /><br />ஆவி சேர அணைத்து உன்னை <br />முத்தத்தாலயே சாகடிக்க வேண்டும்...<br /><br />எத்தகைய கொடுங்கோலன் நீ? <br /><br />செய்வதெல்லாம் செய்து விட்டு <br />ஒரே ஒரு முத்தத்தால்<br />மொத்தமாய் என்னை வீழ்த்தி<br />மீண்டுமென்னை பேதையாக்கி விடுகிறாய்...<br /><br />இருக்கட்டும்... <br /><br />இந்த முத்தங்களின் போதை தெளியட்டும்... <br /><br />நான் கோபமாய் வருகிறேன்,<br />இரு கைகள் கொண்டு கன்னம் பொத்தி <div>
உன்னை மீண்டும் சந்திக்க....</div>
</div>
</div>
ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.com6