Monday 13 June 2016

நான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு - கபாலிடா....




நேத்து, கபாலி பாட்டு லிங்க் டவுன்லோட் பண்ற லிங்க் கிடச்சுது.

ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப். கபாலி பாட்டுக்கு போறதுக்கு முன்னாடி நான் என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லிடுறேன்.

எப்படி நமக்கு புத்தகங்களோ எழுத்தாளர்களோ அறிமுகம் கிடையாதோ அப்படி தான் பாடல்களும், கவிஞர்களும் இசையமைப்பாளர்களும் அறிமுகம் கிடையாது. எனக்கு தெரிஞ்ச மியூசிக் டைரக்டர்ஸ்னா அது இளையராஜாவும் ஏ.ஆர்.ரகுமானும் தான். போட்டோவ பாத்த உடனே கண்டுபிடிச்சிடுவேன். மத்தப்படி இதெது இவங்க பாட்டுன்னு எல்லாம் ஒண்ணும் தெரியாது. எப்பவாவது காதுக்கு கேக்குற மாதிரி இருந்தா மட்டும் பாட்டு கேப்பேன். மத்தப்படி இசை உலகத்துக்கும் எனக்கும் சம்மந்தமே இல்ல.

இதெல்லாம் நீங்க நம்பித் தான் ஆகணும். வேணும்னா என்னோட போஸ்ட்ல ஏதாவது இசைய பத்தி எழுதி இருக்கேனான்னு பாத்துக்கோங்க. பாகுபலில வர்ற ஹோனனா ஹோனனா பாட்டு பத்தி எழுதினப்ப கூட தமனா தமனான்னு புலம்பி இருப்பேன்.

சரி, இப்ப விசயத்துக்கு வருவோம். கபாலி பாட்டு லிங்க் கிடைச்சுதா, திடீர்னு ஒரு ஆசை. எல்லாரும் கபாலி கபாலின்னு சொல்றாங்களே, நாமளும் அத பத்தி தெரிஞ்சுக்காம இருந்தா தெய்வ குத்தம் ஆகிடுமோ, எதுக்கும் டவுன்லோட் பண்ணி கேட்ருவோம்னு முடிவு பண்ணினேன்.

முதல் பாட்டு “நெருப்புடா”. ஏற்கனவே பேஸ்புக்ல எல்லாரும் நெருப்புடா நெருப்புடான்னு சொல்லி சொல்லியே உசுப்பேத்தி வச்சிருந்தாங்களா, சரிதான்னு டவுன்லோட் ஆனதும் ப்ளே பண்ணினேன்.

ஆத்தீ, ஆரம்பிச்சதே சைரன் சத்தத்துல சொய்ங் சொய்ங்ன்னு தான். ரெண்டு கையும் அப்படியே ரெண்டு காதையும் பொத்த போய்டுச்சு. நான் தான் சரி மேற்கொண்டு கேட்ருவமேன்னு என் கைய கண்ட்ரோல் பண்ணிகிட்டேன்.

அப்புறம் “நெருப்புடா”ன்னு குரலை கேட்டதும் நிமிர்ந்து உக்காந்து, “நெருங்குடா, முடியுமா”ன்னு கேட்டப்ப ஆங், அதான, யார்கிட்டன்னு ஒரு மிதப்பு வர ஆரம்பிச்சிடுச்சு.

அப்புறம் பாத்தா ஒரே இரைச்சல் சத்தம். சரி சரி, கண்ட்ரோல் பண்ணிப்போம், அடுத்து பெருசா வரப்போகுதுன்னு ரொம்ப எதிர்பார்ப்போட காது வலியையும் மீறி ஆவலோட கேட்டுட்டு இருந்தேன்.

டக்குன்னு “பயமா, ஹஹஹஹா”ன்னு ரஜினி குரலை கேட்டதும் தான் தாமதம், ச்சே என்னா கம்பீரம் அந்த குரல்ல. ரஜினி எப்பவும் ரஜினி தான். அந்த “ஹஹஹஹா” சத்தத்த கேட்ட உடனே கண்முன்னால ரஜினி அப்படியே கோர்ட் சூட் போட்டுட்டு, பாக்கட்ல கை விட்டுட்டு கம்பீரமா சிரிக்க ஆரம்பிச்சுட்டார். பாக்க கண் கோடி வேணுமையா...

ரஜினி சொல்லி முடிச்சதும் “நெருப்புடா, நெருங்குடா, பாப்போம். நெருங்குனா பொசுங்குற கூட்டம். அடிக்குற அழிக்குற எண்ணம், முடியுமா நடக்குமா இன்னும்” ன்னு சொல்றப்ப கேக்க நல்லா தான் இருக்கு. ஆனா என்னமோ பாடுறவர் ரொம்ப முக்குறது மாதிரி எனக்கு ஒரு ஃபீல். ஆனாலும் பரவால, ரஜினிக்காக மன்னிச்சு விட்டுடலாம்.

அடுத்து, “அடங்குனா அடங்குர ஆளா நீ.... இழுத்ததும் பிரியுற நூலா நீ... தடையெல்லாம் மதிக்குற ஆளா நீ... விடியல விரும்பிடும் காவாலீஈஈஈஈஈ” ன்னு இழுக்குரப்ப லைன்ஸ் எல்லாம் நல்லா தான் இருக்கு, ஒரு ரெண்டு தடவ ரிப்பீட்ல போட்டதும் பிடிச்சு போச்சு. அப்புறம், அதென்ன காவாலி சண்டைக்கு எல்லாம் வந்துடாதீங்க, என் காதுல இப்படி தான் விழுந்துச்சு, அவ்வ்வ்வ்.....

உஸ்ஸ்ஸ்ஸ்ஷப்பா..... நான் டயர்ட் ஆகிட்டேன். அதனால அடுத்து என்னன்னு எல்லாம் சொல்ல முடியாதுன்னு அப்படியே தலைய தலையணைல புதைச்ச நேரம் “நான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு. இருபத்தி அஞ்சு வருசத்துக்கு முன்னால எப்படி போனானோ கபாலி அப்டியே திரும்பி வந்துட்டான்னு சொல்லு....கபாலிடா” ஹப்பா, குரலா அது, சிங்கத்தோட கர்ஜனை. டக்குன்னு தலைய நிமிர்த்த வச்சது நம்ம ரஜினி தான்ப்பா. போதும், இதுக்கு மேல அந்த பாட்டைக் கேக்க கூடாதுன்னு நிறுத்திட்டேன்.

ஆனா ஒன்னு, என்ன தான் முக்கி முக்கி பாடி இருந்தாலும், எனக்கு பயந்து பயந்து வந்தாலும் ஒரு நாலஞ்சு தடவ பாட்ட கேட்டுட்டேன்னா தெளிஞ்சிடுவேன். அப்புறம் நானும் காவாலீஈஈஈஈஈ சே சே இல்லல “காபாலீஈஈஈஈஈ”ன்னு பாடிட்டே தான் இருக்கப் போறேன்.

அதுக்கு முன்னால அடுத்த பாட்ட கேக்கணுமேன்னு “மாய நதி” டவுன்லோட் பண்ணினேன். அது ஒரு மெலோடி சாங்க்னு புரிஞ்சுது. சரி, சரி எப்படியும் நாலஞ்சு தடவ ரிப்பீட்ல பிடிச்சு போகும்னு தோணிடுச்சு. அதனால நெக்ஸ்ட்டுன்னு “உலகம் ஒருவனுக்கா”வ தேடிப் போனேன். அடுத்து “வானம் பார்த்தேன்”. அப்புறம் அதென்ன பாட்டு, “வீரத் துறந்தரா”வா? (அப்படி தான் மை லார்ட் காதுக்குள்ள கேக்குது) அய்யயோ வேணாம். இதுக்கு மேல கேட்டோம் ராத்திரி வர்ற கொஞ்ச நஞ்ச தூக்கமும் போய்டும்னு கபால்ன்னு விண்டாஸ் மீடியா ப்ளேயர ஆப் பண்ணிட்டேன். ரஜினி படத்துக்கு இந்த பாட்டு செட் ஆகுமா ஆகாதான்னு இப்பவே என் மண்டை குடைய ஆரம்பிச்சிடுச்சு.

ஆங்.... அப்புறம் என்னன்னு தானே கேக்குறீங்க?

எனக்கு பிடிச்சதெல்லாம் “ரஜினி ரஜினி ரஜினி”. அதனால அவர் போட்டோவ கூகிள்ல இருந்து சுட்டு இங்க வைக்கறதுல பெருமைப்படுறேன். அட, அட, அட, என்னா தோரணை, என்னா கம்பீரம், என்னா சிரிப்பு.....

மத்தப்படி,

“நான் ஓடிட்டேன்னு சொல்லு, திரும்பி வர மாட்டேன்னு சொல்லு. எந்த நேரம் வீரத் துறந்தரா கேட்டாளோ காயு அப்டியே திரும்பி ஓடிட்டான்னு சொல்லு....காஆஆஆயூடா”


.

3 comments:

  1. நெருப்புடா பாடல் மட்டும் ஒருதடவை கேட்டேன்.
    மற்ற பாடல்கள் சுத்தம்.

    படத்தோடு பார்த்தால் ஒருவேலை பிடிக்கலாம் போல அக்கா!



    ReplyDelete
  2. ualakam oruvanaka, maaya nadhi megavum arumai. cowon jet player la ketu paruga song lyrics um ketkavm nala irukum.

    ReplyDelete
  3. இன்னும் கேட்கவில்லை .

    ReplyDelete