Wednesday 8 January 2014

மழை நியாபகங்கள்...


சோ............ன்னு மழை பெஞ்சுட்டு இருக்கு. குடை இல்லாம போனா ஜில்லுன்னு மழைல நனையலாம். ஆனா காலைல மழைல நனைஞ்சா ஜல்ப்பு புடிக்கும். அதனால ஒரு குடை எடுத்துட்டு வாங்க.

ரொம்ப குளிர தான் செய்யுது, ஆனாலும் கிடு கிடுன்னு பல்லெல்லாம் தந்தியடிக்குறது கூட சொகமா தான் இருக்கும். அப்படியே தெருவுல இறங்கி நடக்கலாம்.

அட, அங்க பாருங்க, ஒரு கோழி, வெடவெடன்னு நனைஞ்சு போய் பொம்ம மாதிரி நடந்து போகுது. காக்கா எல்லாம் இருந்த இடம் தெரியல.... அட, இந்த அணில் எல்லாம் கூட இன்னும் வெளில வரல போல, பின்ன, நேத்து சாயங்காலம் ஆரம்பிச்ச மழையாச்சே.

சரி, சரி, பக்கத்துல ஒரு டீ கடை இருக்கு. யாருக்கெல்லாம் டீ வேணும்? யாருக்கு காப்பி? பஜ்ஜி, வடை? எல்லாருக்கும் கிடைக்கும். தேவைபட்டத வாங்கி சாப்பிடுங்க.

அப்படியே, எனக்கு ஒரு குட் மார்னிங் பார்சல்....

குட் மார்னிங்….

இந்த மழை, இன்னிக்கி முழுக்க இப்படியே பெஞ்சுகிட்டு இருக்க கூடாதான்னு தோணுது. அப்போ கொஞ்சமாவது நிலத்தடி நீர் உயரும்ல... மரங்கள் எல்லாம் அதோட பெரிய பெரிய வேர் வச்சு, நீர மண்ணுல தங்கியிருக்க ஹெல்ப் பண்ணும்.

காலைல ஜன்னல் வழியா எட்டிப்பாத்தேன், தென்னை மரத்துல ஒரு வெள்ளரி கொடி படர்ந்து போயிருக்கு. எப்படி அவ்வளவு உயரமா படர்ந்துதுன்னு தெரியல. நிறைய மஞ்சள் பூக்கள் பூத்திருக்கு. ஒரு வெள்ளரி காய் கூட உயரத்துல காய்ச்சி தொங்குது. இத இத்தன நாள் பாக்காம போயிருக்கேனே...

ம்ம்ம்ம் அப்புறம், இந்த மழைய பாத்த உடனே சின்ன வயசு மழை நியாபகங்கள் எல்லாம் மனசுல அப்படியே ரீவைண்ட் ஆகுது. வாங்க, நீங்களும் அப்படியே என்கூட வந்து நாங்க பண்ணுன சேட்டைகள பாருங்க.
............................................................................................................

அப்போ எனக்கு அஞ்சு வயசு இருக்கும். மழைன்னா ரொம்ப பிடிக்கும். ரொம்ப மழை பெஞ்சா வீட்டு மாடியில இருந்து ஒரு மடை வழியா தண்ணி அருவி மாதிரி கீழ விழும். அதுல போய் நின்னு குளிக்கணும்ன்னு ரொம்ப ஆசைப்படுவேன். அம்மாவுக்கும் மழை பிடிக்கும் தான், ஆனாலும் வீட்டுக்கு வெளில போய் எப்படி நனையுறதுன்னு அமைதியா இருப்பாங்க.

ஆனா நான் விடுவேனா, கண்டிப்பா மழைல நனஞ்ச்சே ஆகணும்ன்னு அடம் பிடிச்சு, அதுவும் அம்மாவும் வரணும்ன்னு அடம்புடிச்சு கூட்டிட்டு போவேன். மழைல குடை புடிச்சுட்டே என்னை குளிப்பாட்டுவாங்க அம்மா. அதோட விட்டாலாவது வரவால, நான் குளிச்சு முடிச்சதும், அம்மா கைல இருந்து குடைய பிடுங்கி எடுத்துடுவேன். பின்ன, நான் மழைல நனைஞ்சுடுவேன்ல...
..............................................................................................................................

அப்புறம், குட்டியா எனக்குன்னு ஒரு குடை உண்டு. அத எடுத்துட்டு ஓடுற தண்ணியில கப்பல் விட கிளம்பிடுவோம் நாங்க. நாங்கன்னா, நான், தம்பி, அப்புறம் அந்த தெரு பசங்க எல்லாரும். வீட்ல பெரியவங்க யாரும் வெளில விட மாட்டாங்க. அதனால அப்பவே பின்வாசல் வழியா போய் எல்லாரையும் கூட்டிட்டு வந்துடுவோம். கப்பல் தம்பி தான் நல்லா செய்வான். அதனால அவன மோட்டார் ரூம்ல உக்கார வச்சு நிறைய கப்பல் செய்ய சொல்லுவோம். கப்பல் செய்ய பேப்பர் கிடைக்கலன்னு ஒரு தடவ அப்பா கணக்கு எழுதி வச்சிருந்த நோட் தூக்கிட்டு வந்து கப்பல் விட்டுட்டோம். அப்பா கணக்கு எல்லாம் கப்பலா போச்சு. அப்புறம் நோட்ட காணோம் நோட்ட காணோம்ன்னு தேடுனப்போ நான் முழிச்ச முழில அம்மா கண்டுபுடிச்சுட்டாங்க. அப்பா இருந்த டென்சனுக்கு ஒருவேளை என்னை அடி பின்னிருவாங்களோன்னு பயந்து அப்பா கிட்ட நீங்க எங்க கொண்டு போய் தொலைச்சீங்க? இவ்வளவு பெரிய மனுசனா இருந்துட்டு ஒரு பொருள பத்திரமா வைக்க தெரியலயேன்னு அப்பா மேல பாய ஆரம்பிச்சுட்டாங்க. அப்பா பயந்து அம்மாவ சமாதான படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. ஹஹா நானும் தம்பியும் எஸ்கேப்.

(அப்புறம் அன்னிக்கி சாயங்காலமே கிழிச்சு குதறப்பட்ட கணக்கு நோட் மோட்டார் ரூம்ல வெறும் அட்டையா கண்டெடுக்கப்பட்டது தனி கதை, அப்போ கூட பிள்ளைங்க கைக்கு எட்டுற மாதிரியா வைப்பீங்கன்னு அப்பாவும் அப்பா தான் நல்லா வாங்கிகட்டிகிட்டார். ஹை, ஜாலி ஜாலி...)

-ஆனா எனக்கு ஒரு வருத்தம், ஒரு ரூபா நோட்டு கட்டு கூட கைல மாட்டல, இல்லனா, நாங்களும் அப்பவே பச்சை கிளிகள் தோளோடு-ன்னு பாட்டு எல்லாம் பாடியிருப்போம்.
....................................................................................................................

மழைன்னு வந்தாலே இங்க செம்மண் காடு எல்லாம் சேறும் சகதியுமா இருக்கும். தோப்புக்குள்ள செருப்பு போட்டுட்டு கூட நடக்க முடியாது. நானும் தம்பியும், அப்போ தான் புதுசா வாங்கி தந்த செருப்ப எடுத்து மாட்டிகிட்டு கிளம்பிடுவோம். அங்க போய் சேறு அதிகமா இருக்குற இடத்துல போய் யார் கால் அதிகமா உள்ள போகுதுன்னு கால உள்ள விட்டு விளையாடுவோம். செருப்பு உள்ள மாட்டிகிட்டு, ஒத்த கால் செருப்ப மட்டும் நல்லா கழுவி கொண்டு வந்து ஷூ ரேக்-ல வச்சிடுவோம். ஆனா, ஒண்ணு, அம்மா கண்டுபிடிக்குறதுக்கு முன்னாடியே ஈர ஷூவுல இருந்து தண்ணி வழிஞ்ச இடத்துல ஓடி வந்து கால் வச்சு, பின்னந்தல படார்ன்னு தரைல மோதி விழுந்து அழுதா அம்மா கண்டுபிடிச்சிருவாங்கன்னு அப்பவும் ஒரு தடவ கெத்தா எழுந்து போனேன் அவ்வ்வ்வ்வ்வ். ஆனா அடுத்த தடவ அதே மாதிரி விழுந்தப்போ தாங்க முடியாம வீல்ன்னு அழுது, என்னை சமாதானம் பண்ற விசயத்துல செருப்பு விஷயம் வீட்ல தூசியா போச்சு...
......................................................................................

இன்னும் இருக்கு, ஆனா எல்லாம் இப்பவே சொல்லிட்டா எப்படி?


இன்னொரு நாள் பாப்போம். இப்போ காலேஜுக்கு லேட் ஆச்சு. நான் கிளம்புறேன். மழை ரசிச்சுட்டே போக போறேன். டாட்டா...




.

Monday 6 January 2014

தேவதை கதைகள்... (1)


அதிகமா, வழவழன்னு பேசாம, நான் உங்களுக்கு ஒரு கதை சொல்ல போறேன்... வாங்க, படிக்கலாம்.

(அதுக்கு முன்னாடி ஒரு முன்குறிப்பு: இந்த கதைய ஏற்கனவே பேஸ் புக்ல படிச்சுட்டேன்னு சொல்றவங்க, இருந்து முழுசா படிச்சுட்டு போங்கன்னு கேட்டுக்குறேன், முக்கியமா நம்ம கோவை ஆவி அண்ணாகிட்ட)

அது ஒரு அழகான ரோஜா தோட்டம். ரோஜானாலே அழகு தானேங்க, அப்புறம், தனியா வேற அத டிஸ்க்ரைப் பண்ணனுமா?

ஆனாலும், ஒரு பக்கம், வெள்ளை ரோஜா, அதுக்கு அடுத்து மஞ்சள் ரோஜா, அப்புறம் சிகப்பு ரோஜா, ஹை..... பாருங்களேன், அந்த பிங்க் கலர் ரோசஸ் எவ்வளவு அழகுன்னுன்னு. வாங்க, பக்கத்துல போவோம்.

ஷ்..... அதுல ஒரு பட்டர்ப்ளை தேன் குடிக்குது பாருங்க. நாம டிஸ்டர்ப் பண்ண கூடாது, இங்க இருந்தே கொஞ்சம் க்ளோஸ்ல ஜூம் பண்ணுவோம். அட, என்ன ஆச்சர்யம், இது ஒரு fairy-ங்க... அதாங்க, நம்ம தேவதை கதைகள்ல வர்ற குட்டி தேவதை.

அதோட சிறகுகள பாத்தீங்களா, வானவில் வண்ணத்துல பட்டு மாதிரி கண்ணாடி மாதிரி கூட இருக்கு. அத சுத்தி ஒரு மத்தாப்பு பொறி பறந்துட்டு இருக்கு பாருங்க. கைல ஒரு குட்டி மந்திர கோல், அத வச்சி தான் இந்த உலகத்தோட சந்தோஷ கதவுகள திறந்து விடுதுன்னு நினைக்குறேன்.

ஒரு கைய இடுப்புல வச்சுட்டு, இன்னொரு கைல மந்திரக்கோல் வச்சுட்டு அந்த ரெண்டு சிறகையும் படபடன்னு அடிச்சுட்டே ஒரு பூவுல இருந்து இன்னொரு பூவுக்கு பறந்து போகுது.

அது போட்டுருக்குற ரோஸ் கலர் ஏஞ்சல் டிரஸ் பாருங்களேன், அதுல வைரம் பதிச்சா மாதிரி எப்படி மின்னுது பாருங்க... ஹைய்யோ, பாத்துட்டே இருக்கலாம் போல இருக்குல....

சரி, சரி, அது பறக்குற அழக பாத்துட்டே இருக்காதீங்க, இதோ இங்க நான் உங்க பட்டர்ப்ளை உங்களுக்கு குட் மார்னிங் சொல்றேன். நீங்களும் குட் மார்னிங் சொல்லுங்க...

குட் மார்னிங் சொல்லிட்டீங்கல, இனி கதைய கண்டிநியூ பண்ணலாம். வாங்க, இன்னும் கொஞ்சம் பக்கத்துல போய் பாக்கலாம்.

இப்போ நம்ம குட்டி தேவதை ஒரு ஒரு வெள்ளை ரோஜா பூவுல போய் ரெஸ்ட் எடுக்குது. ஹைய்யோ, அதென்ன, குட்டி தேவதை இறுமுது?

பாவம், நம்ம குட்டி தேவதைக்கு உடம்பு சரியில்ல. எதனால உடம்பு சரியில்ல, நமக்கெல்லாம் சந்தோசத்த அள்ளிக் குடுக்குற இந்த தேவதை ஏன் திடீர்னு சோர்ந்து போச்சு?

இப்போ எனக்கும் இருமல் வருது. லொக்.... லொக்.... ம்ம்மக்க்க்கும்..... கொஞ்சம் திரும்பி பாக்கலாம்.


ஹே.... ஹே... யாரு அது சிகரட் பிடிக்குறது?

ஏங்க, நீங்க பிடிக்குற சிகரட், உங்களுக்கு கெடுதல்ன்னு தெரிஞ்சே பிடிக்குறீங்கன்னு வச்சுப்போம், அது ஏங்க மத்தவங்களையும் டிஸ்டர்ப் பண்றீங்க... பாருங்க, உங்களால இந்த உலகத்து சந்தோசம் கொஞ்ச கொஞ்சமா அடங்கி போறத...

நீங்க பிடிக்குற சிகரட் உங்களுக்கு மட்டும் தீங்கு இல்லீங்க, உங்கள சுத்தி இருக்குற எல்லாருக்கும் தான் தீங்கு செய்யுது.

இந்த உலகத்தோட சந்தோசம் மட்டுமில்லீங்க, உங்க சொந்த குடும்பத்தோட சந்தோசமும் தான் அழிஞ்சி போகுது. எப்படின்னு புரியலயா?

பின்ன, சிகரட் பிடிச்சி உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா, உங்க குடும்பத்துல உள்ளவங்க ஈஈ-ன்னு சிரிச்சுட்டா இருப்பாங்க.

பாருங்களேன், உங்க வீட்டு குட்டி தேவதை உங்கள நோக்கி ஓடி வருது....

இப்போ என்ன பண்ண போறீங்க, நீங்களே முடிவு எடுத்துக்கோங்க...

நான் சுத்தமான காத்து அடிக்குற இடத்துக்கு குட்டி தேவதையோட போகணும்ன்னு நினைக்குறேன். அதுக்கு நான் மட்டும் நினச்சா பத்தாது, நீங்களும் நினைக்கணும்...


வழி விடுறீங்களா?

.

Thursday 2 January 2014

எங்க வீட்டு சக்தி...


ஜில்லுன்னு மார்கழி குளிர். காலைல எழவே நேரம் இல்ல. அப்படியே போர்வைக்குள்ள சுருண்டு படுத்துக்கலாம் போல இருந்துச்சு.

ஆனாலும் நேத்து ராத்திரி தூங்க வச்ச அணில்குட்டிய எழுப்பி ஆகாரம் குடுக்கணுமே... அவ்வ்வ்வ், இந்த நினைப்பு வந்த உடனே அடிச்சு புடிச்சு எழும்பி உக்காந்தாச்சு.

என்னது, அணில் குட்டியா, அத எல்லாம் நாம வளக்க கூடாது, அதோட, அத நம்மளால சரியா வளக்க முடியாதுன்னு சொல்றீங்களா? எனக்கும் அதே கவலை தான்...

ஆனாலும், நேத்து நியூ இயர், காலைல கீச் கீச்ன்னு ஒரு குட்டி சத்தம். அதுவும், வீடு மாறி வந்ததுல பொருள் எல்லாம் கன்னா பின்னான்னு போட்டு வச்சிருக்குற ரூம்ல இருந்து. என்னடா இதுன்னு போய் பாத்தா, பாவம் ஒரு குட்டி அணில் பிள்ளை சத்தம் போட்டுட்டு அதோட கூட்டுக்குள்ள சுருண்டு போய் இருக்கு.

அத அப்படியே விட்ருக்கலாம் தான், ஆனா ரெண்டு நாள் முன்னாடி தான் ஒரு அணில் எங்க வீட்டு ஹால்ல துடிதுடிச்சு செத்து போச்சு. ஒருவேளை இது அந்த அணிலோட குட்டியா இருந்தா? இருந்தா என்ன, அதே குட்டிதான்னு முடிவுக்கு வந்த உடனே ஒரு பரபரப்பு தொத்திகிச்சு.

பாவம், அது அம்மா இறந்து ரெண்டு நாள் ஆகிடுச்சு, அப்போ ரெண்டு நாளா அது பசியோட எதுவுமே சாப்டாம தானே இருந்துருக்கும். அப்போதைக்கு கொஞ்சம் பசும்பால் எடுத்து ஒரு தட்டுல விட்டு அது முன்னாடி வச்சு பாத்தா, அது கடகடன்னு கொஞ்சம் பால குடிச்சுது.

அச்சோ செல்லம், எவ்வளவு பசில இருந்துருக்குன்னு நினைச்சுகிட்டே அடுத்து என்ன செய்யலாம்ன்னு யோசிச்சோம். என்ன, வழக்கமா மாடில கொண்டு வச்சுடலாம், ஏதாவது அணில் வந்து தூக்கிட்டு போகும்னு முடிவு எடுத்தோம்.

அந்த முடிவு படி, தம்பி அத தூக்கிட்டு மாடி போயிருக்கான். இது அப்படியே அவன் கை மேல ஏறிகிச்சாம். ரொம்ப ட்ரை பண்ணி அது அம்மா கட்டி குடுத்த கூட்டுக்குள்ள விட பாத்ருக்கான். நோ யூஸ்.... அப்புறம் என்ன நினைச்சானோ, என் கிட்ட கொண்டு வந்து தந்துட்டான்.

எனக்கும் அத வளக்கலாமேன்னு ஒரு ஆச. நேத்துல இருந்து அது என் கிட்ட ரொம்ப ஒட்டிசிச்சு. மடியிலயே படுத்துக்குது. அப்புறம் கொஞ்ச நேரத்துல மறுபடியும் குடுகுடுன்னு ஊர்ந்துட்டே இருக்கு. இருக்குற எல்லா வேலையும் அப்படியே போட்டுட்டு அத மட்டும் தான் தனியா கவனிச்சுட்டு இருந்தேன்.

அப்புறம், ராத்திரி அத தூங்க வைக்குறதுக்குள்ள அவ்வளவு கஷ்டமா போச்சு. என்கிட்டயே தூங்க வச்சா ராத்திரி எப்படியும் அது காலின்னு தெரியும். தெரிஞ்சே அத காலி பண்ண முடியுமா? அதான் ரொம்ப கஷ்டப்பட்டு அதோட அம்மா செய்த கூட்டுக்குள்ள தூங்க வைக்க ட்ரை பண்ணினேன். ம்ஹும்... அது கேக்கவே இல்ல. அப்புறம் அத அது உள்ள விட்டு, மேல ஒரு பெட்ஷீட் எடுத்து போர்த்தி விட்டுட்டேன்.

அவ்வ்வ்வ், அது மேல இல்லங்க, அதோட கூடு வச்சிருந்த பெட்டி மேல. கொஞ்ச நேரம் மேல வர ட்ரை பண்ணிட்டு, முடியாம அதோட கூட்டுக்குள்ள போய் படுத்துசிச்சு. நானும் நிம்மதியா தூங்கிட்டேன்.

அப்புறம் காலைல அதுக்கு பால் குடுக்கணுமேன்னு மெதுவா போர்வைய விலக்கிட்டு மெதுவா எட்டி பாத்தா பக்கி கடிக்க வருது, அவ்வ்வ்வ்... அப்புறம், செல்லம் செல்லம்ன்னு சமாதானம் பண்ணினா யார் கிட்ட? கொஞ்ச நேரம் சீறிட்டு அப்புறமா தான் அதுவே யோசிச்சிருக்கும் போல, ஓடி வந்து கைல ஏறிடுச்சு.

நான் கூட ரொம்ப யோசிக்காம, தட்டுல பால விட்டு குடிக்க குடுத்தேன். அது குடிச்சதும், இனி கைல வச்சிருந்தா விடாதுன்னு டக்குன்னு அதோட கூட்டுக்குள்ள விட்டு மறுபடியும் போர்வையால மூடியாச்சு. ரொம்ப சமத்தா தூங்க போய்டுச்சு.

அவ்வளவு தாங்க, இப்போதைய நிலவரம். அடுத்து அது என்ன செய்யும்ன்னு அடுத்து பால் குடுக்கும் போது தான் தெரியும். அதனால, நானும் இப்போதைக்கு என்னோட வேலைய பாக்க போறேன்.

அச்சச்சோ, அதுக்கு பெயர் வச்ச விசயத்த சொல்ல மறந்துட்டேனே...

நான் பாட்டுக்கு எப்.பில குட் மார்னிங் ஸ்டேடஸ் போட்ருந்தேனா, அதுல நம்ம தமிழ்வாசி பிரகாஷ் அண்ணா வந்து அதுக்கு என்ன பெயர்ன்னு கேட்டார். அப்போ தான் பெயர் வைக்காத விசயமே உறைச்சது.

அதுமட்டுமில்லைங்க, பெயர் வைக்குற பொதுகுழுவ கூட்டலாம்ன்னா பொது குழு மெம்பர் நேத்து முழுக்க பிசி. அதனால தான் பொதுகுழு கூட்டி பெயர் வைக்க முடியாம போச்சு. அப்புறம் காலைலயே பொதுகுழுவ கூட்டி, இந்த அணில் பிள்ளை ஆணா பெண்ணான்னு தெரியாததால பொதுப்பெயரா “சக்தி” ன்னு பெயர் வைக்கலாம்ன்னு முடிவு பண்ணியாச்சு.

அதுக்குள்ள நம்ம பேஸ்புக் போராளிகள் எல்லாம் பொங்கிட்டங்க வேற பேர் வைங்கன்னு...

ஆனா நான் முடிவு பண்ணிட்டேன், வச்ச பேர் வச்சது தான்னு.

பெயர் சூட்டு விழா, அடுத்து கொஞ்ச நேரம் கழிச்சு நடக்க போகுது. நீங்களும் அங்க இருந்தே எங்க சக்திய வாழ்த்துங்க....


நன்றி... வணக்கம்...