Friday 7 September 2018

மன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்

Image result for girl in depression images

 
செக்சுவல் லைப் தோல்வியடைஞ்ச முழுக்க முழுக்க மன அழுத்தத்துக்குள்ள வாழுற மூணு பேரை பாத்து நான் நிறைய அதிர்ச்சி அடைஞ்சிருக்கேன்.

அதுல குறிப்பா ஒருத்தர் தன்னை சுத்தி எல்லாருமே தனக்கு எதிரா சதி பண்றதா நினச்சு அத்தனை பேரையும் துன்புறுத்தவும் ஆரம்பிச்சுட்டாங்க. ரெண்டு கல்யாணம் பண்ணியும் திருப்தி இல்லாத நிலைமை அவங்களுக்கு. ஒவ்வொருத்தர் மூலமா ரெண்டு பசங்க வேற. அவங்களுக்கு உதவி பண்ண போய் கடைசில நீ சொகுசா வாழுற, உனக்கு எங்க என் பிரச்சனை தெரியும்னுட்டு ஆரம்பிச்சுட்டாங்க. அவங்களால நான் நிறைய மன அழுத்தங்களுக்கு போய், இப்ப கடைசியா விட்டா போதும்னு ஓடி வந்தாச்சு. அடுத்தவங்கள எந்த அளவு மனசாலயோ உடலாலயோ துன்புறுத்த கொஞ்சமும் தயங்காதவங்க அவங்க. அவங்க அந்த நிலைமைக்கு போன பிறகு அவங்கள மீட்டு எடுக்குறது ரொம்ப கஷ்டம். 
 
இத நான் ஏன் சொல்றேன்னா அவங்களோட தேவைகள் என்னன்னு காது குடுத்து கேக்க நம்ம சமூகத்துல யாரும் தயாரா இருக்க மாட்டாங்க. அவங்கள திருத்துறதா நினச்சு தன்னோட சொந்த கருத்துக்கள அவங்க மேல திணிச்சு அவங்கள மேலும் மேலும் காயப்படுத்த தான் செய்வாங்க. இது அவங்கள சுய நினைவுக்கு கொண்டு வர்றத விட்டுட்டு இன்னும் பெரிய மன அழுத்தத்துக்குள்ள தள்ளி விடும். 
 
இந்த மாதிரி மன அழுத்தத்துக்குள்ள வாழுற பெண்கள் மீள என்ன வழின்னு கேட்டா எல்லாருமே இந்த மாதிரியான நபர்களுக்கு முதல்ல பொருளாதார தீர்வு தான் அவசியம்னு சொல்வாங்க. ஆனா என்னை கேட்டா அவங்களுக்கு தேவை பொருளாதார தீர்வு இல்ல, உடனடி தீர்வு. பொருளாதாரத்துல ஜெய்க்குற வரைக்கும் எப்படி மன அழுத்தத்துல அழுந்தி போய் இருக்க முடியும்?

இத யாரும் புரிஞ்சுக்க மாட்டாங்க. அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்குங்குறத இந்த சமூகம் இன்னும் ஒத்துக்கவே இல்ல. மறுபடி மறுபடி பொருளாதார விடுதலை தான் உனக்கான தீர்வுன்னு சொல்லிட்டே இருக்கோம். இப்போதைய இந்த இந்திய சமூக சூழ்நிலைல இதெல்லாம் உடனடி சாத்தியமா என்ன?

எனக்கு ரொம்ப வலிக்குது, இதோ இந்த நொடி செத்துருவேன்னு சொல்றவங்ககிட்ட போய், முதல்ல உனக்கு தேவை பணம், அத சம்பாதிச்சுட்டு வா, அப்புறமா நீ சாக மாட்டன்னு சொன்னா என்ன அர்த்தம்?

இது வலி இல்ல, ஜஸ்ட் ரிலாக்ஸ்ன்னு ரிலாக்ஸ் பண்ண வச்சு, அவங்க வாழ்க்கைல சந்தோசமான தருணங்கள மனசுல கொண்டு வந்து, அவங்க சந்தோசம் அவங்க கைலதான்னு புரிய வச்சுட்டாலே போதும்.

காசு முக்கியம் தான், ஆனா காசு மட்டுமே முக்கியம் கிடையாது.

ஒவ்வொருத்தருக்கும் உள்மனசுல நிறைய ஆசைகள் இருக்கும். விருப்புகள் இருக்கும். அத வெளில கொண்டு வரலாம்.

அட, இப்போதைய என் விருப்பம் செக்ஸ் மட்டும் தான்னு அவங்க ஆழ்மனசுல இருந்து கூச்சல் வரும். ஆனா அத புரிஞ்சுக்குற நிலைமைல இங்க யாரும் இருக்க மாட்டாங்க.

எல்லா தேவைகளை விடவும் இந்த செக்ஸ் தேவை ரொம்ப கொடூரமானது. அதுக்கான தீர்வு கிடைச்சுட்டாலே இந்த பொருளாதார சிக்கல் எல்லாம் பெரிய விசயமே இல்ல.

ஆனா இது அத்தனை சுலபத்துல நடந்துடுற காரியமா? என்னை கேட்டா சுலபம் இல்லனாலும் அதொண்ணும் பெரிய கஷ்டம் கிடையாது.

முதல்ல மனச ரொமாண்டிக்கா வச்சுக்கணும். யார் என்ன சொல்லுவாங்கன்னு கவலைப்படுறத முதல்ல நிறுத்தணும். பாட்டு பாடுறது நமக்கு பிடிக்கும்னா சுத்தி உள்ளவங்கள பத்தி கவலையேபடாம பாட ஆரம்பிச்சுடணும்.

"ஹ்க்கும்... இவ இருக்குற கேட்டுக்கு இவளுக்கு சந்தோசம் வேற. அவனெல்லாம் இவள நல்லா தான் வச்சிருப்பான், இவ தான் இவ வாழ்க்கைய தொலைச்சிருப்பா"ங்குற மாதிரியான கூரான ஆயுதம் தாக்க கூடும்.

"ஆமா, அப்படித்தான்"னு சொல்ற பழக்கத்த முதல்ல ஏற்படுத்திக்கணும்.

மனச ரொமாண்டிக்கா வச்சுகிட்டு mastrubate பண்ண முயற்சி பண்ணனும். இதெல்லாம் எந்த துணையும் இல்லாத பட்சத்துல இல்லனா துணை தேவையில்லன்னு நினைக்குற பட்சத்துல தான்.

முக்கியமான விஷயம், மனச எப்பவும் நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள வச்சுக்கணும்.

இல்ல, அப்படி யாரையும் emotional parterரா ஏத்துக்காம வெறும் sex partner-ரா சேர்த்துக்க முடியாதுன்னு சொல்றவங்களுக்கு வேற வழி இருக்கு.

சின்ன வயசுல நாம ஒரு பொம்மைய கண்டா ரொம்ப குதூகலிச்சிருப்போம். ஆனா நாள் போக போக ஏன் அந்த உற்சாகம் வடிஞ்சு போகுது?

காரணம் சின்ன வயசுல நாம எத எல்லாம் முக்கியம்னு நினைக்குறோமோ, அது எதையும் முக்கியமானதா நாம நினைக்குறதே இல்ல. ஆனா இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா? நாம சின்ன வயசுல முக்கியம்னு நினைக்குற விசயங்கள் மட்டும் தான் நிஜம். அதுல எந்த பாசாங்கும் இருக்காது. எதிர்பார்ப்பே இல்லாம நாம அன்பு செலுத்த முடியும்.

அதனால தான் நான் அடிக்கடி எனக்குள்ள ஒரு சபதம் எடுத்துப்பேன், "எத இழந்தாலும் என் குழந்தைத் தன்மைய மட்டும் இழந்துடவே கூடாது"ன்னு.

இதனால தான் எனக்கு தன்மேல தனக்கு எதுவுமே இல்லையேன்னு ஏங்குற பெண்கள நெருங்கவே பயமா இருக்கும். ஏன்னா தீவிர மன அழுத்தத்துல அவங்க கிட்டத்தட்ட ஒரு பயங்கரவாதிகள் மாதிரி தான். அவங்களுக்கு எப்பவுமே தன்னை பத்தியே பேசிக்கிட்டு இருக்கணும். தன்னையே எல்லாரும் கேர் எடுக்கணும்னு நினைப்பாங்க. நாமளும் அவங்கள புரிஞ்சுகிட்டு அவங்களுக்காக விட்டுக்குடுக்க ஆரம்பிச்சா அப்புறம் நம்மள அவங்கள மாதிரியே நினச்சு, நம்மள அவங்க கண்ரோலுக்குள்ள கொண்டு வர பாப்பாங்க. இதனால நம்ம நிம்மதி தான் பறிபோகும்.

இதுக்கு தீர்வு, முதல்ல அவங்க தன் மேல சுய பச்சாதாபம் படுறத நிறுத்தணும். வாழ்க்கைய கொண்டாட்டமா வாழ கத்துக்கணும். மனசுக்கு பிடிச்ச விசயங்கள செய்யணும்.

இத எல்லாம் சொன்னா மறுபடி நம்மள தான் தாக்குவாங்க. உன்கிட்ட காசு இருக்கு, அதனால சுலபமா சொல்லுவ, என்கிட்ட என்ன இருக்குன்னு.

எனக்கெல்லாம் ஒரு சின்ன பூவ பாத்தாலே மனசு கொண்டாட்டமாகிடும். அத விதம் விதமா போட்டோ எடுத்தாலே ரிலாக்ஸ் ஆகிருவேன். அப்படியும் இல்லையா வீட்டை விட்டு கொஞ்ச நேரம் வெளில போய்ட்டு வரலாம். இப்படி கூட ரிலாக்ஸ் பண்ணலாம்.

காசு முக்கியம் தான், ஆனா காசு இல்லாத பட்சத்துல அதுக்காக இறுகி போக கூடாது. நம்மள சுத்தி எது நம்மள கொண்டாட்டமா வச்சிருக்குமோ அதுல மூழ்கிடலாம். இசையோ, புத்தகமோ இல்ல வேற ஏதோ.

அப்படியும் இல்லையா, நல்லா அடி மனசுல இருந்து கொஞ்ச நேரம் அழ கூட செய்யலாம். அதுவும் மனச ரிலாக்ஸ் பண்ணும்.

என்கிட்ட ஒரு சின்ன பொண்ணு வந்து கேட்டாள் "உங்க கவிதைகள படிச்சா அவ்ளோ வலிகள் இருக்கு. ஆனா உங்கள நேர்ல பாத்தா அப்படி தெரியவே இல்ல, ரொம்ப உற்சாகமான ஆளா இருக்கீங்க? இவ்ளோ சந்தோசமா இருக்குற நீங்க எப்படி அவ்வளவு வலிகளோட கவிதைகள் எழுதுனீங்க?ன்னு.

அவகிட்ட நான் சொன்னேன் "இதோ நீ பாத்துட்டு இருக்குற நானும் நிஜம் தான், என் கவிதைகள்ல நீ பாத்த நானும் நிஜம் தான். சந்தோசமோ துக்கமோ நான் அதோட எல்கை வரை போய் பாக்குறேன். என்னால ரெண்டையுமே ஒரே அளவு கொண்டாட முடியும். இப்போ நாம எந்த நொடியில வாழ்ந்துட்டு இருக்கோமோ அந்த நொடி வாழ்க்கை தான் நிஜம். இப்ப நான் சந்தோசமா இருக்கேன். அத நீ பாத்துட்டு இருக்க"ன்னு சொன்னேன்.

லோ-பிரசர் வந்து என்னாச்சோ ஏதாச்சோன்னு சுத்தி இருக்குறவங்கள பதற வைப்பேன். அடுத்த பத்தாவது நிமிஷம் அவங்களையே கிண்டல் பண்ணி சிரிச்சுட்டு இருப்பேன். என்னோட இந்த மனநிலைய எத்தனை பேர் புரிஞ்சுப்பாங்கன்னு எனக்கு தெரியாது. ஆனா நான் அப்படிதான்.

மறுபடியும் சொல்றேன், ஒரு வேளை இத எல்லாம் கொண்டாட்டமா வாழுற நான் சொல்ல தகுதி இல்லன்னு யாராவது நினைக்கலாம். ஆனா எனக்குத் தான் தெரியும் இத சொல்ல எனக்கு முழு தகுதி உண்டுன்னு.

ஏன்னா, நான் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவன்னு நிரூபிக்க பெரும் முயற்சி எடுக்கப்பட்டு, நானும் கிட்டத்தட்ட என் நம்பிக்கை எல்லாத்தையும் இழந்து சோர்ந்து போய் என்னை விட்டுக் குடுக்க ஆரம்பிச்சப்ப தான் ஒரு நாள் அமைதியா இருந்து யோசிக்க ஆரம்பிச்சேன்.

நான் யார்? நான் எப்படிப்பட்டவள்? எனக்கான ப்ளஸ் என்ன? எனக்கான மைனஸ் என்ன? நான் ஏன் அத எல்லாம் இழந்தேன்? இப்ப எனக்கு என்ன தேவை?

இத்தன கேள்விகளுக்குமான விடைகள் தான் என்னை மறுபடி மீட்டெடுத்தது. ஏன்னா அப்ப எனக்கு மாரல் சப்போர்ட்டுக்கு கூட ஒருத்தரும் கிடையாது. குடும்பத்தார் எல்லாருமே இந்த சமூக கோட்பாடுகள்ள புதைஞ்சு போனாங்க.

அதனால தான் சொல்றேன், நமக்கான தேவை என்னன்னு நாம தான் முடிவு பண்ணனும். அதை நோக்கிய நகர்தலும் முக்கியம். அப்புறம் என்ன, நம்ம வாழ்க்கை நம்ம கையில தான்.

Thursday 23 August 2018

எது நேர்மை?



நேத்து தோழியும் அவங்க அம்மா கூடவும் பேசிட்டு இருக்கும் போது கமலோட கல்யாண வாழ்க்கை பத்தின பேச்சு வந்துச்சு.

அவன் ஒழுக்கம் கெட்டவன், இப்படி ஒவ்வொரு பொண்ணா பாத்துட்டு திரியுறது எந்த வகைல நியாயம்னு கேட்டாங்க அம்மா.

அவர் யார் கூட வாழுறார்ங்குறது முக்கியம் இல்ல, அது யாரா இருந்தாலும் அவங்களையும் மதிச்சு, பப்ளிக்ல அவங்க கூட வெளிப்படையா வராரே, அந்த நேர்மை தான் முக்கியம்னு நாங்க சொன்னோம்.


இங்க இந்த சமூகம் எதை ஒழுக்கம்னு சொல்லுது?

மனைவி தவிர பிற பெண்களோடு ஆண்களுக்கு தொடர்புகளே இருந்தது இல்லயா?

அப்படியே தொடர்பு இருந்தாலும் அந்த பெண்களை வெறும் sex toy மாதிரி use பண்ணிட்டு மனைவிக்கு மட்டும் முக்கியத்துவம் குடுத்தா அவங்க சமூகத்துல நல்ல குடிமகன் அதானே...

என்னைக் கேட்டா எந்த விசயமா இருந்தாலும் அதுல ஒரு அடிப்படை நேர்மை வேணும்னு நினைப்பேன். நம்மோட சம்மந்தப்பட்ட, நாம் நேசிக்குறவங்கள வெளில இந்த சமூக பார்வைக்கு கொண்டு வந்து வெளிப்படையா இருக்குறதுல என்ன தப்பு இருந்துற போகுது?

ஒருத்தங்கள பிடிக்கலனா நேர்மையா விலகி இன்னொரு இணையை தேர்ந்தெடுக்குற உரிமை ஏன் ஆண், பெண் இருபாலருக்கும் இருக்க கூடாது?

இது பத்தின கேள்வி ஒண்ணை நண்பர் ஒருத்தர்கிட்ட கேட்டேன். அவர் சொன்னார், "நீ மேல் தட்டு பெண்களையே மனசுல வச்சுட்டு பேசிட்டு இருக்குற. சமூகத்துல கீழ் நிலைல இருக்குற பெண்களை யோசிச்சு பாரு, கணவன் பிடிக்கலனு கைவிட்டு போனா அவளோட நிலமை என்ன? அவளோட வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வா"னு கேட்டார். அவரை பொருத்தவரைக்கும் மட்டுமில்ல, இந்த சமூகத்த பொருத்தவரைக்கும் இது நியாயமான கேள்வி தான் இல்லயா?

ஆனா என்னோட சிந்தனை இதுல இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கு.

பெண்களை அடக்குமுறைக்கு கீழ வைக்குறதுனா அது வன்முறையாலயும், ஆதிக்கத்தாலும் மட்டுமில்ல, இந்த மாதிரி பாவம்னு சொல்றதும் தான்.

அதாவது இன்னமும் நம்ம சமூகத்துல பெண் போற்றி பாதுகாக்கப்பட வேண்டியங்குற எண்ணம் தான் மேலோங்கி இருக்கு. எல்லாரையும் போல அவ ஒரு சுதந்திர பறவைங்குறதையே மறந்துடுறாங்க. அதனால தான் பெண் பாவம், அவள் தெய்வம்ங்குற எண்ணம் எல்லாம்.

நான் அந்த நண்பர்கிட்ட சொன்னேன், " அவ பாவம்னு தான் அவள விட்டுர சொல்றேன். ஒரு பிரச்சனைய face பண்ற வரைக்கும் தான் பயம் இருக்கும். அதுவே அத அவ face பண்ணிட்டா தைரியமா வெளில வந்துருவா. நாலு வீட்ல சமையல், வீட்டு வேலை செய்தாவது பொழைச்சுப்பா. குழந்தைகள கவனிக்க பயந்து தான் இந்த ஆண்கள் பெண்கள் பாவம்னு சும்மா அடக்கி வைக்க பாக்குறாங்கன்னு.

என்ன ஒண்ணு, இந்த so called சமூகம் அவள தினமும் கேள்விகளால துளைச்சு எடுக்கும். அய்யோ பாவம்ன்னு ஒரு உச்சு கொட்டி அவ பரிதாபத்துக்குரியவள்ன்னு அவளையே நம்ப வைக்கும். ஒரு பெண் தனியா வாழ்ந்தா அவள கண்டுக்காம கடக்க பழகுங்க, இல்லயா நிஜமான அக்கறை இருந்தா அவளுக்கான பொருளாதார விடுதலைக்கு உதவி பண்ண முடிஞ்சா பண்ணுங்க... அவ்ளோதான்.

பெண் அவள அவளே பாத்துப்பா... இந்த ஆண் சமூகம் சுமக்க பயப்படுற குழந்தைகளையும் சேர்த்து....