Friday 23 December 2016

சுயபச்சாதாபமும் பழிகளும்



நேத்து எனக்கும் என் lab assistant- க்கும் நிறைய வாக்குவாதம்.

தனக்கு பாத்து வச்ச மாப்பிளை சரியில்லன்னும் வேணும்னே சதி செய்து நாசம் பண்ணி தன்னோட குடும்பத்து ஆளுங்க தன்னை நடுத்தெருவுல விட்டுட்டாங்கன்னு புலம்பிகிட்டே இருந்தாங்க.
இடையிடைல “அவ மட்டும் சந்தோசமா இருக்கா. எப்பவும் என் அண்ணன்கிட்ட போன்ல பேசிகிட்டே இருக்கா. நானும் இப்படி மாப்பிள்ளை கூட பேசணும்னு ஆசைப்படுறேனே, ஆனா நான் இப்படி பாதிக்கப்பட்டு இருக்கேனே”னு அண்ணன் மனைவி மேல ஆவேசம் வேற.

இத்தனைக்கும் இவங்கள காத்திருந்து ஸ்கூட்டில கூப்ட்டுட்டு ரெண்டு பேரும் ஒண்ணா தான் காலேஜ் வராங்க.

" யாரும் வேணும்னே யாரையும் நாசமா போகணும்னு நினைக்க மாட்டாங்க. நீங்க நல்லா இருக்கணும்னு நினச்சி பண்ணினது இப்படி ஆகிடுச்சு. "நடந்தது நடந்தாச்சு, முதல்ல அடுத்தவங்கள குறை சொல்றத நிறுத்துங்க. அப்பதான் வாழ்க்கைல உருப்பட முடியும்" னு சொன்னதும் "எப்பவும் ஈஈஈ்னு இளிச்சுகிட்டு இருக்குற உங்களுக்கு என் கஷ்டம் புரியாது"ன்னு பட்டுன்னு சொல்லிட்டாங்க.
சரிதான், இனி வாயக்குடுத்தா நமக்கு தான் அசிங்கம்னு வாய மூடிகிட்டு Bell அடிச்சு பிள்ளைங்க வரவும் class எடுக்க ஆரம்பிச்சேன்.

கொஞ்ச நேரத்துல dehydration, low bp- னு எனக்கு படபடன்னு மயக்கமா வர "madam கொஞ்சம் கேண்ட்டீன்ல சுடு தண்ணி வாங்கிட்டு வாங்களேன்"னு கேக்க "அதெல்லாம் என்னால முடியாது"னு சொல்லிட்டாங்க. நான் நாக்கு குழறி மெதுவா சாய்றத பாத்த பிள்ளைங்க தான் ஓடி போய் சுடு தண்ணி வாங்கி குடுத்து கூடவே இருந்து பாத்துக்கிட்டாங்க. இத்தனைக்கும் ஒழுங்கா படிக்குறது இல்ல, ஒரு practical உருப்படியா பண்றது இல்லன்னு அப்ப தான் திட்டி தீத்துருந்தேன்.

இன்னிக்கி lab- ல நுழைஞ்சதும் “ஹிஹி... தண்ணி வாங்கி தரலைன்னு கோபமா”ன்னு கேட்டாங்க. நான் கொஞ்சம் முறைச்கிகிட்டே seat –ல போய் உக்காந்துகிட்டு class adjustment, official phone calls-ன்னு வேலைய பாக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச நேரத்துல மனசுக்கு என்னவோ தோண, அவங்கள பாத்தேன். என்னையே பாத்துகிட்டு இருந்தாங்க. பட்டுன்னு சிரிச்சுட்டு, “உங்களுக்கு கொழுப்பு கொஞ்சம் ஓவரா போச்சு, காலைல சாப்ட்டீங்களா இல்லையா, இல்லனா முதல்ல போய் சாப்டுங்க போங்க”ன்னு சொன்னேன். அது வரைக்கும் உம்ம்முனு இருந்த அவங்க முகம் பிரகாசமாகி, சரின்னு போய்ட்டாங்க.

Practical பண்ண வந்த பிள்ளைங்க இத கவனிச்கிட்டே இருந்தாங்க. “ஏன் மேடம் அவங்ககிட்ட பேசுனீங்க? எல்லாம் நீங்க வச்சு குடுக்குற இடம். நாங்க கவனிச்சுட்டு தான் வரோம், அவங்க உங்கள நிறைய எதிர்த்து பேசுறாங்க, மதிக்க மாட்டேங்குறாங்க, எங்ககிட்ட கூட ரொம்ப கோபப்படுறாங்க மேடம்”ன்னு சொல்லவும் “நேத்து நானும் தான் உங்கள நிறைய திட்டினேன், ஆனாலும் நீங்க எனக்கு help பண்ணுனீங்க தானே, அப்படி வச்சுக்கோங்க இதையும். நடந்து முடிஞ்ச சம்பவங்களுக்காக கோபப்பட்டுகிட்டே இருந்தா அப்புறம் வாழ்ந்து என்ன பிரயோஜனம்”ன்னு கேட்டுகிட்டே, “சரி சரி, வேலைய பாருங்க, வந்துட்டாங்க கதை கேக்க”ன்னு மறுபடியும் திட்டி தொரத்தி விட்டுட்டேன்.

என் lab assistant மாதிரியான பெண்கள் அநேகம் பேர் இங்க இருக்காங்க. வாழ்க்கைல அவங்களுக்கு வர்ற stress, அதனால தொடர்ந்து வர்ற மன அழுத்தங்கள். ஏன், நானே கூட இந்த வகையறா தான். நிறைய கோபம், நிறைய அழுகைன்னு ஏதோ ஒரு சூழல்ல சிக்கி, அதுல இருந்து வெளிவர போராடிகிட்டு இருக்குற ஒரு சராசரியான மனுஷ ஜென்மம் தான் நானும்.

ஒருத்தங்க மேல ஒரு பழிய போடுறதுக்கு முன்னாடி, அவங்க என்ன நிலைமைல இருக்காங்க, இத அவங்க செய்திருப்பாங்களா, அப்படியே செய்திருந்தாலும் எதுக்காக செய்திருப்பாங்கன்னு அவங்கள சார்ந்து அவங்க மனநிலைல இருந்து யோசிச்சோம்னாலே பல நேரம் பல misunderstanding சரியா போக வாய்ப்பு இருக்கு. எனக்கு என் lab assistant பத்தி தெரியும். அதனால அவங்கள என்னால adjust பண்ண முடியுது. என்னைப் பத்தி பசங்களுக்கு தெரியும், என் நண்பர்களுக்கு தெரியும், அதனால அவங்களால என்னை adjust பண்ணி போக முடியுது அவ்வளவு தான்.

ஆனா இதெல்லாம் எத்தனைபேருக்கு சரியா புரியும்னு நம்மால சொல்ல முடியாது. காரணம் இயலாமையும் ஆற்றாமையும் அதிகம் ஆகிடுச்சுனா நாம உடனே கைல எடுக்குற ஆயுதம், நம்மோட நிலைமைக்கு காரணகர்த்தாவா அடுத்தவங்கள கைக்காட்டுறது தான்.

“என் வாழ்க்கைய கெடுத்ததே அவன்/ அவள் தான்”ன்னு ரொம்ப ஈசியா அடுத்தவங்கள கைகாட்டிகிட்டு நம்மோட இந்த நிலைமைக்கு நாம காரணம் இல்லன்னு நமக்கு நாமே சமாதானம் செய்துக்குறோம். ஆக மொத்தத்துல பெரும்பாலும் நம்மோட கற்பனைப்படி நாம எப்பவும் நல்லவங்களாவே இருப்போம். ஆனா நமக்கு ஒரு பெரும் பிரச்சனை இருக்கும். அதாவது நம்மள தவிர்த்து எல்லாருமே கெட்டவங்களா இருப்பாங்க, எப்படா நம்ம காலைவாரி விடலாம்னு காத்துகிட்டு இருப்பாங்க. 

இப்படி அதீத கற்பனைகுள்ள சிக்கிகிட்டவங்களால அவ்வளவு சீக்கிரம் அதுல இருந்து வெளிவர முடியாம போய்டுது.

தன்னோட கஷ்டங்களுக்கு யார் மேலயாவது பழி போடுறவங்க அடுத்து நாடுறது கோவில் பூசாரிகளையும் ஜோசியக்காரர்களையும் தான். சில பேர் ஒரு படி மேல போய் சாமி மேலயே பழி போடுவாங்க. “என் வாழ்க்கைய கெடுத்தது முத்தாரம்மன் தான், அவ தான் என்னை நாசம் பண்ணிட்டா. என்னை வாழ விடாம பண்ணிட்டா”ன்னு எல்லாம் காதுல விழுறப்ப பாவம் இந்த அம்மன்மார்கள்ன்னு அவங்களுக்காக பரிதாபப்பட மட்டும் தான் முடியுது என்னால. மிஞ்சி மிஞ்சி போனா எனக்கு அத குடு, இத குடுன்னு அவங்கள disturb பண்ணாம இருக்கேன். பாவம், மேல குறிப்பிட்ட என் lab assistant மாதிரியானவங்ககிட்ட மாட்டிகிட்டு முழி பிதுங்கி இருக்குற முத்தரம்மன நான் வேற தொல்லை பண்ணனுமா என்ன?

பெண்கள்ல இன்னும் சில வகைகள் உண்டு. இந்த மாதிரி stress, depression –ல இருக்குறவங்கள உக்கார வச்சு நல்லா கதை கேட்டுகிட்டு, “ஐயோ பாவம், நீ எவ்வளவு நல்லவ. உன் மாமியார்/ புருஷன் இவ்வளவு மோசமானவங்களா? உன்னால தான் இதெல்லாம் சமாளிக்க முடியுது, உனக்கொரு விடிவு வராதா”ன்னு ரொம்ப பரிதாபப்படுவாங்க. சிலபேரு இன்னும் ஒரு படி மேல போய் “அந்த கோவிலுக்கு போனா பரிகாரம் பண்ணலாம், இந்த சோசியர்கிட்ட போனா நல்ல பலன் உண்டு”ன்னு ஏத்தி விடுவாங்க. அவங்க அந்தப் பக்கம் போனதும், அவங்கள பத்தின கேலிகளும் கிண்டல்களுக்கும் அவங்களுக்கு நல்ல time pass –சா இருக்கும்.

இந்த விசயத்துல தான் நான் ரொம்ப முரண்படுவேன். அவங்களா என்கிட்ட ஏதாவது சொல்ல வந்தா காது குடுத்து கேக்காம இருக்க மாட்டேன். கேப்பேன். ஆனா நிறைய குறுக்கு விசாரணை பண்ணுவேன். தப்பு பெரும்பாலும் இவங்க பெயர்லயே இருக்கும். “நீங்க செய்றது தப்பு”ன்னு முகத்துக்கு நேரா காரண காரியங்களோட விளக்கிடுவேன். ரொம்பவே argue பண்ணிட்டு இருந்தா, “போங்க, போய் வேலைய பாருங்க”ன்னு தொரத்தி விடுவேன். பெரும்பாலும் நான் அவங்ககிட்ட முகத்துல கடுமை தான் காட்டியிருக்கேன். அப்படியும் ரெண்டு பேரும் மறுபடியும் புன்னகையோட வலம்வர முடியுதுனா அவங்களுக்கு என் மேல ஏதோ ஈர்ப்பு, இவங்க என்னவோ சொல்ல வராங்கன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்.

ஒரு தடவ வாய்விட்டே கேட்டேன், “இவ்வளவு திட்டியும் எப்படி என் பின்னாலயே வரீங்க”ன்னு. “நான் நல்லா இருக்கணும்னு நீங்க மனசார நினைக்குறீங்க. அது எனக்கு நல்லா புரியுது”ன்னு சொன்னாங்க.

அவ்வளவு தான் வாழ்க்கை. அவ்வளவு தான் புரிதல். 

என்ன கஷ்டம் வந்தாலும் “ஐயோ என் நிலைமை இப்படி ஆகிபோச்சே”னு சுய இரக்கமோ அனுதாபமோ நம்ம மேலே நமக்கு வந்துடவே கூடாது. அதுல மட்டும் சரியா இருந்துடணும். அந்த விசயத்துல நான் வரம் வாங்கி வந்துருக்கேன்.

Tuesday 13 December 2016

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றமும் நானும்



போன வாரத்துல திடீர்னு ஒரு போன் கால்.

“எம்மா, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பா பத்தாம் தேதி ஒரு மீட்டிங் இருக்கு. அதுக்கு போய்ட்டு வாயேன்”ன்னு சொன்னது சாட்சாத் எழுத்தாளர் பொன்னீலன் தான்.

“ஏதாவது மீட்டிங் போனா என்கிட்டயும் சொல்லுங்க, நானும் வரேன்”ன்னு நான் தான் அவர்கிட்ட சொல்லி வச்சிருந்தேன்.

“சரி, நான் போறேன், அது எங்க நடக்குது”ன்னு நான் கேட்டதும், “நீ போறியனா என்னெயும் கூட்டிட்டு போய்டேன், நானும் உன்கூட வந்துடுறேன்”ன்னார்.

“ஹப்பாடா, நல்லவேளை, வழி தெரியாம நாகர்கோவில்ல திணற வேணாம், தப்பிச்சோம்”ன்னு மனசுல நினச்சுட்டே, “ஐயோ கண்டிப்பா கூட்டிட்டு போறேன், எத்தன மணிக்கு உங்கள கூப்ட வரணும்”ன்னு விவரம் எல்லாம் கேட்டுகிட்டேன்.

அவர்கிட்ட சொன்ன மாதிரியே அஞ்சு மணிக்கு அவர் வீட்டு வாசல்ல போய் நிக்க, அவர் கூட அவர் மனைவியும் வந்தார். ஏற்கனவே ரெண்டு மூணு நாள் அவர் வீட்டுக்கு போயிருக்குறதால அவங்க கூடவும் நல்ல அறிமுகம். அதுவும் பத்து நாள் முன்னால வீட்டுக்கு போனப்ப அவங்க போட்டு தந்த டீ பிரமாதம். பொன்னீலன் சாருக்கு குடுக்காம நாங்க மட்டும் குடிச்சுட்டு வந்துருந்தோம்.

“சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவிலுக்கு போறா, அவள செட்டிகுளத்துல இறக்கி விடணும்மா”ன்னு இவர் சொன்னதும் பரஸ்பரம் சிரிச்சுகிட்டே சரின்னு தலையாட்டிகிட்டேன். கார்ல வர்றப்ப ரோடும், அத உடச்சி போட்டுருக்குற விதத்தையும் பத்தி தான் பேசிகிட்டே வந்தோம். அவங்கள இறக்கி விட்டுட்டு நாங்க அப்படியே டதி ஸ்கூல் பக்கத்துல இருந்த ஓய்வு பெற்றோர் சங்கம் இருந்த இடத்துக்கு போனோம்.

அது சா. தேவதாஸ் அவர்களோட இரண்டு நூல்கள் பத்தின கருத்தரங்கம்.

தலைமை கவிஞர் நட. சிவக்குமார்.

சா. தேவதாசோட “கால்வினோ கதைகள், கட்டுரைகள், நேர்முகம்” புத்தகத்த விவரிச்சு ஹச். முஜீப் ரஹ்மானும், “மரண தண்டனையின் இறுதி தருணங்கள்” பற்றி சிவசங்கர் எஸ்.ஜே அவர்களும் பேசினாங்க. கடைசியா உரை சா. தேவதாஸ்.

கவிஞர் நட. சிவகுமார் பேசினப்ப கால்வினோ கால்வினோனு நிறைய பேசினார். கால்வினோவோட ரெண்டு குட்டி கதைகளையும் சொன்னார். கால்வினோவோட காதலன்னும், அவர படிச்சி வாழ்ந்தவன்னு பெருமையா பேசினார். ஹச். முஜீப் ரஹ்மானுக்கும் அவருக்கும் உள்ள நட்பை பத்தி பேசினார். கால்வினோ இல்லனா தன்னோட மூளை செத்துப் போயிருக்கும்னு சொன்னார். நிஜமாவே எனக்கு அவர் சொன்ன ரெண்டு கதைகளோட முடிவுல என்ன சொல்ல வந்தாங்கன்னு புரியவே இல்ல. என்னை மாதிரி ஆட்களுக்கு அவங்க இவ்வளவு பரவசப்பட்டு சிலாகிச்ச கால்வினோவோட அருமைகள கொஞ்சம் புரிய வச்சிருக்கலாம்.

ஹச். முஜீப் ரஹ்மான் பேசினப்ப, எவ்வளவு தான் நாம இதிகாசங்கள படிச்சிருந்தாலும் உலக இலக்கியம் படிச்சா தான் ஒரு விரிவான பார்வை கிடைக்கும்னு சொன்னார். கால்வினோவ தெரிஞ்சுக்கணும்னா க்யூபாவ அறிஞ்சிருக்கணும், லத்தீன் மொழிய அறிஞ்சிருக்கணும், லத்தீன் பாரம்பரியத்த அறிஞ்சிருக்கணும், இத்தாலிய அறிஞ்சிருக்கணும், இத்தாலிய எழுத்தாளர்களை அறிஞ்சிருக்கணும், அப்ப தான் கால்வினோ பத்தி அறிஞ்சிக்க முடியும்னு சொன்னார்.

ரியலிசம் என்னும் எதார்த்தவாதம் சமூகத்தில் உள்ளதை உள்ளப்படி காட்டுற விதம். ரியோ-ரியலிசம் விளிம்பு நிலை மக்களை காட்டுகின்ற முறை. இதுல இலத்தீன் அமெரிக்க பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் ஒரு புதிய மாய யதார்த்தம்ங்குற முறையை பயன்படுத்தி உலகத்துக்கு அறிமுகப்படுத்தினவர் கால்வினோ. அதனாலேயே இத்தாலிய வரலாற்றில் கால்வினோ ரொம்ப முக்கியமானவர்னு ஹச். முஜீப் ரஹ்மான் சொன்னார்.

கால்வினோ கதைகள, புத்தகங்கள நாலு பக்கத்துக்கு மேல யாராலும் படிக்க முடியாதுன்னு அடிக்கடி சொல்லிட்டே இருந்தார். ஏன்னா அந்த முறையே ஒரு அதிர்ச்சிகரமான முறையாம். இப்படியான முறைல கதை சொன்னா அத எப்படி வாசகர்கள் ஏத்துக்குவாங்கங்குற கேள்வி ஆசிரியருக்கு இருந்துருக்கணும், ஆனா அந்த காலகட்டத்துல லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்காவோட ஏகாதிபத்தியத்தால நிறைய பாதிக்கப்பட்டதுனும், அப்படி பாதிச்சதால தான் வித்யாசமான கதைகள் எல்லாம் அமைஞ்சதுனும், மேற்கத்திய நாடுகள் இலக்கிய தரங்கள்ல சிறந்து விளங்கினதால அவங்களால அத புரிஞ்சுக்க முடிஞ்சுதுனும் சொன்னார்.

அரசுக்கு எதிரான, ஸ்தாபனங்களுக்கு எதிரான கதைகள கால்வினோ நேரடியா சொல்லாம மாற்று விஞ்ஞான முறை மூலமாகவும் விர்சுவல் பிக்சன் மூலமாகவும் வேற முறைகள்ல சொல்ல ஆரம்பிக்குறார். இத ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அவருடைய குரலா பதிவு செய்றார். அவர் எந்த மாதிரியான எழுத்தாளர், அவருடைய தேடல்கள் என்னவா இருந்துச்சுங்குற விவரங்கள் எல்லாமே சா. தேவதாசோட “கால்வினோ கதைகள், கட்டுரைகள், நேர்முகம்” புத்தகத்த படிச்சதுக்கு அப்புறம் தான் புரிய ஆரம்பிச்சதுனும், கால்வினோவோட இன்னும் நெருக்கமாக இந்த புத்தகம் உதவிச்சுன்னும் ஹச். முஜீப் ரஹ்மான் தெரிவிச்சார்.

அடுத்து “மரண தண்டனையின் இறுதி தருணங்கள்” பற்றி சிவசங்கர் எஸ்.ஜே பேச வந்தார். மனுசர் நிஜமாவே நிறைய சுவாரஸ்யங்களோட பேசினார். பாக்தாத் அழகி ஒருத்தியை காதலிக்குற மூணு பேர் பத்தின கதை சொன்னார். காதலனோட வேலை காதலிச்சுட்டே இருக்குறது தான். அத தவிர்த்து மாயாஜாலங்களை செய்பவன் காதலனாக முடியாதுன்னு சொன்னார். ஒரு மரண தண்டனை கைதி எப்படி தப்பிக்குறார், எப்படி வீட்டுக்கு போறார், கடைசி காட்சியில தூக்குல போடப்படுறார் அப்படிங்குற ஒரு குறும்படம் பத்தி சொல்லிட்டு, “மரண தண்டனையின் இறுதி தருணங்கள்” பற்றி பேச ஆரம்பிக்குறார்.

அந்த புத்தகத்துல பதினோரு கட்டுரைகள் இருக்குறதாவும் மரணத்தண்டனைக்கான சட்டத் திருத்தத்துக்கான அவசியம் பத்தியும் பேசினார். பேரறிவாளன், யாகூப் மேனன் பற்றி பேசி, மரணத் தண்டனையை எதிர்த்து முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய அவசியத்த எடுத்து சொன்னார்.

பிறப்பும், இறப்பும் யாராலயும் முன்பதிவு செய்யவே முடியாது. ஆனா தனியறைல அடைக்கப்பட்ட, மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒருவனின் மனநிலை என்னவாயிருக்கும்?. சிவசங்கர், ஒரு பத்து நிமிஷம் தனித்துவிடப்பட்ட தன்னோட சொந்த அனுபவத்த சொல்லி, அது எத்தனை கொடுமையானதுன்னு உணர வச்சார். மனிதன் ஒரு சமூக பிராணி, இந்த விலங்குக்குள்ள பல விலங்குகள் இருக்கும். இப்படியான மனுசன மறுபடியும் ஒரு விலங்கு நிலைக்கு கொண்டு போறது தான் மரணத்தண்டனை, ஆயுள் தண்டனைய விட மிக கொடுமையானது மரணத் தண்டனைனு விவரிச்சார்.

இன்னிக்கி இந்தியாவுல ஜாதி அடிப்படையான தண்டனைகள் தான் அதிகம்னும், கொடுக்கப்படுற தண்டனைகள்ல 94 சதவிதத்த தலித் மக்களும், பாட்டாளி மக்களும் தான் அனுபவிக்குறாங்கன்னு புள்ளி விவரங்கள் சொன்னார்.

இந்திய இறையாண்மைக்கு எதிரான விசயங்கள், பயங்கரவாத தாக்குதல், கூட்டு மனசாட்சின்னு மரண தண்டனைக்கு ஆதரவா பேசுறவங்க சொல்லலாம், ஆனா தண்டனைகள் குடுத்துட்டா மட்டும் குற்றங்கள் குறைஞ்சிடுமா? அப்படின்னு கேள்விகள் கேட்டுட்டு, இங்கிலாந்துல நூற்று அம்பது திருடர்கள பொதுவெளில தூக்குல போடுறப்ப, வேடிக்கை பாக்க வந்த மக்கள்கிட்டயே திருடின திருடர்கள் பத்தி சொல்லி, அதனால குற்றங்கள் தண்டனைகளால ஒரு போதும் குறைக்க முடியாதுன்னு சொன்னார்.

சா. தேவதாஸ் கடைசியா பேசினப்ப, கால்வினோவோட பள்ளி நாட்கள்ல முசோலினி சர்வாதிகாரியா இருந்ததாகவும் அவர கிண்டல் பண்ணி கால்வினோ ஒரு கவிதை எழுதினதாகவும், இளமை காலத்துல பாசிசத்துக்கு எதிரா தன் நண்பனோட சேர்ந்து இயங்கினதாவும் சொன்னார். மக்கள் மேல தனக்கிருந்த அக்கறையையும் நலனையும் வேறு கலைவடிவங்கள்ல சொல்ல முடியாத நிலைல எழுத்து மூலமா, புனைவுகள் மூலமா, இலக்கியம் மூலமா குடுத்ததால கால்வினோவ தனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொன்னார்.

அடுத்ததா, “மரண தண்டனையின் இறுதி தருணங்கள்” பத்தி பேசுறப்ப, ஒரு சட்டவாதி எடுக்க வேண்டிய ஒரு விசயத்த ஒரு இலக்கியவாதி ஏன் எடுக்கணும்னா ஒரு அரசியல் சார்ந்த பிரச்சனைய ஒரு இலக்கியவாதி கைல எடுக்குறப்ப அவங்களால அத வேற கோணத்துல அணுக முடியும்னு சொன்னார்.

தீவிரவாத செயல்கள எடுத்துகிட்டா கூட, பலம் உள்ளவங்க தப்பிச்சிடுவாங்க, அப்பாவிகளும், நேரடி சம்மந்தம் இல்லாதவங்களும் தான் பாதிக்கப்படுறாங்க. மனித உரிமை அடிப்படைல மரணத்தண்டனை என்பது இருக்க கூடாது. ஏன்னா, அது குற்றவாளிக்கு எந்த வித சந்தர்ப்பமும் தர்றது இல்ல. அவன ஒரு நல்ல மனுசனா மாறுறதுக்கு வாய்ப்பு குடுக்காம அரசு கொலை செய்து விடுது. மனித உரிமையை ஆதரிக்குற எல்லா நாடுகளும் மரண தண்டனைய எதிர்க்குது. இந்த நேரத்துல மரணதண்டனைய ஆதரிக்குறது சரியில்லங்குறது தான் ஒரு இலக்கியவாதியோட பார்வைன்னு சொல்லி உக்காந்தார்.

கூட்டம் முடிஞ்சதும் ஒவ்வொருத்தருகொருத்தர் அறிமுகம் பண்ணிகிட்டாங்க. பொன்னீலன் சார் எனக்கு நிறைய பேரை அறிமுகப்படுத்தி வச்சார். ஆனா முதல் சந்திப்புங்குறதால தலையசைச்சு சிரிக்க மட்டும் தான் என்னால முடிஞ்சுது.

இந்த கூட்டத்துல வந்தவங்கள்ல மொத்தமே ரெண்டு பெண்கள் தான். ஒண்ணு நான். இப்ப தான் எட்டிப்பாக்கவே செய்துருக்கேன். இன்னொருத்தங்க உஷா தேவி. அவங்களும் இந்த கூட்டத்துக்கு இப்ப தான் முதல் தடவையா வந்துருக்காங்களாம். மலையாளத்துல மூணு புத்தகம், தமிழ்ல ரெண்டு புத்தகம் எழுதி முடிச்சாச்சு. அதுவும் அவரோட “பள்ளத்தில் இருக்கும் வீடு” சிறுகதை தொகுப்புக்கு கலை இலக்கிய பெருமன்றம், புதுகோட்டை சார்பா விருது கிடைச்சிருக்கு.

மொத்தத்துல கூட்டம் கலைஞ்சு, கார்ல ஏறி வீட்டுக்கு வந்துட்டு இருந்தப்ப நிறைய பிரமிப்பு. இறை நம்பிக்கை, கூட்டம் பத்தின அலசல்ன்னு பேசி களைச்சு, பொன்னீலன் சார அவர் வீட்ல இறக்கி விட்டப்ப, “உனக்கு ஒரு புது உலகத்த அறிமுகப்படுத்தி இருக்கேன். அத நீ கூர்ந்து கவனிச்சுக்கோ. இதுல உனக்கு தேவையானத மட்டும் கிரகிச்சுட்டு, மத்தத சேமிப்புல வை”ன்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள போனார்.

அடுத்தடுத்து இன்னும் என்னோட பயணத்த தொடரணும்ன்னு முடிவு எடுத்துட்டு நானும் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.