Monday 9 April 2012

ஏக்கங்களின் நிறைவு....



பரபரப்பாய் இயங்கி கொண்டிருக்கும்
உணர்வு கலவைகளின்
ஆத்ம சங்கமம்...
நிரம்பி வழியும் புத்தகத்தில்
இன்னதென்று நிரப்பப்படாத
ஒரு வெற்றுப் பக்கம்...

ஆழ்ந்த மோனநிலையில்
எனக்கான என் உலகம்
சிலிர்த்தெழும் தேகத்தில்
பூப்பூக்க செய்கிறது...
நெஞ்சு கூடு விம்மி சிரிக்க
என் மரண தேவதை
என்னை ஆலிங்கனம் செய்வதெப்போது?

இனியொரு பிறவி வேண்டாம்...
மனம் நிறைந்து சொல்கிறேன்...
மரணம் நினைக்கும் ஒவ்வொரு தருணமும்
மனம் மகிழ்ச்சியில் புன்னகைக்கிறது...

என்னை அணைத்து கொள்ள துடிக்கும்
எனக்கே சொந்தமான என் மரணம்......
நிலையற்ற வாழ்வு வாழ்கிறேன்
நிலையான மரணம் தேடி...

3 comments:

  1. போராட்டங்களே வாழ்க்கை!
    ஜெயிப்பவர்கள் வசந்தத்தின் நிழல்களில் இளைப்பாறுவார்...........
    மரணம் மறக்கப்பட வேண்டியதொன்று..இப் புவியில் நம் சாதனைகள் மரணத்துக்குள் வீழ்ந்து நசுங்கிவிடக்கூடாது !

    ReplyDelete
    Replies
    1. மரணம் என்பது பயமளிக்க கூடியதாக இருக்க கூடாது என்பதே என் எண்ணம் ஜான்சி....

      Delete