Friday 29 May 2015

ரெட்டை ஜடை வயசு


அதென்னமோ இந்த வாரம் பேஸ் புக்ல  பின்னி கொண்டை வச்சு பூ சூடுற வாரம் போல... ஆளாளுக்கு ஜடைப் பின்னி தலைல பூ வைக்குறது பத்தி எழுதினாங்கனா நான் சும்மா இருக்க முடியுமா? அதனால நான் இப்ப ஒரு ப்ளாஸ் பேக் சொல்லியே தீருவேன், எல்லாரும் படிச்சுட்டு அவங்கவங்க ப்ளாஸ் பேக்கை சொல்லிட்டுப் போங்க.

இந்தா, மெழுகுவர்த்தி சுத்த ஆரம்பிச்சிடுச்சு.

சொயிங்.....
-----------------------------------------------------

அப்ப எனக்கொரு அஞ்சு வயசு இருக்கும். தலைல முடிய மொட்டையா பையன் மாதிரி வெட்டி விட்ருவாங்க. நான் வேற எப்பப் பாரு சட்டையும் டவுசரும் போட்டுட்டு பசங்க கூட்டத்துலயே திரிவேனா, நம்மள யாரும் பொம்பள புள்ளன்னு அடிச்சு சொன்னாலும் நம்ப மாட்டாங்க. அதுக்கப்புறமா தான் எங்க பாட்டி, பொம்பள புள்ளைக்கி ஒரு டோப்பாவாவது வச்சு விடுங்கடேன்னு சொல்ல, மஸ்ரூம் கட் எனக்கு அடையாளமா போச்சு.

செகண்ட் படிக்குறப்ப கூட படிக்குற புள்ளைங்க எல்லாம் ஜடை பின்னி ரிபன் கட்டிட்டு வர்றத பாத்து எனக்கும் ரெட்டை ஜடை போடணும்னு ஆசை வந்துடுச்சு. அவ்வளவு தான் முடி வெட்ட போக மாட்டேன்னு உருண்டு புரண்டு அடம் பிடிக்க, கொஞ்ச நாள்லயே நானும் ரெட்டை ஜடை போட்டு, அத மடிச்சு வேற கட்டி ஒரு மாதிரியா கெத்தா நடக்க ஆரம்பிச்சுட்டேன்...

ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்..... நம்ம பராக்கிரமம் எல்லாம் கொஞ்சம் தள்ளி வச்சுக்கலாம், இல்லனா கண்ணு பட்டுரும். இப்ப நீங்க எல்லாரும் ஒரு பனிரெண்டு வருஷம் பின்னாடி வந்து எங்க தோட்டத்துல நில்லுங்க...
-------------------------------------------

ஆங்... வந்தாச்சா, அந்தா பாத்தீங்களா அதான் ரோஜாத் தோட்டம். நம்ம ஆடு மாடுங்க எல்லாம் மேய்ஞ்சுற கூடாதுன்னு வேலி போட்ருக்காங்களா, அங்க கேட்டை தொறந்துட்டு உள்ளப் போவோம்.

இந்தா, இதான் பட்டன் ரோஸ், ரோஸ் கலர்ல அடுக்கடுக்கா, கொத்து கொத்தா பூத்து கிடக்கா, அந்த அது வெள்ளை பட்டன் ரோஸ். அந்தா அங்க ஆரஞ்ச், செகப்புன்னு பட்டன் ரோஸஸ் பாருங்க. அம்மாவுக்கு பட்டன் ரோஸ்னா ரொம்ப பிடிக்கும். அதான் நாலஞ்சு பட்டன் ரோஸ் நிக்குது.

தம்பிக்கு எப்பவும் பெங்களூர் வரைட்டி தான் பேவரைட். அதுலயும் ரெட் ரோஸ். கூடவே மஞ்ச ரோசாப் பூவும் சிரிக்குது பாருங்க.

இந்தா, இது பன்னீர் ரோஸ். என்னோட பேவரைட். அப்பாவுக்கும் இது ரொம்ப பிடிக்கும். தலைல கூட வைக்க வேண்டாம், அப்படியே பறிச்சு, பச்சையா திங்கலாம். வாசம் எப்படி இருக்கும்ங்குறீங்க, கும்ன்னு இருக்கும்.

அப்புறம், அந்தா, அங்க வெள்ளை, ஆரஞ்ச், ஆரஞ்ச் சிகப்புமா டபுள் கலர் எல்லாமே அழகோ அழகு.

இங்க எல்லாம் பூ பறிக்க அனுமதி உண்டுனாலும் ஊர்ல உள்ள புள்ளைங்க எல்லாம் ஒத்த ரோசாப்பூ வேணும்னு கேட்டு வந்தா, தம்பி தரமாட்டேன்னு தரைல உளுந்து பொரண்டு பொரண்டு அழுவான். அத்தன புள்ளைங்களும் அவனுக்கு படு ஐஸ் வைக்கப் பாப்பாங்க, பய மசிய மாட்டான். அய்யய்யோ, அவனப் பத்தி தனியா எழுதணும்ல நினச்சேன், ஹெலோ ஹலோ, தம்பியப் பத்தி நான் எழுதினத மறந்துடுங்க.

உங்கள நான் மல்லிகை தோட்டத்துக்கு கூட்டிட்டுப் போறேன். இந்தா இங்க நாலஞ்சு குத்து செடி நிக்குது பாத்தீங்களா, இதான் மல்லிகை செடி. செடி முழுக்க மொட்டா தான் இருக்கும். அப்புறம், அந்தா பிச்சி செடி, கனகாம்பரம் எல்லாம் நிக்குது பாருங்க. கனகாம்பரத்துல மஞ்சள், செகப்பு, ஆரஞ்ச், பச்சை, நீலம்ன்னு எல்லா வரைட்டியும் உண்டு. கூடவே டிசம்பர் பூவும்.

இந்த பூவெல்லாம் ஒட்டுமொத்தமா பறிச்சுட்டு வந்து நாலுகட்டு முத்தத்துல சொளவுல கொட்டி வச்சுட்டு ஊருல உள்ள பொம்பளைங்க எல்லாம் கால் நீட்டி உக்காந்து வம்பளந்துகிட்டே பூத் தொடுப்பாங்க.

லூஸ் விட்டு சாமிக்கி கட்டுறதுல இருந்து, சுத்தி கட்டுறது, சொட்டைப் போட்டு கட்டுறது, கால்ல கொக்கி போட்டு கட்டுறதுன்னு ஆளாளுக்கு டைப் டைப்பா கட்டுவாங்க.

அப்புறம் நாலு மணி பூ தோட்டம் முழுக்க பரவியிருக்கு பாத்தீங்களா, இது எல்லாம் வயலட் கலர். வெள்ளை, மஞ்சள், சிகப்பு எல்லாம் எங்க வீட்ல இல்ல.

அந்த வேலி ஓரத்துல நாட்டு செம்பருத்தி நிக்குதே, அதோட பூவ பறிச்சி தான் தலைக்கு வைக்க எண்ணெய் காய்ப்பாங்க. அப்படியே அந்த மருதாணி மரத்துல உள்ள இலையும் எண்ணெய் சட்டியில பொறியும்.

அப்பா, மருதாணி இலையை பறிச்சி, உருட்டி, வெயில்ல காய வச்சு, முத்துன தேங்காய அடிச்சு, துருவி, பால் பிழிஞ்சு, பெரிய உருளில விட்டு நல்லா வத்த காய்ச்சு, எண்ணெய் தனியா, கக்கன் தனியா பிரிஞ்சதும், உள்ளி, கருவேப்பிலை எல்லாம் போட்டு கூடவே காய வச்ச மருதாணி உருண்டைகளயும் போட்டு வைப்பாங்க. இன்னிக்கி வரைக்கும் நமக்கு எண்ணெய் காய்ச்சு தர்றது அப்பா தான்...
----------------------------------------------

கம்மிங் பேக் டு த பாயிண்டு.

இப்படி எல்லாம் எண்ணெய் காய்ச்சி, தலை நிறைய வச்சதால தானோ என்னவோ எனக்கு முடி கருகருன்னு நீளமா வளர ஆரம்பிச்சிடுச்சு. நம்ம சும்மாவே அராத்து, இதுல முடி வேற நீளமா இருந்தா கேக்கவா வேணும்?

தலைப் பின்னி விடத் தான் அப்பம்மா இருந்தாங்களே, ப்ரீ ஹேயர் விடுறதுல இருந்து, இறுக்கமா ஆயிரங்கால் பின்னல் வரைக்கும் போட்டு விடுவாங்க. முன்னால கொஞ்சம் முடிய மட்டும் தனியா வகிடு எடுத்து, அத அப்படியே சுருட்டி தொப்பி மாதிரி வச்சுட்டு, பின்னால குட்டி குட்டியா ஆயிரங்கால் பின்னல் போட்டுட்டு, அதுல பட்டன் ரோஸ் வச்சு அலங்கரிச்சு போனா அத்தன புள்ளைங்களும் ஆ-ன்னு வாயப் பொளக்கும். நதியா கொண்டை இன்னொரு ரகம்.

அப்புறம் இன்னொரு ஹேர் ஸ்டைல். அது என்னன்னா, அப்படியே மண்டைல அத்தன முடியையும் நேர் நேர் கோடு எடுத்து இருபத்து அஞ்சு, முப்பதா பிரிச்சுப்பாங்க, அப்படியே அதையும் மூணா பிரிச்சு பின்னிகிட்டே வந்தா, இந்த நைஜீரியன் பார்ட்டிங்க எல்லாம் எங்க பாட்டிகிட்ட ட்ரைனிங் எடுக்கணும். அப்படியே அத்தனையையும் பின்னி முடிச்சு, பின்னால வந்து ஒரு ரப்பர் பேண்டோ இல்ல, ரிப்பனோ வச்சு இறுக்கி கட்டுவாங்க. அதோட முடிஞ்சுதானா இல்ல, பின்னால கிடக்குற முடிய மறுபடியும், ஒரு பதினஞ்சு, இருபது பாகமா பிரிச்சு, அப்படியே முறுக்கி முறுக்கி, ஒரு கயிறு மாதிரி திரிச்சி, அப்படியே ரப்பர் பேண்டுக்குள்ள மடக்கி சொருகிடுவாங்க. அந்த நேரம் என்னை பாத்தா, இந்த ஆப்பிரிக்கன் அழகிங்க எல்லாம் மலைச்சி போய்டுவாங்க கேட்டீங்களா?

ஊருக்குள்ள ஒரு புள்ளையும் நம்ம ஹேர் ஸ்டைல்ல திரியக் கூடாது... எவளாவது அப்பம்மாகிட்ட வந்து அதே மாதிரி பின்னிட்டு போய்ட்டா, அன்னிக்கி அப்பம்மா க்ளோஸ். தூக்கிப் போட்டு மிதிக்க எல்லாம் செய்திருக்கேன் (அவ்வ்வ்வ் ஜாரி). ஆனாலும் என்னை அப்படி திமிரோட வளர்த்தது அப்பம்மா குத்தம் தான். அம்மா கைக்குள்ள நான் முழுசா போனதே சிஸ்த் வந்ததுக்கப்புறம் தான்.

அப்புறமா தான் நாம இந்த சமூக சேவை, அது இதுன்னு (அட நம்புங்கப்பா) பசங்க கூட அதிகமா சுத்த ஆரம்பிச்சுட்டேனா, ஒரு நாள் அவசரமா ஒருத்தருக்கு ரெத்தம் தேவை, வா, ஊருக்குள்ள போய் கேன்வாஸ் பண்ணி நாலஞ்சு பேர குண்டு கட்டா தூக்கிட்டு போகணும்னு பிரெண்ட் ஒருத்தன் அவசரப் படுத்தினான். இருடா, பின்னல்ல சிக்கு விழுந்திடுச்சு, அவுக்கவே முடியலன்னு பின்னல் கூட மல்லுக் கட்டிட்டு இருந்தேனா, உனக்கு மேக் அப் பண்ணவே அரை நாளு ஆவும், நான் மாலிய கூட்டிட்டுப் போறேன்னு அவன் கிளம்ப போக, அந்த மாலினி புள்ள வரவர எப்பப் பாத்தாலும் இந்த மூர்த்தி கூட ஒட்டிகிட்டு திரியுறா, அவள அவன் கூட அனுப்பலாமா?
பக்கத்துல இருந்த கத்திரிய எடுத்து ஒரே வெட்டா முடிய வெட்டிப் போட்டுட்டு, இந்தா வந்துட்டேன்னு கிளம்பி போயிட்டேன்.

அவ்வளவு தான், நமக்கும் அந்த அல்ட்ராசிட்டி ஹேர் ஸ்டைலுக்கும் ஏற்பட்ட காதல், பந்தம் பாசம் எல்லாத்துக்கும் ப்ரேக் அப் ஆகிப் போச்சு. அப்புறம் முடி வளர்ந்தாலும் ஒரு ஸ்டேஜுக்கு மேல வளர விட்டதில்ல.

ஆங்... அந்த பூ விசயத்த மறந்துட்டேனே, கனகாம்பரமும் மல்லிகையும் வச்சா எனக்கு உசிரே போற மாதிரி தலைய வலிக்குமா, அதனால அத எல்லாம் எப்பவோ டைவேர்ஸ் பண்ணிட்டேன். நமக்கு கூட மாட ஒத்தாசையா இருக்குறது இப்போதைக்கு பிச்சிப் பூ தான். அத எல்லாம் என் கையால தொடுத்து தலைல வச்சா தனி கெத்து தான்...

அவ்வளவு தான், வீர தீர ப்ரதாபங்கள் இப்போதைக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. எல்லாரும் போய் அவங்கவங்க வேலையைப் பாருங்க...டொயிங்.....
--------------------------------------------
அப்புறம், மேல சுத்தினது மெழுகுவர்த்தி இல்லையாம், கொசுவர்த்தி சுருளாம், இதெல்லாம் நமக்கு எங்க தெரியுது
--------------------------------------------

அட, ஆயிரங்கால் பின்னல்ன்னு கூகிள்ல தேடினா ஒத்த போட்டோ கூட சிக்கல, அதனால ஒத்த ஜடையோட ஒரு புள்ளைய சுட்டு கொண்டாந்து போட்ருக்கேன். புள்ள நம்ம அளவு அழகா இல்லனாலும், பாக்க எதோ சுமாரா இருக்குல....

3 comments:

  1. ***அட, ஆயிரங்கால் பின்னல்ன்னு கூகிள்ல தேடினா ஒத்த போட்டோ கூட சிக்கல, அதனால ஒத்த ஜடையோட ஒரு புள்ளைய சுட்டு கொண்டாந்து போட்ருக்கேன். புள்ள நம்ம அளவு அழகா இல்லனாலும், பாக்க எதோ சுமாரா இருக்குல....***

    Check this out, GD!

    http://kanmani-anbodu.blogspot.com/2013/10/blog-post.html

    ReplyDelete
  2. \\மெழுகுவர்த்தி சுத்த ஆரம்பிச்சிடுச்சு\\
    அது கொசுவர்த்தி இல்ல?

    ReplyDelete