Thursday 11 August 2016

கபாலி - நான் உணர்ந்தது





அந்த நாள் எனக்கு நல்லா நியாபகம் இருக்கு. ரொம்ப பரபரப்பா கிளம்பி, டிக்கட் கிடைக்காதுன்னு எல்லாரையும் அலற விட்டு, கடகடன்னு டிக்கெட் வாங்கிட்டு தியேட்டர் உள்ள போய் உக்காந்து சுத்தி முத்தி பாத்தா, உள்ள இருந்தது மொத்தமே பதினோரு பேரு. அதுலயும் நாங்க மட்டுமே ஆறு பேர் இருந்தோம். அந்த படம் – கோச்சடையான்.

நேத்தும் அந்த நாளுக்கு கொஞ்சமும் பரபரப்பு குறையாத நாளு. அஞ்சே காலுக்கே போய்டணும், இல்லனா பார்க்கிங் இடம் கிடைக்காது, படத்துக்கு டிக்கெட் கிடைக்காதுன்னு நானா ஸெல்ப் பரபரப்பு அடஞ்சுகிட்டேன். ஆறு மணியாகியும் கிளம்பாதவங்களுக்கு எல்லாம் போன் போட்டு, போச்சு, போச்சு, இன்னிக்கி படம் பாக்கவே முடியாதுன்னு சாபம் எல்லாம் போட்டேன்.

ஆறே காலுக்கு தியேட்டருக்கு வெளில காலடி எடுத்து வச்சா, ஒரு காக்கா, ஈ, பூனை கூட அந்த இடத்துல இல்ல. ஒருவேளை இன்னிக்கி ஷோ கிடையாதோன்னு மலங்க மலங்க முளிச்சவள கைத்தாங்கலா கூட்டிட்டு போய் ஒரு சீட்ல உக்கார வச்சாங்க. இதுல சீட் நம்பர் வேற பாத்து உக்காரணுமாம். போன நாலு பேரோட, வேற யார் தலையாவது தெரியுதான்னு பரிதவிப்போட தேட ஆரம்பிச்சேன். ஹப்பாடி, எனக்கு முன்னாடி நாலஞ்சு சீட் தள்ளி ஒரு ரெண்டு பேரு உக்காந்துட்டு இருந்தாங்க...

...................................................

ஆக, மொத்தத்துல படம் ஒரு மொக்கை அப்படின்னு நான் சொல்லுவேன்னு உடனே முடிவு பண்ணிடாதீங்க. ஏன்னா படம் ஆரம்பிச்ச வேகத்துல நான் அப்படி தான் முடிவு பண்ணி வச்சிருந்தேன். யோவ், என்னையா இன்ட்ரோ சீன் அது? ஒரு உப்பு, மொளகா காரம் எதுவும் இல்லாம டொய்ங் டொய்ங் டொய்ங்னுகிட்டு.... ரஜினா யார் தெரியுமா? அவர் எப்படி பட்ட மாஸ் தெரியுமா? அவருக்கு எப்படி பட்ட இன்ட்ரோ குடுக்கணும் தெரியுமா?

அந்த பறவைய தொறந்து விட்டாரே, அப்படியே படபடன்னு அத்தன கூண்டோட கதவையும் தொறந்து விட வேணாமா? ஹே, தலைவருடான்னு நாங்களும் கை தட்டி இருப்போம்ல...

சரி, விடுங்க, என் கவல எனக்கு. ஆனா நான் க்ளாஸ் எடுக்குறப்பவே பிள்ளைங்ககிட்ட புலம்புற விஷயம் இது. நான் ரொம்ப சுயநலமா இருக்கேன். என் வீட்ல பறவைய அடச்சு வச்சி வளர்க்குறேன். அந்த பாவத்த போக்கிக்க, அதுகள வெளில தொறந்து விட்டா அதால வாழ முடியாதுன்னு எனக்கு நானே சாக்கு போக்கு சொல்லிக்குறேன்னு.

இந்த படத்துல ரஜினி என் செவுட்டுலயே அறையுற மாதிரி சொல்லிட்டார், வெளில போய் பொழச்சுக்குறது அதுங்க சாமார்த்தியம், ஆனா அடைச்சு மட்டும் வைக்க கூடாது, அது வெளில கஷ்டப்படுறத விட கொடுமையானதுன்னு. உண்மை தானே.

......................................

அப்புறம், படம் பாக்குறப்ப ஐயோ இந்த சீன் மொக்க, அந்த சீன் படு மோசம்னு எல்லாம் மனசுக்குள்ள நிறைய ஹிண்ட்ஸ் எடுத்து வச்சிருந்தேன். அப்படியே படம் முடிச்சு வந்ததும் நம்ம எழுத்துல அதெல்லாம் பெரிய சூரி மாதிரி காட்டிடணும்னு நினைச்சுகிட்டே வந்தேனா, படம் நீண்டுகிட்டே போக போக எல்லாமே மறந்து போச்சு. இப்ப எனக்கு என்ன எழுதன்னு தெரியலயே....

.............................................

எனக்கு ஒரு சந்தேகம்டே, தமிழ் நேசன் கூட நம்மாளு எத்தன காலம் இருந்தாரு? எத்தன நாள்ல அவரு பெரிய ஆளா வந்தாருன்னு. ஏன்னா, பிளாஷ் பேக் ஆரம்பிச்சு, தமிழ்நேசன் கூட போறப்பவே அந்த புள்ள மாசமா இருக்கு. அதுவும் ரஜினி சார்ஜ் எடுத்தப்ப அது வயிறு பானை சைஸ்ல இருக்கு. ஐ மீன், வாட்ஐ மீன், அது பிரசவ காலத்துலயே தான் இருக்கு. முன்னாடி எல்லாம் தமிழ் சினிமாவுல ஒரே பாட்டுல ஹீரோ பெரிய ஆளா வந்துடுவார். இங்க புதுசா, ஒரே ஒரு பெரிய வயித்த காட்டிகிட்டே ஹீரோவ டானா மாத்திடுறாங்க.

ஆனா சும்மா சொல்லக்கூடாது, அந்தப் புள்ள குமுதவல்லி அழகு, நடிப்பு எல்லாம் செம. குட்டி குட்டி டயலாக்ஸ் தான். ஆனாலும் அந்த பார்வை, அந்த புன்னகை, அடியே திமிர் புடிச்சவளே...

நாலு நாள் முன்னாடி தான் எனக்கு திடீர்னு படையப்பா நியாபகம் வந்துச்சு. மின்சார கண்ணாபாட்டுல “ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன், என் பாதத்தில் பள்ளிக் கொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்”ன்னு ரம்யா கிருஷ்ணன் பாடுறப்ப செம கெத்தா இருக்கும். நான் இப்படியான ஆணை தான் விரும்புறேன். அவனை ஆளுறது தான் என் பெண்மைக்கு அழகுன்னு சொல்ற விதம் எல்லாம் அத்தன அட்டகாசம். இங்க குமுதவல்லி அதே திமிரோட தான் திரியுறா. பாரேன், எப்படி பட்ட ஆணை நான் ஆண்டுக்கிட்டு இருக்கேன்னு.

..............................................

ஆங், சொல்ல மறந்துட்டேனே, யார்யா அது ஜீவா? உடனே அட்டகத்தி தினேஷ்ன்னு மொக்க போட்ராதீங்க, ஆளு செம கலக்கல். ரஜினிய பாத்ததும் ஒரு மாதிரியா தலைய குனிச்சுகிட்டு, கண்ண அங்கயும் இங்கயும் உருட்டிகிட்டு, ஒரு மாதிரி வெறப்பா நிக்குற ஸ்டைல் ஆகட்டும், முந்திரி கொட்டை மாதிரி பாய்ஞ்சு பாய்ஞ்சு யாரும் ரஜினிய நெருங்க விடாம தடுக்குற ஸ்டைல் ஆகட்டும் ஆளு கொன்னுட்டாரு.

...................................................

அப்புறம் அந்த பொண்ணு. டானுக்கே டான். ஐ மீன் அவ்ளோ பெரிய ரஜினிய கொல்ல வர்ற புள்ள. அந்த புள்ள எப்படியா இருக்கணும்? சும்மா டாம் டீம்ன்னு நின்னு பின்னி பெடலெடுக்க வேணாமா? ஆரம்பத்துல அத காட்டுன தோரணைய அப்படியே டம்மி பீஸ் ஆக்கிட்டீங்களே மக்கா. ஐயோ அப்பா, ஐயோ அப்பான்னு பயந்துகிட்டே இருக்கு. நான் இருக்கேன்பா உனக்கு, நான் இருக்குறப்ப எவனும் உன்னை தொட முடியாதுன்னு தில்லா திமிரோட இருந்துருக்க வேணாமா அது. அடப்போங்கப்பா, பொண்ணுனா இப்படி தான்ன்னு சொல்லிட்ட மாதிரி இருக்கே.

...................................................

எனக்கு படங்கள்ல இந்த சண்டை காட்சிகள், கொலை பண்ற சீன்ஸ் எல்லாம் வந்தா வயித்த கலக்கிடும். கண்ண அங்க இங்க திருப்பி, அத பாக்காம அட்ஜஸ்ட் பண்ணிடுவேன். என்னமோ அப்படியே வளந்துட்டேன்னா, ஆனா பாருங்க, இந்த படத்துல க்ளைமாக்ஸ் சீன தான் வச்ச கண்ணு எடுக்காம பாத்துகிட்டே இருந்தேன். ஏன்னா, மொத்த படத்துலயும் அதுல தான் ரஜினி மாஸா தெரிஞ்சாரு. பட்டு பட்டுன்னு துப்பாக்கிய எடுத்து அவர் சுடுற ஸ்டைல் இருக்கே... (ஆக, கதைல உயிர்விட்ட கேரக்டர்கள் என்னை மன்னிக்க) கலக்கல்டா, ரஜினிடா, கபாலிடா... இன்னும் நிறைய டா.... டா.... டா... டா....

............................................

இன்னும் வேற ஏதாவது சொல்லணுமான்னு தெரியலயே.... கொஞ்சம் யோசிக்கலாம்னு பாத்தாலும் துப்பாக்கிய எடுத்து ரஜினிய பொட்டு பொட்டுன்னு சுட்டுடுராங்களே...

ஆங், இருங்க, நான் இந்த சமூகத்துக்கு கருத்து ஏதாவது சொல்லாம போய்ட்டா தப்பாகிடாதா?

படம் முடிச்சுட்டு வர்றப்ப எனக்குள்ள ஏகப்பட்ட குழப்பங்கள். ஏன், படம் நல்லா தான இருக்கு. ஆனா ஏன் நமக்கு பிடிக்கல, இதுல எத நாம குறை சொல்ல முடியும்? நம்ம இஷ்டத்துக்கு அவங்க படம் எடுக்க முடியுமா? அவர் பெஸ்ட் தானே அவர் குடுத்துருப்பார்ன்னு ஏகப்பட்ட யோசனைகள். இங்க நான் அவர் அவர்ன்னு சொன்னது டைரக்டர்ன்னு எடுத்துக்கோங்க. நிஜமாவே நல்ல ஒரு முயற்சி தான். நான் இந்த இடத்துல அமிதாப்ப வச்சு பொருத்தி பாத்தேன். பிக்கு மாதிரியான படங்கள்ல கூட அமிதாப் எவ்வளவு அழுத்தமா பொருந்தி போய்டுறார். அதே மாதிரி இந்த படத்துல ஏன் ரஜினி பொருந்தி போக கூடாது?

வேற ஒண்ணுமே இல்ல, ரஜினினா நமக்கு ஒரு எதிர்பார்ப்பு, அவர் இப்படி தான் இருக்கணும், அவர் இப்படி தான் இன்ட்ரோ ஆகணும், அவர் இப்படி தான் ஸ்டைலா பாக்கணும்ன்னு எல்லாம் நமக்குள்ள ஒரு ஸ்கெட்ச் போட்டு வச்சிருக்கோம். அதுல இருந்து நம்மால மீள முடியல. இது ஆரம்பம் தான, போக போக இப்படி ஒரு ரஜினிய பழகிப்போம்னு நம்புறேன். ஆக மொத்தத்துல ரஜினி படம்னு நினச்சு பாக்கப் போனா பல்ப் தான். அதே நேரம் அந்த இடத்துல வேற யாரையாவது பொருத்தி பாத்தா, படம் ஓகே. இன்னொரு தடவ பொறுமையா உக்காந்து படத்த பாக்கணும். வித்யாசமான ரஜினிய ரசிக்க கத்துக்கணும்.

..............................................



திடீர்னு ரஜினிய இப்படி எல்லாம் ஏத்துக்க நமக்கு மனசு வருமா என்ன?

இந்தா பிக்கு படத்துல அமிதாபுக்கு இருந்த மாதிரி ரஜினிக்கு மலசிக்கல் இருக்குன்னு சொன்னா நாம ஒத்துப்பமா? அட, இத எழுதுன இந்த நிமிஷம் அந்த கேரக்டர் ரஜினி பண்ணினா எப்படி இருக்கும்னு யோசிச்சு பாத்தேன். செம. என் பார்வைல ரஜினி சரியா பொருந்துறார். யாராவது ஒரு டைரக்டர் பிக்குவ தமிழ்ல எடுத்து, அதுல ரஜினிய நடிக்க வைங்க சார், உங்களுக்கு புண்ணியமா போகும்.

...............................................................


ஹலோ டைரக்டர் சார்,

அதென்னங்க சார், படத்துல தமிழன், தமிழ் அப்படி இப்படின்னு செம தீம் வச்சிருக்கீங்க, ஆனா அந்த பாட்டு எல்லாம் கேளுங்க, எல்லாருமே நாக்கை கடிச்சுட்டு தான் பாடவே ஆரம்பிக்குறாங்க. த்த... த்த...ன்னு கட்ட நாக்குலயே பாடுறாங்க. அவங்க நாக்குல எதாச்சும் வசம்பு தடவி விட்ருக்க கூடாதா? பாவம்ல தமிழ். எமெர்ஜன்சி வார்ட்ல இருக்கு, போய் கொஞ்சம் அத காப்பாத்த ட்ரை பண்ணுங்க....

காபாலிக்கு தான் போதை மருந்து கடத்துற பழக்கம் இல்லையே, அப்புறம் எப்படி அவரோட ஸ்கூல் கேம்பஸ்குள்ளயே, அதுவும் அவர் கண் எதிர்லயே அந்த பொண்ணுக்கு போதை மருந்து சப்ளை செய்யப்படுறத கண்டிக்காம பாத்துக்கிட்டே இருக்கார்?

அப்புறம், அந்த ப்ளாஷ் பேக்லயே நீங்க சொல்ல வந்த கருத்துக்கள சொல்லி இருக்கலாம், சும்மா சும்மா, கோட் கோட்னே பேசுறீங்களா, எனக்கே அந்த கோட்ட கிழிச்சி எறிஞ்சுட்டு பைத்தியக்காரி ஆகிடலாம் போல இருந்துச்சு. இந்த தமிழன்ங்குற தீம் இருக்கே.... அய்யய்யோ, இன்னும் சொல்லணும் போல இருக்கே, ஆனா இந்த இணைய போராளிகள் பொங்கிடக் கூடாதே... அதனால நான் பேசாம பாப்கார்ன் சாப்பிடவே போய்டுறேன்....

........................................

கட்ட கடைசியா ஒண்ணு, படம் முடிச்சுட்டு வெளில வந்தப்ப, கூட வந்த பொடிசுங்க ரியாக்சன கவனிச்சேன். இந்த பீசா சாப்ட்டுட்டு காக்கா முட்டைங்க ரெண்டு பேரும் ஒரு ரியாக்சன் விடுவாங்களே, சேம் ரியாக்சன், சேம் டயலாக்....

........................................

ஆமா, நான் இப்ப என்ன தான் சொல்ல வரேன், படம் நல்லா இருக்கா இல்லையா? அது தெரியாம தான நானே அப்பவே போறேன்னு போறேன்னு எண்டு கார்ட் போட்டும் இங்கனயே சுத்திகிட்டு இருக்கேன்....

.................................

10 comments:

  1. படம் பார்த்து வெளில வந்தப்ப எனக்கும் ஒரே குழப்பம் அக்கா.

    விமர்சனம் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் மகேஷ்... எனக்கும் ஒரே குழப்பம் தான்

      Delete
  2. உணர்ந்ததைப் பகிர்ந்தீர்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி. ஒருவேளை இன்னொரு தடவ பாத்தா வேற மாதிரி தோணுமோ என்னவோ

      Delete
  3. review really super. also the way of narration.

    ReplyDelete
  4. உள்ளதை உள்ளபடி சொன்ன விமர்சனம்....
    இப்படியெல்லாம் பேசினால் போராளிகள் பொங்கிருவாங்க....

    ReplyDelete
    Replies
    1. முதல் தடவையா படத்த பாத்தப்ப எனக்கு தோணினது இதெல்லாம். கதை எல்லாம் தெரிஞ்சுக்காமலே தான் படத்துக்கு போனேன்.

      Delete
  5. 2.0 vimarsanathodu 1.0 gayathri la irunthu 2.0 jeeva vaa intha blog la ezutha aarampiyungka akkaa.

    2.0 padam fdfs paarthen padam rompa pidichirukku naalaikku mindum paarkka pooren.

    ReplyDelete