Monday 9 July 2012

எல்லாமும் நீயே....!


தேசம் மறந்த நேசமும் நீ...!
வேசம் கலைத்த பாசமும் நீ...!
மவுனம் பேசும் பாசையும் நீ...!
கண்கள் காட்டும் காட்சியும் நீ...!

இன்பம் துய்க்கும் இசையும் நீ...!
துன்பம் மறக்கும் விசையும் நீ...!
ஆயுள் நனைக்கும் மழையும் நீ...!
அஹிம்சையாய் வதைக்கும் புயலும் நீ...!

மனம் விரும்பும் மஞ்சமும் நீ...!
தினம் நினைக்கும் நெஞ்சமும் நீ...!
உணர்வு வருடும் தென்றலும் நீ...!
என்றும் ஓயா அலையும் நீ...!

கனவில் இம்சிக்கும் ராட்சசனும் நீ...!
என்னை மீட்டெடுக்கும் ரட்சகனும் நீ...!
காதல் வாழ்வின் நாயகன் நீ...!
பயணம் தொடரும் சுவாசமும் நீ...!

1 comment:

  1. கனவில் இம்சிக்கும் ராட்சசனும் நீ...!
    என்னை மீட்டெடுக்கும் ரட்சகனும் நீ...!
    காதல் வாழ்வின் நாயகன் நீ...!
    பயணம் தொடரும் சுவாசமும் நீ...!/அப்படியா.....சொல்லவே இல்ல? :P

    ReplyDelete