Sunday 17 February 2013

மனதோடு ஒரு ராகம்...!

வான் விட்டு பிரியாத நிலவாய் நாமும்
வாழ்வோடு இணைந்து ஒரு பயணம் செல்வோம்...!

தோழனாய் நீ வந்த காலம் மாறி
என் உயிரோடு கலந்திட்ட மாயம் என்ன?

கார்முகில் பொழிகின்ற மழையை போலே
என் மனதோடு நீ ஒரு ஜாலம் செய்தாய்...!

கிழக்கினில் உதித்திட்ட சூரியன் போலே
வந்தது நமக்குள்ளே உறவின் பந்தம்...!

கண்மூடி திறக்கின்ற நொடியில் நீயும்
என் நரம்போடு ஓர் இசை மீட்டிச்சென்றாய்...!

கனவுக்குள் புகுந்தென்னை திருடிக்கொண்டே
சலிக்காமல் நீயும் ஓர் காவல் செய்தாய்...!

விழிபார்த்து அல்ல, என் உணர்வின் வழி நீ
ஊடுருவிக்கொண்டே என் இதயம் அடைந்தாய்...!

என் நாடி நரம்பெங்கும் சிலிர்த்தது கொண்டே
புகுந்திட்ட உன்னை நான் முழுதாய் உணர்ந்தேன்...!

எத்திசையும் நிறைந்து நிற்கும் காற்றைப் போலே
என் சுவாசம் முழுதும் நீயாய் நிறைந்தே கொண்டாய்...!

இளங்காலை சிரிக்கின்ற வெண்பனிக் கொண்டு
என் தேகம் முழுதுமாய் சிலிர்க்கச் செய்தாய்...!

நீரோடை பிரதிபலிக்கும் பிம்பமாய் நானும்
நீயாக உருமாறி உன் உயிரில் கலந்தேன்...!

இனி நமக்குள் பிரிவொன்று என்றும் இல்லை
உயிர் கோர்த்து வாழ்வோம் என் வாழ்வே நீ வா...!

1 comment:

  1. தோழனாய் நீ வந்த காலம் மாறி
    என் உயிரோடு கலந்திட்ட மாயம் என்ன?
    கிழக்கினில் உதித்திட்ட சூரியன் போலே
    வந்தது நமக்குள்ளே உறவின் பந்தம்...!///
    வரவர, வார்த்தைகளின் கோர்வைகள் மிக அழகாக வந்து விழுகின்றன .....
    உளமார்ந்த வாழ்த்துகள் !

    ReplyDelete