Sunday 3 March 2013

நிஜங்களின் கனவு...!

புதைக்குழி ஒன்று என்னை ஈர்ப்பதாய் ஓர் உணர்வு....
சகதிக்குள் நான் மெல்ல மெல்ல மூழ்கிக்கொண்டிருக்கிறேன்...

சுவாசப்பாதையின் வழுக்குப்பாதைக்குள்
உட்புகுந்து ஊர்ந்து செல்கிறது
இடம்பெயர்ந்த மண்புழு ஓன்று....

நட்புக்கரம் நீட்டி பாசக்கயிறு வீசும்
எமன் பார்த்து புன்னகைக்கிறேன்
புது விடியல் காணும் மலர்ச்சியாய்....

கனவுதான் என்றாலும்
மூழ்கித்தான் போவேனோ,
இல்லை மூச்சடைத்து எழுவேனோ...

சிந்தையில் பாரதி சிரித்துவிட்டுப் போகிறான்...!

1 comment: