Saturday 13 April 2013

காதல் காதல்...

மவுனம் காதலின் மொழியாகும்...
புன்னகை என்றும் வசமாகும்...
காத்திருக்கும் கணம் சுகமாகும்...
உணரும் வலியும் பறந்தோடும்...

காதல் காரணம் அறிவதில்லை...
அறிய முயன்றால் காதலில்லை...
காற்றுக்கு தனியாய் வாசமில்லை...
காதலில் தனித்தனி சுவாசமில்லை...

காதல் நம்மில் வந்து விட்டால்
புவியில் எதுவும் அழகாகும்...
ஒவ்வொரு நொடியும் யுகமாகும்
தூக்கம் கூட சுமையாகும்...

எத்தனை நாட்கள் காத்திருந்தேன்...
உன் மவுனம் கரைய தவமிருந்தேன்...
நீ சிரிக்கும் அந்த சிரிப்பொலியில்
என் காதலின் அர்த்தங்கள் காண வந்தேன்...

நீ வாயென சுட்டும் விரல் நுனியில்
என் வானவில் வர்ணங்கள் உயிர்த்தெழுமே...
உன்னை அணைத்துக்கொள்ளும் அத்தருணம்
என்றும் எனக்குள் உறைந்திடுமே...

வாழ்வின் மொத்தம்... இனி நீயும் நானும்
உயிர் கோர்த்துக் கொள்வோம் ஒன்றாக...
சிறு கலகம் பூண்டு... ஊடல் கொண்டு
வாழ்வை ருசிப்போம் இனி நாமும்...!

1 comment:

  1. அருமை...

    கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete