Saturday 13 April 2013

கவிதைகளைக் காணோம்...!

மழலையின் தேன் ஊறும் உதடுகள்
புன்னகை சிந்தியதால்
இறுக்கி பிடித்த துயரங்கள் காணோம்...!

தேனுண்டு மயங்கி கிடக்கும்
பூக்களின் இதழ்களுக்கிடையில்
வண்டுகளின் ரீங்காரத்தை காணோம்...!

தூறலில் நனைந்து கரைந்து போனதால்,
சில்லிடும் வான்மகள் கண்டு
வில்லாய் வளைந்த வானவில் காணோம்...!

கண்சிமிட்டும் விண்மீன்கள் கண்டு
பவுர்ணமியும் ஒளிந்துக் கொண்டதால்
இரவு நேர வெண்ணிலவை காணோம்...!

ஜன்னலோர பயணத்தில் ஓர் நாள்
அவன் என்னை கடந்து செல்ல முயல்கையில்,
சாலையோர மரங்கள் காணோம்...!

அவன் என் கன்னங்களை சிவக்க வைத்து
கரம் பற்றி, காதலை யாசித்து நின்றதால்,
பாழாய்ப்போன என் நாணம் காணோம்...!

பின் என் கவிதைகளே அவனாகி,
அவனும் காணாமல் போனதால்
என் கவிதைகளையும் காணோம்...!

No comments:

Post a Comment