Friday 13 March 2015

பார்த்திக்காக -4



வாழ்க்கைல கடினமான பகுதின்னு
எதுவுமே இல்ல பார்த்தி...

பிரிவும் சங்கடங்களும்
எல்லாருக்கும் இயல்பானது தானே...

எப்பவுமே நாம நினச்சது எல்லாம்
நடக்கணும்னா எப்படி பார்த்தி,
வாழ்க்கைல ஒரு விறுவிறுப்பு வேணாமா?

இங்க பாரு, இப்போ நடந்துட்டு இருக்குறது
ஒரு அனுபவம்...
அத ரசிக்க கத்துக்கோ பார்த்தி...
சின்னப்புள்ள மாதிரி வருத்தப்பட்டுட்டு...
கண்ணத் தொடச்சுக்கோ...

நான் இங்க நல்லா தான் இருக்கேன் பார்த்தி...
சந்தோசமா இருக்கேன், காலேஜ் போறேன்
நல்லா சாப்டுறேன்...

உன்உள்ளங்கை தான் காணோம் பார்த்தி...
மனசு கனத்துப் போகும்போது
அது தான ஆறுதலா
என் கைய்யோட கை கோர்த்துக்க சொல்லும்...

எப்பவும் என் முதுகுல
நீ அழுத்திட்டு இருக்குறப்ப
இலவம் பஞ்சு மாதிரி
மனசு லேசாகிடும்ல பார்த்தி,
இப்ப உன் கை இல்லையா,
முதுகு பக்கமா பெரிய பாரம்
அழுத்துது பார்த்தி...

பார்த்தி, பார்த்தின்னு பாக்குற பக்கமெல்லாம்
நீ தான் தெரியுற பார்த்தி...
மத்தப்படி நான் நல்லா இருக்கேன் பார்த்தி...

நீ தான் சின்னப்புள்ள மாதிரி புலம்பிட்டே இருக்க...

காதலுடன்
-உன் ப்ரியம்வதனா

5 comments:

  1. தொடரட்டும்
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  2. வணக்கம்
    ஆகா... ஆகா.. தொடரட்டும்.... த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. உயிரோட்டமான எழுத்து நடைங்க உங்களது

    ReplyDelete