Saturday 14 November 2015

அனுமதி வேண்டும்



மனம் உன்னைத் தான் தேடிக்கொண்டிருக்கிறது...
உதடுகள் இல்லையென்று
பொய் கூற துடித்துக்கொண்டிருக்கின்றன...

உன் ஈரத்தின் பாரம் தாங்காமல்
உன்னிடமே குடை சாய்கிறதென் மனம்.

உன்னோடு கொஞ்சம் கரம்கோர்த்து
பாரம் குறைக்கவாயென்று கேட்கத்துடிக்கும்
மனதிடம் ஏதேதோ சொல்லித்
தட்டிக்கழிக்கப் பார்க்கிறேன்...

தானே சுரந்து நிற்கும் கண்களுக்கு
அணை போடும் வழியென்னவென்று
உன்னிடத்தில் ஒரு பதிலிருக்கலாம்...

எப்படி கேட்பதென்று தெரியவில்லை
ஆயினும் கேட்டுத்தான் ஆக வேண்டும்...

இல்லையில்லை, கேள்விகள் பயனற்றவை...
அதற்கான பதில்களும் அவசியமற்றவை...

கொஞ்ச நேரம் உன்னோடு மவுனித்திருக்கிறேனே...
அனுமதி கிட்டுமா?

11 comments:

  1. மனதை குளிர்விக்கும் வரிகள்... நன்று.!

    ReplyDelete
  2. அனுமதிக்கின்றோம்....மா

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா வந்துட்டேன் <3

      Delete
  3. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. சிந்திக்க வைக்கும்
    சிறந்த பாவரிகள்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.... என்ன சிந்திச்சீங்கன்னு தெரியலயே

      Delete
  5. கவிதை நன்று. பாராட்டுகள்.

    ReplyDelete