Monday 4 April 2016

ஐ லவ் யூ பார்த்தி




இந்த புகைப்படத்த பாரு பார்த்தி,

எவ்வளவு பிரகாசம் படர்ந்திருக்கு
அந்த முகங்கள்ல...

நீயே எல்லாமும்னு
சரணாகதி அடைஞ்ச
தருணங்கள் பார்த்தி அதெல்லாம்...

உன் முகத்தைக் கூட பாரேன்...

எத்தனை கம்பீரமான புன்னகை
உன்னோடது...

என்னோட கண்கள பாத்தியா?

ஒரு குறும்பு சிறுமியோட குறுகுறுப்பு
தெரியுதுல அதுல...

நீ என் கைமேல படுத்துருக்க...
நான் உன் நெஞ்சோடு
படுத்துருக்கேன்...

அதுவும் உன்னையே
விழுங்குற மாதிரி பாத்துட்டு...

இந்த தருணத்த
பொய்ன்னு சொல்றியா பார்த்தி...

இது எல்லாமே
நடிப்பும் நாடகமும் கலந்ததுன்னு சொல்றியா?

வலிக்குது பார்த்தி,
ரொம்ப வலிக்குது பார்த்தி...

எழுத எழுத
தீரவேப்போறதில்ல பார்த்தி...

ஆறாத ரணமா கெடந்து
கொஞ்சம் கொஞ்சமா
என்னை கொல்லுது பார்த்தி...

எத்தன முறை யோசிச்சாலும்
ஒண்ணே ஒண்ணு மட்டும் தான்
புரியுது பார்த்தி...

ஐ லவ் யூ பார்த்தி....

2 comments:

  1. நல்லாருக்கு காயு...யதார்த்தவியல்..

    கீதா

    ReplyDelete