Saturday 26 March 2016

அன்பின் மிச்சமென கொள்க...




அந்த வாழ்த்தட்டையின்
உள்ளிருந்து கிளம்பிய ஒலி
இன்னமும்
ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது...

பார்த்தி,
எப்பொழுதேனும் உனக்கு
நினைவிற்கு வருகிறதா?

இந்த ஒலி அடங்கும் மறுநிமிடம்
உன்முன் நிற்பேன் என்றாய்...
ஒலி அடங்கி ஒரு ஏமாற்றத்தை
ஜீரணிக்க முடியாதென்பதாலோ என்னவோ
இன்னமும் அதை மாரோடு அணைத்திருக்கிறேன்...

குறுகுறுவென என் கண்களை
பார்த்தவாறே சட்டென
இழுத்தணைத்து நீயிட்ட முத்தம்
எத்தகைய நேசத்தை
வெளிப்படுத்தியது என்பதை
நீ அறிவாயா?

உலகம் மறந்து,
உற்றார் மறந்து,
சுற்றம் மறந்து,
அன்பை மட்டுமே
ப்ராதனப்படுத்திய தருணங்கள் அவை...

அந்த அன்பை உதறி
வெறுப்பை உமிழ்ந்து
அத்தனையையும் பெற்றுவிடலாமென
எந்த காலக்கோட்டில் எழுதி வைத்த விதியென 
விளக்கிடுவாயா நீ...

பார்த்தி,
எதுவும் பொய்யில்லை...
இதோ நீ பற்றிய விரல்,
நீ எழுதி முத்தமிட்ட உன் பெயர்...
எல்லாமுமாய் நீயிருக்கிறாய்...

இவளிடத்திலிருப்பது இவளில்லை...
பார்த்தி விதைத்து சென்ற அன்பின்
மிச்சமென கொள்க...


.

2 comments: