Saturday 18 August 2012

உன் கண்களில்...!


தினம் தினம் ஒரு கவிதை,
அது புதுக் கவிதை...
புதிதாய் ஒரு காதலை
புதிதாய் ஒரு நேசத்தை
புதிதாய் ஒரு பாசத்தை
நிரப்பி விட்டு செல்கிறது...!

உன் கண்கள் சொல்லும்
புத்தம் புது கவிதை...
உன் தீண்டல் சொல்லும்
ஓராயிரம் கவிதைகள்...
மழைக்கால நேசத்தை...
வெயில் கால கோபத்தை...
உன் கெஞ்சலை...
உன் அக்கறையை...
உன் கொஞ்சலை...
உன் ஆளுமையை...
உன் குறும்பை...!

என் மேல் மொத்தமாய் 
நீ வைத்திருக்கும்
அத்துனை உணர்வுகளையும்...
உன் தாயாய்
உன் சேயாய்
உன் தோழியாய்
உன் யாதுமானவளாய்...!

நீ எழுதிய அத்தனை 
கவிதைகளின் மொத்த தொகுப்பாய்...
உன் கண்கள் எனக்குள் 
காதலை விதைத்த கதை...!
உன் கண்கள் எனக்குள் 
உன்னை விதைத்த கதை...!
உன் கண்கள் எனக்குள் 
நம்மை உணர்த்திய கதை...!
நாம் வாழ்நாள் வாழப்போகும் மீதி கதை...!

உன் ஒரே ஒரு கண்சிமிட்டல்
உன் ஒரே ஒரு புன்னகை
உன் ஒரே ஒரு மெல்லிய தீண்டல்...
போதுமடா எனக்கு...
வாழ்ந்து விட்ட நாட்களும் 
வாழ போகும் நாட்களும்
கவிதையாய், கவிதை சாரலாய்
கவிதை மழையாய் உன் கண்களில்...!

1 comment:

  1. அன்பை நினைத்து ஏங்கும் அருமை வரிகள்...

    பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete