Tuesday 28 July 2015

பார்த்திக்காக -7



பார்த்தீ... டேய் பார்த்தி...
என்னடா நினச்சுட்டு இருக்க?
தெரியாம தான் கேக்குறேன்
அப்படி என்ன நினச்சுட்டு இருக்க?

அப்படி என்ன தான்டா
நான் உன்கிட்ட கேட்டுட்டேன்?
வேலை முடிஞ்சிடுச்சா
இன்னுமாடா முடிக்கல,
ஏண்டா இப்படி இருக்கன்னு தான கேட்டேன்.

நீயா கோபப்படுற
நீயா எரிஞ்சு எரிஞ்சு விழுற
என்னன்னு கேட்டா
நீ என்னை நிம்மதியா
விட மாட்டேங்குறன்னு முறைக்குற.

சரி, எதுவுமே கேக்கவேணாம்னு
அமைதியா இருந்தா
ஏதாவது பேசுங்குற...
பேசினா,
ஏண்டி உயிரெடுக்குறங்குற.

நான் போறேன்,
விட்டுத் தொலைன்னு கிளம்பினா
ஏண்டி போறன்னு
பின்னாலயே வர்ற...

கட்டிப்புடிச்சுக்குற...
அப்புறம் வரிசையா
அடுக்க ஆராம்பிக்குற...

நீ சரியில்ல
உனக்கு பொறுப்பு இல்ல
உனக்கு அக்கறை இல்ல
புருஷன் என்னப்பண்றான்னு கேக்குறதில்ல,
வேலை செய்தியாடானு அதட்டுறதில்லன்னு
குற்றப் பத்திரிகை வாசிக்குற.

கோபத்துல முறைச்சா
அழகாயிருக்கங்குற...
வேலைய முடிச்சியான்னு கேட்டா
ஏண்டி நிம்மதியா இருக்க விடமாட்டேங்குறன்னு
முருங்கை மரம் ஏறிடுற...

அடக்கவே முடியாத
அடங்கா குதிரைடா நீ
இம்சை புடிச்சவனே...
இனிமேல் என்னை திட்டிப் பாரு
நறுக்குன்னு காதுல கடிச்சி வைக்குறேன்...


.

2 comments:

  1. Replies
    1. ஹப்பா... நீங்களாவது கமன்ட் போட்டீங்களே, என்னடா, யாருக்குமே புரியலயோன்னு குழம்பிட்டேன்....

      Delete