Tuesday 22 May 2012

யாரடா நீ..................?


வெப்ப மூச்சுக்களின் பிரசவ காலமே
முத்தமாய் யுத்தம் புரியும் காலமென்றனர்...
எண்ண அலைகளில் நீந்தி நீ
என் கண்முன்னே வந்தாய்...!

கண்மூடி உன்னை நேசித்தே பார்க்கிறேன்
பெருமூச்சாய் வந்து என்
உள்ளம் நிறைத்து சிரிக்கிறாய்...

என் மவுன பார்வையை உள்வாங்கி
மெதுவே முத்தமிடுகிறாய்...
உன் முத்தம் கண்டு வெட்கம் ஏனோ
என்னுள் நாணம் கொள்ளவில்லை...

விடைதெரியாமல் பதறியே போனேன்
“எப்படியடி வரும் உன்னைக் கண்டு உனக்கே வெட்கம்?”
ஒற்றை வரியில் பதிலளித்து விட்டு தொடர்கிறாய்
உன் யுத்தத்தை... இல்லையில்லை முத்தத்தை...!

2 comments:

  1. முத்தத்தின் யுத்தத்தால்
    மூச்சிரைத்து வீழ்பவர் யாரோ
    தர்சினி.............!

    அருமை கவிதை!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக மனதிற்கு இனியவராக தான் இருக்க முடியும் ஜான்சி

      Delete