Saturday 26 May 2012

சுவாசமாய் தொடர்வேன்...!

முதல் பார்வையும்
முதல் புன்னகையும்
தீர்மானிக்கும் ஈர்பென்ற
மாய வலைக்குள்
ஈர்த்துக்கொள்ளாமலே
வீழ்ந்து விட துடித்த
புற்றீசல்களாய் நாம்...!

சாதிக்கத் துடிக்கும்
உன் இதய கூட்டுக்குள்
சோதனை காலமாய்
நான் வருவேனென நினைத்தாயோ?

முரண்பாடான உன்
வாழ்க்கை பயணத்தில்
உன் பார்வையில் நான்
வெறும் ரெயில் சிநேகிதியே...!

நீ தேடி அலையும்
வெற்றிக் களிப்புக்காய்
என்னை தொலைத்து விட்டே
தேடி அலைகிறாய்...!

விலகியே நிழல் போல
தொடர்கிறேன் என்றவனே
உனக்குத் தெரியுமா?
உன் சுவாசமாய்
கூடவே தொடர்வதே
எனக்கும் பொழுதாய் போனதென்று...!

2 comments:

  1. உன் பொழுதுகளில்,
    என் மீதான் விழுதுகளாய்,
    உன் நிழலும் தொடர்வதை அறிந்தேனோ,
    தோழியே...

    தேடிச்சென்ற பாதைதனை விடுத்து,
    வேறு பாதியினுள் புகுந்த,
    சாரைப்பாம்பாய் போனதென்ன,
    காதலோ???

    ReplyDelete
    Replies
    1. தடம் மாறிச் செல்லும் பாதையாயினும்
      உன் மேலான நினைவு சிதறல்கள்
      வழிநெடுகிலும் உனக்கான
      வாழ்த்துப்பா ஏந்தியே செல்லும்
      என் தோழனே...!

      Delete