Monday 6 August 2012

விரலோடு உயிர் பற்றி...!

தத்தளிக்கும் அலை நடுவே
கண்டெடுத்த துடுப்பொன்றாய்
உன்னை நான் பற்றிக் கொண்டேன்...!

எங்கடா சென்றிருந்தாய்?
ஏழு மலை ஏழு கடல் தாண்டி
என் ஜீவன் மீட்டெடுக்க சென்றாயோ?

வா...! இணையாது என
அறிவிக்கப்பட்ட ரெயில் தண்டவாளத்தின்
இருகோடுகள் மேலே
இணைந்தே செல்வோம்...

மலரின் மெல்லிய தீண்டல்
நமதாய் இருக்கட்டும்...
விரலோடு உயிர் பற்றி
வாழ்க்கை வென்றெடுப்போம் நாம்...!



1 comment:

  1. வா... வா...வென...

    வழிந்தோடும் குரல் கீதம்
    தென் திசையில்...!

    எப்போது... சந்திப்பேன்!

    ReplyDelete