Friday 6 December 2013

இதோ இன்னுமோர் அக்னி பிரவேசம்...!


இதோ நான் இறந்து விட்டதாக
ஊர் சொல்கிறது...!

அவர்களுக்கு தெரியுமா?
உயிரை திரியாக்கி
என்னையே விறகாக்கி
என் காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என்று...!

உன்னையே உறவாக எண்ணிய நாள் முதல்
நம்பிக்கையை ஆழ் மனதில் விதைத்து
உன்னை நான் பயிரிட்டக் கதை அவர்களுக்கு தெரியுமா?

இதயம் துளைத்து முளைவிட்ட உன்னை
உதிரமாய் பதியம் செய்த கதை தான்
ஊர் அறியுமா?

என் காதலை உரமாய் போட்டு
வளர்த்து விட முனைந்த உன்னில்
களையாய் ஒருத்தி தோன்றிய
நாள் தான் காலம் மறக்குமா?

வேலிப் படரும் உன் கரங்களென்னவோ
மாற்றான் தோட்டத்தில்... வேர் என்னவோ
இன்னும் என்னுள் பிடுங்கி எறியவே
முடியா உறுதியாய்... உனக்குள் உறுத்தவில்லையா?

நீ மீண்டு வருவாயென்ற நம்பிக்கை
உன் மேல் நான் கொண்டதாய் இருக்கலாம்...
ஆனால்... என் நம்பிக்கையின் வீரியம்
என்னையே அழித்த கதை நீ அறிவாயா?

அக்னி வலம் வந்து கைபிடிப்பாய் என்றிருந்தேன்...
இதோ அணைக்க வேண்டிய உன் கரங்கள்
திசைமாறித் தழுவியதால்
அக்னி என்னை அணைக்க
உன்னுள் பிரவேசிக்க துவங்கி விட்டேன்...!

ஆம்... அங்கே எரிந்துக் கொண்டிருப்பதென்னவோ
என் உடல் தான்... ஆனால் மனமல்லவோ
தகித்துக் கொண்டிருக்கிறது...!

.



- இது ஒரு மறுபதிவு 

12 comments:

  1. தகிக்க வைக்கிறது...

    Indli திரட்டியிலும் பதிவை சேர்க்கவும்...

    ReplyDelete
  2. Excellent after reading in ur blog only I was so impreesed to read such long contents !!Happy day G.D

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்ம்ம் தேங்க்ஸ். இப்போ எல்லாம் ரீடிங் பவர் குறைஞ்சுடுச்சுங்குறது இதுல இருந்து நல்லா தெரியுது

      Delete
  3. அழகான கவிதை...

    மனதைத் தகிக்கும் வரிகள்... தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் உங்க பாராட்டுக்கு

      Delete
  4. வணக்கம்
    பார்க்க வியப்பாக உள்ளது...... படம் கவிதை நன்று வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அப்படி என்ன வியப்பா இருக்குன்னு சொன்னீங்களா நானும் தெரிஞ்சுப்பேன்ல

      உங்க வாழ்த்துக்கு தேங்க்ஸ்

      Delete
  5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_7.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. பாத்தேன் அண்ணா.... தெரியப்படுத்தினதுக்கு தேங்க்ஸ்

      Delete
  6. அக்கினியின் பரிபாசை ஆழ்மனப் பிரவேசம் செய்கிறது காயு... விரைவில் பிரவேசம்...

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா உங்க கருத்துக்கு

      Delete