Friday 6 February 2015

பார்த்திக்காக -3


பார்த்தி,

சில நேரங்கள்ல
இந்த மாதிரியான சூழ்நிலை
எல்லோருக்கும் வந்துரும் போல...

எப்பவுமே உன்னோட
தோள்ல தொங்கிட்டே இருக்க
ஆசப்பட்டேண்டா,
அதனால தான் சுமைன்னு
இறக்கி வைக்க நினைச்சியா?

பார்த்தி, என்னை பாத்தா
ஏன் உனக்கு இத்தன வெறுப்பா இருக்கு?
எதனால பார்த்தி இப்படி விலகிப் போற?

நீ இல்லாத
ஒவ்வொரு நிமிசமும் தகிக்குதுடா.
அப்படியே நெருப்பு கங்குகள
விழுங்குற மாதிரி இருக்கு.

அம்மாவா இருப்பேன்னு
சொன்னியேடா பார்த்தி,
பாரு, என் கண்ண நல்லா பாரு பார்த்தி,
அழக் கூட உரிமை இல்லாம
ஈரம் கசிஞ்சு கலங்குறத...

நான் அழுதா
உன்னால தாங்கிக்க முடியாதா பார்த்தி,
என்னை அழாம பாத்துக்க மாட்டியா?

என்னிக்காவது ஒரு நாளு
என்னைத் தேடி வந்துருவடா,
ஆனா வர்றப்ப நான் நானா இருப்பேனான்னு
சந்தேகமா இருக்கு பார்த்தி...
பைத்தியம் பிடிச்சுடும்டா அதுக்குள்ளே...

பார்த்தி,
நேத்து ராத்திரி என்னை
மிஸ் பண்றதா சொன்னியே,
நிஜமாவே அது நீ தானா?
கனவு மாதிரி இருந்துச்சுடா,
சொல்லிட்டு அடுத்த நொடி காணாம போய்ட்ட?

புலம்ப விட்டுராத பார்த்தி,
உன் பிரியம்வதனா பாவமில்லையா?

நான் உன்னை காயப்படுத்தியிருந்தா மன்னிச்சுடு பார்த்தி...

வந்துருடா...


- உயிரற்ற பிரியம்வதனா


2 comments:

  1. வணக்கம்
    காதல் வயப்படும் கவி கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete