Tuesday 6 March 2012

அம்மா ...


நீ...
என் முதல் அழுகையிலிருந்து
இன்றைய சிரிப்பு வரை
உன் அணைப்பு கொடுத்த சுகந்தம்...
என் கண் அசைவிலேயே
என் குட்டி குட்டி ஆசைகள்
குட்டி குட்டி மிரட்சி
எல்லாம் அறிந்து அணைத்துக் கொள்வாய்....

நீ....
என் சிறு புன்னகையிலும்
என் சிறு வெட்கத்திலும்
பெரிதாய் மகிழ்வாய்....
என் சிறு விசும்பலிலும்
பதறியே கண்ணீர் துடைப்பாய்....
என் கோபத்தை
உன் புன்னகை அடக்கி வைக்கும்....

நீ...
எனக்குயிர் கொடுத்த என்னுயிர்
வாழ்கை கற்று கொடுத்த குரு
சிற்றுயிரைக் கூட மதிக்க வைத்தவள்
காதலை காதலிக்க வைத்தவள்
கடவுளை பூஜிக்க வைத்தவள்
உயிராய் எனக்குள் நிறைந்தவள்
என்னை எனக்கே அறிமுகப்படுத்தியவள்

என்னவளே
என்னுயிர் தாயே
உன் அன்புக்கு ஈடான
அன்பு என்று ஏதும் உளதோ?
தேடி தான் பார்கிறேன்
தேடிக் கொண்டே இருக்கிறேன்...
எத்தனை ஜென்மம் தேடுவேன்...!!!
நீயே எனக்கு சேயாய் ஆகும் வரையோ?

2 comments:

  1. ஆமாம்.
    நீயே தாயாவாய்..தாயே சேயாவாள்.
    இது
    கடவுளின் விருப்பம் மட்டுமல்ல
    உன்
    தாலாட்டிற்கு அவன் ஈகும் பரிசு!

    ReplyDelete
  2. avalthaan naan
    naanthaan aval..

    en meethu aval kaattum paasam
    atharku eedillai..ethuvumillai..
    super super super thangs..
    I am proud of you
    my dear Golden thangs..
    :D

    ReplyDelete