Saturday 4 April 2015

பார்த்திக்காக - 5



பார்த்தி,

வாழ்க்கைல சந்தோசமான தருணங்கள்ன்னு
யோசிச்சு பாத்தா, நீயும் நானும்
சேர்ந்திருக்குற எல்லா தருணமே
சந்தோசமானதுன்னு தான் சொல்லுவேன்...

அடேய், என்ன முறைக்குற,
சரி சரி, சண்டை போட்டுட்டு
இருந்த தருணமும் சந்தோசமானது தான் போதுமா?

கண்ணு ரெண்டையும் உருட்டுறத பாரு...
நான் கோவமா இருந்தா சாருக்கு ரொம்ப ஜாலி...
ஜன்னல் வழியா அந்த மேனகாவ
சைட் அடிக்க கிளம்பிடுற...

உன்னையெல்லாம் எந்த
ரகத்துல சேர்க்கன்னே தெரியல...
நீ இருந்தாலும் இம்ச, இல்லனாலும் இம்ச...

நேத்து என்னடானா அந்த மாலதிக்கு
ஒரு கவிதை எழுதி ரகசியமா அனுப்பி வச்சுட்டு
மாலதிய மட்டும் தூக்கிட்டு
ப்ரியம்வதனான்னு என் பேரை நிரப்பி
என்கிட்ட நீட்டுற?

நீ எந்த நேரம் எப்படி டைப் டைப்பா முழிப்ப
எந்த நேரம் ஈசிகிட்டு வருவ,
எதுக்கு என்னை நெருங்குற
எல்லாமே அத்துப்படிடா எரும...

ஐயோ, ரொமாண்டிக்கா ஒரு லெட்டர்
எழுதலாம்னு பாத்தா,
உன் பேரை எழுதினதுமே இப்படி தாண்டா
கிறுக்கத் தோணுது...

என்னோட அழகான கவிதைய அனுபவிக்க
உனக்கு குடுத்து வைக்கல...
அவ்வளவு தான் சொல்லுவேன்...

இழிக்காத, போய் தூங்கு...
கனவுல நான் தான் வருவேன்...
வேற யாராவது வந்தா கொன்றுவேன்...

இப்படிக்கு,
அன்பும் பண்பும், பாசமும் நிறைந்த ப்ரியம்வதனா
(நம்பிரு, இல்ல கழுத்துல கை வைப்பேன்)

14 comments:

  1. இது கவிதையான கதையா ? இல்லை கதையான கவிதையா ? இருந்தாலும் ரசிக்கும்படி இருக்கூஊஊஊஊஊஊஊஊ......

    ReplyDelete
    Replies
    1. நானே அந்த குழப்பத்துல தான் கவிதைன்னு லேபல் போடல.... நல்லாயிருக்குன்னு சொன்னதுக்கு தேங்க்ஸ்.... :)

      Delete
  2. Replies
    1. பாவம் எல்லாம் பாக்க கூடாது அண்ணா

      Delete
  3. கொஞ்சம் பயமுறுத்துற கடிதம்தான்

    ReplyDelete
    Replies
    1. ஹஹா பயமுறுத்தி வைக்குறதால தான் பார்த்தி பிரியம்வதனா பின்னாடியே சுத்துரானாம்

      Delete
  4. சகோ ஒரு சந்தேகம்
    கோபப்பட கூடாது
    திருவிளையாட்டல்ல தருமி
    ஏம்பா இது நீ எழுதினதா இல்ல வேற யாராவது எழுதுனதா ? அப்டின்னூ கேட்டதா சொல்வார். நான் அப்டீல்லாம் கேக்க மாட்டேன்.
    என் சந்தேகம்
    இது பிரியம்வதனா எழுதுன கடிதமா? இல்ல பிரியம்வதனா மேல் உள்ள பிரியத்தினால் வேறு யாராவது பிரியம்வதனாவுக்கு எழுதி கொடுத்த பிட்டா ?
    என்னமோ போங்கம்மா.

    ReplyDelete
    Replies
    1. நீங்க குடுத்த அலப்பறைல வாக்களிக்கணும்கிற கடமை கூட மறந்து போச்சி
      அப்புறம் ஒருவழியா போட்டாச்சி

      Delete
    2. ப்ரியம்வதனாவுக்கு அவ காதல் விசயத்துல பிட் குடுக்குற சாக்குல யார் வந்தாலும் கூட பிடிக்காது. அவளுக்கு அவளே மகாராணி

      Delete
    3. நல்ல வேளை ஓட்டுப் போட்டீங்க, இல்லனா ப்ரியம்வதனாவுக்கு கோபம் வந்துருக்க போகுது

      Delete
  5. ஐயோ..! பேய்த்தனமான பாசக் கவிதையாய் இருக்கிறதே..?!
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. பயந்து போய் ஓட்டு போட்டுட்டீங்க போல

      Delete