Friday 17 April 2015

வெள்ளிக்கிழமை - முதல் படி, முதல் பேச்சு



அன்னிக்கு ஒரு நாள், வெள்ளிக்கிழமை... முதல் முதலா நான் சீப் கெஸ்டா போன நாள்...

ஆரம்பத்துலயே சொல்லியிருந்தாங்க, சின்ன டிபார்ட்மென்ட், நீங்க ரொம்ப சிம்பிளா பேசினா போதும்னு...

ஆனாலும் நமக்கு வர்ற ஆர்வம் இருக்கே... அப்பப்பா.... ராத்திரி முழுக்க நல்லா தூங்கிட்டு காலங்காத்தால ஒன்பது மணிக்கு எந்திருச்சு அடடா, என்ன பேசப் போறோம்னு இன்னும் பவர் பாயின்ட் ரெடி பண்ணலயேன்னு பதறி கடகடன்னு குட்டி குட்டியா ஹிண்ட்ஸ் எடுத்து, கலர் கலரா படம் போட்டு பத்து மணிக்கு அத பென்-ட்ரைவ்ல காப்பி பண்ணிட்டு கிளம்ப ஆரம்பிச்சேன்...

மாமாவ கூப்ட்டுட்டு வீட்டை விட்டு நான் கிளம்புறப்ப மணி பத்தே முக்கால். பதினோரு மணிக்கு வந்துருங்கன்னு சொன்னவங்க முன்னால பதினொண்ணே காலுக்கு டான்னு போய் நின்னேன். ப்ரோக்ராம் ஆரம்பிக்க இன்னும் பத்து நிமிஷம் ஆகும், நீங்க இப்படி உக்காருங்க மேடம்னு பிரின்சிபால் ரூமுக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க.

அவர் கிட்ட பேசிட்டு இருக்கும் போது, அப்பா யாரு என்னன்னு விசாரிச்சு கடைசில அப்படினா சுத்தி வளச்சு நாம சொந்தக்காரங்கன்னு முடிச்சுட்டார்... அவ்வ்வ்வ்...

ஒரு வழியா ஆடிட்டோரியத்துக்குள்ள என்டர் ஆகி மேடைய பாத்தா ங்கே.... ஒரு டெகரேசன் கூட இல்ல. செயர் எல்லாம் ஸ்டேஜ் கீழ தான் போட்டு வச்சிருந்தாங்க. கூடவே ஒரு மைக் மட்டும்...

சுத்திமுத்தி பாத்தா ஒரு அம்பது பொம்பள புள்ளைங்க உக்காந்துட்டு இருக்காங்க. பின்னாடி பாத்தா ஒரு பத்து பதினஞ்சு பசங்க ஹாயா உக்காந்து என்னமோ பேசிட்டு இருக்காங்க...

ஆரம்பத்துல இருந்தே எனக்கு காபியும் கேக்கும் கொண்டு வந்து தந்து, நின்னா என்ன வேணும் மேடம், திரும்பினா என்ன வேணும் மேடம்னு ஒரு ஸ்டுடென்ட் கேட்டுட்டு இருந்தான். அவன் கிட்ட போய் எல்.சி.டி ப்ரொஜெக்டார் எங்கன்னு கேட்டதுக்கு அது எல்லாம் எதுக்கு மேடம், அத எல்லாம் செட் பண்ணவே இல்லன்னுட்டான்... அடேய், உங்கள நம்பி நான் பவர் பாயின்ட் எல்லாம் போட்டேனேடா... கொன்றுவேன்னு அவனப் பாத்து நான் முறைக்க, சும்மா பேசுங்க மேடம்ங்குறான்... படு பாவி...

ஆனாலும் நமக்குன்னு போட்டு வச்ச வி.ஐ.பி செயர்ல போய் உக்காந்து, ஒரு வழியா வரவேற்புரை, முன்னுரை எல்லாம் அவங்க முடிக்க, என்னை பேசுறதுக்கு கூப்ட்டாங்க.

நான் மைக்க பிடிச்ச உடனே, இங்க எனக்கு முன்னாடி பேசினவங்க எல்லாம் உங்களுக்கு நிறைய கதைகள் சொன்னாங்க. என்கிட்ட சொல்ல ஒரு கதை கூட இல்லையே... அட்லீஸ்ட் உங்களுக்கு அழகழகா படம் போட்டு காட்டி தப்பிக்கலாம்னு பாத்தா அதுவும் முடியாம போச்சு... இப்ப நான் என்ன பேசப் போறேன்னு எனக்கே தெரியலயேன்னு சொன்னதும் அத்தன புள்ளைங்களும் சிரிச்சுட்டாங்க. பின்னால பசங்க விசில் வேற...

நீங்க ஜூவாலாஜி படிக்குறீங்க. உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் வெர்டிப்ரேட்ஸ் இன்-வெர்டிப்ரேட்ஸ்.... அது என்னன்னு என்கிட்ட திருப்பி கேட்றாதீங்க, அதெல்லாம் நான் ப்ளஸ் டூ-ல படிச்சது. அதனால உங்கள நான் இப்ப உங்க கண்ணுக்கே தெரியாத உயிரினங்கள் பக்கம் கூட்டிட்டுப் போகப் போறேன்னு சொன்னேன்.

ஆமா, நம்மள ஆட்சி செய்ற உயிரினங்கள் அது. வெற்றிடம், காற்று வெளி, நிலம், பாறை, நீர், வெந்நீர் ஊற்றுகள், ஆழ்கடல்ன்னு அந்த உயிரினங்கள் இல்லாத இடமே இந்த உலகத்துல கிடையாது.

நம்மோட விவசாயமாகட்டும், உணவு செரிமானகாகட்டும், மருத்துவமாகட்டும் எல்லாத்துலயும் நிறைஞ்சிருக்குறது இந்த உயிரினங்கள் தான்ன்னு ஆரம்பிச்சு இங்க பேஸ் புக்ல எப்படி கதை சொல்ல ஆரம்பிப்பேனோ அப்படியே ஆரம்பிச்சுட்டேன்...

என்னோட சந்தோசம் எல்லாமே பிள்ளைங்க அத்தன பேர் முகமும் அவ்வளவு பிரகாசமா இருந்துச்சு. கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் நான் பேச பேச கைத்தட்டி ரசிச்சாங்க.

அப்படியே பேசிட்டு இருக்கும் போதே நீங்க எல்லாம் யூ.ஜி ஸ்டுடென்ட்ஸ். நீங்க எத்தன பேர் நேசனல் இல்லனா ஸ்டேட் லெவல் செமினார் அட்டென்ட் பண்ணியிருக்கீங்கன்னு கேட்டேன். இல்ல, எதுவுமே அட்டென்ட் பண்ணினது இல்ல, அதெல்லாம் மேடையேற பயம், பழக்கம் இல்லனு சொன்னாங்க.

நான் உடனே மேடைனா ஏன் பயப்படுறீங்க? என்னைக் கேட்டா நமக்கான மேடைய முதல்ல நாம தேடிப் போறதுக்கு முன்னாடி ஏன் நாமே அமைச்சுக்கக் கூடாதுன்னு கேட்டேன்.

புள்ளைங்க எல்லாம் முளிச்சாங்க.

நான் யூ.ஜி பஸ்ட் இயர் படிக்குறப்ப இந்த மாதிரியான அசோசியேசன் டே வந்துச்சு. அப்போ நாங்க ஒரு மூணு பேர் சேர்ந்து எங்களோட ஸ்டாப், பிரெண்ட்ஸ், சீனியர்ஸ் எல்லார் கிட்டயும் போராடி அந்த நாளை எங்களோட திறமைகள வெளிபடுத்துற நாளா மாத்திகிட்டோம். எங்களோட அசோசியேசன் டே பேப்பர், போஸ்டர், மாடல் பிரசென்டேசன்னு எங்களோட திறமைகள வெளிப்படுத்துறதா அமைஞ்சுச்சு. ஒரு ஆள் விடாம அத்தனை பேரும் ஏதோ ஒரு வகைல மேடையேறினோம். எங்களுக்கு நாங்களே திறமைகள ஊக்குவிச்சு பரிசுகளும் குடுத்துகிட்டோம். அதே மாதிரி நீங்களும் ஏன் அடுத்த வருசத்துல இருந்து இந்த மேடைய பயன்படுத்தக் கூடாதுன்னு கேட்டேன். கண்டிப்பா பண்றோம்னு சொன்னாங்க.

அதுல ஒரு பொண்ணு எங்களுக்கு இங்கிலீஷ் தெரியாது மேடம் வெறும் தமிழ வச்சுட்டு என்னப் பண்றதுன்னு கேட்டா.

இப்ப நம்மள இப்படி மனசு விட்டு பேச வைக்குறது எந்த மொழி? தமிழ் தானே, அப்புறம் ஏன் அத வெறும் தமிழ்ன்னு சொல்றீங்க? நம்மோட எண்ணங்கள வெளிப்படுத்துறதுக்கு மொழிய எப்பவுமே ஒரு பிரச்சனையா நாம நினைக்கக் கூடாதுன்னதும் ஆனா அங்க எல்லாம் எல்லாரும் இங்கிலீஷ்ல தான் பேசுவாங்கன்னு சொன்னா அதே பொண்ணு...

எனக்கு இங்கிலீஷ் தெரியும். பவர் பாயின்ட் கூட அதுல தான் போட்டுட்டு வந்தேன், ஆனா இப்ப நான் தமிழ்ல பேசலையா? அதே மாதிரி நீ ஏன் தெரியாத இங்கிலிஷ அண்ணாந்து பாத்துட்டு இருக்க. இறங்கி உன்னோட தமிழுக்கு வா.

இங்கிலீஷ்னா என்னவோ அது ஒரு பெரிய மொழி, அது நமக்கு புரியாதுன்னு ஒரு தயக்கம் இருக்கு உங்க கிட்ட. அந்த தயக்கத்த நாம விட்டுட்டா கண்டிப்பா ஜெய்ச்சுடலாம். வர்றது வரட்டும்னு இங்கிலீஷ்ல செமினார் எடு. பிரெண்ட்ஸ் கிட்ட பேசு. கிண்டல் பண்ணாலும் யார் பண்ணப் போறாங்க, உன்னோட பிரெண்ட்ஸ் தானே... அதுவும் ஒரு டீமா நீங்க எல்லாம் சேர்ந்து கத்துகிட்டா ஈசியா கத்துக்கலாம்.

அது மட்டுமில்ல, மொழி என்னதுங்குறது பிரச்சனை இல்ல, நீ கத்துக்குற விஷயம் உனக்கு புரியுதா புரியலையாங்குறது தான் பிரச்சனை.

விஷயம் மட்டும் புரிஞ்சுட்டா அப்புறம் தமிழாவது இங்கிலீஷாவது. எல்லாமே உனக்கு ஒண்ணா தான் தெரியும்.

சிம்பிளா சொல்லணும்னா எனக்கு பிடிச்சதெல்லாம் கேள்வி கேக்குறது தான். நாம பாக்குற கேக்குற படிக்குற எல்லா விசயத்திலும் சந்தேகம்னு வந்தா கேள்வி கேட்டுப் பழகணும். எப்ப நாம கேள்வி கேட்டுப் பழகுறோமோ, அப்பவே அதுக்கான விடைய நாம தேட ஆரம்பிச்சுடுவோம்னு சொன்னேன்.

ஒரு பையன் எழும்பி, மேடம் இப்ப எனக்கு உங்க சப்ஜெக்ட் படிக்க ஆசை வந்துடுச்சு. ஆனா நான் அத படிச்சா க்ராஸ் மேஜர்ன்னு வேலை கிடைக்குறதுல பிரச்சனை வராதான்னு கேட்டான்.

நானும் இப்ப ஸ்டுடென்ட் தான். எனக்கு இத பத்தி டீடைல்ஸ் தெரியாது. ஆனா உங்க ஸ்டாப் இதுக்கு பதில் சொல்லுவாங்கன்னு சொல்லிகிட்டே, சொல்லப்போனா நானும் ஒரு வகைல க்ராஸ் மேஜர் தான், பிளான்ட் பயோ-டெக்னாலஜி அப்படிங்குறது பாட்டனியோட மாடர்ன் வெர்சன். ஆனா நான் இப்ப பண்ணிட்டு இருக்குறது மெரைன். என் கிட்ட கூட நீ ஏன் பாட்டனில பி.ஜி அப்புறம் பி.ஹச்.டி பண்ணக் கூடாதுன்னு கேட்டுருக்காங்க. நான் அவங்க கிட்ட சொன்னதெல்லாம் நான் இது எத பத்தியும் கவலைப் படுறதேயில்ல. எனக்கு தெரிஞ்சதெல்லாம் பணத்துக்கு படிக்கவோ வேலை செய்யவோ கூடாது, மனசுக்கு பிடிச்சத படிக்கணும், மனசுக்கு பிடிச்ச வேலை செய்யணும் அவ்வளவு தான்னு சொன்னதும் ஒரே கைத்தட்டல்.

வெறும் கம்யூட்டர தட்டிகிட்டு இயந்திரத் தனமா வாழுறது வாழ்க்கை இல்லடா. நீங்க எல்லாம் ஜூவாலாஜி ஸ்டுடென்ட்ஸ். இயற்கைய ரசிக்குற அருமையான வாய்ப்பு உங்களுக்கு இருக்கு. மிருகங்கள், பறவைகள், புழு பூச்சின்னு உடல் கூறுகள பத்தி மட்டும் படிக்காம இயற்கையோட இசைந்த அவங்க வாழ்க்கையையும் படிங்க, கூடவே அதுகளுக்கும் நமக்கும் உள்ள உறவுப் பாலத்த பத்தியும் படிக்க ஆரம்பிங்க. உங்கள மாதிரி லக்கியஸ்ட் பசங்க யாரும் கிடையாதுடான்னேன்.

அரங்கம் அதிர்ந்த கைத்தட்டு எல்லாம் இல்ல.... ஆனா அவ்வளவு உற்சாகமா அத்தனை பேரும் கைத்தட்டினாங்க...

எல்லாருக்கும் நன்றியும் வணக்கமும்ன்னு நான் உக்காந்தப்ப அந்த ஹச்.ஓ.டி என்கிட்ட குனிஞ்சு இதுக்கு தான் உங்கள நாங்க கூப்பிடணும்ன்னு ஆசைப் பட்டோம்னு சொன்னார். நிஜமா கொஞ்சம் பெருமையா தான் இருந்துச்சு.

அப்புறம் சில டான்ஸ், லவ் ப்ரோபோசல்ன்னு சில விசயங்கள ரசிச்சு (கண்டிப்பா அத பத்தி தனியா எழுதணும்) அவங்க குடுத்த சால்வை, கிப்ட் எல்லாத்தையும் வாங்கிகிட்டு கொஞ்சம் அப்படியே ஊர் சுத்திட்டு வீடு வந்து சேர்ந்தப்ப உடம்பு சோர்வா இருந்தாலும் மனசு நிறைஞ்சு தான் போச்சு...

9 comments:

  1. தன்னம்பிக்கையான பேச்சு அதற்க்காக ஒரு சபாஷ் நானும் பல மேடைகள் ஏறி பேசியிருக்கேன் பல கைதட்டகள் வாங்கியிருக்கேன் பட்டுணு முழிப்பு வந்துடும் பிறகுதான் நடந்தது என்ன ? அப்படினு புரிஞ்சது.
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. ஹஹா.... உங்க சபாசுக்கு ஒரு நன்றி.... ஆனா பாருங்க இப்ப எல்லாம் நானும் தனியா இருக்குறப்ப தானா உளற ஆரம்பிச்சுட்டேன்... இப்ப தான் தெரியுது அதெல்லாம் உங்கள பாத்து தான் எனக்கு வந்துருக்கு

      Delete
  2. இனிய வாழ்த்துக்கள்.. எல்லோரையும் உங்க பேச்சை கேட்க வெச்சுட்டீங்களே...

    ReplyDelete
    Replies
    1. ஹஹா தேங்க்ஸ் அம்மா ...

      Delete
  3. வணக்கம்
    சகோதரி
    கன்னிப்பேச்சுக்கு வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கு தேங்க்ஸ் அண்ணா

      Delete
  4. கைத் தட்டல்கள் சகோதரி...

    பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. கைத்தட்டலுக்கும் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி அண்ணா

      Delete
  5. முதல் மேடைப் பேச்சு - அதுவும் சிறப்பான பேச்சு. பாராட்டுகள் காயத்ரி.

    ReplyDelete