Sunday 4 March 2012

எனக்குள் நான்.... !!!

ஆளரவமற்ற அந்த கொடிய இரவின் 
ஆழ்ந்த தனிமையில்...
என்னை நானே கேட்டுக் கொண்டேன்...
எனக்குள் என் தனிமை
தன் தனிமையை தொலைத்துக் கொண்டிருந்தது ....

எல்லா இரவுகளும் என்னை கேட்கின்றனவா?
இல்லை...
நான் அவைகளை கேட்கிறேனா?
எனக்கே தெரிந்த பதில்...
ஆனால் தெரியாத பதிலும் அதுவே...

என்னை தவிர இங்கு யாருமில்லை...
என்னை மட்டுமே உணர்ந்த உயிர்...
இன்று இருளோடு இருளாய்...
என்றும் என் நினைவில்...
என் தனிமையில்...
என் இரவுகளில்...
என் சந்தோஷத்தில்...
என் துக்கத்தில்...

எந்த நொடி என்னை பயமுறுத்தியதோ...
எந்த நொடி என்னை மறக்க சொன்னதோ...
எந்த நொடி சம்பவிக்க கூடாதோ ...
சம்பவிக்கவே கூடாத அந்த நொடி
என்னை அனுபவிக்க வைத்தவள்....

மவுனமாய் பேசி செல்கிறாள்...
மர்மமாய் புன்னகைக்கிறாள் ...
எனக்குள் நானே தொலையும் அந்த நொடி...
கண் மூடி என்னை அழைத்து செல்கிறாள்...
கண் திறந்தே என்னை தூங்கவும் வைக்கிறாள்...
இவள் தான் நானோ???

2 comments:

  1. ஆம்.

    நீயே அவளாய்..அவளே நீயாய்..
    தாயாய்..சேயாய்.

    ReplyDelete
  2. mmmm..
    ennaith thavira ingu yarumillai
    ennai mattum unarntha uyir
    indru irulodu irulaai
    endrum en ninaivil..
    en thanimaiyil..
    en iravukalil..
    en santhosathil ..
    en thukkathil..

    Super thought..
    on reading this..
    en ninaivil minnaladiththathu..
    yes.
    en sathosaththil
    en thukkathil
    nirkathiyaai
    minnalidam saran adainthu..

    Thanks ..thangs.

    ReplyDelete