Saturday 9 June 2012

நிழலின் பிம்பம்

கண்ணாடி சிறைக்குள்
நின்று வேடிக்கை
பார்க்கிறேன் நான்...
விளையாட வேண்டுமென்றது மனம்...

அம்மா அழுவாளோ...
அப்பா அடிப்பாரோ...
தம்பி முறைப்பானோ...

ஹஹஹஹா வாய் விட்டு
சிரிக்கிறது மனசு
விம்மி விம்மி
அழுகிறது வாய்...

நானும் ஏன்
இந்த பட்டாம்பூச்சியாய்
பிறந்திருக்க கூடாது?
அம்மாவிடம் கேட்டேன்...

அதன் ஆயுசு குறைவு, நீ
தீர்க்க சுமங்கலியாக 
வேண்டுமென்றாள் அவள்...

மவுனமாக சிரித்துக் கொண்டேன்...
அப்படியும் கூட
அடுத்தவன் ஆயுளுக்காக
வாழ வேண்டுமாம் நான்...

2 comments:

  1. அடுத்தவர்க்காகவே உதயா எம் இருப்பும் உறுதிப்படுத்தப்படுகிறது. அழகாயச் சொன்னீர்கள்

    ReplyDelete