Sunday 17 June 2012

ஆளுமை

உன்னை காணாமல்
நான் அனத்திய நேரம்
பின்னின்று அணைத்தே
தவிக்க விட்டாய்...!

கண் நோக்கி
கண் சொருகும் தருணம்
அமிர்தமாய் உன் முத்தம்
கன்னம் வழுக்கி பக்கம் சாய்கிறது...!

விழித்துக் கொண்ட
காது மடல்கள்
உன் மூச்சுக் காற்றில் வெப்பமடைந்து
சிலிர்த்துக் கொண்டன...!

தொண்டை குழிக்குள்
ஏக்கப் பந்து ஏக்கம் தீராமல்
வெளியேற வழியின்றி
தவிக்கத் துவங்கியது...!

அதரம் சுவைக்கும்
உன் வேகம் கண்டு
சூடேறத் துவங்கிய உதிரம்
தேகமெங்கும் வெப்பம்
பாய்ச்சி சென்றது...!

இமைச்சிறைக்குள் அடைப்பட்ட
விழிகளோ உன் காந்தப் பார்வையில்
கிறங்கி முழுதாய்
உன்னை பருக முயன்றன...!

என்னை ஆளத்துவங்கிய
உன்னை வெல்லத்துடிக்கும்
ஆசையில் நான்
இன்னும் இன்னும் உன்னுள்
மூழ்கியே போகிறேன்...!

2 comments: