Wednesday 4 February 2015

பார்த்திக்காக -2



வெளில என்னமா மழை பெய்யுது,
டேய் பார்த்தி,
இந்த மாதிரி ஒரு மழை நாள்ல தான
நீ என்கிட்ட உன் காதல சொன்ன?

ஹேய்... என்ன,
நான் எவ்வளவு உருகிப் போய்
பேசிட்டு இருக்கேன்,
நீ அங்க என்னடா பாத்துட்டு இருக்க?

அட, இதெல்லாம் தெரியாத்தனமா
உன்னை லவ் பண்றப்ப
நான் உனக்கு எழுதின லெட்டர்ஸ் தான?

பார்த்தி, இங்க பாரு,
இந்த லெட்டர்ல உன்ன எப்படி
திட்டு திட்டுன்னு திட்டியிருக்கேன்,
நல்லா வேணும்டா உனக்கு...

ஒரு நாளு நல்லா சண்டை போட்டுட்டு
அப்புறம் பெரிய இவனாட்டம் சமாதானத்துக்கு வந்தியே,
அப்ப நீ குடுத்த முத்தத்துக்கு பதில் முத்தம் இது....
ஹீ-ன்னு இளிக்காதடா, பாக்க சகிக்கல...
அன்னிக்கி உன் உதடு எப்படி வீங்கி போச்சுன்னு
எனக்கு தான தெரியும்...

இந்த லெட்டெர பாரு,
உன்னையெல்லாம் நல்ல பையன்னு நம்பி
ஐ லவ் யூ சொல்லியிருக்கேன்.
அடேங்கப்பா, என்னடா லெட்டர் முழுக்க
அதையே எழுதியிருக்கேன்?

ஹ்ம்ம். இதப் பாரு பார்த்தி,
மனசுக்கு பாரமா இருந்தப்ப
உன்கிட்ட தான் ஓடி வந்துருக்கேன்.
நீ என்னை எப்படி தாங்கிப்பன்னு
எனக்கு தான தெரியும்...
ஆனாலும் கொஞ்சம் நல்லவன்டா நீ...

ஆமா, ஏண்டா, மழை பெய்யுது,
பக்கத்துல சுட சுட காபி,
அத விட சூடா நீ லவ் பண்றேன்னு அலைவியே
அந்த பிரியம்வதனா,
இத எல்லாம் விட்டுட்டு இன்னும் என்னடா
அந்த லெட்டர்ஸ்சயே பாத்துட்டு இருக்க?

நகருடா,
அந்த பேப்பரும் பென்னும் எங்க வச்சேன்,
உனக்கெல்லாம் நாலு வார்த்த
நறுக்குன்னு திட்டி
ஒரு லெட்டர் எழுதினா தான் நிமிர்ந்து பாப்ப....


இப்படிக்கு ப்ரியம்வதனான்னு சொன்னாத்தான் தெரியுமோ?

3 comments:

  1. வணக்கம்
    அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete