![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRTPuS4f5_pnQsxUtJ0k0XknZe3_vNysO_8XYCgqSDnMp_CjuHHdnTUK8iWHCgPS3OjCeJs24969DwEmxB2mRmdInh0wCqSbthpy-2fGO16D0-ghDD0KxXANy93CJksXWxxDoZGE0ov20/s1600/adia-2007-07-07-DSC-9300-elderly-nepali-lady-in-a-mountain-village-greeting-passers-by-nepal-near-baglung-cringel.com.jpg)
சந்ததி வேண்டி
பிள்ளையாரை சுற்றிய நான்...
சந்ததி சொல்லியதால்
தெருக்கோடியில் இன்று...
முற்றுபெற்று விட்டதாம் என் வாழ்க்கை...!
முடிந்து போனதென
எதை வைத்து கணித்தார்கள்???
ஏக்கங்கள் நிறைந்த மனதுக்குள்
காரணங்கள் அறிய...
என் வெள்ளிவிழா வாழ்க்கைக்கு
பதிலுரைப்பார் எங்கே???
கொதித்து கொண்டிருந்த குருதியில்
குளிர் காய்ந்தவர்கள்...
இவர்கள் இன்று வற்றிய
மனித நேயத்தின் காரணகர்த்தாக்கள்...
பெருகும் மக்கட்தொகை நடுவே
மலையாய் பெருகும் தேவைகள்...
பெருகி வரும் எண்ணிக்கைகளில்
சொந்தங்கள் மட்டும் அருகுவதேனோ???
சுருங்கி கொண்டிருக்கும் என் தோல்
காட்டுவது என் வயதையல்ல...
நான் பெற்றவனின் மனதை...!
தேவைகளுக்கிடையில் நடந்த போட்டியில்
நான் தேவையில்லாமல் போய்விட்டேன்...!!!