Showing posts with label இணையம். Show all posts
Showing posts with label இணையம். Show all posts

Tuesday, 14 July 2015

பேஸ் புக் ஆபத்துகள் - அறியாத ஆபத்துகள்




எப்.பி-ல ஒரு ரௌண்ட்ஸ் வந்தப்போ அந்த ஐடி கண்ணுல பட்டுச்சு. தெரிஞ்ச பொண்ணோட போட்டோ. அவளா இருக்காதே, ஒரு வேளை யாராவது அவ போட்டோ போட்டு பேக் ஐடி க்ரியேட் பண்ணிட்டாங்களோன்னு ஒரு ஷாக்...

காரணம், போன ஆறு மாசம் முன்னாடி தான் அவ ப்ளஸ் டூ முடிச்சா. வீட்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட். ஒரு மொபைல்ல கூட அவளால பேச முடியாது. அவள எனக்கு புக்கும் கையுமா தான் தெரியும். ப்ளஸ் டூ முடிச்சு, இப்போ ஹாஸ்டல்ல தங்கி இஞ்சினியரிங் படிச்சுட்டு இருக்கா.

சரி, யாருன்னு உள்ள போய் பாத்தா, ப்ரோபைல் பிக்சர்ல இருந்து கவர் போட்டோ வரைக்கும் பப்ளிக்ல போட்டு வச்சிருக்கா. அதுவும் கவர் போட்டோல ப்ரெண்ட்ஸ் கூட கூல் ட்ரிங்க்ஸ் குடிக்குற மாதிரி, மண்டை மேல கொம்பு வச்ச மாதிரி, கொரியன் ஸ்டைல்ன்னு ஆள் காட்டி விரல நீட்டுற மாதிரி இப்படி ஏகப்பட்ட போஸ் வேற....

அதுல இருக்குற கமண்ட்ஸ் எல்லாம் நிறைய டபுள் மீனிங் டயலாக்ஸ்... அவளுக்கு புரிஞ்சுதா இல்லையான்னு தெரியல, ஹிஹி-ன்னு சிரிச்சு வச்சிருக்கா. அதுவும் கமன்ட்லயே சாட் மாதிரி காலைல எழுந்ததுல இருந்து தூங்கப் போறது வரைக்கும் விலாவாரியா பேசி வச்சிருக்கா... வீட்டு அட்ரெஸ் முதல் கொண்டு போன் நம்பர் வரைக்கும் ஷேர் பண்ணி வச்சிருக்கா...

சும்மாவே காலம் கெட்டுக்கிடக்கு, இதுல இவ பண்றதெல்லாம் தெரியாம தான் பண்ணுறான்னு நம்புறேன். காரணம் அவள வளர்த்த விதம் தெரிஞ்சதால... நாளைக்கு முதல் வேலையா அவள கண்டிச்சு ஐடிய டி-ஆக்டிவேட் பண்ண சொல்லணும்.

...............................................

எப்.பி-ல எத்தனையோ பக்கங்கள்ல இந்த மாதிரி பொம்பள புள்ளைங்க போட்டோவ தனியாவோ இல்ல ப்ரெண்ட்ஸ் கூட இருக்குற மாதிரியோ உள்ள போட்டோவ போட்டு கண்டமட்டுக்கு கன்னாபின்னான்னு கமண்ட்ஸ் போட்டு வச்சிருக்காங்க. அவங்க கைக்கு எல்லாம் ஈசியா மாட்டுற மாதிரி ஏன் போட்டோஸ் போடணும்? அதுவும் பப்ளிக்ல போடுறதால ஈசியா டவுன்லோட் வேற பண்ணிடுவாங்க...

இந்த மாதிரி தன்னோட போட்டோஸ் போட்டு தன்னை பத்தி தப்பு தப்பா பேசுறாங்கன்னு தெரிஞ்சா தாங்கிக்க முடியுமான்னே தெரியல...

...................................................
நமக்கு தெரியாமலே நம்மள பத்தி அசிங்க அசிங்கமா கனவு காண நம்மள அறியாம நாமளே காரணமாகிடுறோம்....

.....................................................

சுதந்திரமா இருப்போம் தப்பில்ல, ஆனா கொஞ்சம் கவனமாவும் இருக்கலாமே...

Wednesday, 4 March 2015

டெல்லி ரேப் - பெண்கள் மீதான வார்த்தை வன்முறைகள்



எங்க திரும்பினாலும் டெல்லி ரேப் கேஸ் பத்தி தான் பேச்சா இருக்கு. நேத்தே அது சம்மந்தமான போஸ்ட்ட பாத்துட்டு நிறையவே டென்சன்ல புலம்பிட்டே இருந்தேன்...

என்ன தான் சொல்ல வராங்க இந்த ரேபிஸ்ட்களும், அதை பிரசுரிக்கும் மீடியாக்களும்?

பொண்ணுனா எப்பவுமே ஒரு வேட்டைப் பொருள். ஆண்கள் வேட்டைக்காரர்கள். வேட்டைப்பொருள் எப்பவுமே வெளில வரக் கூடாது, மீறி வந்தா வேட்டையாட முழு சுதந்திரம் வேட்டைக்காரர்களுக்கு உண்டுன்னு சொல்ல வராங்களா இவங்க?
எவ்வளவு தைரியம் இருந்தா, அவ ரேப் பண்ணும் போது எதிர்க்காம இருந்துருக்கணும், அப்படி இருந்திருந்தா அவள கொல்ல வேண்டிய நிலை வந்திருக்காது, எனவே இது ஒரு ஆக்சிடென்ட்ன்னு பேட்டி குடுத்துருப்பான்?

அதுலயும் ரேப் பண்றவங்களுக்கு மரண தண்டனை குடுக்கக் கூடாதாம், ஏன்னா, முன்னாடி எல்லாம் ரேப் பண்றவன் வெறும் ரேப் மட்டும் பண்ணிட்டு அய்யோ பாவம் பொழச்சு போகட்டும்னு உயிரோட விட்ருவானாம். இந்த தண்டனை நிறைவேற்றப் பட்டா அப்புறம் ரேப் பண்றவன், அவ காட்டிக்குடுத்துடுவாங்குற பயத்துல கொலை பண்ணிருவானாம். அதனால் அவனை தாராளமா ரேபிஸ்ட்டா சுதந்திரமா விடுங்க, கொலைகாரனா மாத்திராதீங்கன்னு சமுதாயத்துக்கு ஒரு உயரிய அட்வைசும் சொல்லியிருக்கான்.

இத பத்தி அவன திட்டி ஏகப்பட்ட எப்.பி போஸ்ட்ஸ்... சிலபேர், அவன் குடும்ப பெண்கள இழுத்து வக்கிரமாவும், சிலர் அமைதியான முறைல மனக்குமுறலையும் வெளிப்படுத்தியிருக்காங்க. ஸ்டேடஸ் மட்டுமே கவனத்துல கொள்ளாம கமண்ட்ஸ்ன்னு பாத்தா அவன் அம்மாவ அங்க இரும்பு கம்பி வச்சு அங்க குத்தி கிழிச்சா அவனுக்கு வலி தெரியும்னு ஒருத்தர் கமன்ட் போட்ருக்கார். ஏன்யா, அந்த பொண்ண கற்பழிச்சு கொன்னு, அது விதி அதோட முடிஞ்சு போச்சு. அவளுக்கு சப்போர்ட் பண்றேன்னு ஊர்ல இருக்குற பொண்ணுங்கள எல்லாம் வார்த்தை கற்பழிப்பு பண்ணி அற்ப சுகம் காணுற உங்கள எந்த லிஸ்ட்ல சேர்க்க? இதுல அவன் அக்கா தங்கச்சிங்கள அப்படி பண்ணணும், அப்போ இப்படி தான் பேசுவானான்னு அதிமேதாவித் தனமா கேள்வி கேட்டு அங்கயும் பொண்ணுங்கள தான் கற்பழிக்குறாங்க. அதான் அந்த வக்கீல் சொல்லிட்டான்ல, என் வீட்டு பொண்ணா இருந்தா அவள இழுத்துட்டு போய் எல்லார் முன்னாலயும் பெட்ரோல் ஊத்தி கொளுத்துவேன்னு... ரேப் பண்ணினா எதிர்த்து போராடக் கூடாது, ரேப் செய்யப்பட்டு வீட்டுக்கு வந்தா அவள பெட்ரோல் விட்டு கொளுத்தணும்... பெண்களுக்கான அவனுங்க எண்ணங்களுக்கும் தர்மத்துக்கும் ஒரு சபாஷ்... அவனுங்க குடும்பத்துல பொறந்த பாவத்துக்கு இன்னும் அந்த பொண்ணுங்க எவ்வளவு தான் அனுபவிக்கணும் சொல்லுங்க....

இந்த கேஸ் சம்மந்தமா பொங்குற அத்தனை ஆண்/பெண்களுக்கும் என்னோட ஒரு ரிக்வஸ்ட்...

தயவு செய்து அந்த பொண்ணுக்கு சப்போர்ட் பண்றேன் பேர்வழினோ, இல்ல, அந்த ரேபிஸ்ட்ட திட்டணும்ங்குற சாக்குலயோ அவங்க வீட்டு பெண்கள தெருவுல இழுக்காதீங்க. அப்புறம் கற்பழிக்குற அவனுகளுக்கும் வார்த்தையாலயே கற்பழிச்சு, பலபேரையும் கற்பழிக்க தூண்டுற உங்களுக்கும் வித்யாசமே இல்லாம போய்டும்...
உங்கள் வார்த்தைகள சுயசோதனை செய்துக்கோங்க, வக்கிரம் உங்களுக்குள்ளயே எத்தனை நிறைஞ்சு ததும்புதுன்னு தெரிஞ்சிடும்...

இன்னொரு விஷயம், பெண் பிள்ளைகள கண்டிச்சு வளர்க்கணும், அவளுக்கு புத்தி சொல்லணும்னு சொல்ற சமூகம், அவன் தப்பு பண்ணினது பெண்களால தான்னு பழி போடுற சமூகம், ஆண் பிள்ளைகள் இனி நல்லவிதமா வளரணும்னு நல்லொழுக்கத்த சொல்லித் தர தயாரா இல்ல...

எண்ணங்களை நல்ல விதமாய் நினைப்போம், விதைப்போம், நடப்போம்... ஆண் பிள்ளையா இருந்தாலும் சரி, பெண் பிள்ளையா இருந்தாலும் சரி, பிறரையும் தன்னைப் போல் நேசிக்குற வித்தைய கத்துக் குடுப்போம்... இதுக்கு மேல வேற என்னத்த சொல்ல... இந்த சமூகத்துக்கிட்ட மவுனமா தான் போக வேண்டியிருக்கு...

Wednesday, 16 April 2014

மின்னுவதெல்லாம் பொன்னல்ல...



வாங்க நாம இப்போ வித்யாசமான ஒரு மலைக்கு போகலாம்...

மலை ஏறப்போறோம். அதனால நல்ல தரமான சூ போட்டுக்கோங்க... கைல வேணா ஒரு குச்சி எடுத்துக்கோங்க... ஹலோ, குச்சி எடுத்துக்க சொன்னது அடுத்தவங்கள அடிச்சி விளையாட இல்ல, மலை மேல ஏறும் போது ஒரு புடியோட மலை மேல ஏறலாம், அதுமட்டுமில்ல, கால் வலிச்சா கொஞ்சம் கம்ப தரைல ஊனி அது பிடில காலுக்கு ஓய்வு குடுக்கலாம்...

சரி, இந்த மலைய பாத்தீங்களா? பெரிய பெரிய மரங்கள்ன்னு எதுவும் இல்லல... குட்டி குட்டியா புதர்கள், சின்ன புல்லு, பாறைங்கன்னு இருக்குல... ஷ்.... அங்க என்னமோ நீண்டு நெடிய அசையாம கிடக்கு பாருங்க...

அம்மே... அது மலை பாம்பு... வாங்க, மெதுவா கிட்டப் போய் பாப்போம். எப்பா.... எவ்ளோ பெரிய பாம்பு பாத்தீங்களா? பெருசா எதையோ இப்ப தான் பிடிச்சி விழுங்கியிருக்கு. இனி அது ஜீரணிக்குற வர அசையாது... யோவ், யாருயா அது, அசையாதுன்னு சொன்னதும் குச்சிய விட்டு அத சீண்டி பாக்குறது? பேசாம வர மாட்டீங்களா?

என்ன? ஏன் கூப்ட்டீங்க? என்னது, மலைல தங்கம் இருக்கா? தகதகன்னு மின்னுதா? அதுவும் கருப்பு கலருல? இருங்க இருங்க வரேன்...

ஓ.... தங்கம். பளபளன்னு மின்னுதுல... இப்போ என்ன பண்ண போறீங்க?

என்னது? மலை முழுக்க தேடி, கிடைக்குற தங்கத்த சுருட்ட போறீங்களா? அடிஈஈஈ....

இது தங்கம் இல்லீங்க... இதுக்கு பேரு தான் காக்கா பொன். கருப்பு கலர்ல பொன் மாதிரி மின்னுதுல, அதான் இதுக்கு அப்படி ஒரு பேரு. பெரியவங்க கிட்ட கேட்டா சொல்லுவாங்க, இந்த காக்கா பொன்ன கைல வச்சி உரசினா, சும்மா ஜிகினா பூசின மாதிரி பளபளன்னு மின்னும்... நாமெல்லாம் இத பாக்க இப்போ தான் முடியுது....

கால் வலிக்குதுல.... அப்படியே வாங்க, உக்காருவோம். இந்த காக்கா பொன் இருக்கே, இதெல்லாம் மலை பிரதேசங்கள்ல பாறையா கூட இருந்துருக்கு. ஆனா இப்போ இத பாக்குறதே அபூர்வம். இப்போ அது இல்ல, விஷயம்... நான் ஒரு தத்துவம் சொல்லப் போறேன்...

என்னது, தத்துவமான்னு அலறி அடிச்சி, எழும்பி ஒடுனீங்க, அப்புறம், கொண்டு வந்த குச்சி வச்சி அடிச்சிருவேன்... அப்படியே அமைதியா உக்காருங்க...

நாம வாழ்க்கைல நிறைய பேர சந்திப்போம்ங்க... நம்மோட பாதைல வர்ற எல்லாரும் ஒரே மாதிரி இருப்பாங்கன்னு நினைச்சிட கூடாது. அலங்கார வார்த்தைகளோட நம்மள நெருங்குரவங்க தான் அதிகம்... இந்த அவசர உலகத்துல எல்லாத்தையும் ரெடிமேடா வாங்கி வாங்கியே பழகி, அன்பையும் ரெடிமேடா குடுக்க ஆரம்பிச்சுடறாங்க சில பேரு... ஆனா அதுல அன்பு இருக்குமான்னு பாத்தா நிச்சயமா இருக்காது... ஒண்ணுமே இல்லீங்க, ஒருத்தங்கள பாத்தா, நல்லா இருக்கியான்னு கேட்டா அது யதார்த்தம், அத விட்டுட்டு, நீ இங்கு நலம், நான் அங்கு நலமான்னு கேட்டா? இல்ல, தெரியாம தான் கேக்குறேன், அவங்கள நம்ம கிட்ட அடகு வச்சிட்டு அவங்க என்ன பண்ண போறாங்க? இல்ல நம்மள அவங்க எடுத்துக்க நாம எப்படி அனுமதிக்க முடியும்?

ஆத்மார்ந்தமான நட்புக்கள்ன்னு ஒருதலைபட்சமா யாரும் சொல்லிட்டு இருக்க கூடாது. அது ரெண்டு பேர் சம்மந்தப்பட்டது...

ரொம்ப குழப்புறேனோ? 

இப்போ இந்த பேஸ்புக்கையே எடுத்துக்கோங்க.. 

நம்மோட பிரெண்ட்ஸ், நமக்கு அறிமுகம் ஆனவங்க, எதோ ஒரு வகைல நம்மள ஈர்த்தவங்கன்னு அவங்கள பாத்து ஒரு குட் மார்னிங் சொல்லி, அவங்களும் நம்மள பாத்து சின்னதா ஒரு குட் மார்னிங் சொன்னா அதுல வர்ற சந்தோசம் வேற....

ஆனா இங்க போலியான புன்னகைகள் மலிஞ்சு கிடக்கு. போலி புன்னகைன்னு கூட இல்ல, ரெடிமேட் ரப்பர் ஸ்டாம்புகள்...

ஏதாவது ஒரு மாய்மால வார்த்தைய எங்க இருந்தாவது எடுக்க வேண்டியது, யாரு எவருன்னு கூட பாக்காம, என்ன விஷயம் சொல்லியிருக்காங்கன்னு கூட தெரியாம அவங்க போஸ்ட்ல போய் அத ஒட்ட வேண்டியது...

நட்புனா அர்த்தமே தெரியாம, இங்க யார பாத்தாலும் பிரெண்ட்ன்னு சொல்றது. யாருனே தெரியாதவங்க போஸ்ட்ல கூட போய் நட்பே உயிரேன்னு உருக வேண்டியது. அட, அத சொந்தமா உருகினா கூட பரவால... எங்க இருந்தாவது காப்பி பண்ணி ஒட்ட வேண்டியது... இவங்க எல்லாம் பிரெண்ட்ஷிப்போட உண்மையான வேல்யூ தெரிஞ்சா ஏன் இப்படி எல்லாம் பண்ண போறாங்க.....

மின்னுவதெல்லாம் பொன்னல்லன்னு சும்மாவா சொல்லி வச்சாங்க பெரியவங்க....

சரி, சரி, வாங்க கீழ இறங்கலாம்... வீட்டுக்கு போய் காபி சாப்பிடணும்ல... பொறுங்க, அதுக்குள்ள என்ன அவசரம், குட் மார்னிங் சொல்லணும்ல...

குட் மார்னிங்....

Tuesday, 25 February 2014

இணையமும் குழந்தைகளுக்கான பாதுகாப்பும்...


இணையம் அதாங்க, இந்த இன்டர்நெட் வந்த நாள்ல இருந்து வீட்டுக்குள்ளயே முடங்கி இருந்த பெண்கள் வீட்டுக்குள்ள இருந்தே வெளி உலகத்த எட்டிப் பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. தங்கள உற்சாகப்படுத்தி, தங்களோட திறமைகள ஊக்குவிக்கவும் ஆட்கள் இருக்காங்கங்குற ஒரு நம்பிக்கை அவங்கள கொஞ்சம் கொஞ்சமா ஸ்ட்ரெஸ்ல இருந்து வெளி வர ரொம்பவே உதவி பண்ணியிருக்கு. இருந்த இடத்துல இருந்துகிட்டே தங்களுக்கான உரிமைகளுக்கு ஓங்கி குரல் குடுக்க முடியுது அவங்களால.

சரி, அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நான் இப்போ பேசப்போற விஷயம், பேஸ் புக்ல ஆங்காங்கே தட்டுப்பட்ட, தட்டுப்படுற, தட்டுப்படப்போற விசயத்த வச்சி சொல்ல வரேன். இத படிச்சுட்டு யார் சொன்னா எப்போ சொன்னான்னு யாரும் கேள்வி கேக்காதீங்க, காரணம், இத இன்னார்தான் சொல்லனும்ன்னு அவசியம் இல்ல, கொஞ்சம் கூர்ந்து கவனிச்சா நம்ம கண்ணுல அடிக்கடி தென்படும்.

அதாவது, ஒரு பொண்ண அசிங்கப்படுத்தணும்னு முடிவு பண்ணிட்டா, அவங்கள பத்தி, அதுவும் அவங்க கேரக்டர் பத்தி கதை கட்டி விடுவாங்க. அதையும் மீறி சில பேரு அவங்க போட்டோவ சுட்டு ஒண்ணு பேக் ஐ.டி தொடங்குவாங்க, இல்லனா கண்ட கண்ட பேஜ்ல போட்டு, அசிங்க அசிங்கமா கமன்ட் போட வைப்பாங்க.

இதனால அவமானப்பட்டு கூனி குறுகி போறது பொண்ணுங்கதான்னாலும் இதே பிரச்சனை ஆண்களுக்கு வேற மாதிரி இருக்கு. ஒரு ஆணை பிடிக்கலனா, ஒண்ணு, அவங்க ஐடிய ஹேக் பண்றாங்க, இல்ல, அவங்களோட படங்கள வச்சி புதுசா ஒரு ஐ.டி உருவாக்குறாங்க. அந்த ஐ.டில இருந்து பெண்களோட இன்பாக்ஸ்ல தப்பு தப்பா பேசினா போதும், சம்மந்தப்பட்ட ஆளோட இமேஜ் டோட்டல் டேமேஜ்.

ஆக மொத்தத்துல, ஒரு பொண்ண அசிங்கபடுத்தணும்னாலும் சரி, ஒரு ஆணை அசிங்கப்படுத்தனும்னாலும் சரி, பகடைகாயா யூஸ் ஆகுறவங்க பொண்ணுங்க தான்.

ஆனா இப்போலாம் காலம் மாறியாச்சுங்க. பெண்களும் இப்போ தைரியமாகிட்டாங்க. ஒருவேளை நம்மள பத்தியோ இல்ல நம்மோட போட்டோவையோ தப்பா யூஸ் பண்ணினா தைரியமா எதிர்கொள்ளலாம்ங்குற துணிச்சல் அவங்களுக்கு இருக்கு. இன்னிக்கி நிறைய பேர், இந்த மாதிரி பிரச்சனைல மாட்டி, அதுல இருந்து வெளி வந்தும் துணிச்சலா அவங்க போட்டோ போட்டுட்டு இருக்காங்க.

ஐயையோ, அந்த தைரியம் எல்லாம் எனக்கு கிடையாதுமா, நான் என் போட்டோவ போடமாட்டேன் அப்படின்னு பதறி கிட்டே நீங்க இன்னொரு முடிவு எடுக்கலாம். அப்படி என்ன முடிவுன்னு கேக்குறீங்களா?

நம்ம போட்டோ போட்டா தான பிரச்சன, நம்ம குட்டி பசங்க போட்டோ போடலாமேன்னு அப்படின்னு புத்திசாலித்தனமா நினைப்பீங்க. அதுவும் நம்ம வீட்ல பொம்பள புள்ளைங்க இருந்தா நமக்கு பெரும தான். அவங்கள விதவிதமா அலங்கரிச்சு அழகு பாக்குறதோட இல்லாம, இப்போ லேடஸ்ட் பேஷனா அவங்கள விதவிதமான ஷாட்ஸ்ல போட்டோ எடுத்து அத எல்லாம் பேஸ் புக்ல போட்டு விட்டுடுறீங்க.

சரி, அதனால என்ன, சின்ன குழந்தைகள்னா பல பேரும் ரசிக்கத்தானே செய்வாங்கன்னு கேக்குறீங்க தானே? ஆமாங்க, அந்த போட்டோக்களுக்கு லைக் கொட்டும். வாவ், க்யூட், அழகு செல்லம், அம்முகுட்டின்னு கமண்ட்ஸ் பறக்கும். நமக்கும் ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கும்.

ஆனா இத எல்லாம் மவுனமா ஒரு ஓநாய் கூட்டம் நாக்க தொங்கபோட்டுட்டு கவனிச்சுட்டு இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா? உங்க குழந்தையோட போட்டோவில கண்ணியமா ஒரு கமன்ட் போட்டுட்டு அந்த ஓநாய் திருட்டுத்தனமா அந்த போட்டோவ டவுன்லோட் பண்ணலாம். டவுன்லோட் பண்ணது மட்டுமில்லாம அதுக்குன்னே இருக்குற கண்ட கண்ட சைட்டுகள்ல அந்த போட்டோவ அப்டேட் பண்ணும் அந்த கேடுகெட்ட ஜென்மம். இதுக்காகவே அந்த பக்கமாவே சுத்திட்டு இருக்குற பல பிணந்தின்னி கழுகள் உங்க குழந்தையை கொத்திக் குதறலாம், அதுவும் ரொம்ப ரொம்ப வக்கிரமா...

அந்த மாதிரி சைட்ஸ் இருக்கான்னு அதிர்ச்சி எல்லாம் அடையாதீங்க, கண்டிப்பா இருக்கு. இதெல்லாம் வெட்ட வெட்ட துளிர்க்குற காளான் கூட்டங்கள். 

இந்த மாதிரியான சைட்டுகளை பற்றி நாம புகார் பண்ணவே முடியாதான்னு ஏங்குறீங்களா? நாமளால இத எல்லாம் செய்ய முடியாதான்னு தவிக்குறீங்களா, கண்டிப்பா உங்களாலான உதவிய, பங்களிப்ப நீங்க பண்ணலாம். அதுக்கு நீங்க முதல்ல போக வேண்டிய சைட் இது தான் 

ASACP | Association of Sites Advocating Child Protection - Report Child Pornography

இங்க போய் நீங்க நீக்கியே ஆகணும்ன்னு நினைக்குற குழந்தைகள் தொடர்பான பாலியல் சம்மந்தப்பட்ட பேஜஸ் ரிப்போர்ட் பண்ணலாம். 

சரி, உங்களான பங்களிப்ப கண்டிப்பா நீங்க குடுங்க. இப்போ கொஞ்சம் நான் சொல்றத காது குடுத்து கேக்கலாம் தானே....

முதல்ல நாம ஒரு விஷயம் புரிஞ்சிக்கணும். எந்த விஷயமாவும் இருக்கட்டும், எதுக்கெடுத்தாலும் இந்த சமூகத்தையே குறை சொல்லி பழகிட்டோம் நாம. பிரச்சனைன்னு ஒண்ணு வந்தா அடுத்தவங்கள ஈசியா கைகாட்டி பழி போட்டுடுறோம். ஏங்க, நான் தெரியாம தான் கேக்குறேன், இந்த சமூகம்னா என்ன? ஏன், அதுல நாம இல்லையா?

இந்த மாதிரி தவறான நடத்தை உள்ளவங்கள கண்டிக்குறது எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு நம்மள தற்காத்து கொள்ள வேண்டியது முக்கியம் இல்லையா? அதுவும் நம்மோட சந்தோசத்துக்காக, கைதட்டலும் பாராட்டும் வேணும்ங்குரதுக்காக ஒண்ணுமே தெரியாத நம்மோட பிஞ்சு குழந்தைய நாமளே பலியிடலாமா?

மறுபடியும் சொல்றேன், இத சரி பண்ணவே முடியாதான்னு கேட்டீங்கனா, போராடலாம், நம்மால முடிஞ்ச அளவு போராடலாம், ஆனா நாமளே அந்த பிணந்தின்னி கழுகுகளுக்கு இரை போடக் கூடாது. நான் சொல்றது புரிஞ்சுதுன்னா நல்லதுங்க, இல்லனா அனுபவிச்சு தெரிஞ்சுக்கோங்க. ஏன்னா அனுபவத்த விட சிறந்த ஆசான் வேற யாரும் கிடையாது பாருங்க...

பிஞ்சு குழந்தைகளை எட்ட நின்னு பூவாகவே பாத்து மகிழ்வோம், பறித்தும் கொடுக்க வேண்டாம், நுகர்ந்தும் பாக்க வேண்டாம்...

நான் தெளிவா இருக்கேங்க... நீங்களும் தெளிவா இருந்தா சந்தோசம்...

 

Wednesday, 11 December 2013

இன்று ஒரு தகவல்


“முந்தைய நாளின் பகலுக்கு தொடர்ச்சியாய் வந்த இரவுக்கு ஓய்வு கொடுத்து என் இன்றைய பகல் வணக்கம் வரும் இரவுக்கான வரவேற்போடு”

அவ்வ்வ்வ் என்ன, எதுவுமே புரியலயா?

இது தாங்க நான் இன்னிக்கி உங்களுக்கு சொல்லி இருக்குற குட் மார்னிங்.

நல்லா கூர்ந்து கவனிச்சு பாருங்க, முடிஞ்சா கண்ணாடிய தொடச்சு விட்டுட்டு பாருங்க, முதல்ல புரியாத மாதிரி தான் இருக்கும், ஆனா எதோ புரியுற மாதிரி இருக்கும்.

இப்படி தான் நானும் புரியாம பல விசயத்தையும் உளறிக்கிட்டே இருக்கேன். ஆனாலும் எனக்கு சில விஷயங்கள் புரிஞ்சிடும். எனக்கு புரிஞ்ச உடனே, உங்களுக்கு குழம்பிடும்.

அப்படி தான் டெய்லி காலைல கிளம்புறது முன்னாடி எல்லாரையும் குழப்பி விட்டுட்டு போய்டணும்.

எப்படி தெரியுமா?

இந்தா நான் குழப்புறேன் பாருங்க, இன்று ஒரு தகவல் சொல்லி:

இன்று ஒரு தகவல் 1: திங்குறதுக்கே நேரம் இல்லாம அரக்க பறக்க பாஞ்சு போய் ஆபிஸ்லயோ, காலேஜ்லயோ, இல்ல ஸ்கூல்லயோ, அப்படியும் இல்லையா, குட்டி சுவரிலோ போய் உக்காந்தாலும் இன்றைய தினம் திங்கட்கிழமைதானாம்...


இன்று ஒரு தகவல் 2: கிளிக்கு வாய் சிகப்பா இருப்பதாலும், பொண்ணு மாப்பிள்ளைக்கு செவ்வாய் தோஷம் இருப்பதாலும் இன்றைய நாளில் விசேசமில்லை. இன்றைய நாள் செவ்வாயாக இருப்பதாலயே இன்று செவ்வாய் கிழமையாம்...


இன்று ஒரு தகவல் 3: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று யாரோ சொல்லி விட்டு சென்று விட்டதால், அந்த வாக்கை பொய்த்து போகாமல் காப்பாற்ற நகை வியாபாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட நாளே புதன் கிழமையாம்.


இன்று ஒரு தகவல் 4: கழிந்து விட்ட நேற்று புதன்கிழமை என்பதாலும், கழியப்போகும் நாளை வெள்ளிகிழமை என்பதாலும், இரண்டுக்கும் இடையில் இன்று மாட்டிக்கொண்டதாலும் இன்றைய நாள் வியாழன் கிழமையாம்...


இன்று ஒரு தகவல் 5: இன்று ஆங்கிலத்தில் Friday என்பதால், தமிழில் வெள்ளிக்கிழமை என்றே அழைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்தினால் இன்றைய பொழுதின் பெயர் வெள்ளிக்கிழமையாம்...


இன்று ஒரு தகவல் 6: முந்தின நாள் அரக்கபரக்க வேலை செய்ததாலும், அடுத்த நாள் சோம்பேறியாய் தூங்க போற காரணத்தாலும், துன்பத்துக்கும் இன்பத்துக்கும் இடைல இடிப்பட்டு கழியப் போற இன்றைய நாளின் பெயர் சனிக்கிழமையாம்.


இன்று ஒரு தகவல் 7: மிகவும் சோம்பலாகவே விடிந்து விட்ட காரணத்தாலும், இன்னும் சூரியனை கூட பலபேர் பார்க்காத காரணத்தாலும், சில பல ஆடுகள், மாடுகள், கோழிகள் கொலையுண்ட காரணத்தாலும் இன்றைய கிழமைக்கு ஞாயிற்றுக்கிழமை என்று பெயராம்....!


என்ன, அப்படியே ஏழு நாளுக்கும் ஏழு தகவலா சொல்லியாச்சா, இத எல்லாம் ஒரே நாள்ல சொல்லிடாம, ஒவ்வொரு நாளா வந்து, ஒவ்வொரு தகவலா தெரிஞ்சுகிட்டு போங்க.


நான் இப்போ தகவல் சொல்லி ரொம்ப களைச்சு போயிட்டேன்.



ஹலோ, அந்த ஆப்பிள் ஜூஸ் எங்கப்பா?



.

Thursday, 5 December 2013

இணையத்தில் பெண்கள் நிலை...



ஒரு விதை இருக்கு, அது அவ்வளவு ஈசியாவா முளைக்குது?

இல்லல

தூங்கிட்டு இருக்குற அது, கடினமான தோல துளைசுட்டு, தன் மேல மூடி இருக்குற மண்ணை தாண்டி கஷ்ட்டப்பட்டு தானே முளைக்குது. ஹைய்யோ, இவ்வளவு பெரிய ஓடு இருக்கே, கஷ்ட்டமா இருக்கே, நம்மள சுத்தி மண்ணு இருக்கே, இப்படி போட்டு நம்மள அழுத்துதேன்னு நினைக்காம, தன்னை மறைக்கும் ஓடுகிட்டையும், அழுத்துற மண்ணுகிட்டையும் இருந்து, தனக்கு தேவையான உந்து சக்திய கிரகிச்சு, போராடி வெளில வந்துடுது.

முதல்ல அதுகெல்லாம் ஒரு கைத்தட்டு....

நாம மட்டும் ஏன் எந்த கஷ்டமே இல்லாம முன்னேறணும்ன்னு நினைக்கணும்? அது சுயநலமில்லையா?

நமக்கு கஷ்ட்டம் வர வர சோர்ந்து போகாம, அதையே ஒரு பாடமா எடுத்து, அதுல இருந்து நல்ல விசயங்கள கிரகிச்சுகிட்டு கொஞ்சம் கொஞ்சமா முன்னேறுற முயற்சி இருக்கே, அது கண்டிப்பா நல்ல பலன தரும்ங்க....

சரி, சரி, இப்போ நான் ஒரு குட் மார்னிங் சொல்லிட்டு, வந்த சொல்ல வந்த விசயத்த சொல்லிடுறேன்.

குட் மார்னிங்...

இணையத்தில் பெண்கள் – அப்படின்னு எழுதணும்னு ரொம்ப நாளா யோசிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, அப்படி நாம எழுதினா யாராவது சண்டைக்கு வந்துடுவாங்களோன்னும் தோணிச்சு. சரி, அத எல்லாம் நமக்கெதுக்கு. நாம வந்த வேலைய கவனிப்போம்.

நான் இந்த பேஸ் புக்-ல 2010-ல இருந்து இருக்கேன். அதாவது கிட்டத்தட்ட மூணு வருசத்துக்கும் மேலா இருக்கேன். இங்க பெண்களுக்கு பாதுகாப்பு உண்டா, இல்லையான்னு எல்லாம் அப்போ எனக்கு தெரியாது. எதோ விளையாட்டு தனமா உள்ள வந்தாச்சு.

ஆனாலும் நான் என்னோட போட்டோவ போடல, நெட்டுல இருந்து சுட்ட ரெண்டு கண்ணுங்க தான் என்னோட ப்ரோபைல் படம். கொஞ்ச நாள் போக போக, எனக்கு தெரிஞ்சவங்க எல்லாரும் அவங்க போட்டோவ வைக்க ஆரம்பிச்சாங்க, நான் கூட முக்கால்வாசி என் முகம் தெரியுற அளவு போட்டோ எல்லாம் வச்சேன். ஆனா எதோ ஒரு உள்ளுணர்வு, இது வேணாம்னு தடுத்துச்சு. அப்போ இருந்து, அத எல்லாம் சுத்தமா டெலிட் பண்ணிட்டு, இப்போ எனக்குன்னு ஒரு சின்ன அடையாளம், என்னை நல்லா தெரிஞ்சவங்க, புரிஞ்சவங்க நட்பு மட்டும் போதும்னு முடிவெடுத்துட்டு இன்னும் இங்கயே தான் சுத்திகிட்டு இருக்கேன்.

இத்தன வருசத்துல, நான் புரிஞ்சுகிட்ட விசயத்த தாரளமா இங்க சொல்லலாம் தானே. அதனால தான் இந்த பேஸ் புக்ல பெண்களோட நிலைமை எப்படி இருக்குன்னு கொஞ்சமா யோசிச்சு பாத்தேன்.

ஒரு வகைல பாத்தா, இந்த பேஸ் புக், ரிலாக்ஸ் பண்றதுக்கு நல்ல ஒரு தளம். நம்மோட கருத்துக்கு ஒத்துபோறவங்க, கலகலப்பா பேசுறவங்க, ஒரு நல்ல நட்பு, இப்படி எல்லாமே இங்கயும் இருக்க தான் செய்யுது. குடும்ப பிரச்சனை, வீட்டு வேலை, வெளில ஆபிஸ் டென்சன், அது இதுன்னு ஏகப்பட்ட மெண்டல் பிரஸரோட இருக்குற பெண்களுக்கு பிரெண்ட்ஸ் கூட பேசி ரிலாக்ஸ் பண்ண இந்த பேஸ் புக் ரொம்ப நல்லா ஹெல்ப் பண்ணுது.

அது மட்டுமில்லாம, தனக்குன்னு ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தேடி குடுத்து, அவங்களுக்கு கண்டிப்பா ஒரு தன்னம்பிக்கையும் குடுக்குது. எல்லாருக்கும் எவ்வளவோ திறமைகள் இருக்கும். அத எல்லாம் வெளிபடுத்த கூட முடியாம எத்தனையோ பேர் மனசளவுல ஒடுங்கி, தன்னோட சுயத்தையே தொலைச்சுட்டு இருக்காங்க. இந்த இன்டர்நெட் அவங்க பிரெண்ட்ஸ் மத்தியில அவங்களுக்குனு ஒண்ணு ரெண்டு கைதட்டையாவது வாங்கி குடுத்து அவங்கள சந்தோசப்படுத்துது. அவங்களுக்குள்ள ஒரு தன்னம்பிக்கைய விதைக்குது.

என்னை பொறுத்தவரை சந்தோசம்னா எது தெரியுமா?

நான் யூ.ஜி படிச்ச காலேஜ்ல எந்த பிரச்சனைனாலும் என்னை தான் பிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து பிரின்சிபால் ரூமுக்கு அனுப்புவாங்க. ஏன்னா பிரின்சிபால் கிட்ட அவ்வளவு ஈசியா தப்பிச்சுட முடியாது, திட்டு திட்டுன்னு திட்டி தீத்துடுவாங்க. அப்படி நான் உள்ள போனா, அங்க உள்ளவங்க கிட்ட என்னை பத்தி என்ன சொல்லுவாங்க தெரியுமா?

ஒண்ணாம் நம்பர் கே.டி, உடம்பு முழுக்க திமிரு, கொழுப்புக்கு பஞ்சமே இல்ல, ஆனா ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணுன்னு அப்படின்னு தான் இன்ட்ரோவே குடுப்பாங்க. அந்த நிமிஷம், நிஜமாவே ஒரு சந்தோசம் இருக்கும்.

நம்மோட கருத்த துணிஞ்சி சொல்றதும், நேர்மையா இருக்குறதும், போராடுற தைரியமும் இருந்தாலே மனசு சந்தோசம் ஆகிடுங்க.


அப்படி தான், இந்த பேஸ் புக்லயும் நிறைய பேர், ஒரு சந்தோசத்துக்காக வராங்க. இதுல சந்தோசம்குறது கண்டிப்பா அவங்க அவங்க வகுத்து வச்சிருக்குற வரைமுறைக்கு ஏற்ப மாறுபடுது. அவங்க ஆணோ பெண்ணோ, அவங்களோட சந்தோசத்தின் வரைமுறைல தான் சில நேரம் பிரச்சனையே ஆரம்பிக்குது.


என்னது, பிரச்சனையா? அதென்ன பிரச்சனை அப்படின்னு பதறுரவங்க, அப்படியே ஒரு நாற்காலிய போட்டு இப்படி உக்காருங்க.

பிரச்சனையே இல்லாத இடம்ன்னு ஏதாவது இருக்கா சொல்லுங்க, அந்த பிரச்சனைல நம்மோட பங்கு என்னங்குறது தான் இப்போ பிரச்சனையே....

ஆரம்ப காலங்கள்ல அன்பை பரிமாறிக்குறது, திறமைகளை ஊக்குவிக்குறது, அப்படின்னு நட்பு வட்டத்துக்குள்ள நல்லா தான் போயிட்டு இருக்கும். அதுவே அந்த கூட்டத்துக்குள்ள ஒரு குள்ள நரி நுழைஞ்சிடுச்சுன்னு வைங்க, அப்புறம் நடக்குறத கொஞ்சம் நினச்சு பாருங்க....

ஒரு ஆண் ஒரு போட்டோ போட்டா அது அந்த அளவு கவனிக்கப்படுறது இல்ல... அவங்க போட்டோ கீழ வர்ற கமண்ட்ஸ் நிறைய இருந்துச்சுனா, அவங்க பிரெண்ட்ஸ் அவங்கள நல்லா கலாய்ச்சு வச்சிருப்பாங்க. அதுவே ஒரு பொண்ணோட போட்டோ இருந்துச்சுனா என்ன என்ன கமண்ட்ஸ் எல்லாம் வருதுன்னு பாத்துட்டு தானே இருக்கீங்க. நல்லா தெரிஞ்ச நட்பு வட்டங்களா இருந்தா அங்க பிரச்சனை குறைவு. அதுவே நட்பு வட்டத்த தாண்டும் போது? கொஞ்சம் யோசிச்சு பாருங்க.

இவ்வளவு ஏன், நான் என்னோட ப்ரோபைல்ல அட்வர்டைஸ்ல வர்ற சின்ன கொழந்தைங்க போட்டோ தான் வைக்குறேன், அங்க வந்தே செல்ல குட்டி, புஜ்ஜி குட்டி, ஐ லைக் யூன்னு கமன்ட் போடுறாங்க, இந்த படத்த வச்சிருக்குறது ஒரு பொண்ணு, அது அந்த பொண்ண காயப்படுத்தும்ன்னு ஒரு இங்கிதம் கூட தெரியாம. நான் அந்த மாதிரி யாராவது கமன்ட் போட்டா, கமன்ட் டெலிட் பண்ணிட்டு, சம்மந்த பட்ட ஆளையும் பிளாக் பண்ணிட்டு போய்ட்டே இருக்கேன். இதுக்கெல்லாம் டென்சன் ஆகி, வீணா ஏன் நம்மோட எனர்ஜி வேஸ்ட் பண்ணனும்னு.

ஏன், அப்படினா, பொண்ணுங்களுக்கு சுதந்திரம் இல்லையா, இங்லாந்துல போட்டோ போடலையா, அமெரிக்காவுல போடலையான்னு சண்டைக்கு வந்துடாதீங்க, அவங்க எல்லாம் போட்டோ போடுறாங்க, அதே நேரம், அதுக்கு வர்ற கமன்ட் என்னவா இருந்தாலும் எதுவா இருந்தாலும் அத ஒரு காம்ப்ளிமென்ட்டா தான் எடுத்துட்டு சந்தோசமா போறாங்க.

சினிமா துறை சார்ந்தவங்களுக்கு கண்டிப்பா ஒரு விளம்பரம் தேவைப்படுது, அதுவும், அவங்க அழகியல் சம்மந்தமா ஒரு விளம்பரம் தேவைப்படுது. அப்படி பட்ட சூழ்நிலைல அவங்க இந்த மாதிரி பிரச்சனைகள ஈசியா எடுத்துட்டு அதுல இருந்து கடந்து போய்டுறாங்க. இல்லனா, இத பத்தி நினைச்சுகிட்டே வருத்தபட்டுகிட்டே இருந்தா அடுத்து அவங்களால பீல்ட்ல நிம்மதியா நிலைக்க முடியாது.

அதுவே நம்ம நாட்டுல சினிமா, மாடலிங் தவிர்த்து மற்ற துறைகள்ல இருக்குற பிரபலங்கள் கூட அவங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை வரும் போது தடுமாறி தானே போறாங்க.

ஒண்ணு, நம்மள பத்தி யார் என்ன சொன்னாலும் அத கண்டுக்காம கடந்து 

போக தெரியணும், இல்ல அத காம்ப்ளிமென்ட்டா எடுத்துட்டு சந்தோசப்பட தெரியணும். ரெண்டுமே இல்லையா, நம்மோட திறமைகள வெளிப்படுத்தி நம்மளை இங்க, இந்த தளத்துல ப்ரூவ் பண்ணணும். இவங்க இப்படி தான்ன்னு ஒரு இமேஜ் க்ரியேட் பண்ணி பாருங்க, நம்மோட புகைப்பட இமேஜ் ஒண்ணுமே இல்லன்னு தோணும்.

ஏன், ஏன், ஏன், இந்த ஆம்பளைங்க திருந்தினா என்ன, அவங்க பண்ற தப்புக்கு நாங்க ஏன் ஏன் போட்டோ போட கூடாதுன்னு கேள்வி கேட்டு கொந்தளிக்குறதுக்கு முன்னாடி நாம ஒரு விசயத்த பத்தி நல்லா யோசிக்கணும். இந்த பேஸ் புக் ஒண்ணும் நாம கண்டுபிடிச்ச விஷயம் கிடையாது. அவங்கள பொறுத்தவரை இதெல்லாம் ஒரு தப்பே கிடையாது. நம்மோட கலாச்சாரம் இங்க கட்டி காக்கப்படணும்னா கண்டிப்பா நாம தான் கட்டி காக்கணும். அது எந்த மாதிரின்னு தேவைப்படுற ஒவ்வொருத்தரும் தான் முடிவு பண்ணனும். கண்டிப்பா சமூகம் மாற வேண்டியது தான், அதுக்கு கொஞ்சம் பொறுமையா தான் ஸ்டெப்ஸ் எடுத்து வைக்கணும்.

அதுவரைக்கும்,

நம்ம பேரை கேட்ட உடனே, அடடே, அவங்களா? அவங்க ரொம்ப அழகா இருப்பாங்களே அப்படீங்குற இமேஜ் வேணுமா, இல்ல, அவங்களா, ரொம்ப நல்லவங்க அப்படீங்குற இமேஜ் வேணுமா, இல்ல, அவங்க பயங்கர திறமைசாலி அப்படீங்குற இமேஜ் வேணுமா? இதுல எந்த இமேஜுமே தப்பில்ல தான், யார் யாருக்கு எது வேணுமோ, இல்ல, எதெல்லாம் வேணுமோ, அதுக்கு தகுந்த மாதிரி அவங்கவங்க பாதைல போக வேண்டியது தான்...

அப்புறம், சபாஷ், நல்லா கேட்டுக்கோங்க பெண்மணிகளா, நீங்க முதல்ல ஒழுங்கா வீட்டுக்குள்ள இருங்க, தேவையில்லாம வெளில வரது தான் பிரச்சனையே அப்படின்னு மீசைய முறுக்கிக்குற ஆம்பளைங்களுக்கு ஒரு விஷயம் சொல்லிக்குறேன்...

நீங்க ஆம்பளைங்க, நீங்களும் போட்டோ போடுறீங்க, உங்க போட்டோவ கண்ட கண்ட சைட்ஸ்ல போட்டு எந்த பொண்ணும் ஆனந்தம் அடஞ்சுக்குரதில்ல, அப்படினா, அழுக்கு முழுக்க முழுக்க எங்க இருக்குன்னு யோசிங்க.... உங்கள எல்லாம் நீங்க எப்பவும் சுத்த படுத்திக்க விரும்பவே மாட்டீங்க, அப்படி தானே, நல்லது, அப்படியே இருங்க.... 

இந்த சமூகத்த மாத்தணும்னா கூட பொண்ணுங்க தாங்க நினைக்கணும். அது எப்படின்னு அப்புறமா சொல்றேன்.

இப்போ நான் என்னோட பாதைல போறேன்.

ஹஹா அப்புறமா வரேன்....

Monday, 2 December 2013

மொக்கையிலும் மொக்க, படு மொக்க




இன்னிக்கி என்ன எழுதலாம் என்ன எழுதலாம்னு மண்டைய பிச்சுகிட்டு (அட, நிஜமா தாங்க) யோசிச்சப்போ, நாமளும் 2010-ல இருந்து பேஸ் புக்ல இருக்கோம், அப்படி என்ன தான் பண்ணிட்டு இருந்துருக்கோம்னு பாக்கலாம்னு தோணிச்சு. பாட்டிங்க மட்டும் தான் நாங்க எல்லாம் அந்த காலத்துல...... ன்னு ஆரம்பிக்க முடியுமா? நாங்களும் ஆரம்பிப்போம்ல..... 

ஆரம்பத்துல பேஸ் புக் வந்தப்போ எல்லாரும் நிறைய ஜோக்ஸ் தான் சொல்லிட்டு இருந்தாங்க. நானும் அத பாத்துட்டு கவுன்ட்டர் குடுத்துட்டு இருந்தேன். இருந்தாலும் சொந்தமா எங்க ஜோக் சொல்றது? அதுக்கு தான் இருந்துச்சு பிரெண்ட்ஸோட எஸ்.எம்.எஸ். அத எல்லாம் வச்சு தான் ஒரு மூணு மாசம் நானும் பேஸ் புக்ல மொக்க போட்டுட்டு இருந்தேன்.


அப்படி என்ன தான் மொக்க போட்ருக்கேன்னு கொஞ்சம் பாப்பமா?


மொக்க தத்துவம்:

          1. பிறப்பு ஒரு முறை, 
              இறப்பு ஒரு முறை,
              காதல் ஒரு முறை,
              வாழ்க்கை ஒரு முறை
              ஆனால்
              சாப்பாடு மட்டும் தினமும் மூன்று முறை
              அதனால் கூச்சப்படாமல் சாப்டுங்க, ஆரோக்கியமா இருங்க 

          2. விடியும் வரை தூங்குவது தூக்கம் அல்ல,
              நம்மால் முடியும் வரை தூங்குவதுதான் தூக்கம்
              அதனால் நல்லா தூங்குங்க.

          3. யாருடைய இதயத்தையும் உடைத்து விடாதீர்கள்,
              ஏனெனில் அவர்களுக்கு இருப்பது ஒரே ஒரு இதயம்
             அதற்கு பதில்.
             அவர்களின் எலும்பை உடையுங்கள், அது 206 உள்ளது.....

சீரியஸ் தத்துவம்:

          1. நினைவுகளை உனக்குள் சுமப்பது வெற்றி அல்ல,
             உன்னுடைய நினைவுகளை அடுத்தவரை 
             சுமக்க வைப்பதுதான் வெற்றி

          2. உங்கள் அன்புக்குரியவருக்கு பரிசளிக்க நினைத்தால்,
              உங்கள் விலை மதிப்பில்லா நேரத்தை பரிசாக அளியுங்கள்...

          3. இமைகள் திறந்து நேசிப்பதை விட இதயம் திறந்து நேசித்து பார்,
              உன் உலகம் உனக்காய் காத்திருக்கும்

          4. குளம் வற்றியதும் பறந்து போகிற கொக்கு தான் காதல்
              ஆனால்
              குளம் வற்றினாலும் குளத்தோடு சேர்ந்து இறந்து போகிற 
              மீன் தான் நட்பு

          5. நீங்கள் காயப்படுத்திய மனிதரிடம் மன்னிப்பு கேட்க 
             தேவை இல்லை, ஏன் என்றால் உங்களை நேசிக்கும் 
             மனிதரையே நீங்கள் காயப்படுத்த முடியும், அவர்களோ 
            உங்களிடத்தில் மன்னிப்பை விட அதிக அன்பை தான் 
            எதிர்பார்ப்பார்கள்...

          6. நண்பன்!!! எதிரிகளின் கூட்டத்தில் உன் கைப் பிடித்து நிற்பவன்
              நீ தவறு செய்யும் போது உன் முதுகில் அறைபவன்
             உனக்காக எல்லாம் செய்து விட்டு நன்றியை எதிர்பார்காதவன்
             உன்னை புன்னகைக்க வைப்பவன்
             உன் கண்ணீரை துடைத்து ஐ மிஸ் யு சொல்பவன்
             உன் நன்றியை மறுத்து போடா லூசு என்பவன்
             நண்பேண்டா............


இப்போ கேள்வி பதில் நேரம்:

          1. மண்புழுவுக்கு ஏன் கால் இல்லைன்னு தெரியுமா ..?

              அதுக்கு கால் போட்டா மாண்புழு ஆகிடும்ல 
              அதனால போடுறதில்லை.!

          
          2. எறும்பு ஏன் பல்லு விளக்குறது இல்லைன்னு தெரியுமா ..?

              ஏன்னா அது வாய் சைசுக்கு இன்னும் பிரஷ் கண்டுபுடிக்கலயாம்


          3. லைப்ல ஒண்ணுமே இல்லனா போர் அடிக்கும், 
              தலைல ஒண்ணுமே இல்லனா?

              பளபளன்னு க்ளார் அடிக்கும்


டவுட்டோ டவுட்: 

          1. இங்கிலீஷ்ல பெரிய ABCD சின்ன abcd இருக்குற மாதிரி 
              தமிழ்ல ஏன் இல்ல ..?

          2. கொசுவுக்கு கொம்பு இருக்கா .?
     
          3. இருமல் வந்தால் இருமுவிங்க, 
              காய்ச்சல் வந்தால் காய்ச்சுவிங்களா?

          4. நாம வெய்யில்ல நடந்து போகும்போது நம்ம நிழல் கீழே விழுதுல,
             அப்படி விழும் போது அதுக்கு வலிக்காதா ..?

          5. மஞ்சத்தண்ணிக்கும் பச்சத்தண்ணிக்கும் என்ன வித்தியாசம்?

          6. கால்ல முள் குத்தாம இருக்குறதுக்காக செருப்பு போடுறோம், 
            அப்போ வாயில மீன் முள்ளு குத்தாம இருக்க என்ன 
            போடுறோம்?

          7. கிணத்துக்குள்ள மண்ணை கொட்டினா அது குழியா மாறிடும்.
             ஆனா குழிக்குள்ள மண்ணை கொட்டினா கிணறா மாறுமா?


இதெல்லாம் கூட பரவால, எதோ ஒரு எக்ஸாம் ஹால்ல யாரோ எழுதின கேள்வி பதில் அப்போ ரொம்ப பேமஸா வலம் வந்துட்டு இருந்துச்சு. அது என்னன்னும் கொஞ்சம் பாத்ருவோமே

கேள்வி 1:

நாயக்கர்கள் – பெயர் காரணம் கூறுக :

          Point no:1
          நாயக்கர்களுக்கு நாய்கள் பிடிக்கும் என்பதால் நாயக்கர்கள் என்று 
          பெயர் வந்தது என்று சிலர் கூறுகிறார்கள்.

          Point no 2: 
          நாயக்கர்களின் மண்டபங்களில் நாய் போன்ற சிற்பங்கள்                  
          வைத்திருப்பதால் நாயக்கர்கள் என்று பெயர் வந்தது என்று 
          சிலர் கூறுகின்றனர்.

          Point no 3: நாயக்கர் மஹால் மதுரையில் உள்ளது. அது மிகவும் 
          அழகாக இருக்கும். அந்த மண்டபத்தில் தான் இம்சை அரசன் 
          படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதை என் சித்தி பையன் 
          சென்று பார்த்துள்ளான். அதை பாண்டியர்களுக்கு கீழே உள்ள 
          கொத்தனார் நிருவியுள்ளமையால் பாண்டியர்களுக்கு அந்த 
          பெருமை வந்தது. உண்மையில் அந்த கொத்தனார் தான் மிகவும்   
         பாடுபட்டார். எனவே அவரை நான் மிகவும் பாராட்டுகிறேன்.

கேள்வி 2:

கோவில்களின் சிறப்புகளை கூறுக :

          “ஜி” படத்தில் எங்கள் தல அஜித் ஒரு பாடலை பாடியுள்ளார்
          “டிங் டாங் கோவில் மணி கோயில் மணி நான் கேட்டேன்”
          இப்பாடலடி இவ்வளவு தான் எனக்கு தெரியும். அரையாண்டு 
          தேர்வில் கண்டிப்பாக இந்த பாடலை முழுமையாக எழுதி விடுவேன்                     என்று நம்பிக்கை தெரிவித்து கொள்கிறேன்.

கடைசியா, 


மொக்கையோ மொக்கை:
          1. கரண்ட்'டைக் கூட கால்களால் மிதிக்கலாம் 
              “காக்கையாக மாறினால்”!

          2. பரம்பரைக்கு உக்காந்து சாப்டர அளவு சொத்து
              இருந்தாலும் பாஸ்ட் பூட் கடைல நின்னுக்கிட்டுதான் சாப்பிடணும்

          3. நாய்க்கு என்னதான் நாலு கால் இருந்தாலும் அதால கால் மேல 
              கால் போட்டு உட்கார முடியாது

          4. இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்சினியர் ஆகலாம், ஆனா 
              பெரசிடேன்சி காலேஜ்ல படிச்சிட்டு பிரசிடென்ட் ஆக முடியாது 





இப்போதைக்கு இவ்வளவு தாங்க.... இதெல்லாம் ரெண்டு மாச பதிவு... மீதி அப்பப்போ வந்து சொல்லிட்டு போறேன்...







Tuesday, 26 November 2013

என்ன மாதிரி சமூகத்துல வாழ்றோம் நாம???? கடுப்பேத்துறாங்க மை லார்ட்..... (2)


சோம்பல்ங்குறது நமக்குள்ள வந்துடுச்சுன்னா அன்றைய நாள் முழுக்க சோம்பலாவே தான் இருக்குமாம். அப்படி தான் ஒரு பதிவு எழுதணும்னு ஒரு வாரமா யோசிச்சுட்டு இருக்கேன். சோம்பல் வந்து, ஏனோ தடுத்துட்டே இருந்துச்சு. இந்தா காலைல ஒன்பது மணிவரை எதுவுமே தோணாம வெறிக்க வெறிக்க மானிட்டர தான் பாத்துட்டு இருந்தேன். அப்புறமா தான் எழுதுவோம்னு முடிவுக்கு வந்தேன்.

எழுதுவோம்னு முடிவு பண்ணியாச்சு, எத பத்தி எழுதலாம்னு யோசிச்சுகிட்டே என்னோட blog போய் ஒவ்வொருத்தர் பதிவா பாக்க ஆரம்பிச்சேன். அப்போ தான் நம்ம கோவை ஆவி அண்ணாவோட பதிவு கண்ணுல பட்டுச்சு.  அதனால அடுத்தவங்க பதிவ சுட்டு போடுறாங்களே, அவங்களுக்கு மறுபடியும் நானும் ஒரு சூடு வச்சா என்னன்னு தோணிச்சு. (இத பத்தி ஏற்கனவே ஒண்ணு சொல்லியிருக்கேன், அத இங்க போய் பாத்துக்கோங்க)

இந்த மாதிரி சொந்த பதிவுகள சுட்டு போடுறவங்க கிட்ட தொலைச்ச அனுபவம், மூளைய போட்டு கசக்கியோ, இல்ல, மனசுக்கு தோணுறத சுயமா எழுத பழகியோ போஸ்ட் போடுறவங்களுக்கு கண்டிப்பா இருக்கும். மாங்கு மாங்குன்னு ஒரு ரசனையோட அவங்க எழுதுவாங்க, அத அப்படியே சுட்டுட்டு போய் தன்னோடதுன்னு போட்டுட்டு ஜாலியா இருப்பாங்க சில பேரு. அவங்களுக்கு எல்லாம் கண்டிப்பா மனசாட்சின்னு ஒண்ணு இருக்கவே இருக்காது.

நானும் தெரியாம தான் கேக்குறேன், இப்படி அடுத்தவங்க பதிவுகள சுட்டு போடுறீங்களே, உங்களுக்கு மானம், ரோசம், இதெல்லாம் கிடையவே கிடையாதா. ரொம்ப நல்லா இருக்குன்னு அத யாராவது பாராட்டினா, உள்மனசுல உறுத்தல் வரவே வராதா?

ஆனா, சொந்த பதிவ எழுதிட்டு, அத இன்னொருத்தன்/ஒருத்தி சுட்டுட்டு போறத பாத்து எத்தனை நாள் தான் அமைதியா இருக்குறது? இல்லனா மனசுக்குள்ளயே கஷ்ட்டப்பட்டுட்டு இருக்குறது? தப்பு செய்றது நீங்க, அதுக்காக வருத்தப்படுறது மட்டும் நாங்களா? இதெல்லாம் பாத்து கொஞ்சமாவது எங்களுக்கு கோபம் வர கூடாதா? அந்த கோபத்துல அத எல்லாம் தட்டிக் கேக்க கூடாதா?

இப்படி தான் ஒரு சம்பவம் (என்னோட கவிதைய அவங்க சொந்த கவிதை மாதிரி சுட்டு போட்டுருந்தாங்க ஒருத்தங்க) நடந்துச்சு. எதேச்சையா அது என் கண்ணுல பட, அங்க போய் சண்டை போட்டேன். இதோ இங்கயே ஒரு பதிவு எழுதினேன். அப்புறம், அந்த பொண்ணு அந்த பதிவ டெலிட் பண்ணிட்டு போய்ட்டாங்க. நானும் அதோட கொஞ்சம் அமைதியா தான் இருந்தேன். இத்தனைக்கும் அந்த குரூப் (single frame) இத கண்டுக்கவே இல்ல.

அப்புறமா தான் இன்னொரு சம்பவம் நடந்துச்சு. எனக்கு ரொம்ப தெரிஞ்சவங்க, இந்த பேஸ் புக்கால எனக்கு கிடைச்ச இன்னொரு அம்மா, அவங்க எழுதின கவிதைய தான் எழுதினதா ஒருத்தங்க அதே single frame குரூப்ல போஸ்ட் பண்ணியிருக்காங்க. அத வேற சிறந்த கவிதைன்னு செலக்ட் பண்ணி, அத அந்த குரூப் கவர் போட்டோல வாழ்த்து தெரிவிச்சிருந்தாங்க.



இத பாத்துட்டு சொந்தமா எழுதினவங்க மனசு எப்படி கஷ்ட்டப்படும்? அவங்க என்கிட்ட சொன்னாங்க. இத கொஞ்சம் என்ன ஏதுன்னு கேளுடா காயத்ரின்னு (ஏன், அவங்களே அத கேட்ருக்கலாமேன்னு யோசிக்குறீங்களா? அவங்களால அந்த குரூப்ல கமன்ட் போட முடியாது, காரணம் அவங்க அந்த குரூப்ல கிடையாது) .

சரி, இப்போ உங்களுக்கெல்லாம் நியாயமான ஒரு விஷயம் தோணியிருக்கும். ஒரு குரூப் இருக்கு, அதுல ஒருத்தங்க ஒரு போஸ்ட் போடுறாங்க, அவங்க போடுறது அவங்க சொந்த போஸ்ட்டா இல்ல சுட்ட போஸ்ட்டான்னு குரூப் அட்மின்னுக்கு தெரிய நியாயம் இல்ல தானே. அதனால தான் நாம தானே எடுத்து சொல்லணும்னு தான் நான், அங்க ஒரு போஸ்ட் போட்டேன், அது இது தான்.

“இன்னிக்கி நீங்க அப்டேட் பண்ணியிருக்குற குரூப் போட்டோல நீங்க பாராட்டி தள்ளியிருக்குற கவிதைக்கு சொந்தக்காரர் நீங்க குறிப்பிட்ட அம்மணி இல்ல, குரூப் அட்மின் அது என்னன்னு விசாரிச்சு அந்த போஸ்ட்ட டெலிட் பண்ணி, அது பத்தி ஒரு போஸ்ட் போட முடியுமா?”


இந்த போஸ்ட் போட்டதுமே, இந்த குரூப் அட்மின்ஸ் கண்ணுக்கு எப்படியோ தெரிஞ்சுடுச்சு. அதுல ஒருத்தர் Kala Roshan. அவர் வந்து என்ன ஏதுன்னு விசாரிச்சார். இது யார் எழுதினது, அத அவங்க தான் எழுதினாங்கன்னு உங்களால எப்படி சொல்ல முடியும்னு எல்லாம் கேள்வி கேட்டார். நானும், அது ஏற்கனவே போஸ்ட் பண்ணியிருந்த லிங்க் எல்லாம் எடுத்து குடுத்து, இந்த தேதிக்கு முன்னாடி இது வேற எங்கயாவது போஸ்ட் ஆகியிருக்கான்னு கூகிள்ல போய் தேடி பாருங்கன்னு சொன்னேன். அத உண்மையா எழுதினவங்க பெயரும், அவங்க வச்சிருக்குற பேஜ் எல்லாமே அவருக்கு தெரியும். ரெண்டு பேருமே நண்பர் வட்டத்துல இருக்குறவங்க தான்.

சரி, இப்போ நீங்க என்ன தான் சொல்ல வறீங்க, அடுத்தவங்க எழுதினத பகிர்றது ஒரு தப்பா? இந்த மாதிரி காப்பி அடிச்சு போடுறவங்கள எப்படி கண்டுபிடிக்குறது? அது இன்னொருத்தர் பதிவு தான்னு எப்படி நம்புறது? அந்த மாதிரி காப்பி அடிக்குரவங்கள என்ன பண்றதுன்னு ஒரு கேள்வியும் எழுப்பினார். சரியான கேள்விகள் தான்னு நானும் எனக்கு தெரிஞ்ச பதில சொன்னேன்.

அது என்னன்னா “முதல்ல அந்த போஸ்ட் பண்ணினவங்கள இங்க வந்து பதில் சொல்ல சொல்லுங்க, தவறா அந்த போஸ்ட் கவர் போட்டோல வந்துச்சுன்னு ஒரு போஸ்ட் அதுவும் pinned போஸ்ட் போடுங்க, அப்புறமாவது அடுத்தவங்க எழுதினத எடுத்து போடுறவங்க எழுதினவங்க பெயரோட சேர்த்து போடுவாங்க. அடுத்தவங்க எழுத்தை பகிரலாம், தப்பில்ல, ஆனா அது யாரோட எழுத்துன்னு சேர்த்தே பகிரனும்நு சொல்லுங்க, அவங்க பண்ணினது தப்புன்னு சொன்னா அத இந்த குரூப்-ல பகிரங்கப் படுத்துவோம்னு சொல்லுங்க, அப்போ ஒரு ஆரோக்கியமான பகிர்தல் இங்க இருக்கும்”-ன்னு சொன்னேன். இதுல இன்னொருத்தங்க வந்து “இனிமேல் யாருடைய பதிவும் மிக நல்லதெனக் கண்டு பாராட்டி முதல் பதிவா போடுமுன் பதிவாளரிடம் அறிவித்து ஆக்கம் அவங்களது தானான்னு தெளிவு படுத்தினா நல்லது என்கிறது எனது அபிப்பிராயம்”ன்னு சொன்னாங்க. நியாயம் தானே.


அப்புறம் எல்லாம் சுமூகமா முடிய Kala Roshan ஒரு போஸ்ட் போட்டார். அதாவது, நான் கேட்ட கேள்வியையும், சொன்ன பதிலையும் வச்சு, கேள்வியும், பதிலும்னு கவர் போட்டோ ஒண்ணு ரெடி பண்ணி போட்டார். இது கண்டிப்பா காப்பி அடிச்சு போட்டவங்களுக்கு ஒரு பயத்த உருவாக்கும் தானே. ஒட்டு மொத்தமா எல்லாரும் திருந்த முடியாது, திருத்தவும் முடியாதுனாலும் ஒண்ணு ரெண்டு பேர் இத பாத்துட்டு திருந்தியோ, இல்ல பயந்துகிட்டோ இதே தப்ப செய்யாம இருந்தா அது நமக்கு பெரிய வெற்றி தானே...




அப்படா, எல்லாம் நல்லப்படியா முடிஞ்சுதுன்னு நினச்சு சந்தோசமா ஒரு வணக்கத்த வச்சுட்டு வந்தேன்.

இதுவரைக்கும் எல்லாமே சுமூகமா தான் போயிட்டு இருந்துச்சு. ஒரு நல்ல குரூப் அட்மின்னா என்ன பண்ணனும்? ஒரு சம்பவம் நடக்குது, சரி, அது என்ன ஏதுன்னு விசாரிச்சு, அத பத்தி ஒரு முடிவுக்கு வரணும். அதுதானே நியாயம். அத விட்டுட்டு இங்க ஒருத்தர் எப்படியெல்லாம் காப்பி அடிச்சவருக்கு வக்காலத்து வாங்குறார் பாருங்க. யாரவர்னு கேக்குறீங்களா? அவர் தான் single frame-மோட இன்னொரு அட்மின் Mohan PRao.











முதல்ல நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்குற மாதிரியே ஆரம்பிச்சார். “இத எல்லாம் நாங்க ரூலாவே சொல்லிக் கொண்டு தான் வருகிறோம், ஆனால் யார் செய்யுறாங்க, எல்லாரும் ஈசியா காப்பி பேஸ்ட் தானே செய்யுறீங்க, உங்க சொந்த பதிவுகள போட முயற்சி பண்ணுங்களேன், அடுத்தவங்களுக்கு வக்காலத்து வாங்கி பக்கத்த ரொப்பி தள்ள வேண்டாமே, ஸ்டேடசே இல்லாமல் போர் அடித்துக் கொண்டு இருந்த பேஜ் உங்க டிஸ்கசனால ரோம்பிடுச்சு இல்லே. உங்க பேரும் பேனர்ல வந்துடுச்சு இல்ல”ன்னும் “காயத்ரி தேவி சொல்வதைபோல் திருடுங்கள் ஆனால் திருடிய இடத்தின் விலாசத்தையும் பெயரையும் போட்டு திருடுங்கள், இல்லையென்றால் சண்டை போடுகிறவர்களின் பதிவு எல்லாம் முக்கியத்துவம் பெற்று விடும்”ன்னும் அவர் சொன்னப்போ தான், நான் காப்பி பேஸ்ட் செய்யுறதாகவும், சண்டை போடுறதாகவும், விளம்பரத்துக்காக தான் இத எல்லாம் பண்ணினேன்னும் அவர் சொல்றார்ன்னு எனக்கு புரிஞ்சுது. சபாஷ்... அப்போ ஒரு விசயத்த தப்பு, அத சரி பண்ணுங்கன்னு எடுத்து சொல்றவங்க எல்லாம் சண்டைகாரங்களா? விளம்பர பிரியர்களா? இது எனக்கு தெரியாம போச்சேன்னு நினைச்சுகிட்டே அங்கயே என்னோட கண்டனத்தை தெரிவிச்சுக்கிட்டு நான் வந்துட்டேன்.

எப்பவுமே, என்னுடைய ப்ரோபைல் தாண்டி, நான் யார்கிட்டயும் வம்புக்கு போறதே இல்ல. அதுவும் என்னோட ப்ரொபைல்ல தேவையில்லாம வந்து கமன்ட் போடுறவங்கள தான் நான் கண்டிப்பேன். யார் எதை பற்றி சொன்னாலும் நானா ஆராய்ஞ்சு அத அறியுற வரை அதை கண்டுக்கவும் மாட்டேன். இது என்னை பத்தி நல்லா தெரிஞ்சவங்களுக்கு தெரியும். இங்க அந்த பெரிய மனுஷன், என்னை பத்தி சொன்னதும் எனக்கு சுர்ர்ர்னு கோபம் வந்துச்சு. ஆனா ஒரு விஷயம், ஒரு தெரு நாய் நம்மள பாத்து குலைக்குதுன்னு வச்சுக்கோங்க, நாமளும் அந்த இடத்துல நின்னே திருப்பி குலைச்சா பாக்குறவங்க நம்மள தான் தப்பா நினைப்பாங்க. அந்த நேரம் நாம அந்த இடத்துல இருந்து வந்துடுறது தான் நல்லது. அதனால தான் நானும் அந்த இடத்த விட்டுட்டு வந்துட்டேன். (இந்த இடத்துல இந்த example சரியா இருக்கும்குரதால இத நான் சொன்னேன், இத யாரையும் புண்படுத்த சொல்லல)

ஆனா இத அப்படியே விடவும் கூடாதே, இந்த இடத்துல இப்படியும் ஒரு ஆள் இருக்கார்ன்னு கண்டிப்பா தெரிஞ்சவங்களுக்காவது எடுத்து சொல்லனுமே, அவங்களாவது ஜாக்கிரதையா இருப்பாங்களே, அதனால தான் நான் அதெயெல்லாம் இங்க சொல்றேன்.

நான் அங்க இருந்து வந்ததுக்கு அப்புறமும் அவரோட மனக்குமுறல் அடங்காம அவர் புலம்புனதையும் நான் இங்க சொல்லணும்ல.

அவர் புலம்பினது இது தான்.

“வயித்தெரிச்சல் யாருக்கு வந்ததுன்னு இந்த ஸ்டேடஸ் படிச்சவங்க எல்லாருக்கும் தெரியும். புகழ் தேடாதவங்கன்னா எதை பற்றியும் கண்டுக்காம விடுறது தான். நாலாயிரம் பேரு குரூப்ல இருக்காங்க, நாப்பது பேர் தான் கமன்ட் போடுறாங்க, அந்த மாதிரி தான்” “இந்த குரூப்ப விட்டு வெளியே போய் டிஸ்கஸ் பண்ணி ரூம் போட்டு டிஸ்கஸ் பண்ணி இங்க கமன்ட் போடுறவங்களும் சில பேர் இருக்காங்க” “இந்த குரூப்போட அமைதியை கெடுக்க நினைக்குற எந்த சக்தியும் ஒன்னும் செய்ய முடியாது என்பதை எங்க குழுவின் அன்பர்கள் ஆதரவு தெரிவிக்கும்”




ஆமா, நான் வயித்தெரிச்சல்-ன்னு சொன்னேன் தான், ஆனா அதுல தப்பு இருக்குறதா எனக்கு தோணல, ஒரு தப்பு நடந்தப்போ அத சுட்டி காட்டி, அத அவங்க சரி பண்ணனும்னு நாம சொன்னது அவங்களுக்கு அமைதிய குலைக்குறதாம். இதுல, அவங்க குரூப்-ல நாலாயிரம் பேர் இருக்குறதாகவும், அவங்க ரொம்ப ஒற்றுமையா இருக்குறதாகவும், அந்த ஒற்றுமைய நான் திட்டம் போட்டு குலைக்க நினைக்குறதாகவும் சொல்லியிருக்கார். ஏங்க, நான் தெரியாம தான் கேக்குறேன், நாலாயிரம் பேர் இருக்க கூடிய இடத்துல அந்த போஸ்ட்ட நாலு பேர் ஒழுங்கா பாத்தாங்களாங்குறதே சந்தேகம் தான். அங்க அவ்வளவு சீரியஸா டிஸ்கசன் போயிட்டு இருக்கும் போதே, என்ன ஏதுன்னு கவனிக்காம, அருமை, அற்புதம்னு ஒப்புக்கு வந்து கமன்ட் போட்டுட்டு போனவங்க தான் அதிகம். இதுவா ஒரு குரூப்போட வெற்றி? யாரும் எதையும் கண்டுக்காம இருக்குறதுல தான் அவங்க ஒற்றுமையா காட்டுறாங்களாயிருக்கும்.

அங்க எந்த அன்பர்கள் குழுவும் ஆதரவு தெரிவிக்கலன்ன உடனே எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டார் அந்த பெரிய மனுசர்.

செய்யுறதையும் செய்துட்டு, கொட்ட வேண்டிய வார்த்தைகளையும் கொட்டிட்டு, அப்புறம் அந்த பதிவுகளை டெலிட் பண்ணிட்டா எல்லாம் சரியா போய்டுமா? இந்த மாதிரி ஆகக்கூடும்ன்னு தான் நான் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து எல்லாத்தையும் பத்திரப்படுத்தி வச்சுக்கிட்டேன். இந்த போராட்டத்துல என் பக்கம் இருக்குற நியாயத்த உணர்ந்து பேசினவங்களும் இருக்காங்க. அவங்களுக்கு என்னோட தேங்க்ஸ்.

நியாயமான கோபம் எல்லாருக்கும் வரணும். இல்லனா நாம எல்லாம் உணர்சிகளோட பிறந்ததே வேஸ்ட். இந்த மாதிரி தவறு உங்க கண்ணுக்கும் தெரிஞ்சா தயங்காம சுட்டிக் காட்டுங்க, தட்டி கேளுங்க. அப்படியும் முடியலையா அத பத்தி ஒரு போஸ்ட் போட்டு, அடுத்தவங்கள தட்டிகேக்க ஊக்கப்படுத்துங்க.



நான் இன்னொரு போஸ்ட்டோட இன்னொரு நாள் உங்கள மீட் பண்றேன்...



Wednesday, 20 November 2013

இணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்


சில விஷயங்கள் நாம பாத்தா அழகா இருக்கும், சில விஷயங்கள் கேட்டா அழகா இருக்கும். அப்படி தான் காலைல வீட்டு பக்கமா வந்து நின்ன மினி பஸ்ல இருந்து “மார்கழி பூவே, மார்கழி பூவே, உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்”ன்னு பாட்டு கேட்டுச்சு. உடனே மனசு உற்சாகம் ஆகிடுச்சு. அந்த உற்சாகம் உங்களுக்கும் வர வேண்டாமா? வாங்க அப்படியே உற்சாகத்தோட ஒரு வணக்கத்த வச்சுப்போம்.

அப்புறம், நாளைக்கு என்ன பதிவு போடலாம்னு நேத்து உக்காந்து யோசிச்சப்போ சோம்பல் வந்து என்கிட்ட அத நாளைக்கு பாத்துக்கலாம், இப்போ தூங்குற வழிய பாருன்னு மிரட்டோ மிரட்டுன்னு மிரட்டிடுச்சு. நானும் அதுக்கு பயந்துகிட்டு பம்மிகிட்டே போய் தூங்கிட்டேன். காலைல எழுந்து ஏதாவது பழைய கவிதை ஒன்ன ரீ-போஸ்ட் போடலாம்னு தான் இருந்தேன், ஆனா அதுக்குள்ள ஒரு விஷயம் கண்ணுல தட்டுபட்டுடுச்சி. அதென்ன விசயம்னு கேக்குறீங்களா? இந்தா அது பத்தி தானே சொல்ல வரேன், முழுசா படிங்க....

நானும் இந்த பேஸ் புக் வந்து கிட்டத்தட்ட வருஷம் மூணரை ஆகுதுங்க. நான் இங்க வந்தப்போ எல்லாருமே கொஞ்சம் ஒற்றுமையா ஜாலியா பழகிட்டு இருந்தாங்க. அதனால இங்க நான் பெரிய அளவுல மன உளச்சல அடைஞ்சதில்ல. ஆனா அத விட பெரிய ஆபத்துல சிக்கியிருக்கேன். அத பத்தி அப்புறமா ஒருநாள் கண்டிப்பா டீடைலா சொல்றேன். இப்போ நான் சொல்ல வரது பொண்ணுங்கள குறி வச்சு அவங்களுக்கு மனரீதியான தொல்லை குடுக்குற சில வக்கிரம் பிடிச்ச ஓநாய்ங்கள பத்தி.

இது நடந்து கிட்டத்தட்ட ஆறு மாசம் இருக்கும். நான் யூ.ஜி படிக்குறப்பவே அப்பா கைய எதிர்பார்க்காம சின்ன சின்னதா ப்ராஜெக்ட் பண்ணி குடுத்து அதுல இருந்து வர்ற காச என்னோட மனசுக்கு பிடிச்ச மாதிரி செலவு பண்ணி பழக்கம். இது என் அம்மா கத்து குடுத்தது. உனக்கு அடுத்தவங்களுக்கு உதவணும்னு தோணிச்சுனா அப்பா காச எடுத்து குடுக்கணும்னு நினைக்க கூடாது, நீ சம்பாதிச்சு குடுக்கணும்ன்னு அம்மா தான் இந்த ஐடியாவே எனக்கு சொல்லி குடுத்தாங்க. அதுல இருந்து நானும் அதையே பாலோ பண்ணிக்கிட்டு வரேன். நான் பி.ஹச்.டி ஜாயின் பண்ணப்போ ஒரு பொண்ணு எனக்கு அறிமுகம் ஆனா. அவளோட ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்க்கும் போதும் எனக்கு அப்படியே என்னை பாத்த மாதிரியே இருக்கும். அதனால அவள எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்போ தான், அவளுக்கு பீஸ் கட்ட முடியாத சூழ்நிலை, அதுக்கு மேல அவளால படிப்ப தொடர முடியாதுன்னு தெரிஞ்சுது. நான் ஏன் அவளுக்கு உதவக் கூடாதுன்னு கைல இருந்த காச அவ கிட்ட குடுத்துட்டேன். காசே இல்லாம நான் இருந்து பழக்கமில்ல. அதனால நான் ப்ராஜெக்ட் எழுதி தரேன், யாராவது தேவைனா சொல்லுங்கன்னு என்னோட எப்.பில ஆறு மாசம் முன்னாடி ஒரு ஸ்டேடஸ் போட்டேன்.

அதுல தான் ஒருத்தன் வந்து ஒரு கமன்ட் போட்டான், நான் நீங்க சொல்ல வரது எனக்கு புரியலீங்கன்னு அடுத்த கமன்ட் போட்டேன். அவ்வளவு தான், அவன் இன்பாக்ஸ் வந்துட்டான் (அதர்ஸ் போல்டர்ல தான், காரணம் அவன் என் பிரெண்ட் லிஸ்ட்ல கிடையாது). வந்தவன் ஹாய் டின்னு ஆரம்பிச்சான். சும்மாவே எனக்கு நல்லா தெரிஞ்சவங்க யாராவது டி-ன்னு சொன்னா சூர்ருனு கோபம் தலைக்கு ஏறும். இவன் என்ன பாத்து எப்படி சொல்லலாம்ன்னு கடுப்பாகிட்டேன் (நீ மட்டும் அவன், இவன்ன்னு சொல்லலாமான்னு கேட்டீங்கனா, இவனுக்கெல்லாம் மரியாத குடுத்தா தான் தப்பு). அப்பவே அவன உண்டு இல்லைன்னு ஆக்கியிருப்பேன், ஆனாலும் அந்த நேரம் வேற வேலைல இருந்ததால அப்படியே விட்டுட்டேன்.

அப்புறம், பிசில நான் அப்படியே அந்த விசயத்த மறந்தாச்சு. ஒரு வாரம் கழிச்சு அதர்ஸ் போல்டர் பக்கம் போனா, அந்த பொறம்போக்கு தொடர்ந்து எனக்கு மெச்சேஜ் அனுப்பிகிட்டே இருந்துருக்கான். அத்தனையும் வெளில சொல்ல முடியாத வார்த்தைகள். அதுலயும், உனக்கு பயமா இருந்தா வேற ஐ.டி தரேண்டி, அங்க வந்து பேசிடின்னு எனக்கே ஐடியா வேற குடுக்குறானாமாம். இவன ப்ளாக் பண்ணிட்டு போக எனக்கு கண்டிப்பா அதிக நேரம் ஆகாது. ஆனா இவன் எத்தன பேர் இன்பாக்ஸ்-ல இந்த மாதிரி பேசியிருப்பான். எத்தன பேர் வெளிலயே சொல்ல முடியாம மனசுக்குள்ள வெந்து போயிருப்பாங்க. அதனால தான் நான் அவன ரிபோர்ட் பண்ணி அப்புறமா ப்ளாக் பண்ணினேன். அதோட விடாம அவன் ஐடிய குறிப்பிட்டு ஒரு ஸ்டேடஸ்-ம் போட்டேன்.

அப்புறமா தான் தெரிஞ்சுது, அந்த பொறுக்கி இன்பாக்ஸ்ல வந்து பேசினான். சில பொறுக்கிங்க ஸ்டேடஸ்லயே வந்து அதோட புத்திய காட்டுதுங்க. ஒருத்தர் அவன் அப்படி என்ன பேசினான்ன்னு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இங்க போடு, அப்படி என்ன இருக்குன்னு பாக்கலாம்னு கேக்குறார் (பெரிய மனுசர் அக்கறைல கேக்குறாராம்). இன்னொருத்தன் அவன் கிட்ட அவனுக்கு ஏத்த மாதிரி பேசி அவன் நம்பர் வாங்குன்னு ஐடியா குடுக்குறான். அவன் தான் சாக்கடைன்னு தெரியுது, இதுல நாம வேற அவனுக்கு ஏத்த மாதிரி வளைஞ்சி போகணுமாம். இதுல என் மேல அக்கறை உள்ளவங்க, பதறிக்கிட்டு தயவு செய்து ஸ்க்ரீன் ஷாட் போட்டுடாதன்னு தனியா வந்து சொன்னாங்க. அந்த அளவு நானும் முட்டாள் இல்லன்னு நானும் அவங்களுக்கு பதில் சொன்னேன். கொஞ்சம் நிம்மதியா போய்ட்டாங்க.

அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தப்போ தான் என்னோட பிரெண்ட் எனக்கு ஹெல்ப் பண்றதா சொன்னாங்க. இந்த மாதிரி ஆட்கள உளவியல் ரீதியா தான் அணுகணும்ன்னு சொல்லிட்டு போனவங்க, அப்புறமா அவனை பற்றி சொன்ன விஷயங்கள் கேட்டு எனக்கு தலை சுற்றி போச்சு.

அவன் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்துல மலேசியாவுல வேலை பாக்குறானாம். ஊருல அம்மா, மனைவி குழந்தைகள் எல்லாரும் இருக்குறாங்களாம். இவனோட பொழுது போக்கே குத்துமதிப்பா பொண்ணுகளுக்கு தூண்டில் போட வேண்டியது, ஒண்ணு அவங்க வழிக்கு வந்தா அப்படியே அவங்க கிட்ட பேசிகிட்டு, அலுக்குறப்போ அவங்க அக்கௌன்ட் வாங்கி அத ஹாக் பண்ண வேண்டியது, ரெண்டாவது, வழிக்கு வராத பொண்ணுங்ககிட்ட வேற ஐ.டில வந்து, நல்ல பையனா பேசி, அவங்களோட நட்ப்ப சம்பாதிச்சு, அவன் மேல நம்பிக்கைய வர வச்சு அவங்க ஐ.டிய ஹாக் பண்றது, மூணாவது, பாக்க கொஞ்சம் அழகா இருக்குற பசங்க கூட நல்லவனா பேசி, அவங்க கிட்ட நட்பா இருந்து அவங்க ஐ.டிய ஹாக் பண்றது. இதெல்லாம் அவன் பொழுது போக்காவே பண்ணிக்கிட்டு இருக்கானாம்.

அப்படினா, இவன் யூஸ் பண்ற ஐ.டிக்கள் யாரோ ஒருத்தருடைய ஒரிஜினல் ஐடிக்கள். அவங்க போட்டு வச்சிருக்குற பெர்சனல் போட்டோஸ், அவங்க நட்பு வட்டம்னு எல்லாமே இவன் கைல. இதனால இன்னும் அதிகமா பல பேர் அவன ஒரிஜினல்ன்னு நம்பி அவன் கிட்ட பழகுவாங்க.

கேக்க கேக்க எனக்கு தல சுத்திடுச்சு. அப்படினா நாம நம்மோட பிரெண்ட்ன்னு ஒருத்தங்கள நினச்சா, அவங்க ஐடி இன்னொருத்தன் கைக்கு போக வாய்ப்பு இருக்கான்னு. இந்த மாதிரியெல்லாம் கூட நடக்குமான்னு நான் ரொம்பவே குழம்பி போயிட்டேன். அப்போ தான் என் பிரெண்ட் சொன்னாங்க, அவனோட குறிக்கோள் எதுவா வேணா இருக்கலாம், ஆனா அவன் கிட்ட பேசுறவங்களோட டீடைல்ஸ் எடுத்து வைக்குறதோட இல்லாம அவங்க போன் நம்பரையும் அவன் வாங்கி வச்சுக்கிறான். இதனால அவனால பாதிக்கப்பட்ட பெண்களால பயந்துகிட்டு வெளில சொல்ல முடியாம தவிக்குறாங்கன்னு. அவன் ஹாக் செய்யப்பட்ட ஒரிஜினல் ஐ.டியில போய் பேசுறதால, அவன் மேல சந்தேகம் வர்றது குறைவுன்னும், பெண்கள் ஐ.டில ஆண்கள்கிட்டயும், ஆண்கள் ஐ.டில பெண்கள் கிட்டயும் பேசுறான்னும் சொன்னாங்க.

இது நடந்து ஆறு மாசத்துக்கு அப்புறம், என் கிட்ட அவன் பேசின ஐ.டிய ரிபோர்ட் குடுத்ததால எப். பி அத முடக்கிடுச்சு. ஆனா அவன் வேற ஐ.டில இப்போ வேற பெண்கள் கிட்ட பேச முயற்சி பண்ண ஆரம்பிச்சுட்டான். சமீபத்துல என்னை மாதிரியே ஒருத்தங்க இத பத்தி ஸ்டேடஸ் போட. அது என்ன ஏதுன்னு நான் விசாரிக்குறப்போ தான், அதே ஆள் தான்ங்குறது தெரிய வந்துச்சு.

இப்போ நாம எச்சரிக்கையா இருக்க வேண்டியது இதுதான், இது நான், இது என் அம்மா, இது என் மனைவி, இல்ல தங்கை, இல்ல கணவர், இது என் குடும்பம்ன்னு யாராவது நம்ம கிட்ட அவங்க பேஸ் புக்ல இருக்குற போட்டோஸ் காட்டினாலும் அத எல்லாம் நம்பி, நம்மோட டீடைல்ஸ் தயவு செய்து யாரும் குடுத்துடாதீங்க. இந்த மாதிரி நம்பிக்கைய ஊட்டி நம்மோட ஐ.டிய திருடி, நம்மோட குடும்பத்த தன்னோடதுன்னு இன்னொருத்தங்க கிட்ட சொல்லிட்டு இருப்பான் ஒருத்தன். இங்க யாரை நம்புறது, யாரை நம்பக்கூடாதுன்னே தெரியாம தலைய புடிச்சுக்குற நிலைமை தான்.

அப்படினா, இதுக்கெல்லாம் வேற வழியே இல்லையா? இவன் மாதிரி ஆட்கள தண்டிக்க வாய்ப்பே இல்லையானா கண்டிப்பா இருக்கு. இங்க பிரச்சனையே, எல்லோரும் அவங்கவங்களுக்கு வராத வரை நமக்கென்னன்னு இருக்குறதும், பிரச்சனை வந்தவங்களும் வெளில தெரிஞ்சா நமக்கு தான் அவமானம்ன்னு நினைச்சுக்கிட்டு அமைதியா இருக்குறதும் தான் அந்த மாதிரி ஆட்கள் தப்பு செய்ய ஈசியா வழி அமைச்சு குடுக்குது.

இதுக்காகவே இப்போ பேஸ் புக்ல தனியா இணைய பெண்கள் பாதுகாப்பு குழு-ன்னு ஒரு பேஜ் ஆரம்பிச்சிருக்காங்க. அத ஒரு சங்கமா மாற்ற முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிச்சிருக்காங்க. இத பத்தி விரிவான ஒரு விளக்கத்த நாம அடுத்த பதிவுல பாக்கலாம். இப்போ இத படிக்குற நீங்க எப்.பில இருந்தா கண்டிப்பா இந்த பக்கத்த லைக் பண்றதோட இல்லாம இவங்களுக்கு தேவையான ஒத்துழைப்பும் குடுங்க. நாம ஒண்ணா, ஒற்றுமையா இருந்தா கண்டிப்பா இந்த மாதிரி ஆட்களுக்கு ஒரு பயம் வரும். அப்படி ஒரு பயத்த நாம காட்டிட்டாலே சில பயந்தாங்கொள்ளி குற்றவாளிங்க திருந்திட வாய்ப்புண்டு. மீதி இருக்குற சமூக விரோதிகள நாம சட்டத்தோட பிடியில கூட கொண்டு போய் நிறுத்தலாம்.


வாங்க, இப்போ முதல் அடி எடுத்து வைப்போம்.

.