Tuesday 22 December 2015

உன்னை மட்டுமே


அத்தனை வடுக்களையும்
தாங்கிக் கொண்டிருக்கிறேன்...

புரையோடி போயிருந்த நேரத்திலெல்லாம்
உன் தோள் சாய்ந்து
ஒரு புன்னகை உதிர்க்க
முடிந்திருந்த என்னால்
இன்று வடுக்களாகிப் போன
இத்தடங்களை பார்த்து
கண்ணீர்விடவே முடிகிறது...

ஆறாக்காயமொன்று இதயத்துள்
அறுத்துக் கொண்டிருக்கிறது...
இச்ஜென்மம் பத்தாத தாகமாய்
ரணம் வேண்டுமென்று பெருங்குரலெடுத்து
பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன்...

கத்தியின் கூர்மையை
ருசி பார்க்கவேண்டும்...
ஓலமாய் வெளிப்படும் காற்றலை
உன் பெயரையன்றி
வேறெதை தாங்கி வரும்?

வலிகள் புதியதல்ல...
இருந்தும்
கண்கள் குளமாகும் தருணங்கள் அத்தனையிலும்
உன்னை மட்டுமே நிரப்பிக் கொள்கிறேன்...

உன்னை மட்டுமே...


.

4 comments:

  1. I understand your pain. Not relishing your words. Your writings were spontaneous and giggling with innocence. Now they are bowels of pain. Hard to confront. Hope that you may soon find a solace! God be with You!

    ReplyDelete
  2. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    http://www.ypvnpubs.com/

    ReplyDelete