Tuesday 24 April 2012

மறக்க நினைத்தலும் மறக்காமல் நினைத்தலும்...




நட்பென்னும் இன்முகம் காட்டி வந்தாய்...
மர்ம புன்னகையில் ரகசியம் காத்தாய்....
மலைப்பாய் நான் உன்னை நோக்கிய தருணம்
உன் கண்கள் காதலை விதைத்து சென்றது...

உன்னோடிருந்த ஒவ்வொரு நொடியும்
நீ என்னை உணர்ந்தாய் என நினைத்தேன்...
உயிரோடு கொன்று போட்டது
நீ இறுதியாய் சொல்லிவிட்டு சென்ற வார்த்தை..

கருப்பு நாட்களில் வெண்மதியாய் வந்த நீ
கலைந்தே சென்றிட்டாய் கார்மேகம் போல...
விடியலின் விதிப்பயன் நீ என்னை சந்தித்தது....
விடியாமல் முடிந்தது சந்திப்பின் விளைபயன்...

மறக்க நினைத்தலும் மறக்காமல் நினைத்தலும்
ஒரே விதமாய் தான் இம்சித்து கொண்டிருக்கிறது...
மறக்க நினைத்து எத்தனை முறை முயன்றாலும்
நினைவில் வந்து மீண்டும் மீண்டும் தோற்கடிக்கிறாய்...!

1 comment: