Saturday 29 March 2014

கதையும் தத்துவமும்- 2


வாங்களேன், உங்கள ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன்..

எந்த இடம்ன்னு கேக்குறீங்களா? அது ஒரு அழகான காடு... இந்த காடு ஆப்ரிக்கால இருக்கு. இங்க நாம ஒரு அழகான உயிரினத்த தேடி வந்திருக்கோம்.

உயிரினம்னாலே அது பாக்குறதுக்கு அழகா இருக்கணும்ன்னு அவசியம் இல்ல... இன்னொரு விஷயம், இந்த உலகத்துல எல்லாமே அழகு தான். அதை பாக்குறவங்க, அத ஏத்துக்குற பக்குவத்துல தான் அழகுங்குற வார்த்தையோட அளவுகோல் இருக்கு...

சரி, கொஞ்சம் சத்தம் போடாம வாங்க... யாரையும் நாம தொந்தரவு பண்ணிடக் கூடாது...

அங்க பாத்தீங்களா, ஒரு கூட்டம் என்னவோ ரொம்ப சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கு... வாங்க, கொஞ்சம் பக்கத்துல போய் பாப்போம்.

இவங்க தான் நாம தேடி வந்தவங்க. சின்னப் புள்ளைங்க பிரஷ் எடுத்து கன்னாபின்னான்னு கலர் அடிச்சி வச்ச மாதிரி இருக்குற இவங்க, ஆமா நாய்கள் தான்... ஆனா காட்டு நாய்கள்...

பாருங்களேன், ஒரு வயசான நாய் ரொம்ப முடியாம இருக்கு போல. சுத்தி நின்னு ஆறுதல் சொல்லிட்டு இருக்காங்க. தூரத்துல தள்ளி நின்னு பாத்துட்டு இருக்குற நமக்கு வேற என்ன தெரிஞ்சிட போகுது? ஆனா, அந்த கும்பலோட வயசான மதிப்புமிக்க உயிர் கலங்கிட கூடாதுன்னு இவங்க எல்லாம் அவங்களால ஆனத செய்துட்டு இருக்காங்க...

பாத்தீங்களா, கூட்டு குடும்பமா எவ்வளவு ஒற்றுமையா வாழுறாங்க... ஹே... அங்க பாருங்க, பத்து பனிரெண்டு குட்டிங்க ஓடி வர்றாங்க... எல்லாரையும் ஒருத்தங்க பாத்துட்டு இருக்காங்க...

வேட்டையாடிட்டு வந்தத கூட அமைதியா தான் சாப்ட்டுட்டு இருக்காங்க... இந்த கும்பல்ல ஆண் நாய்கள் அதிகமா இருக்கு. ஆனாலும் சண்டைகள் இவங்களுக்குள்ள இல்ல. குடும்ப தலைவனும் தலைவியும் சொல்றத கேட்டு அவங்க வார்த்தைக்கு கீழ்படிஞ்சுட்டு இருக்காங்க...

இங்க எந்த அத்துமீறல்களும் இல்ல, ராக்கிங் இல்ல, ஒழுக்கமின்மை இல்ல....

எனக்கு ஒரு டவுட்ங்க... மனுசன்கள்ல ஒருத்தர நாம திட்டணும்னா நாயேன்னு திட்டுறாங்க... அப்படி திட்டு வாங்குறத பெரிய கவுரவ குறைச்சலாவும் நினைக்குறாங்க... ஒழுக்கங்கள் கெட்டு சீரழிஞ்சு போறவங்கள நாய் பிறவின்னு சொல்றாங்க...

கொஞ்சம் யோசிச்சு பாருங்க, இந்த மனுஷ வாடையே இல்லாம வாழுற இந்த இனம் எவ்வளவு கட்டுகோப்பா வாழுது. எப்போ மனுஷன் அவன் தேவைக்காக நாய்கள வளர்க்க ஆரம்பிச்சானோ, அப்போ தான் மனுஷ புத்தி நாய்களுக்கு ஒட்டிகிச்சு...

சொல்லப்போனா, ஒழுக்கம் தவறி போற நாய்கள பாத்து அவங்க தான், மனுஷ பிறவியேன்னு திட்டணும்...

இவ்வளவு அழகான நடத்தையுள்ள, ஒரு கூட்டு குடும்பத்த கட்டிக்காக்குற, வயசானவங்கள போற்றி பாத்துகாக்குற ஒரு இனத்த பாத்தாவது, நாமளும் வாழ்க்கைனா என்னன்னு கத்துக்கணும்.... 

இப்போதைக்கு இது போதும், நான் அப்புறமா வர்றேன்...

6 comments:

  1. Replies
    1. ஆமா அண்ணா.... எப்பவுமே நன்றியுள்ளது

      Delete
  2. நாய்கள்தான் நம்மை திட்ட வேண்டும்! உண்மை! சிறப்பான பதிவு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் தேங்க்ஸ் அண்ணா...

      Delete
  3. அழகான நடையில் வந்த உன்னோட பகிர்வு அருமைம்மா காயத்ரி. நாயேன்னு சொல்லித் திட்டறது ரொம்பத் தப்புதான். அதுசரி... முகப்புல இருக்கற கண்ணாடி போட்ட குழந்தை படமே கண்ணையும் மனசையும் ஈர்த்துடுச்சு. இப்படி அழகழகான குழந்தைங்க உனக்கு மட்டும் எங்கருந்துதான் கிடைக்குதோ?

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா.... google இருக்க பயமேன்.... கொஞ்சம் சிரத்தை எடுத்து தேடணும் அவ்வளவு தான்... ஹஹஹா

      Delete