Wednesday 16 April 2014

மின்னுவதெல்லாம் பொன்னல்ல...



வாங்க நாம இப்போ வித்யாசமான ஒரு மலைக்கு போகலாம்...

மலை ஏறப்போறோம். அதனால நல்ல தரமான சூ போட்டுக்கோங்க... கைல வேணா ஒரு குச்சி எடுத்துக்கோங்க... ஹலோ, குச்சி எடுத்துக்க சொன்னது அடுத்தவங்கள அடிச்சி விளையாட இல்ல, மலை மேல ஏறும் போது ஒரு புடியோட மலை மேல ஏறலாம், அதுமட்டுமில்ல, கால் வலிச்சா கொஞ்சம் கம்ப தரைல ஊனி அது பிடில காலுக்கு ஓய்வு குடுக்கலாம்...

சரி, இந்த மலைய பாத்தீங்களா? பெரிய பெரிய மரங்கள்ன்னு எதுவும் இல்லல... குட்டி குட்டியா புதர்கள், சின்ன புல்லு, பாறைங்கன்னு இருக்குல... ஷ்.... அங்க என்னமோ நீண்டு நெடிய அசையாம கிடக்கு பாருங்க...

அம்மே... அது மலை பாம்பு... வாங்க, மெதுவா கிட்டப் போய் பாப்போம். எப்பா.... எவ்ளோ பெரிய பாம்பு பாத்தீங்களா? பெருசா எதையோ இப்ப தான் பிடிச்சி விழுங்கியிருக்கு. இனி அது ஜீரணிக்குற வர அசையாது... யோவ், யாருயா அது, அசையாதுன்னு சொன்னதும் குச்சிய விட்டு அத சீண்டி பாக்குறது? பேசாம வர மாட்டீங்களா?

என்ன? ஏன் கூப்ட்டீங்க? என்னது, மலைல தங்கம் இருக்கா? தகதகன்னு மின்னுதா? அதுவும் கருப்பு கலருல? இருங்க இருங்க வரேன்...

ஓ.... தங்கம். பளபளன்னு மின்னுதுல... இப்போ என்ன பண்ண போறீங்க?

என்னது? மலை முழுக்க தேடி, கிடைக்குற தங்கத்த சுருட்ட போறீங்களா? அடிஈஈஈ....

இது தங்கம் இல்லீங்க... இதுக்கு பேரு தான் காக்கா பொன். கருப்பு கலர்ல பொன் மாதிரி மின்னுதுல, அதான் இதுக்கு அப்படி ஒரு பேரு. பெரியவங்க கிட்ட கேட்டா சொல்லுவாங்க, இந்த காக்கா பொன்ன கைல வச்சி உரசினா, சும்மா ஜிகினா பூசின மாதிரி பளபளன்னு மின்னும்... நாமெல்லாம் இத பாக்க இப்போ தான் முடியுது....

கால் வலிக்குதுல.... அப்படியே வாங்க, உக்காருவோம். இந்த காக்கா பொன் இருக்கே, இதெல்லாம் மலை பிரதேசங்கள்ல பாறையா கூட இருந்துருக்கு. ஆனா இப்போ இத பாக்குறதே அபூர்வம். இப்போ அது இல்ல, விஷயம்... நான் ஒரு தத்துவம் சொல்லப் போறேன்...

என்னது, தத்துவமான்னு அலறி அடிச்சி, எழும்பி ஒடுனீங்க, அப்புறம், கொண்டு வந்த குச்சி வச்சி அடிச்சிருவேன்... அப்படியே அமைதியா உக்காருங்க...

நாம வாழ்க்கைல நிறைய பேர சந்திப்போம்ங்க... நம்மோட பாதைல வர்ற எல்லாரும் ஒரே மாதிரி இருப்பாங்கன்னு நினைச்சிட கூடாது. அலங்கார வார்த்தைகளோட நம்மள நெருங்குரவங்க தான் அதிகம்... இந்த அவசர உலகத்துல எல்லாத்தையும் ரெடிமேடா வாங்கி வாங்கியே பழகி, அன்பையும் ரெடிமேடா குடுக்க ஆரம்பிச்சுடறாங்க சில பேரு... ஆனா அதுல அன்பு இருக்குமான்னு பாத்தா நிச்சயமா இருக்காது... ஒண்ணுமே இல்லீங்க, ஒருத்தங்கள பாத்தா, நல்லா இருக்கியான்னு கேட்டா அது யதார்த்தம், அத விட்டுட்டு, நீ இங்கு நலம், நான் அங்கு நலமான்னு கேட்டா? இல்ல, தெரியாம தான் கேக்குறேன், அவங்கள நம்ம கிட்ட அடகு வச்சிட்டு அவங்க என்ன பண்ண போறாங்க? இல்ல நம்மள அவங்க எடுத்துக்க நாம எப்படி அனுமதிக்க முடியும்?

ஆத்மார்ந்தமான நட்புக்கள்ன்னு ஒருதலைபட்சமா யாரும் சொல்லிட்டு இருக்க கூடாது. அது ரெண்டு பேர் சம்மந்தப்பட்டது...

ரொம்ப குழப்புறேனோ? 

இப்போ இந்த பேஸ்புக்கையே எடுத்துக்கோங்க.. 

நம்மோட பிரெண்ட்ஸ், நமக்கு அறிமுகம் ஆனவங்க, எதோ ஒரு வகைல நம்மள ஈர்த்தவங்கன்னு அவங்கள பாத்து ஒரு குட் மார்னிங் சொல்லி, அவங்களும் நம்மள பாத்து சின்னதா ஒரு குட் மார்னிங் சொன்னா அதுல வர்ற சந்தோசம் வேற....

ஆனா இங்க போலியான புன்னகைகள் மலிஞ்சு கிடக்கு. போலி புன்னகைன்னு கூட இல்ல, ரெடிமேட் ரப்பர் ஸ்டாம்புகள்...

ஏதாவது ஒரு மாய்மால வார்த்தைய எங்க இருந்தாவது எடுக்க வேண்டியது, யாரு எவருன்னு கூட பாக்காம, என்ன விஷயம் சொல்லியிருக்காங்கன்னு கூட தெரியாம அவங்க போஸ்ட்ல போய் அத ஒட்ட வேண்டியது...

நட்புனா அர்த்தமே தெரியாம, இங்க யார பாத்தாலும் பிரெண்ட்ன்னு சொல்றது. யாருனே தெரியாதவங்க போஸ்ட்ல கூட போய் நட்பே உயிரேன்னு உருக வேண்டியது. அட, அத சொந்தமா உருகினா கூட பரவால... எங்க இருந்தாவது காப்பி பண்ணி ஒட்ட வேண்டியது... இவங்க எல்லாம் பிரெண்ட்ஷிப்போட உண்மையான வேல்யூ தெரிஞ்சா ஏன் இப்படி எல்லாம் பண்ண போறாங்க.....

மின்னுவதெல்லாம் பொன்னல்லன்னு சும்மாவா சொல்லி வச்சாங்க பெரியவங்க....

சரி, சரி, வாங்க கீழ இறங்கலாம்... வீட்டுக்கு போய் காபி சாப்பிடணும்ல... பொறுங்க, அதுக்குள்ள என்ன அவசரம், குட் மார்னிங் சொல்லணும்ல...

குட் மார்னிங்....

3 comments:

  1. இதை எங்கயோ படிச்சிருக்கமேன்னு தோணுச்சு.. அப்புறம் தான் கண்டுபிடிச்சேன்.. இந்த காப்பி பேஸ்ட் கலாச்சாரத்தை முதல்ல ஒழிக்கணும்..ஹிஹிஹி..

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ் அண்ணா... இது காப்பி பேஸ்ட் இல்ல... பேஸ்புக்ல போட்டத இங்கயும் போட்டு வைக்குறேன். காரணம் இது நம்மோட பதிவுதான்ங்குறதுக்கு ப்ரூப்

      Delete
  2. வலைச்சர அறிமுகம்,,வாழ்த்துகள்.

    ReplyDelete