Monday 12 January 2015

பிறந்தநாள்


ஜனவரி பத்து, இரண்டாயிரத்து பதினஞ்சு:

இந்த நாள்... அப்படி எல்லாம் பெரிய விசேசம் இல்ல, ஆனாலும் ஒரு பட்டாம்பூச்சி பொறந்தநாள்.... பட்டாம்பூச்சி யார்னு எல்லாம் உங்களுக்கு சொல்லவே தேவையில்ல, நான் தான்னு டக்குன்னு தெரிஞ்சி வச்சிருப்பீங்களே....

பிறந்தநாள்னா எல்லாருக்கும் விசேசம் தான். எனக்கும் அப்படி தான் இருந்துச்சு, ஸ்கூல் படிக்குறப்போ, யூ.ஜி படிக்குரப்ப எல்லாம். ஆனாலும் கொஞ்ச வருசமா எப்.பில தான் பிறந்தநாள் கொண்டாடிட்டு இருந்தேன். எனக்கான உலகம் அவ்வளவு சுருங்கியும் போய்டுச்சு...

ஆனாலும் என்ன, ராத்திரி பனிரெண்டு மணிக்கு ஆரம்பிச்ச அம்மாக்கள், அக்காக்கள், தோழிகள், தோழர்கள்... இருங்க இருங்க, கார்த்திக் இப்படி எல்லாரோட வாழ்த்து மழைலயும் நனஞ்சுட்டே தான் இருக்கேன். இன்பாக்ஸ், வாட்ஸ் அப், கால்ஸ்ன்னு ஹிஹி கொஞ்சம் பிசி தான்.

மதியம் சாப்பிட்டு முடிச்சதுமே போர் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு. எங்கயாவது வெளில போகலாமோன்னு யோசிச்சுட்டே இருக்கேன், திடீர்னு கதவு டபடபனு தட்டுற சத்தம்...

டேய், யாரா இருந்தாலும் இருங்கடா, மெதுவா தான் வர முடியும்னு சோம்பல் முறிச்சு, மெதுவா போய் கதவ தொறந்தா, "ப்ப்ப்ப்பே....."ன்னு கத்திகிட்டே ரூமுக்குள்ள மாமா பசங்க, பொண்ணுங்க, தங்கச்சிங்க, தம்பிங்கன்னு ஒரு கும்பல் கத்திகிட்டே உள்ள வருது. ஏய் ஏய்... புள்ளைங்க பயந்துருவாங்க, பிசாசுங்களா வெளில போங்கன்னு எல்லாரையும் வெளில விரட்டினா... போனா தான....

ஹே.... குருவி, குருவி, குருவின்னு அப்படியே நளன் தமயந்தி இருந்த கூட்டை தூக்கிட்டான் ஒருத்தன். எனக்கு பகீர்னு ஆகிடுச்சு. கண் எல்லாம் கலங்கி, அழுதுட்டே, "ஏல, அது முட்டை போடுறதுக்காக கூடு எல்லாம் கட்டியிருக்குல, கலைச்சுராதல"ன்னு தளுதளுதுட்டேன். அப்படியே ஒரு மயான அமைதி... சரி, சரி, வெளில வாங்கடேன்னு ஒருத்தன் எல்லாரையும் கிளப்பி ரூம் விட்டு வெளில போய்ட்டாங்க.

எனக்கு, நளனும் தமயந்தியும் என்ன ஆனாங்களோன்னு பதற்றம். மெதுவா எட்டிப் பாத்தேன். அப்படியே பானை பின்னால பம்மி போய் இருந்தாங்க... சரி சரி, டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு மெதுவா பெட்ல போய் உக்காந்தேன். என் தங்கச்சிங்கள்ல ஒருத்தி வந்து, அக்கா, ஒரு சுடி எடுத்து போட்டுக்கோ, வெளில போயிட்டு வருவோம்னு சொன்னா...

சரின்னு சொல்லிட்டு நானும் கிளம்பி வெளில வந்தா, ஹே....ன்னு மறுபடியும் இரச்சல். ஒருத்தன் ஓடி வந்து என்னை அலேக்கா தூக்கிட்டு, அண்ணி, நாம இப்போ வெளில போறோம்னு சொன்னான். டேய் டேய் விடுடான்னு பதறினா, அதுக்குள்ள பாட்டி வந்து வயசு புள்ளைய தூக்குறியே, உனக்கு அறிவு இருக்கான்னு ஒரு மாதிரி டென்சன் ஆக, நீ தூக்கிட்டு போ மக்கான்னு நான் சொல்லிட்டேன். ஹஹா... எப்படியும் நாங்க வெளில போனதுக்கு அப்புறம் ஊரை கூட்டி குலவை வச்சிருக்கும். அத பத்தி நமக்கு என்ன?

என்னை எல்லாருமா சேர்ந்து குண்டு கட்டா தூக்கிட்டு போய் மாமா கார்ல போட்டு, நேரா கோவில் போனோம். அங்க அப்பா, தம்பி எல்லாரும் இருந்தாங்க. அப்படியே உள்ள போய் சாமிகிட்ட ஒரு வணக்கத்த வச்சுகிட்டு, நெத்தியில நாமத்த இழுக்க வந்தவங்க கிட்ட இருந்து எஸ்கேப் ஆகி, கோவில் திண்டுல உக்கார போனேன்.

என்ன, இங்க உக்காந்தா எப்படி, நாம வேற இடத்துக்கு போகப் போறோம்னு அடுத்த அதிர்ச்சி. டேய், எது செய்தாலும் சொல்லிட்டு செய்ங்கடான்னு கெஞ்சினாலும் எங்க விடுறாங்க. மறுபடியும் காருக்குள்ள ஏத்தி விட்டுட்டாங்க.

கார் சீறி பாய்ஞ்ச திசையையும், அவங்க பேசினதுலயுமே தெரிஞ்சிடுச்சு எங்க போறோம்னு. ஆமா, அம்மாவ பாக்கத் தான் போயிட்டு இருக்கோம்...

வீட்டு காம்பவுண்ட்டுக்குள்ள போனதுமே, சித்தப்பா சித்தி எல்லாரும் வெளில வந்தாங்க. வாமா, நல்லாயிருக்கியான்னு கேட்டதும் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ன்னு மட்டும் தலையாட்டிக்கிட்டேன். அதென்னமோ, அவங்கள பாத்தாலே ஒரு வன்மமோ குரோதமோ மனசுக்குள்ள வந்து ஒட்டிக்குது. அதுக்குள்ள பசங்க என்னை தர தரன்னு இழுத்து அம்மா கிட்ட கொண்டுட்டு போய்ட்டாங்க.

அம்மா... இவள பாத்து எவ்வளவு நாள் ஆச்சு. பாக்கணும்னு கூட தோணாம எல்லாம் போய்டல, எனக்கு என்னமோ, அவ என் கூட இருக்குற மாதிரி பீல். அதனால தான் அவள இங்க வந்து பாக்க தோணல. ஆனாலும் அவள தொட்டா கிடைக்குற சுகம் தனி சுகம் தான். அதிகம் எல்லாம் அங்க இருக்கல, சித்தப்பா சித்தி பாத்துட்டு நின்னது உறுத்திச்சி, போலாம்டேன்னு கிளம்பிட்டேன். எல்லாரும் அம்மாவுக்கு அத்த பை, பெரியம்மா பைன்னு சொல்லிட்டே வந்தாங்க... திரும்பி பாத்தேன், அம்மாவும் கிளை அசைச்சு டாட்டா காட்டின மாதிரி இருந்துச்சு.

வீட்ல இருந்து கிளம்பி, கோவில், அம்மா பாக்கன்னு போனது எல்லாமே வெறும் ஒன்னே முக்கால் மணி நேரத்துல. பயங்கர ஸ்பீட். எலேய் மெதுவா மெதுவான்னு சொன்னா எவன் கேக்குறான். சரியா வீட்டு பக்கம் வரவும் டர்ர்ர்ரர்ரர்ர்ர்ர்..... டயர் பஞ்சர். சரி, சரி, அத எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்னு வீட்டுக்குள்ள நுழைஞ்சா, அடுத்த ஷாக்....

எல்லாருமா சேர்ந்து கேக் எல்லாம் எடுத்து வச்சு, ஹாப்பி பர்த்டே பாடி, பலூன் ஊதி, ஒண்ணு விடாம ஒடைச்சு, கேக் வெட்டினதும் மூஞ்சி முழுக்க அப்பி விட்டுட்டாங்க. டிஷ்யூ பேப்பர் எடுத்து மூஞ்சிய தொடைக்க உள்ள வரேன், பின்னாலயே இன்னொருத்தன் வந்துட்டான். குருவி எல்லாம் நல்லா இருக்கான்னு மறுபடியும் கிட்ட போக ட்ரை பண்ண, கொன்னுருவேன், ஓடிருன்னு பிடிச்சி வெளில தள்ளி கதவ பூட்டிட்டேன்.

அப்புறமாவாவது நான் கொஞ்சம் சுதாரிச்சிருக்கணும்ல... அது இல்லாம, குறிஞ்சியும் மந்தாகினியும் இருக்குற கூட்டை கொஞ்சம் ஆல்ட்டர் பண்ணனும்னு சொல்ல, சரி, சரி, நாங்க செய்து தரோம்னு ஆசை காட்டி, அந்த கூட்டை மெதுவா வெளில தூக்கிட்டு வந்துட்டாங்க. அப்படியே வாசல்ல நடைல கொண்டு போய் கூட்டை வச்சிட்டு உள்ள இருந்த பானைய கழட்ட ட்ரை பண்ணிட்டு இருந்தாங்க கொஞ்ச குரூப். இன்னும் கொஞ்ச பேர் பஞ்சர் ஆன டயர மாத்துறதுல மும்முரமா இருக்க, நானும் அவங்க கூட போய் ஒரே ஒரு செல்பி எடுக்க ட்ரை பண்ணி, அது நல்லா இல்லன்னு டெலிட் பண்ண போனா, ஒருத்தன் ஓடி வந்து மொபைல புடிங்கிட்டான். அங்க நடந்த களேபரத்த வேடிக்கை பாத்ததுல இங்க குருவி கூட்டை திறந்து வச்சிட்டான் போல... விருட்டுன்னு மந்தாகினியோட ஜோடி வெளில பறந்துடுச்சு.

ஒரு நிமிஷம் எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்த மாதிரி ஆகிடுச்சு. அது பாட்டுக்கு வெளில மாமரம் உள்ள புகுந்து காணாம போச்சு. கண்ணீர் முட்டி, கை எல்லாம் நடுங்கி அப்படியே மடிஞ்சி உக்காந்துட்டேன். எல்லாருக்குமே ஷாக் தான். நான் அழுவேன்னு அவங்களுக்கு தெரியாதா என்ன?

அண்ணி, அண்ணி ப்ளீஸ் அண்ணி, அழாத அண்ணி, வேற வாங்கி தரேன் அண்ணின்னு கெஞ்ச ஆரம்பிச்சுட்டான். காக்கா கழுகு மாட்டி அது செத்து தான போகும்? நினைக்க நினைக்க எனக்கு இன்னும் இன்னும் அழுக வருது.

அப்ப தான் ஒருத்தன் சொன்னான், அது திரும்ப வருதுன்னு. அதால அதிக தூரம் எல்லாம் பறக்க முடியல. நேரா வந்து தரைல உக்காந்தது. எப்படியாவது அத பிடிச்சிடணும்டான்னு ஆள் ஆளுக்கு பொறி வச்சி காத்திருக்க, ஒவ்வொரு தடவையும் அது பறந்து போய் உயரமா உக்காரும், அப்புறம் கொஞ்ச நேரத்துல கூட்டுக்குள்ள இருக்குறவங்கள பாக்க கீழ வரும்.

எப்படியோ ஒரு வழியா அத வீட்டுக்குள்ள பறக்க விட்டு, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போராடி, இருட்டுல அத ஒருத்தன் பிடிச்சு தந்துட்டான். ஹப்பாடா.... திரும்பவும் அத கூட்டுக்குள்ள விட்டதும் தான் நிம்மதி...

எல்லாரும் கிளம்பி போய்ட்டாங்க. நான் ஆல்டர் பண்ணினா கூட்டையே பாத்துட்டு இருக்கேன். இப்பவே குறிஞ்சியும் அதோட ஜோடியும் கூடு கட்ட தேங்காய் நார்கள சேர்க்க ஆரம்பிச்சாச்சு. இங்க நளனும் தமயந்தியும் கூட்டை பிரிச்சு போட்டு மராமத்து வேலை பாத்துட்டு இருக்காங்க...

இப்படி ஒரு பரபரப்பான பிறந்தநாள் இப்ப தான் அனுபவிச்சேன்...

எப்படியோ, மந்தாகினிக்கி நாளைக்கு கூடு ரெடி ஆகிடும்... வாழ்க ஜோடிகள்.... 

12 comments:

  1. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தம 2

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் ஓட்டு போட்டதுக்கும் தேங்க்ஸ்

      Delete
  2. தங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். தங்களின் வலைப்பதிவை நாளை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்த இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பிறந்தநாள் வாழ்த்துக்கும் வலைபதிவு அறிமுகத்துக்கும் தேங்க்ஸ்.

      Delete
  3. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப தேங்க்ஸ் அண்ணா

      Delete
  4. You live life in the fast lane but I move a little slower,That is why I am a little behind u on celebrating your birthday, Happy Birthday.!

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அங்கிள்

      Delete
  5. Replies
    1. தேங்க்ஸ் பிரதர்

      Delete
  6. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
    கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
    தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
    பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
    எனது மனம் நிறைந்த
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்

      Delete