Saturday 5 May 2012

பேனாவும் துண்டுக் காகிதமும்...


ஆழ்மனதின் ஏக்கங்கள்
திடீரென முளையிட
துக்கங்கள் உயிருடைத்து
தூக்கம் தின்று போனது...

தூக்கம் தொலைந்து போனதால்
கவிதை பிறந்து தொலைத்தது

பொறுமையாய் கேட்க ஆளுமில்லை
புலம்பி தீர்க்க வழியுமில்லை...

வழியில்லாமல் அலைபாய்ந்த நேரம்
மாட்டிக்கொண்டது பேனாவும் துண்டுக் காகிதமும்...

எண்ணப்பிசிறுகள் பேனாவை வழிநடத்த
கண்ணீராய் கொட்டத் துவங்கியது பேனாவின் மை...







1 comment:

  1. உண்மையே அனுபவம் பிரதிபலிக்கிறது வாழ்த்துகள்.

    ReplyDelete