Wednesday 8 August 2012

உனக்காய் காத்திருந்து...!

இரவின் மடியில் நீ
தூது விட்ட செய்தியொன்றை
வெண்ணிலவும் வந்து சொல்ல...

கலைந்து சென்ற மேகங்கள்
ஒன்றாய் கூடி
என் மனதில் சாரலடிக்க...

விடிந்து விட்ட பொழுதொன்று
உன் நினைவுகள் சுமந்து
அழகாய் பூக்க...

தொலைதூரத்தில் உனக்கென
வீழ்ந்து கிடக்கும் நான்
புத்துணர்ச்சியோடு புதுப்பிக்கப்பட்டு...

எதிர்பார்த்து நீ காத்திருக்கும்
திசை நோக்கி
காற்றின் வேகம் மிஞ்சி
விரைந்தே வருகிறேன்...!

1 comment:

  1. அழகான வரிகள்...
    பாராட்டுக்கள்...
    மிக்க நன்றி...

    ReplyDelete