Sunday 16 September 2012

நான் இடி...!

அடக்கி விட துணிந்து
ஆதிக்கம் செலுத்த முயல்பவர்களுக்கு
உரசி செல்லும் மின்னலாய் நான்...!

இடித்து பேசி ருசி கண்டவர்களின்
இடிகள் தாங்கும் இடிதாங்கியாய் நான்...!

வஞ்சகர்களின் வஞ்சனைகளை
எதிர்க்க துணிந்த இடியாகவும் நான்...!

அன்பால் நேசக்கரம்
நீட்டுபவர்கள் மத்தியில்
உருகி உருகி பொழியும்
மழையாய் நான்...!

என் பாசம் வேண்டும் நெஞ்சத்துக்கு
அதன் நகல் கொடுக்கும் அச்சாய் நான்...!

வரைமுறைகளுக்கு உட்பட்ட
கவிதைகளின் எல்லைக்குள்
கட்டுப்படா காற்றாய் நான்...!

என்னையே நேசிக்கும் எனக்கு
என் சுவாசமாகவும் நான்...!

1 comment:

  1. வரிகளும் இடி போல் வந்து விழுந்துள்ளன...

    மிகவும் பிடித்தவை :

    என்னையே நேசிக்கும் எனக்கு
    என் சுவாசமாகவும் நான்...!

    ReplyDelete