Saturday 10 November 2012

புன்னகை மறந்த தருணங்கள் ...!

இரவின் நீளம் நீண்டுக் கொண்டே போகிறது
என்னை பற்றிய உன் நினைவு
தொலை தூரம் போய் விட்டதால்...!

‎"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""''தொல்லை பேசியாய்" தொலைபேசி,
உன் அழைப்பு இன்றி…
முள் படுக்கையில் தவம் செய்கிறது…!

லெட்சியமில்லாத வாழ்க்கை ஒன்றை
உன் பாராமுகம் பரிசளித்து
கிங்கரனாய் சிரிக்கிறது…!

மழலை விட்டொழிந்த பந்தைப்போலே
என்னை நீ விட்டெறிந்து சென்று விட்டாய்...!
நானோ சிறகொடிந்த பறவையொன்றாய்
போக்கிடமின்றி தவிக்கிறேன்...!

நீயில்லாத கனவுகள் வெற்று காகிதம் போல...
கிறுக்கபடாத உன் நினைவுகள் அங்கே
செதுக்கி செல்கிறது என் இதயத்தை...!

பேசவே தெரியாமல் என் மவுனங்கள்
உன்னோடு பேசிக்கொண்டிருக்கின்றன...!
உன்னோடு கைகோர்த்த தருணங்கள்
இன்னும் விலகாமல் பிசிறாய் நினைவில்...!

வசந்தத்தில் ஓர் நாள் அடித்தோய்ந்த
புயலாய் நீ... என் நினைவுகள் புகுந்து
இளமை வதம் செய்கிறாய்...!

ஆர்ப்பரிக்கும் ஆழிப்பேரலையாய் நீ...
ஆக்ரோஷ அலைகளின் நடுவே
சன்னமாய் ஒலிக்கிறது என் விசும்பல்...!

உனக்கான என் சோகங்களை
சிறு புன்னகையுடனே கடந்து செல்கிறேன்...!
இட்ட மை இட்டபடி இருக்க
கரைகிறது என் கண்ணீர் உனக்காக...!

1 comment:

  1. /// பேசவே தெரியாமல் என் மவுனங்கள்
    உன்னோடு பேசிக்கொண்டிருக்கின்றன...!
    உன்னோடு கைகோர்த்த தருணங்கள்
    இன்னும் விலகாமல் பிசிறாய் நினைவில்...! ///

    மிகவும் பிடித்த வரிகள்...

    ReplyDelete