Tuesday 24 September 2013

பாட்டிக்கு வடை சுட கத்துக்குடுப்போம் வாங்க....

எப்பவும் சீரியஸா பேசிட்டு இருந்தாலும் சரிபட்டு வராது. கொஞ்சம் சிரிக்கவும் வேணுமே. ஹஹா இப்போ நீங்க சிரிக்குறத பத்தி யார் சொன்னா, நீங்க இத படிச்சுட்டு தலைல அடிச்சுட்டு போறத பாத்து நான் தான் விழுந்து விழுந்து சிரிக்க போறேன். என்னது? இந்த டகால்ட்டி எல்லாம் உங்ககிட்ட நடக்காதா? அப்படியா? சரி வாங்க, ஒரு கை பாத்ருவோம், நீங்க சிரிக்க போறீங்களா நான் சிரிக்க போறேனானு... ஆனா ஒண்ணு, கடைசி வர இத நீங்க படிக்கணும்... அவ்வ்வ்வ் படிச்சுடுங்க....



ஒரு ஊருல ஒரு பாட்டி இருந்தாங்களாம். அந்த பாட்டிக்கு வடை சுடவே தெரியாதாம்....

இதனால ஊர்ல உள்ளவங்க எல்லாம் ஊர் கூட்டம் போட்டு பாட்டிக்கு வடை சுட்டு பழக ட்ரைனிங் குடுக்குறதுனு முடிவு பண்ணினாங்களாம்...

வடை சுடுற ஸ்பெசலிஸ்ட் எவ்வளவு சொல்லிக் குடுத்தும் பாட்டிக்கு வடை சுடவே வரலையாம்...

ஊர்ல இருக்குற பெண்கள் எல்லாரும் சொல்லிக்குடுக்குறாங்க, சரி வரல..... அப்புறமா ரகசியமா வீட்டுக்குள்ள மட்டும் சமச்சுட்டு இருந்த ஆண்கள் கூட சொல்லி குடுக்க முன்வராங்க, ம்ஹும்... பாட்டி அசையல.... பொறுமை இழந்து அந்த ஊரு நண்டு, சிண்டு எல்லோரும் சொல்லிக்குடுக்குறாங்க, சான்சே இல்ல....

இந்த காக்காவும் நரியும், பாட்டி எப்படா வடை சுடுறது, நாம எப்போ வடைய திருடுரதுன்னு சோகமா ஒரு மூலைல ஒத்துமையா உக்காந்து பாத்துட்டு இருக்குதுங்க....

ஹும்.... இந்த கதைய கேட்டுட்டு இருக்குற உங்களுக்கும், சொல்லிட்டு இருக்குற எனக்கும் கூட டென்சன் தான்... எப்படா பாட்டி வடை சுடுவாங்க, காக்கா எப்போ வடைய தூக்கும்னு....

எதுக்கு இவ்வளவு பில்ட் அப்... பாட்டி வடைய சுட்டா என்ன, சுடாட்டி என்னனு கேக்குற அதிமேதாவிங்களுக்கு நான் ஒண்ணே ஒண்ணு சொல்லிக்குறேன், அந்த ஒண்ணு என்னனா, பாட்டி மட்டும் வடைய சுடலனா, நமக்கு ஒரு நீதி கதை கிடைச்சிருக்காது, இந்த குட்டி பசங்களுக்கு, ஒரு ஊருல ஒரு பாட்டி இருந்தாங்க............ அப்படின்னு அழகான ஒரு கதைய நீட்டி முழங்கி இருக்க முடியாது.....
சரி சரி கதைக்கு வருவோம்..... எல்லோரும் ரொம்பவே தலைய பிச்சுட்டு இருந்த சமயத்துல நம்ம பாட்டிக்கு திடீர்னு மண்டை மேல ஒரு பல்ப் எரிஞ்சுது, அதாங்க ஐடியா உதிச்சுது... அதன்படி பாட்டி நைசா ஒரு வீட்டு அடுப்படியில நுழைஞ்சு அவங்க சுட்டு வச்சிருந்த வடைய சுட்டுட்டாங்க.... அப்புறம் அவங்களே சுட்ட மாதிரி கடையையும் விரிச்சுட்டாங்க.... காக்கா ரொம்ப சந்தோசபட்டு அதுல ஒரு வடைய தூக்கிட்டு போயிடுச்சு....

அப்புறம் நடந்த கதை தான் உங்களுக்கே தெரியுமே......

இப்படிதாங்க பாட்டி வடை சுட்ட கதை பொறந்துச்சு.... அப்புறம் இதுல கூட ஒரு நீதி இருக்கு, அது என்னான்னு இந்த கதைய மூச்சு திணற திணற படிச்சவங்க மட்டும் சொல்லி வைங்க... எனக்கு மூச்சு திணறுது.... அப்புறமா வந்து நீதிய சுட்டு நானும் மத்தவங்களுக்கு சொல்லிக்குறேன்.

........................................ The Story Ends, Moral Continues

13 comments:

  1. படத்தில் உள்ள வடைகள் நீங்களே சுட்டதா? பார்த்ததும் வாயில் நீர் ஊறுகிறதே! – இமயத்தலைவன் (கவிஞர் இராய.செல்லப்பா)

    ReplyDelete
    Replies
    1. ஆமா நானே சுட்டது தான், ஆனா வடை சட்டியில் சுட்டது இல்லை, நெட்டில் சுட்டது

      Delete
  2. அந்த வடை சுடத்தெரியாத பாட்டி நாந்தானோன்னு ஒரு விநாடி ஆடிப்போயிட்டேன்.

    அப்புறம் நம்ம கண்டுபிடிப்பு இப்படியாச்சுப்பா:-)

    http://thulasidhalam.blogspot.com/2012/09/blog-post.html

    உங்கூர் பாட்டிக்கு ஒரு வடை மெஷீன் வாங்கியாறவா?

    ReplyDelete
    Replies
    1. உங்க வடை மிசின் பாத்தேன், சூப்பர், ஆனா கரண்ட் பில் கண்ணா பின்னான்னு ஏறாதா?

      Delete
  3. Replies
    1. பாவம் புள்ள பயந்துடுச்சு போல

      Delete
  4. உங்களுக்காவது வடை சுட தெரியுமா!?

    ReplyDelete
    Replies
    1. ஓ... ரொம்ப நல்லா சுட தெரியுமே, ஆனா அதுக்கு முன்னாடி யாராவது அத எண்ணைல சுட்டு வச்சிருக்கணும்

      Delete
  5. சுட்ட வடை சுடப்படும் ..!

    ReplyDelete
    Replies
    1. சுட்ட வடையை காக்கா தூக்கிட்டு போய்டும்

      Delete
  6. பாவம் பாட்டி, இப்படி டார்ச்சர் பண்ணியிருக்கீங்க எல்லாருமா சேர்ந்து

    ReplyDelete
    Replies
    1. இல்லனா நமக்கு கதை கிடச்சிருக்காதே

      Delete
  7. வடை சுட தெரியாத இந்த பாட்டிய கல்யாணம் பண்ண தாத்தா நிலைமை ரெம்ப பாவம்...:)

    ReplyDelete