Sunday 11 January 2015

பறவை மனமும் பல் மரமும்...


இந்த பெட் ஷாப்ல குருவிங்கள எல்லாம் அடைச்சு வச்சிருக்குரத பாத்து நான் கூட இத எல்லாம் நாம வாங்கி பறக்க விட்ருவோமான்னு சினிமாட்டிக் தனமா யோசிச்சதுண்டு. அதாவது, தேவதை மாதிரி வெள்ளை உடுப்பு போட்டுட்டு ஒவ்வொரு புறாவா தலைக்கு மேல தூக்கி புடிச்சி ஒரு குதி குதிச்சி பறக்க விடுற மாதிரி...

நோ...நோ... பேட் வேர்ட்ஸ்...

புறாக்களாவது பரவாலன்னு நினைக்குறேன், காரணம், எங்க வீட்ல முன்னாடி நூத்துக்கணக்குல புறாக்கள் இருந்துருக்கு. எல்லாமே காலைல பறந்து போயிட்டு சாயங்காலம் தான் வீட்டுக்கு வரும். சாயங்காலம் அதுங்க வீட்டு மொட்டை மாடியில அரிசி, கம்பு, கொண்டகட்டிக் கடலை, இன்னும் பல பல ஐட்டங்கள ஸ்வாகா பண்ணிட்டு அதது கூட்டுக்குள்ள போய் அடஞ்சுக்கும்... அந்த நேரத்துல அதுகள பாக்குறதே ஒரு பேரானந்தம். அப்பப்ப நானும் தேவதையா மாறி, புறாக்கள பறக்க விட்டதும் உண்டு. என்ன, அப்போ நான் ரொம்ப குட்டி தேவதையா இருந்தேன். அதனால தலைல ஒரு மலர் கிரீடம் நீங்க தாராளமா கற்பனை செய்துப் பாத்துக்கலாம். முன் பல்லு ஒண்ணை காணோம்னு தேடாதீங்க, முந்தின நாள் தான் அதை மண்ணுல புதைச்சு, தண்ணி ஊத்தி தடவி குடுத்துட்டு வந்துருக்கேன். அநேகமா எங்க வீட்ல பல் மரம் ஒண்ணு யார் கண்ணுக்கும்  தெரியாம  முளைச்சிருக்கலாம்....

சரி, இப்போ விசயத்துக்கு வருவோம். நிஜமாவே இந்த பறவைகள எல்லாம் வெளில விட்டுட்டா சுதந்திரமா வாழுமா? இந்த கேள்விய நாமளே கேட்டுட்டு நாமளே பதில் சொல்லிக்கவும் கூடாது தான். அது இந்த ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் மாதிரி மனுஷாதிக்கம். ஆனாலும் நேத்து, நான் அடைச்சு வச்சிருந்த குருவிகள்ல மந்தாகினியோட ஜோடி திவா, விருட்டுன்னு வெளில பறந்துடுச்சு.

அது திரும்பி வரணும்னோ, வரும்னோ நான் அப்போ யோசிக்கவே இல்ல. அது பாட்டுக்கு பறந்து போய்டுச்சே, இங்க காக்காக்கள் நிறைய உண்டே, படக்னு அத ஒரே கொத்துல சாகடிச்சிடுமேன்னு தான் பயந்தேன். கூடவே, அதுக்கு அத்தனை வலிமையான சிறகுகள் வேற உண்டான்னு ஆச்சர்யம். ஒரு அஞ்சு நிமிச அமைதி, சலனம் எல்லாத்துக்கு பிறகு, அது திரும்பி வந்துச்சு.

உங்கள விட்டா எனக்கு யாரைத் தெரியும்னு அது கேட்ட மாதிரி இருந்துச்சு. பக்கத்துல போனப்ப விருட்டுன்னு அது பறந்தத பாத்து, நான் சுதந்திரமா இருக்க விரும்புறேன்னு சொல்ற மாதிரியும் இருந்துச்சு.

கொஞ்சம் நானும் ஒரு பறவையா மாறி அதோட எண்ண ஓட்டங்கள படிக்க பாத்தேன். ஒரு சமயம் மனம் கழுகா மாறுது, உன்னை கொத்தி திங்குறேனா பார்ங்குது, காக்கா மனமோ, இன்னிக்கி நல்ல சாப்பாடுன்னு சப்பு கொட்டுது. மறுபடியும் சிட்டுக்குருவியா மாறி, என்னை எதுவும் செய்துடாதன்னு கெஞ்சுது. அப்பப்பா, பறவை மனம்னு இனி சொல்லக் கூடாது போல... காக்கா மனம், சிட்டுக் குருவி மனம்ன்னு தனி தனியா பிரிச்சுக்கணும்.

எப்படியோ ஒரு மணி நேர அதிதீவிர போராட்டத்துக்கு பிறகு, கூட்டுக்குள்ள விடப்பட்ட திவா, இப்போ அப்படி எந்த விதமான சம்பவமும் நடக்கவே இல்லங்குற ரேஞ்ச்ல மந்தாகினிய கரெக்ட் பண்ற வேலைல தீவிரமா இறங்கியாச்சு...

சுதந்திரமா எல்லாம் வேணாம், நீங்க கூட்டுக்குள்ளயே இருங்கன்னு என் தேவதை மனம், கொஞ்சம் மனுசத்தனமா அதிதீவிர முடிவெடுத்துடுச்சு...

அப்படியே வாய்ல இருந்து ரெண்டு கோரப்பல்லும் தலைல ரெண்டு எருமை மாட்டு கொம்பும் முளைக்குறதுக்கு முன்னாடி, எல்லாரும் எஸ்கேப் ஆகிடுங்க... நான் கொஞ்சம் பறவைகள் உலகை ரசிக்கப் போறேன்...

4 comments:

  1. வணக்கம்
    அருமையாக சொல்லியுள்ளீர்கள் சரி இரசிக்க செல்லுங்கள்....இரசித்த பின் இரசித்தவை பற்றி எழுதுங்கள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா எழுதுறேன் அண்ணா. நன்றிக்கு நன்றி

      Delete
  2. Replies
    1. ஹஹா வாழ்த்துக்கு தேங்க்ஸ் அண்ணா, நான் தான் உங்கள மிஸ் பண்ணுனேனா இல்ல உங்கள கொஞ்ச நாள் காணோமான்னு தெரியல, நல்லா இருக்கீங்கல

      Delete