Monday 2 March 2015

அனேகன் - பார்த்த கதை



நேத்து சாயங்காலம் வரைக்கும் சோம்பேறித்தனமா போன நாள், சாயங்காலம் ஆனதும் பக்கத்து வீட்டுப் பொண்ணு வந்து அக்கா, படத்துக்கு போவோமான்னு கேக்க கடகடன்னு பிசியாகிடுச்சு...

கொஞ்ச நாளாவே தியேட்டர் போய் படம் பாக்கணும்ன்னு ஆசை இருந்துட்டே இருந்துச்சு. இங்க குடும்பத்துல பசங்க படம் பாக்க போனாலும் ஏனோ, ஏதாவது ஒரு காரணத்தால என்னால போக முடியல... அதுவும் எப்பவும் இங்க செகண்ட் ஷோ தான் போறது. எல்லாம் எங்க குடும்பத்து மாமா பசங்க, சித்தி பசங்கன்னு ஒரு பதினஞ்சு இருபது பேர் கேங்கா போவோம். அதெல்லாம் ஒரு ஆறு மாசத்துக்கு முந்திய அழகிய கனாக்காலம். எப்ப இந்த கோச்சடையான தியேட்டர்ல பாத்துட்டு மெர்சலானோமோ (இதுக்கு அர்த்தம் அந்த அன்பு, காதல், நேசம்னு எல்லாம் அர்த்தம் இல்ல.... கிர்ர்ர்ர்... விடுங்க அந்த சோக கதைய என் வாயல சொல்லிட்டு) அப்பவே இன்றே கடைசி மாதிரி இவ்வளவு நாள் வேற எந்த படமும் பாக்காம நாள் ஓடி போச்சு...

படத்துக்கு போகணும்னு முடிவெடுத்த உடனே நந்து அம்மாவுக்கு கால் பண்ணி, அவள வர சொல்லுங்கன்னு சொல்லிட்டு, அப்பா கிட்ட போய் அப்பா, வாங்க படத்துக்கு போகலாம்னு கூப்ட்டேன். “என்னது, படத்துக்கா, நானா.... இந்த வயசான காலத்துல நான் எப்படி தியேட்டர் எல்லாம்.... நான் வரல, நீங்க எல்லாரும் தம்பிய கூப்ட்டுட்டு போங்க”ன்னு அப்பா முடியாதுன்னு சொல்லிட்டார்.

பத்து நாள் முன்னால தான டை எல்லாம் அடிச்சு, கிளாமரா போட்டோ எல்லாம் எடுத்தேன், அதுக்குள்ள வயசாகிடுச்சா, இந்த வார்த்தைய அப்பா இதுவரைக்கும் சொன்னதே இல்லையேன்னு இடுப்புல ரெண்டு கையையும் ஊனிக்கிட்டு, “என்ன மிஸ்டர் பெருமா, பொண்ணு கிண்ணு கெட்டுற மாதிரி ஏதாவது ஐடியாவா, வயசாகிடுச்சுன்னு சீன் போடுறீங்க.... எங்க அம்மாவுக்கு துரோகம் பண்ண நினச்சீங்க, கொன்றுவேன் கொன்னு”ன்னதும் அப்பாவுக்கு சிரிப்பு தாங்கல... “அட இன்னும் ஒரு பத்து நாள் பொறு, இந்த வாக்கிங் ஸ்டிக்க தூர எறிஞ்சுட்டு வரேன்”னார்... இதுக்கு மேல அப்பாவ கட்டாயப்படுத்த முடியல...

சரி, தம்பிய கூப்பிடலாம்னு பாத்தா, அவன் ஒரு நாளும் இல்லா திருநாளா பிரெண்ட்ஸ் பாக்கப் போறேன்னு கிளம்பிட்டு இருந்தான். சரிதான், அப்போ இன்னிக்கி ப்ரோக்ராம் கட்ன்னு நினச்சுட்டு சோகமா இருந்தப்ப தான் கிச்சனுக்குள்ள இருந்து பாட்டி வாய்ஸ், கடமுட கடமுடன்னு பாத்திரம் உருட்டுற சத்தத்தோட வருது. என்னன்னு கூர்ந்து கவனிச்சா “ ஊருல இல்லாத அதிசயமா பொட்ட புள்ளைய பெத்து வச்சிருக்கான். அது ஊருக்கு அடங்காம ராத்திரி நேரத்துல ஊர் சுத்த கிளம்புது”ன்னு ஒரே புலம்பல்....

சட்டுன்னு கோபம் தலைகேறிச்சு. நேரா அப்பா கிட்ட போனேன், “அப்பா, நான் தனியா படம் பாக்கப் போறேன், ராத்திரி பதினோரு மணி ஆகும் வீட்டுக்கு வர... என்னோட கார் சாவி எங்க”ன்னு கேட்டேன். அப்படியே மொபைல் எடுத்து அந்த பொண்ணையும் வர சொல்லிட்டு, கூடவே நந்து வீட்டுக்கும் கால் பண்ணிட்டு, முக்கியமான ஒரு போன் கால் பேசிட்டு இருக்கும் போதே, ரெண்டு பேரும் வந்து சேர்ந்துட்டாங்க.

கடகடன்னு கிளம்பி, கார் சாவிய எடுத்துட்டு, ஹப்பா..... எவ்வளவு நாள் கழிச்சு மூணு பொம்பள புள்ளைங்க வெளில தனியா போகப்போறோம்.... அப்பாவ ஓடிப் போய் கட்டிபிடிச்சு கன்னத்துல உம்மா குடுத்து தேங்க்ஸ்ப்பா சொல்லிட்டு, பாட்டி கத்தல் தூரமா தேய தேய காதுலயே வாங்காம எஸ்கேப்....

இன்னிக்கி சண்டே வேறயா, மால்-ல கூட்டம்னா கூட்டம் அப்படி ஒரு கூட்டம். நாங்க போனப்ப அப்ப தான் ஒரு படம் விட்டு நிறைய பேர் கிளம்பிட்டு இருந்தாங்க (மொத்தம் மூணு தியேட்டர், சோ மூணு படம் அந்த மால்ல ஓடிச்சு). நான் வேற ரிவர்ஸ் எடுக்குறதுல செம டேலேன்ட், ரைட் போனா லெப்ட்ல போவேன், லெப்ட்ல போ-ன்னா ரைட்ல போவேன்... ஒரு ஸ்டேஜ்ல அசையவே முடியாம ஜாம் ஆகியாச்சு. எப்ப அங்க போனாலும் எங்கள பாத்தாலே சிரிச்சுட்டே பார்க்கிங் பண்ண அங்க உள்ள செக்யூரிட்டிஸ் ஹெல்ப் பண்ணுவாங்க. பின்ன, எப்பவுமே வாய் நிறைய புன்னகையோட தேங்க்ஸ் சொல்லுவோம்ல அவங்களுக்கு. இன்னிக்கி என்னடானா, ஒரு பதினஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க, அப்புறம் பார்க்கிங் ஒதுக்கி தரோம்னு சொல்றாங்க. நேரம் வேற ஆறரை ஆகிடுச்சு. அனேகன் ஆறரைக்கு தான் ஷோ-ன்னு சொன்னாங்க. என்னப்பண்ணலாம்ன்னு ஒரே யோசனை. அப்படியே ரோட்டுலயே காரை டூ-வீலர் பார்க்கிங் பக்கமா ஒதுக்கி, லாக் பண்ணிட்டு வசமா எஸ்கேப் ஆகிட்டோம்...

படம் தேர்ட் ப்ளோர்... கடகடன்னு ஸ்டெப்ஸ் ஏறிடலாம்னு பாத்தா, நந்து நான் லிப்ட்ல தான் வருவேன்னு ஒரே அடம். மூணு டிக்கெட் எடுத்து, தியேட்டர்குள்ள போகும்போது முதல் பாட்டு ஓடிட்டு இருக்கு.... பாட்ட வேற இடைல இருந்து பாத்தோமா, ஒரே கன்பியூசன்... சரி போக போக புரியும்னு மனச தேத்திகிட்டு படம் பாக்க ஆரம்பிச்சோம்...

ஆனா சும்மா சொல்லக் கூடாது, படத்துல கத என்னன்னு கேக்காம படம் பாத்தா முதல் பாதி செம கலகல... எப்பவும் உர்ர்ன்னு மூஞ்சி வச்சுட்டு படம் பாக்குற நானே கெக்கே பிக்கேன்னு சிரிக்கத் தான் செய்தேன்...

அம்மா கார்த்திக் ஃபேன். அதனாலயே எனக்கு கார்த்திக் பிடிக்கும். கார்த்திக் நடிச்சதுல ஏனோ எனக்கு பிஸ்தா ரொம்ப ரொம்ப பிடிக்கும். திரும்ப திரும்ப பாத்த படம். ஹப்பா இந்த வயசுலயும் கார்த்திக் என்ன ஸ்மார்ட்... ஐ லவ் யூ கார்த்திக்...

ஏம்பா, படம் ஆரம்பத்துல நல்லா தான போயிட்டு இருந்துச்சு. அது ஏன் சும்மா ஒளிஞ்சுட்டு இருந்த புள்ளைய கூட சுத்துற புள்ள பொம்ம மாதிரி வெறப்பா நடந்து போய் இந்தா இருக்காங்கன்னு கூடைய கைகாட்டிச்சு? ஆனா அதுல தனுஷ் மண்டைல பாயுற புல்லட் டப்ன்னு இதயத் துடிப்ப நிக்க வச்சுடுச்சு... எனக்கு மூஞ்சியெல்லாம் தொங்கிப் போச்சு.

தனுஷ எல்லாம் பாத்தாலே பிடிச்சுது, அந்த ஹீரோயின தான் பாக்க பாக்க பிடிச்சுது. படம் ஆரம்பிச்சப்ப நிஜமாவே தனுஷ் சொல்ற மாதிரி அது மொக்க பீஸ் தான், எவ்வளவு நேரம் வேணும்னாலும் பாக்கலாம்... ஹஹா... தனுஷ் அப்படி சொல்ற அந்த சீன் செம செம.... அய்யோ தனுஷ் என்னா ஸ்மார்ட் அதுல...

அப்புறம் கதை எல்லாம் என்னன்னு கேக்காதீங்க, செகண்ட் ஹாப் எனக்கு சொதப்பலா தான் பட்டுச்சு. அய்யே, எவ்வளவு ஸ்மார்ட் கார்த்திக், ஹீரோயின் ஜோடினப்ப சகிக்கல... கார்த்திக், நீங்க ஓல்ட் மேனா மட்டுமே வந்துருக்கலாம். ஆனா ஒண்ணு, கார்த்திக் மாதிரியே தனுஷ் இமிடேட் செய்ற இடத்துல எவ்வளவு ஸ்மார்ட்டா அத உக்காந்துகிட்டே ரசிப்பார் தெரியுமா.... கார்த்திக் எப்பவுமே கார்த்திக் தான்...

ஒரு வழியா சுமார் முப்பது நிமிஷம் பொறுமைய ரொம்ப சோதிச்சு, விட்டா போதும்னு படம் முடிஞ்சதும் வெளில ஓடி வந்து அப்படியே புட் கோர்ட்க்குள்ள என்ட்டர் ஆகிட்டோம்... நேரம் ஒன்பது முப்பது.

அப்படியே ஒரு பக்கெட் சிக்கன் ஆர்டர் பண்ணி, மூணு பேரும் மூச்சு முட்ட எல்லாத்தையும் தின்னு தீத்துட்டு வெளில வந்து பாத்தா வண்டி அனாதையா நடு ரோட்டுல நிக்குற மாதிரி நின்னுட்டு இருக்கு. சாரி செல்லம் லேட் ஆகிடுச்சுன்னு அதுகிட்ட சாரி கேட்டு வண்டிய ஸ்டார்ட் பண்ணி, அப்படியே ரிவர்ஸ் எடுத்து, நேரா ரோட்டுல நூறு கிலோமீட்டர் வேகத்துல வண்டிய விட்டு வீடு வந்து சேர்ந்தப்ப மணி பத்தே முக்கால்... அதுவரைக்கும் யார் வீட்ல இருந்தும் ஒரு போன் கால் வரல.... உள்ள வந்ததும் அப்பா ஹால்ல உக்காந்து படம் எப்படி இருக்குன்னு கேட்டார். உங்க அளவு சைட் அடிக்குற மாதிரி யாரும் ஸ்மார்ட்டா இல்லப்பான்னு சொன்னேன்.

இப்படியே புள்ளைக்கு செல்லம் குடு... ஒரு நாள் அவ உன்ன அழ வைக்கப் போறான்னு பாட்டியோட வாழ்த்து மழைல நனஞ்சுட்டே நான் தூங்கப் போயிட்டேன்...

அனேகன், பாருங்க... நிறைய சிரிக்கலாம், போர் அடிச்சு போய் யாரையாவது அடிக்கலாம் போல கொலைவெறி ஆகலாம்... மொத்தத்துல கலவை தனுஷ் கிட்ட மட்டும் இல்ல, படத்துலயும் தான்...

.

2 comments:

  1. வணக்கம்
    தங்களின் பார்வையில் விமர்சனம் நன்று பகிர்வுக்கு வாழ்த்துக்கள் த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete