Saturday 14 March 2015

சக்தி - இறுதி நிமிடங்கள்



எப்ப இவனப் பத்தி எழுத ஆரம்பிச்சாலும் கை நடுங்க ஆரம்பிச்சுடுது. எப்படியாவது அந்த சம்பவத்த விவரிச்சுடணும்னு தான் நானும் முயற்சி பண்ணிகிட்டே இருக்கேன்...

எப்பவுமே சக்தி ராத்திரி என் முதுகுல தான் தூங்குவான். விடியற்காலைல எழும்பி கொஞ்ச நேரம் பிரிண்டர்க்குள்ள போய் தூங்கிட்டு வருவான்.

22 பிப்ரவரி 2014 - அன்னிக்கி வழக்கம் போல தான் விடிஞ்சுது. தூங்கிட்டு இருந்த இவன் எழும்பி பிரிண்டர்க்குள்ள போனான். அப்பாடான்னு கொஞ்ச நேரம் முதுகு மெத்தைல பட நிமிர்ந்து படுத்தேன். சட்டுன்னு பாய்ஞ்சு வந்தான். எலேய் கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுடான்னு சொல்லி முடிக்குறதுக்குள்ள காதுல கம்மல கடிக்க ஆரம்பிச்சுட்டான்.

அன்னிக்கி சனிக்கிழமை வேற. லீவ் நாள். எழுறதுக்கு மனசே இல்ல, ஆனாலும் இதுக்கு மேல தூங்கினா வேலைக்காகாதுன்னு எழும்பி, ஒரு ஆப்பிள் எடுத்து அவன் கிட்ட குடுத்து, இத தின்னுகிட்டு இரு, என்னை டிஸ்டர்ப் பண்ணாதன்னு சொல்லிட்டு படுத்தா, அவன் ஆப்பிளை திரும்பி கூட பாக்காம என் தோள் பக்கத்துலயே உக்காந்துட்டு இருந்தான்... செல்லம், சரி, வா, உன்னை போட்டோ எடுக்குறேன்னு அவன போட்டோ எடுக்க ஆரம்பிச்சேன்.

எப்.பி பிரெண்ட் ஒருத்தங்களுக்கு பர்த்டே. அதுக்காக அவன் கைல பூக்கொத்து எல்லாம் குடுத்து போட்டோ எடுத்து எப்.பி ல போஸ்ட் பண்ணிட்டு, காலைல பாட்டி கொண்டு வந்து தந்த ரெண்டு இட்லிய கஷ்டப்பட்டு முழுங்கிட்டு ப்ராஜெக்ட் விசயமா கொஞ்சம் வேலை இருக்குன்னு டைப் பண்ண ஆரம்பிச்சேன்.

சக்தி கொஞ்ச நேரம் என் விரல்கள பிடிச்சு விளையாடிட்டு இருந்தான். நிறைய வேலை இருக்குடா, ப்ளீஸ்டா, டைப் பண்ண விடுன்னு கெஞ்ச ஆரம்பிச்சதும் என்ன நினைச்சானோ லேப்டாப் பக்கத்துல போய் படுத்துட்டு கால நீட்டி சோம்பல் முறிச்சு தூங்க ஆரம்பிச்சான்.

திடீர்னு எழும்பி பிரிண்டர்க்குள்ள போனான். சரி போகட்டும்ன்னு நான் டைப் பண்ற வேகத்துல அப்புறம் அவன கவனிக்கல.

மதியம் சாப்பாடு வந்துச்சு. சாப்ட்டுட்டு கொஞ்சம் படுக்கலாம்ன்னு நினச்சு வந்து படுத்தேன். எங்க இவன காணோம்னு தேடிட்டே லேய் சக்தின்னு குரல் குடுத்த உடனே ஓடி வந்தான். வந்தவன் வழக்கம் போல முதுகுல தொத்திகிட்டான்.

எனக்கு முதுகுல நடக்குறப்ப ஒரு தள்ளாட்டம் தெரிஞ்ச மாதிரி பட்டுது. மோனே, அம்மா கிட்ட வான்னு கைய முதுகு பின்னால கைய விட்டு அவன கைல எடுத்தேன். என்னமோ மாற்றமா தெரிஞ்சுது எனக்கு.

என்னாச்சுடா செல்லம், உடம்பு சரியில்லையான்னு கேட்டுட்டு இருக்கும் போதே தடுமாற ஆரம்பிச்சான்.

டேய் சக்தி, என்னாச்சுடா, செல்லம் அம்மாவ பாரு, புள்ளைக்கு ஒண்ணுமில்லன்னு முதல்ல கார்த்திக்கு தான் போன் பண்ணினேன்.

கார்த்திக், சக்திக்கு என்னமோ ஆகிடுச்சுடா, பாரு அவன் உடம்பெல்லாம் நடுங்குதுன்னு ஓ...ன்னு அழ ஆரம்பிச்சேன். எ

கார்த்திக் தான், "ஏய், அவனுக்கு ஒண்ணும் ஆகாது, நீ அப்பாவுக்கு போன் பண்ணு, பக்கத்துல இருக்குற ஹாஸ்பிட்டல் கொண்டு போ"ன்னு சொன்னார்.

சரின்னு கட் பண்ணி அப்பாவுக்கு கூப்ட்டா, அப்பா எதோ வேலை விசயமா ரொம்ப தூரமா போயிட்டு இருந்தார். என் குரல் அப்பாவ என்னவோ பண்ணியிருக்கணும். அழாதன்னு சொல்லிட்டு, அடுத்த நிமிஷம் திரும்பி வீட்டுக்கு வர ஆரம்பிச்சுட்டார்.

தம்பிக்கு இந்த விஷயம் தெரியல, நான் ரூம்ல உக்காந்து சக்திய கைல வச்சுட்டு அவனையே பாத்துட்டு இருக்கேன். அவன் நிமிர்ந்து என் கண்ணை பாத்து என்னவோ சொல்ல நினைக்குறான்.

"ஒண்ணுமில்ல, ஒண்ணுமில்லடா செல்லம், எல்லாம் சரியாகிடும்"ன்னு அவனுக்கு ஆறுதல் சொல்ற மாதிரி எனக்குள்ளயே பினாத்திகிட்டு இருக்கேன். அவன கீழ விட்டா நடக்க முடியாம தடுமாறுறான். சரி, நீ என் கைக்குள்ளயே இருன்னு தூக்கி வச்சுகிட்டேன்.

கிட்டத்தட்ட நாப்பது நிமிஷம் கழிச்சு அப்பா வந்தாங்க. கூடவே டாக்டர். "அம்மு சக்திய கொண்டு வா"ன்னு ஹால்ல இருந்து குரல் குடுத்தாங்க.

தம்பி அப்ப தான் மாடில இருந்து கீழ இறங்கி வந்தான். அவனுக்கு புரிஞ்சிருக்கும். என் ரூம்க்குள்ள வந்து சக்திய கைல வாங்க வந்தான். சக்தி தான் எப்பவுமே யாரையுமே பாக்க மாட்டானே, ஓடிப் போய் ஒளிஞ்சுப்பான்ல, தம்பிய கண்டதும் ஓடி போய் ஒழிய ட்ரை பண்ணினான். "நானே எடுத்துட்டு வரேன்"னு அவன் கிட்ட சொல்லிட்டு, "வாடா, செல்லம், புள்ளைக்கு சரியாக தான டாக்டர் வந்துருக்கார்"ன்னு சமாதானப் படுத்தி, கைல பாதுகாப்பா வச்சு எடுத்துட்டு போனேன்.

சக்திய டாக்டர் கைல வாங்கினதும் அடம் புடிச்சான். தப்பிச்சு போக ட்ரை பண்ணினான். அவர் பாத்துட்டு, கொஞ்சம் சொட்டு மருந்து தந்து, குடுக்க சொல்லிட்டு, நோய் தீவிரமா தான் இருக்கு. இது இப்ப அணில்களுக்கு பரவிட்டு வர்ற நோய். பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டு போய்ட்டார்.

எனக்கு சக்தியோட அம்மா நியாபகம் தான் வந்துச்சு. நான் பாத்துப்பேன்னு நம்பிக்கைல தான அவன என்கிட்ட விட்டுட்டு அவ செத்துப் போனா... அந்த நம்பிக்கைய நான் காப்பாத்த வேணாமா?

எனக்கு கண்ணுல கண்ணீர் முட்டிட்டு வர ஆரம்பிச்சிடுச்சு. சொட்டு மருந்த குடுத்துட்டு நான் பாத்துக்குறேன்ப்பான்னு சொல்லிட்டு சக்திய எடுத்துட்டு ரூம்க்குள்ள வந்து கதவ மூடினேன். அப்பாவுக்கும் தம்பிக்கும் தெரியும், இனி என்னை டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு...

அப்போ ஒருத்தங்க கால் பண்ணினாங்க. "காயு, சக்தி இப்ப எப்படி இருக்கான்?"ன்னு கேட்டதும், மருந்து குடுத்துருக்குன்னு சொன்னேன்.

பேசிட்டு இருக்கும் போதே, திடீர்னு அவன் உடம்பு துடிக்க ஆரம்பிச்சுது.

"சக்தி, செத்துடாதடா, அம்மா கிட்ட வந்துடுடா, வந்துடுடா... உனக்கு ஒண்ணும் ஆகலடா, நம்புடா"

என்னப் பண்றது நான்? என் கண்ணு முன்னால என் புள்ள உடம்பு தூக்கித் தூக்கிப் போடுது.

"ஐயோ என் புள்ள துடிக்குறான், டேய் டேய் டேய் போகாதடா, போகாதடா... போய்ட்டான் போய்ட்டான் போய்ட்டான்... சக்தி சக்தி சக்தி...."

அதுக்கு மேல என்னால பேச முடியல. போன் வச்சுட்டு அவனையே வெறிச்சுப் பாக்க ஆரம்பிச்சுட்டேன்.

திடீர்னு அசைய ஆரம்பிச்சான். “உனக்கு எதுவுமே ஆகாதுடா, முதல்ல அம்மாவ நம்புடா”

அப்படியே என் கண்ணையே பாத்தான். அவன முகத்துக்கு நேராத் தூக்கி சிரிச்சேன். அவன் மூக்குல என் மூக்க வச்சுத் தேய்ச்சேன். கண்டிப்பா போகணும்னா உடனே செத்துடுடா சக்தி...

கண்ணீர் மட்டும் கண்ணுல இருந்து வழிஞ்சுகிட்டே இருந்துச்சு. மனசு குமுற ஆரம்பிச்சது. “கடவுளே என் சக்திய கஷ்டப்படுத்தாத, அவன் செத்துருவான்னா, இப்பவே அவன கொன்னுரு”

அவ்வளவு தான் சக்தி மறுபடியும் துடிக்க ஆரம்பிச்சான். அவன் கால் எல்லாம் நீளமா நீட்டி விரைக்க ஆரம்பிச்சது. அமைதியா பாத்துகிட்டு இருந்தேன்.

போய்ட்டான்.

கார்த்திக்கு கால் பண்ணினேன். “கார்த்திக், சக்தி போய்ட்டான்”

“நீ அழாதடா செல்லம், பத்ரமா இரு ப்ளீஸ்”

“அவன் தூங்குறான் கார்த்திக், நான் அப்பா கிட்ட போய் அவன குடுத்துட்டு வர்றேன்”

“செல்லம், பத்ரம்டா... உனக்கு எதுவும் ஆகிடாம பாத்துக்கோடா, அவன் நம்ம கூட தாண்டா இருக்கான். நம்ம புள்ள வேற எங்க போய்ட போறான்?”

“ஆமாடா, சரி, நான் அப்புறம் பேசுறேன்”

அவனையே கொஞ்ச நேரம் பாத்தேன், மொபைல் எடுத்து என் சக்திய கடைசியா போட்டோ எடுத்தேன். நான் போட்டோ எடுத்தாலே கொஞ்சமும் போஸ் தராம அடம்புடிக்குற பய, அன்னிக்கி அமைதியா நான் போட்டோ எடுக்க எடுக்க டிஸ்டர்ப் பண்ணாம போஸ் குடுத்தான்.

கதவ தொறந்து, “அப்பா, சக்தி போய்ட்டான்ப்பா”

ஹாலுக்கு நடந்து போனேன். அப்பாகிட்ட குடுத்தேன், அப்பா கண்ணுல கண்ணீர். தம்பி கைய நீட்டினான்.

இதே தம்பி தான் அவன் குட்டியா இருந்தப்ப என் கைல கொண்டு வந்து தந்தான். அப்போ சக்தி துருதுருன்னு அவ்வளவு சுறுசுறுப்பா இருந்தான். என்னை விட தம்பிகிட்ட தான் அதிகமா ஒட்டினான். அன்னிக்கி தந்துட்டு போனவன் தான், இன்னிக்கி தான் சக்திய கைல வாங்குறான். அதுவும் உயிர் இல்லாம...

தம்பி, மெதுவா அவன தடவிக் குடுத்தான். கண்ணுல கொஞ்சம் ஈரம். சட்டுன்னு, “நான் தோட்டத்துல இவன கொண்டு போய் தூங்க வச்சுட்டு வரேன்”

மாமரம் ஒண்ணு வைக்கணும் தம்பி...

நாளைக்கு அம்மா தோட்டத்துல போய் எடுத்துட்டு வந்து வைக்குறேன்...

தம்பி போய்ட்டான். நான் ரூமுக்கு வந்து கதவை லாக் பண்ணினேன்.

கார்த்திக் கூப்ட்டார். “காயு, அவன் நம்ம புள்ள, எங்கயும் போகல, நம்ம கூட தான் இருக்கான் சரியா. நீ அழக் கூடாது. அத தாங்கிக்குற சக்தி எனக்கு இல்ல”

“இல்ல கார்த்திக், நான் அழவேயில்ல... நம்ம புள்ள தான, நம்ம கிட்ட தான் இருப்பான்”....

கட்டில்ல உக்காந்து தண்ணி குடிக்க பாட்டில கைல எடுத்தேன்.


தொப்........

முழிப்பு வந்தப்ப தரைல கிடந்தேன். மூஞ்சி எல்லாம் அடிபட்டு விண்விண்ணு வலிக்க ஆரம்பிச்சிருந்துச்சு. கைய ஊனி எழுந்திரிக்கலாம்ன்னு பாத்தா, கைய தூக்கவே முடியல...

கொஞ்சமும் அசைய முடியாம... எப்படியோ கஷ்டப்பட்டு கைநீட்டி மொபைல் எடுத்து அப்பாவ கூப்ட்டு... ஹாஸ்பிடல் போய் மூணு நாளா அவனையே நினைச்சுட்டு இருந்து, ஏதோ ஒரு புள்ளியில என் புள்ள என் கூட தான் இருக்கான்னு தெளிஞ்சு நாட்கள் வழக்கமான நாட்களா போக ஆரம்பிச்சிடுச்சு...

இப்பவும் என் புள்ள இங்க எல்லார் மனசுலயும் வாழ்ந்துட்டு தான் இருக்கான்... அவன புதைச்ச இடத்துல மாங்கன்னு நடலாம்னு நினச்சு, அது கிடைக்காம மறுநாள் மறுபடியும் சக்திய மண்ணோட தோண்டியெடுத்து, ஆழமா குழி வெட்டி, சக்திய தூங்க வச்சு, ஒரு தென்னம்பிள்ளைய நட்டு வச்சுட்டான் தம்பி. இன்னிக்கி சக்தி அந்த தென்னம்பிள்ள உடம்புல உயிர் சக்தியா ஓடிட்டு இருக்கான்...

அவன் ஏறி ஓடாத தென்னைமரமும் அவன் ரசிக்காத இயற்கையும் இன்னிக்கி அவன அன்போட பாத்துக்குது. என் புள்ள மேல இப்பவே அணில் குட்டிங்க ஏறி விளையாடுதுங்க....

என் புள்ள கண்டிப்பா சந்தோசமா இருப்பான்.



.

12 comments:

  1. Replies
    1. ம்ம்ம்ம்ம்ம் அண்ணா

      Delete
  2. Naanum sakthi ya nenache kalakathudan... year aha 2015 nu maathuga.

    ReplyDelete
    Replies
    1. வருஷம் சரியா தான் போட்ருக்கேன்... சக்தி போன வருசமே எங்கள விட்டுட்டு போய்ட்டான்... அவனோட நியாபகம் இப்ப எங்ககிட்ட ஏராளமா இருக்கு இன்னும் அத எல்லாம் நான் சரியா எழுதவே இல்ல

      http://gayathrid.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF

      Delete
  3. அடடா! என்ன ஒரு பாசம்! எழுதியுள்ள விதம் உள்ளம் உருக வைத்தது!

    ReplyDelete
    Replies
    1. அவன் மேல எங்களுக்கு இருந்த பாசத்துல இன்னும் பத்து பெர்சன்ட் கூட நான் இன்னும் பதிவு பண்ணல... தேங்க்ஸ்

      Delete
  4. வணக்கம்
    அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா... இன்னுமே அவன வச்சிருந்த கைல நடுக்கம் குறையல

      Delete
  5. எழுத்தின் நடை அழகு
    த.ம.5

    ReplyDelete
  6. உங்க எழுத்து மூலம் எங்கள கலங்க அடிச்சிட்டீங்க ஒவ்வொரு வரியிலும்ம் பாசம் நேசம் அன்பு கொட்டிக் கிடக்குது,

    ReplyDelete