Friday 24 April 2015

எவ்வளவோ பாத்துட்டோம், இத பாக்க மாட்டோமா என்ன?



சில நேரம் எல்லாமே முடிஞ்சிடுச்சு, வாழ்க்கையே இருண்டுடிச்சுங்குற மாதிரியான ஒரு சூழ்நிலை நமக்கு வரும்...

ஆனா அதெல்லாம் எதுவுமே நிஜமில்ல... அந்த நிமிடத்த மட்டும் கடந்துட்டா ஒரு வெளிச்சம் கண்டிப்பா நம்ம கண்ணுக்கு தெரியும்...

...................................

நாலு நாளா அப்படி தான் ஒரு சூழ்நிலைல இருந்தேன். என்னை சுத்தி நடக்குற விஷயம் எல்லாமே தப்பா தோணிச்சு. என்ன பண்ணினாலும் அடி மேல அடி வாங்கின மாதிரி இருந்துச்சு... வாய்விட்டு புலம்பலாம்ன்னு தான் பாத்தேன். புலம்பல்னா வேறெங்க, இங்க உங்க கிட்ட தான்... அப்ப தான் கார்த்திக் சொன்னார், இங்க பாரு, உன் எழுத்தைப் பாத்து உற்சாகம் அடையுறவங்க இங்க நிறைய பேரு. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் உன் போஸ்ட் பாத்துட்டு நானும் இப்படி இருப்பேன், என் குழந்தைய இப்படி வளர்ப்பேன்னு சொல்றவங்க இருக்காங்க. அவங்கள எல்லாம் உன் எழுத்தால நீ ஏமாத்திடாத. நீ சோகமா இருந்து அவங்கள கஷ்டப்படுத்திடாதன்னு... சரி அப்படி என்ன கஷ்டம் வந்துடுச்சு எனக்கு?

ஒண்ணு இல்ல, அடுக்கடுக்கா தொட்டதுக்கு எல்லாம் பிரச்சனை தான்... அதுல முக்கியமா மூணு பிரச்சனைகள்...

...................................

என்னோட கைட் கொஞ்சம் சீனியர் ஸ்டாப். அதனால அவங்களுக்கு குடுக்குற மரியாதைய அவங்க ஸ்டுடென்ட்டான எனக்கும் குடுப்பாங்க. என்னால என்னோட காலேஜ்ல சில முடிவுகள் எடுக்க முடியும். ஸ்டுடென்ட்ட கட்டுபடுத்துறதுல இருந்து, யார் எந்த க்ளாஸ்க்கு பாடம் எடுக்கப் போகணும்ங்குற வரைக்கும் சில வரைமுறைகள வரையறுக்கவும் முடியும்.

இப்படி பட்ட சூழ்நிலைல தான் என் கைட் இங்க இருந்து ரிலீவ் ஆகி கேராளவுல இருக்குற கொல்லத்துக்கு போறாங்க. என் கைட் இங்க இருந்து ரிலீவ் ஆகுறதால காலேஜ்ல என் அதிகாரம் பறி போனது மாதிரி தோணிச்சு... தோணுறது என்ன தோணுறது, அப்படி தான் ஆகிப் போச்சு. கிட்டத்தட்ட ஒண்ணரை வருஷமா நான் ஆட்சி பண்ணிட்டு இருந்த லேப் விட்டு முதல்ல காலி பண்ண சொன்னாங்க. அடுத்து எனக்கு கட்டளை போட வேற ஆட்கள் வந்தாங்க... இதனால இன்னியோட காலேஜ் போறத நிறுத்திடலாம்ன்னு முடிவு பண்ணினேன்.

அடுத்து குடும்பத்துல ஒரு பிரச்சனை. இதுல நான் தலையிட்டு அதனால எல்லாமே சுபமா போயிட்டு இருந்த பாதை விலக ஆரம்பிச்சிடுச்சு. எனக்கு எல்லாமே என் கை விட்டு போன மாதிரி ஒரு பீலிங். ஐயோ தெரியாம இப்படி பண்ணிட்டோமேன்னு ஒரு குற்ற உணர்வு. துரோகம் பண்ணிட்டதா கூட ஒரு கில்டி பீலிங்...

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இங்க மந்தாகினியும், யுவாவும் கூடு கட்டி முட்டை போட்டு வச்சிருந்தாங்க. ரெண்டு நாள் முன்னாடி கூட்டை எல்லாம் கலைச்சுப் போட்டதோட இல்லாம கூட்டுல போய் அடைகாக்காமலும் இருக்க, ஒவ்வொரு நாளா ஆசை ஆசையா குஞ்சு பொறிக்குற நாளை எண்ணிட்டு இருந்த நான் திடீர்னு கூட்டுல இருந்து அந்த முட்டைய எடுத்து வெளில ஒரு டப்பாவுல போட்டு மூடி தூரமா வச்சுட்டேன். நேத்து காலைல எழுந்து காலேஜ் கிளம்புற நேரத்துல என்னமோ தோண, அந்த டப்பாவ தொறந்து பாத்தா உள்ள முட்டை பொறிச்சு குஞ்சு நெளிஞ்சுட்டு சாகுற நிலைமைல இருக்கு. அச்சச்சோ தப்பு பண்ணிட்டோமேன்னு பதறிட்டே குஞ்சுக்கு ஒரு சொட்டு டானிக் எடுத்து வாய்ல குடுத்து உள்ள வச்சுட்டு காலேஜ் வந்துட்டேன்.

எத்தனையோ நாள் ஆச ஆசையா எதிர்பாத்துட்டு இருந்தது, இப்ப என் கையால அது சாகுற நிலைமைக்கு தள்ளி விட்டுட்டேன். மந்தாகினியும், யுவாவும் போய் எட்டிப் பாத்து அதை கொத்துன மாதிரி இருந்துச்சு. போச்சு, குஞ்சு அவ்வளவு தான்னு கண்ணு நிறைய கண்ணீரோட காலேஜ் கிளம்பி போயிட்டேன். அங்கயும் போய் அழுதுட்டே இருந்தேன்...

...............................................................

மொத்தமா இது எல்லாமே சேர்த்து என்னை ஒரு மிகப் பெரிய அழுத்தத்துக்குள்ள தள்ளிகிட்டு போச்சு. அப்ப தான் திடீர்ன்னு தோணிச்சு. காலேஜ்ல என் கைட் இல்லனா நான் அவ்வளவு தானா? நான் ஏன் காலேஜ் போறத நிறுத்தனும்? நானும் தான் இதே காலேஜ்ல அதிகாரத்தோட இருந்துருக்கேன், ஆனா யாரையும் ஹர்ட் பண்ற மாதிரி கட்டளைகள் போட்டதே இல்ல. அப்படி இருக்க, என் சுயத்தை சீண்ட இவங்க யாரு?

நேரடியாவே என்னோட ஹச்.ஓ.டி கிட்ட போனேன். மேடம், எனக்குன்னு சில ப்ரின்சிபில்ஸ் இருக்கு. என்னால இப்படி தான் இருக்க முடியும்ன்னும் சில விஷயங்கள் இருக்கு. என்னால மாடிப் படி எல்லாம் சும்மா சும்மா ஏறி இறங்க முடியாது. சரியா காலேஜ் அட்டென்ட் பண்ண முடியாது. நான் என்னோட லேப் வொர்க் முடிச்சுட்டேன். எனக்கு உங்க ஹெல்ப் வேணும்னா மட்டும் நான் காலேஜ் வரேன், இல்லனா போய்டுறேன்னு சொன்னேன்.

எங்க ஹச்.ஓ.டி சில பேர நோட் பண்ணி வச்சிருக்குற லிஸ்ட்ல நானும் ஒருத்தி. என்ன மீட்டிங் போட்டாலும் அது என்ன இது என்னன்னு கேள்வி கேட்டே டென்சன் ஆக்கிடுவேன். ஆனா என்ன பங்சன்னாலும் என்னைக் கூப்பிட்டு தான் லீட் பண்ண சொல்லுவாங்க. நான் போடுற கண்டிசன்ஸ்க்கு முதல்ல முறைச்சாலும் ஓகே சொல்லுவாங்க. அப்படின்னா என்னோட தேவை என்னன்னு அவங்களுக்கு தெரியாதா என்ன?

அமைதியா என்னைப் பாத்த ஹச்.ஓ.டி, லேப் இன்னொருத்தங்க கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணத் தான் செய்யணும். அது ரூல்ஸ். ஆனா நீங்க உங்க இடத்துல இருந்துக்கலாம். இனி நான் உங்களுக்கு லேப் அண்ட் க்ளாஸ் அசைன் பண்ணித் தரேன், அதப் பாருங்கன்னு சொன்னாங்க... இப்போதைக்கு ஒரு பதினஞ்சு நாள் லீவ். அதனால அடுத்து என்ன பண்ணலாம்னு அப்புறமா யோசிக்கலாம்னு இப்ப முடிவு பண்ணியிருக்கேன். கண்டிப்பா எதோ நல்லது நடக்கும்னு நம்பிக்கை இருக்கு.

இங்க, குடும்ப விசயத்த எடுத்துக்கிட்டா எனக்கு ஆறுதல் சொன்னவங்க ஒரு விஷயம் சொன்னாங்க, இவ்வளவு நாள் ஒரு போலியை நம்பி பாசத்த காட்டுற நிலைமைல இருந்தோம். ஆனா இன்னிக்கி நீ பண்ணின செயலால தான் உண்மை என்னன்னு புரிஞ்சுக்க முடிஞ்சுது. சில விடை தெரியாத கேள்விகளுக்கு விடையும் தெரிஞ்சுது. அதனால அழவே அழாதன்னு சொன்னாங்க. அப்ப தான் தோணிச்சு, தப்பு பண்றவங்க ஆங்காரமா இருக்குறப்ப, நல்லது பண்ணணும்ன்னு நினச்ச நாம ஏன் குற்ற உணர்ச்சில உழன்றுட்டு இருக்கணும்? ஏன் நமக்குன்னு இருக்குற உறவுகள அடுத்தவங்களுக்கு விட்டுக் குடுக்கணும்? ஆமா இப்ப தெளிவாகிட்டேன், உறவுக்குள்ள குழப்பத்த உண்டு பண்ண பலரும் வருவாங்க, ஆனா எல்லோரும் தெளிவா இருக்குற வர அந்த உறவுகள எக்காரணத்த கொண்டும் மத்தவங்களுக்கு விட்டுக் குடுக்க வேண்டிய அவசியமே இல்ல...

அடுத்து, வீட்டுக்கு வந்தா குஞ்சு உயிரோட இருந்துச்சு. மந்தாகினியும் யுவாவும் கூட்டை மறுசீரமைப்பு பண்ணிட்டு குஞ்சுக்கு சாப்பாடும் ஊட்டிக்கிட்டு இருந்தாங்க... முடிவு எப்படியாயிருந்தாலும் அவங்களோட வாழ்வியல் முறைப் பத்தி நானும் கொஞ்சம் தெரிஞ்சிகிட்டேன். இனி இது மாதிரியான ஒரு தப்ப பண்ணிடக் கூடாதுங்குறதுல தெளிவாயிருக்கேன்.

..........................................................................

வாழ்க்கை இப்படித் தான்.... ஒரே நேரத்துல பல கஷ்டங்கள குடுத்து நம்மள அசைச்சுப் பாக்கும். ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம்... எத இழக்குறோமோ இல்லையோ வைராக்கியத்த மட்டும் இழந்துடவே கூடாது...



எவ்வளவோ பாத்துட்டோம், இத பாக்க மாட்டோமா என்ன?

6 comments:

  1. aiyyo ore nerathula avvalvu pirachanaikalaiyum kadakka
    mana thairiyam vendum. athu ungalukku athikamaave irukkunu nampuren akka.

    sikkiram pirachanaikalil irunthu velivanthu phd mudikka vazthukal.

    வாழ்க்கை இப்படித் தான்.... ஒரே நேரத்துல பல கஷ்டங்கள குடுத்து நம்மள அசைச்சுப் பாக்கும். ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம்... எத இழக்குறோமோ இல்லையோ வைராக்கியத்த மட்டும் இழந்துடவே கூடாது...///

    arumaiyana varikal akka.

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் மகேஷ்.... ரொம்ப நாள் இல்லல வருசத்துக்கு அப்புறம் உன்னை நான் இங்க பாக்குறேன்...

      Delete
  2. Nice write up!

    ReplyDelete
  3. வணக்கம்
    உண்மைதான் தன் நம்பிகை இருந்தால் போது வெற்றி நிச்சயம் பகிர்வுக்கு நன்றி.
    த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. உங்கள் மன உறுதி என்றும் தொடரட்டும் சகோதரி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. நம்பிக்கை தானே வாழ்க்கை.... நல்லதே நடக்கும் என நம்புவோம்.

    ReplyDelete