Monday 29 August 2016

விக்கி டோனார் (Vicky donor) - திரைவிமர்சனம்



படம்: விக்கி டோனார். ரொம்ப நாள் முன்னால இந்த படம் பாத்தேன். அப்பவே மனசுல ஒரு தாக்கத்த உண்டாக்கின படம். ஆனா ஏனோ அத பத்தி எழுதாம விட்டு போய்டுச்சு.

வழக்கம் போலவே எனக்கு ஹீரோ பேரு, ஹீரோயின் பேரு எதுவும் தெரியாது. அதுவும் நன்மைக்கே. கதை மாந்தர்களா மட்டுமே அவங்கள என்னால பாக்க முடிஞ்சி, கதையோட ஒன்றி போக அதுவும் ஒரு காரணம்.

கதை ரொம்ப சிம்பிள்.

எந்த விதமான கமிட்ஸ்மென்ட்லயும் சிக்கிக்க விரும்பாத ஹீரோ. ஆர்ப்பாட்டமே இல்லாம அவன் காதலிக்குற பொண்ணு, அவனயும் தன்னோட வயசான மாமியாரையும் பராமரிக்குற அவனோட அம்மா, அல்ட்ரா மாடர்னா யோசிக்குற அவனோட பாட்டி. இவங்கள சுத்தி நடக்குறது தான் கதை.

கதாநாயகன் விக்கி ஒரு கொடையாளி. அதனால அவனுக்கு கிடைக்குற பணம், அப்புறம் அதனால அவன் படுற கஷ்டம், அதுக்கு பிறகு அவன் நிலைமை என்னன்னு சொல்றது தான் படம்.

சரி, கதாநாயகன் என்ன கொடையாளினு சொல்லலயே, அவன் ஒரு ஸ்பேர்ம் அதான் விந்து கொடையாளி.

படம் ஆரம்பிக்குறப்பவே டாக்டர் கிட்ட இன்னும் தன்னோட மனைவி ஏன் கற்பமாகலன்னு விவாதம் புரியுற கணவனை காட்டுறாங்க. ஒரு குழந்தை எப்படி உருவாகுதுன்னு டாக்டர் அவங்களுக்கு விளக்குற காட்சி எல்லோருக்கும் சேர்த்து தான்.

இந்த படத்துல மக்களோட பேராசையையும் கூட சொல்லி இருக்காங்க. சச்சின் போல பையன் வேணும், ஐஸ்வர்யா போல பொண்ணு வேணும்னு இன்னைய காலக் கட்டத்துல குழந்தை பெத்துக்குரத கூட கமேர்சியல் ஆக்கிடுறாங்க.

தான் ஒரு டைவேர்சி, முதல் ராத்திரியே வீட்டை விட்டு வந்துட்டேன்னு சொல்ற ஹீரோயின் ஆய்ஸ்மா கிட்ட விக்கி சொல்ற பதில் எனக்கு பிடிச்சிருந்துச்சு. அவனுக்கு அவ யாரா, எப்படி இருந்தாலும் பரவால, சிங்கிளா இருந்தாலும் ஓகே, டபுளா இருந்தாலும் ஓகே, டைவேர்ஸ் ஆகியிருந்தாலும் ஓகே. “உன்னை பாத்த நிமிசத்துல இருந்து நீ இல்லாம வாழ முடியாதுன்னு தோணிச்சு. நீ எப்படி இருந்தாலும் ஓகே. உன்னை பாக்கும் போதெல்லாம் உன்னோட புன்னகைக்கு நான் பொறுப்பா இருக்கணும்னு தோணிச்சு. நீ என் கூட இல்லாத பொழுதுகள் நகரவே இல்ல”ன்னு அவன் சொல்ற இடம் சூப்பர்.

நான் இந்த படத்துல ரொம்ப ரசிச்சது ரெண்டு வித்யாசமான இனங்களோட பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், பிடிவாதங்கள். ஹீரோ பஞ்சாபி, ஹீரோயின் பெங்காலி. ஒருத்தங்கள பத்தி இன்னொருத்தங்க வச்சிருக்குற கருத்துகள், எண்ணங்கள், எல்லாம் தாண்டி எப்படி ரெண்டு குடும்பமும் ஒண்ணா இணையுதுன்னு சொல்ற இடங்கள் எல்லாமே நான் ரொம்ப ரசிச்சேன். அதுவும் அந்த கல்யாண சீன்ஸ் அசத்தல்.

ஒரு பஞ்சாபி பையன எல்லாம் மருமகனா என்னால ஏத்துக்க முடியாதுன்னு காச் மூச்ன்னு கத்துற அப்பாகிட்ட கூலா பக்கத்துல வந்து “அவன எப்போ மீட் பண்ண போறீங்க”ன்னு ஆய்ஸ்மா கேக்குறது அசத்தல். அது கண்டிப்பா ஒரு டிப்பிகல் அப்பாவையும் மகளையும் நம்ம கண்ணு முன்னால நிறுத்திடும். அவ அப்படி கேட்டதும் பக் பக்னு வாயடைக்குறவர் தான், அடுத்த சீன் ஒபென்னிங் ஹீரோ வீட்ல எல்லாரும் காப்பி குடிக்குற சீன் தான். டைரக்டர் டச். அடுத்து பெரிய சண்டை நடக்கும்னு நினைக்குற நம்ம எதிர்பார்ப்புல பூச்சாண்டி காட்டிடுறார்.

பிடிச்ச, ரசிச்ச டயலாக்ஸ்னு பாத்தா, நிறைய இருக்கு. ஆனாலும் “அடுத்தவங்களுக்கு விந்து குடுக்குறது, யாருனே தெரியாத குழந்தைங்களுக்கெல்லாம் அப்பா ஆகுறது எல்லாம் நம்ம கலாச்சாரத்துல ஒத்துக்க முடியுமா நீங்களே சொல்லுங்க”ன்னு விக்கியோட அம்மா, அவன் பாட்டி கிட்ட கேக்குறப்ப, “அதெல்லாம் என்னால சொல்ல முடியல, ஆனா ஒரே ஒரு விஷயம் சொல்ல முடியும். குழந்தை இல்லாத எத்தனையோ பேருக்கு இன்னிக்கி குழந்தை இருக்குதுனா அதுக்கு காரணம் விக்கி”ன்னு அவங்க சொல்ற இடம் சூப்பர்.

இன்னொரு இடம், தன்கிட்ட தான் ஒரு ஸ்பேர்ம் டோனர்னு ஏன் சொல்லலன்னு கோவிச்சுட்டு போற ஆய்ஸ்மாவ பாத்து அவ அப்பா கேள்வி கேக்குற இடம். “இப்ப பிரச்சனை அவன் உன்கிட்ட இத மறைச்சான்ங்குறதா, இல்ல நீ அம்மா ஆக முடியல, அவன் அப்பா ஆகிட்டான்ங்குறதா?ன்னு கேட்டு அவள அப்படியே நிலைகுலைய வைக்குறார்.

அதே மாதிரி மாமியாருக்கும் மருமகளுக்கும் உள்ள அந்த கெமிஸ்ட்ரி. அல்ட்ரா மாடனா யோசிக்குற மாமியார், மாமியாருக்காகவும் மகனுக்காகவும் மாடா உழைக்குற மருமகள். ரெண்டு பேரும் சேர்ந்து உக்காந்து தண்ணியடிச்சுட்டு பேசுற இடம் எல்லாமே அவங்க ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்குற ஒட்டுதல காட்டுது. இதுவே தமிழ் படங்கள்ல காட்டியிருந்தா என்னாகியிருக்கும்ங்குற யூகத்த உங்ககிட்டயே விட்டுடுறேன்.

உங்கம்மா குடிப்பாங்களான்னு கேக்குற ஆய்ஸ்மாகிட்ட, “அப்பாவோட மரணத்துக்கு பிறகு, அவங்க ரொம்ப தனிமைல வாடினாங்க. அவங்க ஸ்ட்ரெஸ் போக ஒண்ணோ ரெண்டோ பெக் அடிச்சு பழகிட்டாங்க”ன்னு சொல்ற இடமாகட்டும், “கல்யாணம் ஆகி நீ ஒரு தடவ கூட செக்ஸ் வச்சுக்கலையா”ன்னு ஆய்ஸ்மாகிட்ட ஆச்சர்யமா கேக்குற இடமாகட்டும், ஆய்ஸ்மாவுக்கு குழந்தையே பிறக்காதுன்னு தெரிஞ்சதும் அவன் காட்டுற முகபாவமாகட்டும், விக்கி தான் எப்பவும் கூல்ங்குறத நிரூபிச்சுகிட்டே இருப்பான். அதே மாதிரி கல்யாணத்துக்கு முன்னாடி விக்கிய எதிர்க்குற ஆய்ஸ்மாவோட அப்பா, அப்புறம் மருமகனுக்கு காட்டுற சப்போர்ட் அசத்தல்.

இந்த விந்து கொடை அளிக்குறது எல்லாமே அறிவியல் சார்ந்த விஷயம், அதுல தப்பே இல்லன்னு புரிய வைக்க எடுக்கப்பட்ட படம். அதுல பலவிதமான கருத்துக்கள். இது ஹிந்தி படம்ங்குறதாலயோ என்னவோ, இதுல விந்து வேணும்னு கேட்டு வர்ற எல்லாம் ஜோடிகளுமே ரொம்ப தைரியமா கிளினிக் வராங்க. அதுலயும் பெண்கள் முகங்கள்ல ஒரு நிமிர்ந்த பார்வை, தெளிந்த கண்ணோட்டம் தெரியுது. எனக்கு விந்து தேவை, இத விந்து வங்கில வாங்கிக்குறதுல தப்பேயில்ல அப்படிங்குற சரியான கண்ணோட்டத்த இந்த படத்துல அவங்க நடத்தைகள் மூலமாவே டைரக்டர் காட்டிடுறார்.

டாக்டர் கிளினிக்ல குழந்தைகளோட கூடியிருக்குற ஐம்பத்தி மூணு குடும்பங்களையும் பாத்து “அவங்க எல்லாரும் சந்தோசமா இருக்காங்க, அவங்களோட குடும்பம் குழந்தைகளோட முழுமையா இருக்கு, ஆனா எனக்கு ஏன் அப்படி ஒரு முழுமை இல்ல”ன்னு ஆயிஸ்மா சோகத்தோட ஒரு கேள்வி கேக்குறா. “இதோ நீ கேக்குற இதே கேள்விய தான் இங்க கூடி இருந்த எல்லாருமே ஒரு காலத்துல கேட்டாங்க. இதே உணர்வு தான் அவங்களுக்கும் இருந்துச்சு. ஆனா விக்கி அவங்க வாழ்க்கைல வந்த பிறகு அவங்க வாழ்க்கையே சந்தோசமா மாறிடுச்சு. ஏன்னா இந்த குழந்தைகள் எல்லாம் விக்கியோட விந்துல இருந்து உருவாக்கப்பட்டவை”ன்னு டாக்டர் சொன்னப்ப விக்கியும் ஆய்ஸ்மாவும் காட்டுற உணர்ச்சி, கண்ணீர் எல்லாம் நமக்கும் தொத்திக்குது. நாலு வருசத்துல அம்பத்து மூணு குழந்தைங்க. அடேங்கப்பா....

இந்த படத்தோட க்ளைமாக்ஸ் அப்படி இருந்துருக்கலாம், இப்படி இருந்துருக்கலாம்னு நானா பல யூகங்கள யோசிச்சுட்டே இருந்தேன். ஆனா நாம நினைச்ச கிளைமாக்ஸ் எல்லாம் படத்துல வைக்க முடியாதுல, சரி விடுங்க, டைரக்டர் வச்ச க்ளைமாக்ஸ்கே ஓகே சொல்லிடுவோம். ஆனாலும் ஆய்ஸ்மாவுக்கு குழந்தை பிறக்காதுங்குறதால ஒரு வாடகை தாய் மூலமா குழந்தை பெத்துகிட்டதா முடிச்சி இருந்துருக்கலாம். ஏன்னா, ஆய்ஸ்மாவோட கருக்குழாய்கள்ல தான் அடைப்பு இருக்கும். அவளால ஒரு ஆரோக்கியமான கரு முட்டையை உருவாக்க முடியுமே. இப்படி ஒரு க்ளைமாக்ஸ் வச்சிருந்தா, விந்து கொடை, வாடகை தாய் ரெண்டையும் ஆதரிச்ச மாதிரி இருந்துருக்கும்.

ரொம்ப நாள் முன்னால தமிழ்ல வாடகை தாய் பத்தி ஒரு படம் வந்ததா ஒரு நியாபகம். ஆனா அது என்ன படம்னு பெயர் நியாபகத்துல இல்ல. கடைசியில புருசன விட்டுட்டு அந்த குழந்தையோட அவ போறதா படம் முடியும். நம்மோட லெவல் எல்லாம் இவ்வளவு தான் யோசிக்க முடியுது. புருசன காப்பாத்த பணம் வேணும். அதுக்காக வேற வழியே இல்லாம ஒரு குழந்தைய வயித்துல சுமக்குறா. ஆனா முடிவு, யார காப்பாத்த அவ அத செய்வாளோ அவனே அவள ஏத்துக்க மாட்டான். இதயே ஒரு பாசிட்டிவ் முடிவா குடுத்துருந்தா எவ்வளவு நல்லா இருந்துருக்கும்? “விக்கி டோனார்” அப்படி ஒரு பாசிட்டிவான படம்.

10 comments:

  1. படம் வந்த சமயத்தில் இதற்கு எதிர்ப்பும் வரவேற்ப்பும் சமமாகவே இருந்ததாய் நினைவு....

    நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. இருந்துருக்கலாம். ரெண்டு கலாச்சாரங்கள் பத்தி கூட காரசார விவாதங்கள் நடந்துருக்கலாம். ஆனாலும் நான் ரொம்ப ரசிச்சு பாத்தேன். நன்றி

      Delete
  2. considering the recent law on regulation of surrogacy, this movie and the discussion on this topic is very important mam.
    in latest law, government allows surrogacy only among relatives which shows that people can accept this only if they get sperm from close or known people only.
    a good discussion like this can create awareness and change people's min dset in long run

    ReplyDelete
  3. diffrent movie, fentastic riview. Awesome naration.

    ReplyDelete
    Replies
    1. ஆமா, வித்யாசமான படம் தான். தேங்க்ஸ்

      Delete
  4. கேவலமான திரைப்படம். குழந்தை இல்லைன்னா, தத்து எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே? எத்தனையோ அநாதைக் குழந்தைகளுக்கு வாழ்வு கிடைக்குமே? 'விந்து கொடை' 'வாடகைத் தாய்' போன்ற கருத்துருக்களே அபத்தமானவை. அந்த அபத்தங்களை ஆதரிக்கும் படம்தாம் விக்கி டோனர்.

    ReplyDelete
    Replies
    1. உங்களோட இந்த கருத்தை பார்த்த பிறகு தான் இப்படியான ஒரு கருத்தும் இருக்குல ன்னு தோணுது. ரொம்ப நன்றி என்னை இன்னொரு கோணத்துல சிந்திக்க வச்சதுக்கு.

      குழந்தைகள தத்தெடுக்குற பக்குவம் எத்தனை பேருக்கு இருக்கும்னு தெரியல. அந்த நிலை கண்டிப்பா மாறணும். மறுபடியும் நன்றி

      Delete
  5. 2 mani nera padathi 10 nemedathil alaga soli irukega. ariviyali valarcheku payan paduthenal nalathu, athai kondu nam ariyamayal mulumayaga nambuvathum athan paathipum athegam. http://vediceye.blogspot.in/2012/05/5-18.html www.ujiladevi.in/2015/08/amirtha-sanjeevi.html

    ReplyDelete
  6. பகுதி நேரத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

    இன்று இருக்கும் கால கட்டத்தில் வீட்டில் இரண்டு பெரும் வேளைக்கு போனால் கூட குடும்ப செலவு சமாளிக்க முடியவில்லை .அப்படி இருக்கும் பொழுது மேற்கொண்டு எப்படி சம்பாதிப்பது என்று பலரும் தேடி அலைந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    சரி வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கிறது இன்டர்நெட் இருக்கிறது ஆன்லைன் வேலை செய்து மாதம் ஒரு 2000 சம்பாதித்தால் கூட வாடகை கட்டிவிடலாம் என்று எண்ணி நிறைய பேர் ஆன்லைன் வேலை தேடி ஏமாந்து கடைசியாக இந்த ஆன்லைன் வேலை என்றாலே ஏமாற்று என்று நினைப்பவர்கள் மத்தியில் .எங்களிடம் உள்ள நண்பர்கள் எப்படி ஆன்லைன் மூலமாக பணம் எடுக்கிறார்கள் .சரியான வழிமுறைகள் இருந்தால் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்கு நாங்கள் ஒரு முன் உதாரணம் .இங்கு ஏமாறுவதற்கு வாய்ப்பு இல்லை ஏமாற்ற எங்களுக்கு மனதும் இல்லை .நானும் உங்களை போன்று ஆன்லைன் வேலைகளை தேடி தேடி அலைந்தவனில் நானும் ஒருவன் இப்பொழுது .நான் அனைவருக்கும் வேலை கொடுக்கும் அளவுக்குஉள்ளேன். நீங்கள் வேலை செய்தால் கண்டிப்பாக பணம் பெற முடியும் .நீங்கள் வேலை செய்யும் பணம் உங்களது ஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் இல் தான் உங்களது பணம் இருக்கும் .
    அதனால் எந்த பயமும் தேவை இல்லை நீங்கள் உழைக்கும் பணம் எங்களுக்கு தேவை இல்லை .உங்கள் உழைப்பு வீண் போகாது. எங்களது நேரமும் நாங்கள் வீணாக விரும்பவில்லை .தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம் பயன் பெறலாம்.
    நன்றி வாழ்க வளர்க
    மேலும் விவரங்களுக்கு

    Our Office Address
    Data In
    No.28,Ullavan Complex,
    Kulakarai Street,
    Namakkal.
    M.PraveenKumar MCA,
    Managing Director.
    Mobile : +91 9942673938
    Email : mpraveenkumarjobsforall@gmail.com
    Our Websites:
    Datain
    Mktyping

    ReplyDelete