Friday 13 January 2017

சென்னை புக் ஃபேர்: - தற்கொலைக் கடிதம் review



நான் blog எழுதுறது, பேஸ்புக்ல page வச்சிருக்குறது எதுவும் என் நெருங்கிய சொந்தங்களுக்கு தெரியவே தெரியாது...

சொந்தக்காரங்க யார் ஐடி கண்ணுல பட்டாலும் block பண்ணிட்டு, facebook-கா அப்படினா என்னதுன்னு அவங்ககிட்டயே திருப்பி கேப்பேன்...

ஆனா முதல் தடவையா துணிச்சலோட என்னோட எழுத்துக்கள ஒரு சிறுகதை தொகுப்பு புத்தகமா போடலாம்ன்னு முடிவெடுத்து, நானாவே தான் எழுத்தாளர் பொன்னீலன்Bhaktavatsalan Ponneelan சார்கிட்ட போய் காமிச்சேன்.

படிச்சு பாத்துட்டு நிறைய பாராட்டினார். அவரே அதுக்கான அணிந்துரையும் எழுதி குடுத்து, அத எப்படி புத்தகமாக்குறதுன்னு வழி முறையும் காட்டித் தந்தார்.

அவரோட வழிகாட்டுதல்ல என்னோட புத்தகம் வெளிவந்து இப்ப சென்னை புக் ஃபேர்ல விற்பனைக்கும் வந்துடுச்சு.

என்னதான் துணிச்சலோட நான் இத எல்லாம் செய்தாலும் சொந்தக்காரங்க மத்தியில எனக்கு எந்த விதமான ரியாக்சன் இருக்குமோன்னு பயந்துட்டே இருந்தேன்...

அதனால தான் யார் கண்ணுலயும் என்னோட புத்தகத்த காட்டாம எல்லாத்தையும் அல்மாராவுல வச்சு பூட்டி வச்சேன்...

அப்படி இருக்குறப்ப தான் என் மாமா பொண்ணு என்கிட்ட என் புத்தகத்த படிக்க கேட்டா. பயம் தான், என் எழுத்த படிச்சுட்டு என்ன சொல்லுவாங்களோன்னு. ஆனாலும் ஏதோ ஒரு துணிச்சல்ல எடுத்து குடுத்தேன்...

புத்தகத்த முழுசா படிச்சுட்டு அவ குடுத்த review இனி....
______________________________

ஒரு வித்யாசமான உணர்ச்சிகள புரிஞ்சுக்குற மாதிரி ஒரு புக் அண்ணி. நம்ம ஊரு ஸ்டைல படிக்குறது ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு.

சிரிப்பு, அழுகை ரெண்டையும் ஒரே புத்தகத்துல கொண்டு வந்துட்டீங்க. நம்ம ஊருல இருக்குற specialities-சும் வித்தியாசமான விதத்துல சொல்லியிருக்கீங்க. என்னோட generation-கே இதெல்லாம் தெரியல...

Food items- ச சாப்பிடுறது மட்டும் இல்லாம அதையும் தாண்டி.... ரொம்ப சுவாரஸ்யம்.

உங்கள சின்ன வயசுல இருந்து தெரிஞ்சதால உங்களோட பார்வை & எண்ணங்கள், மாமா, அத்தை எல்லாரையும் உங்க எழுத்துக்கள்ல புதுசா உணர முடிஞ்சுது...

உங்க மேல இன்னும் பெரிய மரியாதை வந்துருக்கு.

கதைகள்ல என்னோட favorites by order.... 2,5,1,13,20,10,14,17

மத்த எல்லா கதைகளும் பிடிச்சிருந்துச்சு. ஆனா இதெல்லாம் என்னோட உணர்ச்சிய வெளிப்பட வச்சது...

12-ல நீங்க சொல்லியிருக்குற திமிரான உணர்ச்சி பூர்வமான காதல் கலக்கல்...

இந்த review -லாம் சொல்றதுக்கு எனக்கு தகுதி இருக்குதானு எனக்கு தெரியாது. but சொல்லலனா என் மனசு கேக்காது.

உங்கள் அடுத்த புத்தகத்திற்காக காத்திருக்கிறேன்....
______________________________

இத படிச்சதும் நிஜமா எனக்கு கண்ணுல தண்ணி வந்துடுச்சு... அப்படியும் என்னால நம்ப முடியாம "அப்போ துணிஞ்சு அடுத்த புக் ரெடி பண்ணலாம்ல. பயந்துட்டே இருந்தேன்"ன்னு கேட்டேன்...

"கண்டிப்பா அண்ணி. நம்ம ஊரு ஸ்டைல்ல எங்கள மாதிரி பிள்ளைகளுக்கு தெரியாத விசயத்த வித்யாசமான கண்ணோட்டத்துல சுவாரஸ்யமா சொல்ல ரொம்ப கஷ்டம். அத எதார்த்தமா படிக்கவும் உணரவும் முடியுது. இன்னும் எதிர்பார்ப்பு கூடியிருக்கு. கண்டிப்பா ரெடி பண்ணுங்க, நாங்க இருக்கோம்"ன்னு சொன்னா.
_______________________

அவ குடுத்த review தைரியத்துல நான் இன்னும் சத்தமா உங்களுக்கு எல்லாம் சொல்லிக்குறேன்....

சென்னை புக் ஃபேர்ல என்னோட புத்தகம் கிடைக்குற அரங்குகள்

புதினம் புக்ஸ் : ஸ்டால் எண் 35B
நூலகம் பேசுகிறது: ஸ்டால் எண் 409
வீ கேன் புக்ஸ்: ஸ்டால் எண் 536

___________________________

என்னை பத்தி எதுவுமே தெரியாத போதும் துணிச்சலா இந்த புத்தகத்த அழகா வடிவமைச்சு, அச்சிலேற்றி குடுத்துருக்குற J.e. Jebha-வுக்கும் உறுதுணையா இருந்த Ram Thangam- அவர்களுக்கும் என்னோட நன்றி.

3 comments:


  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. புத்தக வெளியீடு - வாழ்த்துகள்.....

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  3. நான்கு கால் செல்வங்களுக்கு
    நம்மாளுங்க நன்றிக்கடன் செலுத்தும்
    பட்டிப் (மாட்டுப்) பொங்கல்
    பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்
    தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete