Monday, 28 July 2014

ஆடி அமாவாசை - அம்மாவும் பிரகதியும்


ஆடி அமாவாசை... (26/07/2014)

அன்றைய நாள் ஆசிர்வதிக்கப்பட்டதா தான் கண்டிப்பா இருக்கணும்...

இந்த நாள் மேல எனக்கு அவ்வளவா நம்பிக்கை இல்ல. இந்த உலகத்துல நம்மள தனியா விட்டுட்டு போனவங்களுக்கு தர்ப்பணம் பண்ணினா அவங்க ஆத்மா சாந்தியடையும்ன்னு நம்பிக்கை... ஆனா எனக்கு அம்மாவுக்கு அதெல்லாம் பண்ணனும்ன்னு கொஞ்சம் கூட ஆர்வம் இல்ல. காரணம், என் கூட இருக்குரவள எதுக்கு அனாவசியமா வேறெங்கயாவது அனுப்பி வைக்கணும்?

ஆறு மணிக்கு ரெடியா இரு, வெளில போயிட்டு வருவோம்னு அப்பா சாயங்காலமே சொல்லிட்டு கோவிலுக்கு போயிட்டாங்க. நான் எங்கன்னு எல்லாம் பெருசா கேக்கல... இப்படி எங்கயாவது கூட்டிட்டு போனா, அது பாங்க்ஸ் சிக்கின் (சிக்கன் இல்ல, சிக்கின் தான்) சாப்பிட தான் இருக்கும்னு நானே நினைச்சுகிட்டேன்.

அப்பா கோவில்ல இருந்து வந்ததும் கதவை தட்டி கூப்பிட்டாங்க. ரெடியா தான் இருந்தேன். கடகடன்னு செருப்பை கால்ல மாட்டிகிட்டு வெளில வந்தா ஒரு ஆச்சர்யம். காருக்குள்ள பின் சீட்ல தம்பி. தம்பி மடியில பிரகதி.

ஒரு வேளை ஹாஸ்பிடல் எங்கயாவது போறோமோன்னு ஒரு சந்தேகம். எங்கப்பா போறோம்னு அப்பாவ பாத்து கேட்டேன். நீ வண்டிய எடு. போறப்ப சொல்றேன்னு சொல்லிட்டு அப்பா பக்கத்துல வந்து உக்காந்தாங்க.

கொஞ்ச தூரம் எதுவுமே சொல்லல... எனக்கு பிரகதி எங்க வர்றான்னு ஒரே ஆச்சர்யம். கண்ணாடி வழியா பாத்தா அவ தம்பி மடியில ஜம்முன்னு உக்காந்து இருக்கா. அதே ஜோதிகா பார்வை. அதே கெத்து. அதே புன்னகையும் கூட. எங்க பிரகதி எவ்வளவு அழகு தெரியுமா?

கார் சிட்டி தாண்ட ஆரம்பிச்சப்ப தான் சட்டுன்னு மூளைக்குள்ள ஒரு மின்னல். அம்மாவ பாக்கப் போறோம். அதே தான்...

அப்பா தலைல கை வச்சு முடிக்குள்ள வருடி விட்டாங்க. திடீர்னு மனசெல்லாம் பாரம் ஆன மாதிரி ஆகிடுச்சு. அந்த உணர்ச்சி கலவைகள எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல. ஏனோ ரோட்ல இன்னிக்குன்னு பாத்து ரொம்ப ட்ராபிக். கவனமா தான் வண்டி ஓட்ட வேண்டியிருந்தது.

எனக்கு மனசுல சித்தப்பாவோ, சித்தியோ, இல்ல அவரோட பசங்களோ நியாபகத்துல இல்லவே இல்ல. அதோ அந்த காம்பவுண்ட் திறந்து வீட்டுக்குள்ள போகாம வலது பக்கமா அந்த சிமின்ட் நடைபாதை வழியா நடந்தா நடந்தா, வெறுமையான புறாக்கூடுகளும், லவ் பேர்ட்ஸ் கூண்டுகளும், தண்ணியே இல்லாத மீன் தொட்டியும் வரும். சிகப்பு ஜாக்கெட், வெள்ளை முண்டு உடுத்தின பெண் இடுப்புல இருக்குற குடம் காலியாவே இருக்கும். கவனத்த அங்கெல்லாம் சிதற விடவே கூடாது.

மனம் மின்னல் வேகத்துல வீட்டை கடந்து, அதோ அந்த முள்வேலி தாண்டி, தோப்பு முடிவுல ரோட்டோரமா போய் அம்மாகிட்ட நிக்குது. அந்த தருணம் ஒரு ஆழ்நிலைக்கு சமம். மூச்சை அப்படியே நல்லா உள்ளிழுத்து வெளிய விட்டு பாத்தா, உடம்பு முழுக்க அம்மா வருடுன தடம் பதிஞ்சு போயிடும். போதும், இந்த தருணம் போதும்... இதுக்கு ஈடா வேற எதுவுமே கிடையாது...

கார கொண்டு வந்து காம்பவுண்ட்குள்ள விட்டப்போ நிஜமாவே அங்க யாரும் இருந்த மாதிரி தெரியல. அப்பா தான் இறங்கி போய் கேட் திறந்து விட்டாங்க. நல்லதா போச்சு. காரை பார்க் பண்ணிட்டு, கார் கதவை திறந்து, மனசு நினச்ச மாதிரியே கடகடன்னு கால் நடக்க ஆரம்பிச்சுடுச்சு. அப்பா தம்பி கூட பின்னால நடந்து வராங்க. பிரகதிய தம்பி கைல தூக்கிட்டு வரான்.

அம்மா கிட்ட போனப்போ, அப்படியே மடங்கி உக்காந்துட்டேன். அவள தொடல, அப்படியே அண்ணாந்து அவளையே பாத்துட்டு இருந்தேன். ஏண்டி இப்படி பண்ணினன்னு மனசு கேக்க ஆரம்பிச்சுடுச்சு. அப்பா அம்மாவ தடவி குடுத்துட்டு இருந்தாங்க. தம்பியும் அம்மாவ தொட்டுப் பாத்தான். அப்புறம் பிரகதிய கீழ விட்டுட்டு, எட்டி தாவல்ல இருந்த கிளைய முறிச்சி பிரகதி கிட்ட குடுத்தான்.

பிரகதிக்கு ஒரே ஜாலி தான். கொஞ்ச நேரத்துல ஒரு கொப்பை காலி பண்ணிட்டா. தம்பி அடுத்த கிளையை ஒடிக்க ஆரம்பிச்சான்.

அம்மாவுக்கு கண்டிப்பா வலிச்சிருக்காது. ஆனா அழுதுருப்பா. இதோ, ஈரப்பதத்தோட வீசுதுல, காத்து... அதுல அம்மா கலந்துருப்பா, பிரகதிய ஆரத்தழுவியிருப்பா... இவளும் அவளோட பிள்ளை தானே. என்னை பாத்துக்குற மாதிரி கண்டிப்பா பிரகதிய பாத்துப்பா தானே... அழுதுகிட்டே அம்மாகிட்ட நான் கேட்டது ஒண்ணே ஒண்ணு தான். "அம்மா, பிரகதி எங்களுக்கு வேணும். இன்னும் கொஞ்ச வருஷம் அவள எங்ககிட்ட விட்டு வையேன். ப்ளீஸ்"

தோளை தொட்டு பிரகதிக்கு எது நல்லதோ, அத அம்மா கண்டிப்பா பண்ணுவா. நீ முதல்ல எழுந்து அம்மா கிட்ட போய் இருன்னு அப்பா சொன்னப்ப தட்ட முடியல. எழுந்து அம்மாவ போய் கட்டிபிடிச்சுகிட்டேன். நான் அவளுக்கு முத்தம் குடுத்தப்ப தம்பி பிரகதிய கட்டிக்கிட்டு திரும்பிகிட்டான். கண் கலங்கிட்டானோ என்னவோ?

கொஞ்ச நேரம் அங்க தான் நின்னுட்டு இருந்தோம். பிரகதி அங்கயும் இங்கயுமா ஓடி விளையாடிட்டு இருந்தா. ஒரு பதினஞ்சு நிமிஷம் தான் இருக்கும். இனி இவளை அதிகமா துள்ள விட வேணாம்னு கிளம்பிட்டோம். சித்தப்பா வீட்ல எல்லோரும் எங்கன்னு கேக்கல... கேக்கவும் தோணல... மனச முழுக்க அங்கயே விட்டுட்டு இதோ கார மறுபடியும் நான் தான் ஓட்டிட்டு இருக்கேன்.

போற வழியிலயே சாப்பிட்டுட்டு போயிடுவோம்ன்னு அப்பா சொன்னாங்க. அப்படியே காரை அக்க்ஷயாவுக்குள்ள பார்க் பண்ணி, ரூப் கார்டன் போய் ஆளுக்கு ஒரு தோசை ஆர்டர் பண்ணினோம். கூடவே டொமாட்டோ சாஸ் (எனக்கு மட்டும்), உளுந்தவடை, இன்ஸ்டன்ட் ப்ரூ ஆர்டர் பண்ணினோம். பிரகதிக்கு நாலு இட்லி.

தோசைய கண்டதும், பிரகதி பாய்ஞ்சு போய் தம்பியோட சேர்ந்து திங்க ஆரம்பிச்சுட்டா... அப்பா கூட அவங்க தோசைய அவளுக்கே குடுத்துட்டாங்க. நான் அவளையே பாத்துட்டு தோசைய எடுத்து கைல வச்சுட்டு காத்திருந்தேன். வயிறு நிறைஞ்சுடுச்சு போல. அவ பாட்டுக்கு துள்ளி ஓட ஆரம்பிச்சுட்டா. இன்னிக்கி அந்த ரூப் கார்டன் வந்தவங்களுக்கு பிரகதி தான் பொழுது போக்கு. எல்லாரும் அவளையே தான் பாத்துட்டு இருந்தாங்க. போட்டோ எடுக்க கூட ட்ரை பண்ணினாங்க. ஆனா தம்பி ப்ளீஸ் வேணாம்னு சொல்லிட்டான். அப்புறம், அப்பாவும் தம்பியும் இட்லியும் வடையும் சாப்ட்டுட்டு, கிளம்பும் போதுஆளுக்கொரு ஐஸ்க்ரீம் ஆர்டர் பண்ணினாங்க. மொத்தம் நாலு ஐஸ்க்ரீம். ஆனா பிரகதி சாப்பிடல. ரொம்ப குளிரா இருந்துச்சுல... வாய வச்சுட்டு எடுத்துட்டா. ஆனா நல்லா சப்பு கொட்டிட்டே இருந்தா...

பிரகதியோட ஐஸ்க்ரீம் எடுத்துட்டு வீட்டுக்கு கிளம்பிட்டோம். வீடு வந்து சேர்ற வர பிரகதி ஐஸ்க்ரீம் சாப்பிடல. தம்பி அவளை அவ அம்மாகிட்ட கொண்டு போய் விட போய்ட்டான். நான், இந்தா இங்க வந்துட்டேன்.

அம்மா எது செய்தாலும் நல்லதுக்கு தான் செய்வா. பிரகதி அவளோட பிள்ளை. அவ பிள்ளைய என்ன பண்ணனும்ன்னு அவளுக்கு தெரியாதா? என்னோட இல்லல, நம்மோட பிரார்த்தனைகளும் அவளுக்கு உண்டு தானே... எல்லோரும் அவளை ஆசீர்வதிச்சுட்டு போங்க...

Sunday, 27 July 2014

புட்டு செய்வோமா?


ஞாயிற்று கிழமை....

ப்ரீயா தானே இருக்கோம்.... வாங்களேன், கிச்சனுகுள்ள புகுந்துடுவோம்...

மேல அந்த ஸ்லாப்ல ஒரு எவர்சில்வர் தூக்குவாளி இருக்கு பாருங்க, அத எடுங்க...

இதுக்குள்ள இருக்குறது தான் அரிசி மாவு. இது எப்படி ரெடி பண்ணனும்ன்னு இப்ப நான் சொல்லித் தரேன், சரியா...

பச்சரிசிய நல்லா தண்ணியில ஊறப் போட்டு, அப்புறம் தண்ணிய நல்லா வடிச்சி எடுத்துக்கங்க. அப்புறம் சுளவுல கொட்டி அப்படியே பரவலா விரிச்சி வச்சுட்டா தண்ணி எல்லாம் நல்லா வடிஞ்சுடும். அப்புறமா அத எடுத்து உரலுல போட்டு, உலக்கை எடுத்து இடிச்சிக்கங்க.

இப்போ இடிச்சி எடுத்த அரிசி மாவுல குருணை கிடக்கும். அதனால நல்லா பரும்கண்ணி வச்ச அரிப்புல வச்சு அரிச்சி மாவு தனியா, குருணை தனியா பிரிச்சி எடுத்துக்கணும் சரியா. குருணைய மறுபடியும் உரல்ல போட்டு இடிங்க... மாவு கிடைச்சிடும்.

இந்த மாவை அப்படியே சேர்த்து வைக்க முடியாது. ஈரப்பதம் அதிகமா இருக்குறதால ஈசியா பூஞ்சை புடிச்சுடும். அதனால இப்போ மாவு வறுப்போம் வாங்க...

அந்த வெங்கல உருளிய எடுத்துக்கோங்க. இப்போ மாவை அதுல கொட்டுவோம். அடுப்பை பத்த வச்சுப்போம். அய்யய்யோ கிண்டி குடுக்கணுமே, அந்த கண்ணாப்பைய எடுங்க. கை விடாம கிண்டி குடுத்துட்டே இருக்கணும் சரியா, இல்லனா அடி பிடிச்சுக்கும்.

இப்போ மாவு பொன்னிறமா வந்துடுச்சா, அவ்வளவு தான், வேலை முடிஞ்சுது. கொஞ்சம் ஆற வச்சுட்டு, தூக்கு வாளில போட்டு வச்சுடலாம்...

ஹலோ, ஹலோ, ஹலோ.... எங்க போறீங்க, இதல்லாம் ப்ளாஷ் பேக் தான். இனி மேல தான் வேலையே இருக்கு.

வாங்க, ஒரு கப் மாவு எடுத்து அந்த சருவத்துல எடுத்துக்கோங்க. அப்படியே ஒரு கப்புல உப்பு தண்ணி எடுத்து வச்சுக்கோங்க. முக்கியமா தேங்காய் துருவ மறந்துடாதீங்க. அத தனியா ஒரு தட்டுல துருவி வச்சுக்கோங்க...

சரி இப்போ, உப்பு தண்ணிய கொஞ்சம் கொஞ்சமா மாவுல விட்டு பிசைய ஆரம்பிங்க. கொஞ்சம் கூட தண்ணி விட்ட மாதிரி தெரிய கூடாது. மாவு கொஞ்சம் ஈரப்பதமா ஆகணும். அவ்வளவு தான். உப்பு டேஸ்ட் எப்படின்னு பாத்துக்கோங்க... ஓகே, இப்போ மாவு ரெடி...

இன்னிக்கி சிரட்டை புட்டு செய்வோமா? அந்த தேங்காய் துருவின சிரட்டை இருக்குல, அதுல ஒரு கண்ணை கத்தி வச்சி கொஞ்சம் பெருசாக்கிகோங்க... உள்ள இருக்குற கசட எல்லாம் நல்லா கத்தி வச்சி இளைச்சி எடுத்துடுங்க. வீட்ல சின்னதா இருக்குற குக்கர்ல தண்ணி மட்டும் விட்டு அடுப்புல வச்சிடுங்க. குக்கர் வெயிட்டர் மட்டும் போட வேண்டாம்.

இப்போ தண்ணி சூடாகி, ஆவி வரப்ப, சிரட்டையோட கண்ண அதுல சொறுகிடுங்க... ஒரு கை மாவு அள்ளி போட்டு, அது மேல தேங்காப்பூவ தூவி விட்டுருங்க...

என்ன, ஆவி இப்போ தேங்கா துருவல் மேல படர்ந்து வெளில வருதா, அப்போ புட்டு ரெடி. சுடாம இருக்க ஒரு துணி சுத்தி, சிரட்டைய எடுத்து, பாத்துரத்துல கவுத்துருங்க... அவ்வளவு தான், இனி அடுத்த புட்டு செய்ங்க...

சரி, சரி, நேரம் ஆகிட்டதால கொல்லாங்கொட்டைய நானே வறுத்து உடைச்சும் வச்சுட்டேன். பப்படமும் பொரிச்சி வச்சுட்டேன். மணக்க மணக்க கருப்பட்டி காப்பியோட இன்னொரு நாள் இந்த வேலைய நீங்க தான் செய்யணும் சரியா....

இப்போ வாங்க சாப்பிடலாம்...

புட்டு சாப்ட்டுட்டே ஒரு குட் மார்னிங்....

Tuesday, 1 July 2014

திருவிழா பாக்க போவோமா?


 
இன்னிக்கி எங்க போறது?

பேசாம ஒரு திருவிழா கூட்டத்துக்குள்ள புகுந்துடுவோமா?

 நம்ம ஊருல திருவிழானாலே அசத்தல் தானே... இப்போ திருவிழா நடக்குதான்னு எல்லாம் கேக்கக்கூடாது, நாம போகணும்ன்னு முடிவெடுத்தாலே கண்டிப்பா திருவிழா நடக்கும்.


சரி, சரி, தாத்தா, பெரியப்பா, சித்தப்பா, அண்ணா, தம்பி, மாமா, மச்சான் எல்லாரும் வெள்ளை வெளேர்ன்னு வேஷ்டி கட்டிக்கோங்க. உங்க கிட்ட இருந்தா பட்டு வேஷ்டி கூட கட்டிக்கலாம். கழுத்துல மைனர் செயினு, விரல்ல அதிரசம் சைசுக்கு மோதிரம், வலது கைல வாட்சு, இடது கைல பிரேஸ்லெட்... ப்பாஆஆ... அசத்துறீங்க...

அட, இங்க பாருங்க, பெரியம்மா, சித்தி, மாமி, அக்கா, தங்கச்சி பாட்டி எல்லாம் நான் சொல்லாமலே ரெடி ஆகிட்டாங்க. அட, பாட்டி கழுத்துல பாம்படம் அசத்தல். தோள் வரைக்கும் காத வழிச்சு நீட்டி உருட்டி உருட்டி பாம்படம் போட்ருக்காங்க. சைஸ்ச பாத்த உடனே ரொம்ப கனமா இருக்கும்னு நினச்சீங்கனா ஐயாம் சோ சாரி, உள்ள மெழுகு வச்சு அடைச்சி வச்சிருக்காங்க. அடேங்கப்பா, சித்தி கழுத்துல அட்டியல பாருங்களேன், என்னா பெருசு. தங்கச்சி, அது என்ன, நெத்திச்சுட்டி டாலடிக்குது? அதுவும் சிகப்பு கல்லுல... இங்க நம்ம அக்கா மூக்குல வைர மூக்குத்தி... ஆள் ஆளுக்கு அசத்துறீங்க... பட்டுப்புடவை சரசரக்க வேகமா வாங்க....

ஹலோ, அங்க யாரு வந்தவங்கள வேடிக்கை பாக்குறது? போங்க சார், போய் திருவிழாவ வேடிக்கை பாருங்க. ரோஸ் கலர்ல பஞ்சு முட்டாய் இருக்கு, மஞ்ச, சிகப்பு, கருப்புன்னு கலர் கலரா சவ்வு முட்டாய் இருக்கு, சுடச்சுட தேன்குழல் ரெடி. இந்த பக்கம் வாங்க, வலது பக்கம் காரச்சேவு அடுக்கி வச்சிருக்காங்க, இடது பக்கம் இனிப்பு சேவு. ஹைய்யய்யோ அதென்ன, மஞ்சயா, உருண்ட உருண்டையா? அது பூந்திங்க. அப்படியேவும் சாப்பிடலாம், கொஞ்சம் பக்குவப்படுத்தி லட்டு பிடிச்சும் சாப்பிடலாம்.

அந்த கார வகைகள் எல்லாம் எங்க இருக்கு? அதோ, அந்த வருசைல இருக்கு. மிக்சர், சிப்ஸ், கிழங்கு வத்தல், ஹே, அதென்ன, கருப்பட்டி முட்டாய். எல்லாமே அசத்தல்.

இந்தாங்க, அண்ணே, பொம்பள புள்ளைங்கள பாக்காதீங்கண்ணே அவங்க பாட்டுக்கு, வளையல், ஜிமிக்கி, தோடு, சாந்து பொட்டு, நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக்ன்னு வாங்கி குவிச்சுட்டு இருக்காங்க. நீங்க வேணும்னா உங்க வீட்டு புள்ளைங்களுக்கு வாட்ச்சு, ஸ்டோரி புக், துப்பாக்கி, பலூன், யானை பொம்மை, குதிரை பொம்மை, கார் இப்படி ஏதாவது ஒண்ணு வாங்கி குடுங்க.

 சரி எல்லாரும் வாங்க, கொஞ்ச நேரம் ரங்கராட்டினம் சுத்தலாம். மயிலாட்டம், ஒயிலாட்டம்ன்னு வேடிக்கை பாக்கலாம். அங்க என்ன கூட்டம், அட, கபடி விளையாட்டு நடக்குது. கபடி, கபடி, கபடி..... ஹஹா.... கொஞ்ச நேரம் இங்க நின்னுட்டு அடுத்து சறுக்கு மரம் ஏறுரத பாக்க போகலாம். இல்லனா சின்ன புள்ளைங்களுக்கு முறுக்கு கடித்தல் போட்டியும், பலூன் உடைத்தல் போட்டியும் நடக்குது, அங்க போகலாம். என்னது, பாம்பு படமெடுத்து ஆடுறத பாக்க போகணுமா, ஹையய்யோ நான் வரல, எனக்கு பயம். நீங்க போயிட்டு வாங்க...

 ஹோய்.... அங்க பாருங்க, வான வேடிக்கை.... ஹைய் செமையா இருக்குல. இந்த சரவடி போடும் போது மட்டும் கொஞ்சம் காத பொத்திக்கணும். டம், டமால், டுமீல்... வீட்டுக்கு ஒரு துப்பாக்கியும் ரோல் பட்டாசும் வாங்கிட்டு போகணும். எல்லாரையும் ஹான்ட்ஸ் அப் சொல்லி சுட்டு சுட்டு விளையாடணும்...

 சரி, சரி, சாமி பல்லக்குல ஏறியாச்சு. எல்லாரும் கன்னத்துல போட்டுட்டு பக்தி பரவசத்தோட கும்பிட்டுக்கோங்க... எனக்கு உங்களுக்கு எல்லாம் சுத்தி காட்டின டயர்ட்... ரெஸ்ட் எடுக்க போறேன், வரட்டா....


Tuesday, 17 June 2014

இளவரசியும் தவளையும்


ஒரு நாட்டுல ஒரு இளவரசி இருந்தா. ஒரு நாள் அவ வழக்கம் போல அரண்மனை தோட்டத்துல விளையாட போனா. அரண்மனை தோட்டம்னா சும்மாவா? ரோஜாக்களும், பவள மல்லிகை கொடிகளும் அரண்மனை தோட்டத்தையே அழகாக்கி இருந்துச்சு. அங்க இருந்த குளத்துல வெள்ளை தாமரையும், சிகப்பு அல்லியும் கூடுதல் அழக குடுத்தன.

இளவரசி அவ தோழிகளோட சந்தோசமா இருந்தத பாத்த ஒரு தவளை தானும் அவ தோழியா ஆகணும்ன்னு ஆசப்பட்டுச்சு. அது தத்தி தத்தி இளவரசி முன்னால வந்து நின்னுச்சு. இளவரசியும் அந்த தோட்டத்து தவளைய அரண்மனைக்கு கொண்டு போனா.  

அரண்மனைக்குள்ள போன உடனே இளவரசிக்கு வேண்டியவங்க எல்லாருக்கும் தவளைய அறிமுகப்படுத்தினா. தோட்டத்துல தனியாவே இருந்த தவளை அரண்மனைல எல்லார் கூடவும் சந்தோசமா இருந்துச்சு. இளவரசியோட தோழிங்க எல்லாம் அதுக்கும் தோழி ஆகிட்டாங்க.

இப்படி எல்லாமே நல்லபடியா போயிட்டு இருந்தப்போ, ஒரு நாள் ராத்திரி இளவரசி தவளை க்ராக் க்ராக்ன்னு கத்துறத கேட்டுட்டா. அந்த சத்தம் வித்யாசமா இருக்கவே, இது மாதிரி நாமளும் பாட கத்துகிட்டா என்னன்னு இளவரசிக்கு தோணிச்சு.

இளவரசிக்கு அந்த யோசனை வந்த உடனே, தவளைக்கும் ரொம்ப சந்தோசம். இளவரசி முன்னாடி க்ராக் க்ராக்ன்னு அதிகமா கத்த ஆரம்பிச்சுடுச்சு. இளவரசியும் தவளை கத்துன சத்தத்துல சில வார்த்தைகள எடுத்துகிட்டு அழகழகான பாட்டுக்களா பாட ஆரம்பிச்சுட்டா. ரொம்ப சீக்கிரமே நாடு முழுக்க இளவரசியோட பாட்டு பிரசித்தி ஆகிடுச்சு.

இளவரசிக்கு கிடச்ச பாராட்டுக்கள கண்ட தவளைக்கு பொறாமை வர ஆரம்பிச்சுடுச்சு. நம்ம கிட்ட இருந்து பாட்டு கத்துகிட்டு இப்போ இந்த இளவரசி பிரபலமாகிட்டாளேன்னு மனசுக்குள்ள பொரும ஆரம்பிச்சிடுச்சு. அப்படியே இளவரசியோட தோழிகள் கிட்டயும் புலம்ப ஆரம்பிச்சுடுச்சு. போக போக தனிமைல சத்தம் போட்டு கூப்பாடு போடவும் ஆரம்பிச்சுடுச்சு.

இத கேட்ட இளவரசி தவளையோட அறியாமைய நினச்சு வருத்தப்பட, இளவரசியோட நல்ல தோழி, இளவரசிக்கிட்ட ஒரு விஷயம் சொன்னா. அது என்னன்னா, கத்துறதும், புலம்புறதும் தான் தவளையோட இயல்பு. அத தாண்டி அது வெளில வராது, வரவும் தெரியாது. ஆனா தன்னால தான் எல்லாமேங்குற அறியாமை மட்டும் இருந்துட்டே இருக்கும். குளத்துல இருந்த தவளைய அரண்மனைக்கு கொண்டு வந்தது தப்பு, அத குளத்துலயே விட்டுருங்கன்னு.

இளவரசிக்கு பாவமா இருந்தாலும் அது தான் சரின்னு பட்டுச்சு. தவளைய கொண்டு போய் குளக்கரைலயே விட்டுட சொல்லிட்டா.
இளவரசி மேலும் மேலும் தன்னோட திறமைய வளத்துக்குறதுல கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டா.

தவளையோ, இளவரசி தனக்கு துரோகம் செய்துட்டதா புலம்பி புலம்பி அந்த குளக்கரைலயே காலத்த ஒட்டிச்சு. தவளை கூட இருந்த வம்பு பேசுற தோழிகளும் வேற வம்பு கிடைச்சதும் தவளைய விட்டுட்டு போய்ட்டாங்க. இப்போ எல்லாம் தவளை கத்துரதே இல்ல...


என்ன செல்லங்களா, இந்த கதைல இருந்து நாம என்ன தெரிஞ்சுக்க விரும்புறோம்னா, நட்புங்குறது பொறாமைப்படுறது இல்ல. அப்படி பொறாமை பட்டா அது நல்ல நட்பே இல்ல. அதே மாதிரி திறமைங்குறது யார் கிட்டயும் கத்துகிட்டு வர்றதில்ல, அது அவங்கவங்க உள்ளிருந்து வர்றது. தவளை கத்துன மாதிரியே கத்திகிட்டு இருந்தா இளவரசியை பைத்தியம்ன்னு சொல்லியிருப்பாங்க. தவளையோட கத்தல் கூட தன்னோட கற்பனையையும் சேர்த்து இளவரசி பாடினதால தான் அவளால நல்லா வர முடிஞ்சுது. அதனால நண்பர்கள் பாத்து எப்பவும் பொறாமை படவே கூடாது, தலைக்கனமும் கூடாது, சரியா... இல்லனா தவளைக்கு நேர்ந்த மாதிரி தனியாவே புலம்பிட்டு இருக்க வேண்டியது தான். கவனிக்க யாருமே இருக்க மாட்டாங்க... 

Friday, 6 June 2014

நிலவறை



ஷ்ஷ்ஷ்..... சத்தமே போடாம வாங்க....

நாம இப்போ இதுவரைக்கும் போகாத ஒரு இடத்துக்கு போகப்போறோம்...

வாங்க வாங்க, வீட்டோட பின்வாசலுக்கு வாங்க. ஏங்க, கிணத்தடி பக்கமா இப்போ போக வேணாம், நாம போக வேண்டிய இடம் பின்வாசல் ஒட்டிய நிலவறை தான்.

பாத்து, பாத்து, இருட்டா தான் இருக்கும். ஆனாலும் சூரிய வெளிச்சம் மெல்லிசா உள்ள வந்துட்டு தான் இருக்கு பாத்தீங்களா? எதுக்கும் ஒரு மண்ணெண்ணெய் லாந்தர் கைல எடுத்துப்போம். மெதுவா கால்கள எடுத்து வச்சு படி இறங்குங்க.. பத்தே படிதான். தரை வந்துடுச்சு பாத்தீங்களா?

ஹோய், யாரது, நிலவறை கதவ மூடினது, வெளிச்சம் வர வேணாமா? அப்புறம் பின்னால வர்றவங்க கண்ணு தெரியாம குவிச்சி வச்சிருக்குற தேங்கா மேல இடறி விழுந்துட போறீங்க... ஜாக்கிரதையா வாங்க..

இங்க தேங்காய் கொட்டி கிடக்கு பாத்தீங்களா, கிட்டத்தட்ட நூறு தேங்கா, ரெண்டு மாசத்துக்கு தேவையானத சேமிச்சு வச்சிருக்கு. தேவைப்படுறப்போ அஞ்சாறு நாளைக்கு ஒருதடவ பத்து, பதினஞ்சு தேங்காய வெளில எடுத்துட்டு போய் உரிச்சி வச்சிக்கலாம்.

இந்தா அந்த பக்கம் விறகு அடுக்கி வச்சிருக்காங்க. மழை நேரத்துல விறகு எல்லாம் நனஞ்சுடக்கூடாதுல, அதே போல வெயில் நேரத்துல கரையான் அரிச்சுடும். அதான் பாதுகாப்பா இங்க கொண்டு வந்து வச்சிருக்காங்க.

செமையா மாம்பழ மணம் வருதே, மாம்பழத்த காணோம்ன்னு தேடுறீங்களா? ஹஹா, அதோ அந்த ஈக்காம்பெட்டி இருக்கு பாத்தீங்களா, அது நிறைய வைக்கோல் தெரியுதா? அதுக்குள்ள தான் மாம்பழம் இருக்கு. வைக்கோலுக்குள்ள வச்சி மாம்பழம் பழுக்க வச்சா மணமும் ருசியும் தனி தான், தெரியும்ல...

ஆத்தீ.... பாத்து வாங்க, மம்பட்டி, கொறடு, சாந்து சட்டி, அருவா, கடப்பாரை எல்லாம் இங்க தான் இருக்கு. வயல் வேலை நடக்கும் போது எடுத்துட்டு போய்டுவாங்க, இதெல்லாம் விவசாயத்துக்கு தான் பயன்படுத்துவாங்க. நீங்க பயப்படாதீங்க.

அடடே, நாம இப்போ கொஞ்ச நேரம் அந்த வைக்கல்கட்டு மேல உக்காந்து ரெஸ்ட் எடுத்துக்கலாம். அந்தா, அந்த வலது மூலைல செந்துளுவன் பழம் இருக்கு பாருங்க, அப்படியே அந்த குலையை தூக்கிட்டு வாங்க, ஆளுக்கொரு பழம் எடுத்து சாப்பிடலாம்.

என்னது, மாம்பழமா? அந்த ஈக்காம்பெட்டிய அப்படியே தூக்குங்க, புட்டு சாப்பிடும் போது, அது கூட சைட் டிஷ்ஷா வெட்டி வச்சி சாப்பிடலாம்.

பாத்தீங்களா, உங்கள சுத்திக் காட்டுற உற்சாகத்துல வந்த வேலையை மறந்துட்டேன்....

குட் மார்னிங்...

Monday, 2 June 2014

சுறா, நீயா நானா? மற்றும் டிஸ்கவரி தமிழ்


நேத்து சுறா படம் பாத்த எப்பக்ட் - இன்னும் மயக்கம் தெளியல

அத போய் யாரு பாக்க சொன்னான்னு எல்லாம் கேக்காதீங்க, லேப் டாப் தான் போச்சே, கொஞ்ச நேரம் டிவி பாக்கலாம்ன்னு தான் அந்த பக்கமா போனேன். அதுவும் ரொம்ப வருஷம் கழிச்சு முதன்முறையா டிவி பாக்க போனேன். நான் டிவிய ஆன் பண்ணின உடனே சன் டி.வில சுறா படம் தான் ஓடிச்சு.

சரி, இந்த படத்த தான் பேஸ் புக்ல கழுவி கழுவி ஊத்துறாங்களே, இப்படி வரலாற்று சிறப்பு மிக்க படத்த பாக்கலனா எப்படிங்குற ஒரு ஆர்வத்தோட தான் படம் பாக்க உக்காந்தேன்.

அட, நல்லா தான போயிட்டு இருந்துச்சு. இந்த தமனா புள்ள இருக்கே, அத அப்படியே மெழுகு பொம்மையா செய்துட்டு இருந்தப்போ உள்ள ஒரு பேட்டரி வச்சி தூக்கிட்டு வந்துட்டாங்க போல. அது பேசினது வசனமாங்க?

இப்போ உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு கேக்குது. எனக்கு தமனாவ பிடிக்கலன்னு நீங்க நினைக்குறீங்க.... அதானே இல்ல... ஆனா ஒண்ணுங்க, சில பேர பாத்தா புடிக்காது, பாக்க பாக்க தான் புடிக்கும் (இது தனுஷ் டயலாக்ன்னு காமடி பண்ணக்கூடாது, இங்க இப்போ இது காயு டயலாக்). இந்த புள்ள லூசா இருந்தாலும் கத போகுற போக்குல இத பாத்தா சிரிப்பு சிரிப்பா தான் வந்துச்சு.

ஏன்மா? அந்த ரமேசுக்கு முன்னால வேற யாரும் உன்ன விட்டுட்டு ஓடி போகலையா? இத்தன வயசு வர எப்படி கடல்ல குதிக்காம இருந்த? அப்புறம், கடல்ல விழுந்தா மேக்அப் தண்ணி பட்டு கரைஞ்சு போய்டும் கண்ணு, நீ ஏன் ஏசியன் பெய்ன்ட் ட்ரை பண்ணக் கூடாது?

இதுல எனக்கு இன்னொரு டயலாக் ரொம்ப பிடிச்சுது. அது என்னன்னு நான் சொன்னா இங்க யாரும் கொடி புடிச்சுட்டு சண்டைக்கு வரக்கூடாது சரியா. ஹிஹி பளிச்சுன்னு "எங்கப்பா ஒரு டம்மி பீசு"ன்னு படக்குன்னு சொல்லுமே, நான் கெக்கே பிக்கே, கன்னாபின்னான்னு சிரிச்சுட்டேன்.

அடுத்ததா வடிவேலு. வெறும் அவ்வ்வ்வ்ங்குற ஒரு சத்தத்த (இது சத்தம் தானே, வார்த்த இல்லீல) வச்சுகிட்டு மனுஷன் என்னமா நடிக்குறார்யா... டைப் டைப்பா அவர் மூஞ்சிய மாத்துற அழகு இருக்கே. ஹலோ வடிவேலு, ஐ லவ் யூ. அந்த இத்துனூண்டு குரங்கு மூஞ்சிக்குள்ள எத்தன கலைஞன் ஒளிஞ்சி இருக்கான் பார்யா... அப்புறம் விஜய வாடா போடான்னு சொல்றாரா, நமக்கு வடிவேலு தான் ஹீரோ மாதிரி தெரிஞ்சார்.

இப்படி எல்லாமே நல்லாதாங்க போயிட்டு இருந்துச்சு. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா என் மண்டைக்குள்ள யாரோ வந்து நல்லா குழப்பி விட்டுட்டாங்க...

எப்பவுமே கேள்வி கேட்டே பழகிட்டேனா, இப்போ நான் கேள்வி கேக்குறேன், நீங்க பதில் சொல்லுங்க சரியா?

சுறாவுக்கு லட்சியம் வீடு கட்டுறது தானே, அப்புறம் எதுக்கு  அவ்வளவோ பெரிய காரு, கண்ணாடி, தொப்பி, கோட்டு, சூட்டு, சூ?

தன்னை விட பெரிய பணக்காரங்கள ஒரு சொட்டு சயனைட்ல சைலென்ட்டா மேல அனுப்புற வில்லன் ஏன் சுறா பின்னால லோலோன்னு அலையுறார்?

அப்புறம், வேறென்ன சந்தேகம்?

ம்ம்ம்ம் வந்து, வந்து.... ஐயோ, நான் யாரு, எங்க இருக்கேன்?
ஆமா, நீங்க எல்லாம் யாரு?
............................................................................

சுறா படம் பாத்துட்டு இருக்குறப்பவே அப்பப்போ விளம்பர இடைவேளைல வழுக்கிகிட்டு போய் அதாங்க ஸ்கிப் ஆகி (அது ஸ்லிப்ன்னு எனக்கு டியூஷன் எடுக்காதீங்க, ப்ளீஸ், நானே கன்பீஸ்ல இருக்கேன்) விஜய்டிவி பக்கமா போய் விழுந்துட்டேன்.

அட, நம்ம நீயா நானா கோபிநாத் நாட்டுக்கு முக்கியமான அதி தீவிரமான விசயத்த பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தார்.

உங்களுக்கு உங்க ஹஸ்பன்ட் எப்படி எல்லாம் ரொமான்ஸ் பண்ணனும்ன்னு ஆசையா இருக்குன்னு நாட்டுக்கு முக்கியமான ஒரு கேள்விய கேட்டார். உடனே மடை திறந்த வெள்ளமா வந்துச்சு பாருங்க பதில்கள். அட, அட, அட, நான் அப்படியே அசந்துட்டேன்.

இதுல ஒருத்தங்கள காலைல பக்கத்துல வந்து உக்காந்து கிஸ் பண்ணி எழுப்பி விடணுமாம். இன்னொருத்தங்க பைக்ல போகும்போது அப்படியே தோள்ல கை போட்டுட்டே தான் போகணுமாம் (நல்ல வேளை, இங்க தான் சுறா படம் என்னை இவங்க கிட்ட இருந்து காப்பாத்திச்சு).

இதுல ஒருத்தங்களுக்கு சினிமா பாத்து, அப்படி எல்லாம் நடந்துக்கணும்ன்னு ஆசை வந்துச்சாம்? எங்க போய் முட்டிக்க?

ஆனா இங்க கூட ஆன்னு வாய தொறந்துட்டேஒரு விஷயம் ரசிச்சேன்ங்க.

ஒருத்தங்க சொன்னாங்க, எல்லாரும் பீச்சுக்கு ஜோடியா தான போவாங்க, இவரு தனியா போவார்ன்னு. என்னாடா இது புதுமையா இருக்குன்னு கொஞ்சம் நிமிர்ந்து உக்காந்து, கேமராவ அந்த பக்கம் திருப்புனா, நான் சின்ன வயசுல இருந்தே தனியா தானே போவேன்ன்னு அப்பாவியா மூஞ்சி வச்சுட்டு சொன்னார் பாருங்க, ஏன் சார், நீங்க எப்பவுமே இப்படி தானா? இல்ல, இப்படி தான் எப்பவுமேவா?

பாவங்க, அவருக்கு சத்தம் போட்டாலாம் பிடிக்காதாம். அப்படியே அமைதியா அரை மணிநேரம் கடலை பாத்துட்டே இருக்கணுமாம். இதுல சார் அஞ்சு வருஷம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டாராம். அவர லவ் பண்ணுன அந்த பொண்ண கையெடுத்து கும்பிடணும். ஒரே ஒரு ரோஸ் வாங்கி குடுங்கன்னு கெஞ்சோ கெஞ்சுன்னு பப்ளிக்ல கெஞ்சுது. ஹஹா கல்யாணத்துக்கு முன்னால கேட்டா இதெல்லாம் தப்பு, அப்புறம் பாத்துக்கலாம்ன்னு சொல்லுவாரு, இப்போ கேட்டா வீட்ல பசங்க இருக்காங்கன்னு சொல்றாருன்னு அவங்க பீல் பண்ணப்போ, ஏன்யா, ஒரு ரோஜாப்பூ வாங்கி குடுக்க அறுபது வருசமாயா காத்திருக்கணும்?

இதுல பொண்டாட்டி குடுத்த கிரீட்டிங் கார்ட் பத்தி ஒரு கமன்ட் குடுத்தார் பாருங்க மனுஷன். ஒரு தாள குடுத்தா எவ்வளவு நேரம் தான் பாத்துட்டு இருக்க முடியும்? கொஞ்ச நேரம் பாத்துட்டு அப்புறம் தூக்கி போட்டுற வேண்டியது தான். அத என்ன பிரேம் போட்டா மாட்ட முடியும்?

அண்ணே, உங்க பீலிங்க்ஸ் நியாயம் தாண்ணே... உங்க பொண்டாட்டிகிட்ட தாராளமா பொறுமையா இருக்குறது எப்படின்னு எல்லா பொண்ணுங்களும் டியூஷன் போகலாம்.

அப்புறமா, இந்த நகரத்து பொண்ணுங்க என்னமோ வீனஸ்ல இருந்து குதிச்சு வந்த மாதிரி கிராமம்னா ஒரு வாழத் தகுதி இல்லாத இடம் மாதிரி பீல் பண்ணிட்டு இருந்தாங்க. இங்க நகரத்து பொண்ணுங்க மட்டுமே இருந்ததால அவங்க அலட்டல மட்டும் தான் பாக்க முடிஞ்சுது. என்னவோ, பொண்ணுங்களே அலட்டல் பேர்வழின்னு ஒரு கணம் எல்லார் மனசுலயும் வந்துட்டு போயிருக்கும். நகரத்து ஆண்கள் கிட்டயும் கேட்டுருந்தா தானே அவங்களும் கிராமத்த சீப்பா நினைக்குறாங்கங்குறது தெரிய வரும்.. என்னவோ போங்கப்பா... நான் பேசாம தூங்க போறேன்...
........................................................................................

ஆங்க்..... பாத்தீங்களா, சுறா படத்தையும் கோபிநாத்தையும் பாத்த எபக்ட்ல நான் ரசிச்ச இன்னொரு விசயத்த மறந்தே போயிட்டேன். இது இது ரெண்டும் பாக்குறதுக்கு முன்னாடி பாத்தது. நீங்க, இவ்வளவு நீள பதிவுல இத வாசிப்பீங்களான்னு தெரியல... ஆனாலும் நான் ரசிச்சத சொல்லிறணும்ல.

டிஸ்கவரி தமிழ்....

கூட்டமா இடம் விட்டு இடம் நகர்ருற உயிரிணங்கள பத்தினது. நிஜமாவே மலைச்சு தான் போயிட்டேன்.

முட்டை விட்டு தன்னோட சந்ததிய பெருக்க பெரிய ரிஸ்க் எடுத்து, காட்டுல இருந்து கடலுக்கு போற சிகப்பு நண்டுகள், மனுசனோட தவறால லெச்ச கணக்குல பெருகி இப்போ ஆறோட பொருளாதார வளத்தையே அழிக்குற மீன்கள், கும்பலா கிளம்பி வர்ற வவ்வால்கள்ன்னு எல்லாமே பிரமிப்பா தான் இருந்துச்சு. இயற்கை, எப்பவுமே அழகு தாங்க...

வாழ்க்கைல ஒரு பகுதிய தெளிஞ்ச நீரோடை, பச்சை பசேல்ன்னு காடுன்னு வாழ்ந்து பாத்துடணும்....
.............................................................................................

அப்புறம், இந்த போஸ்ட்ல நான் போடுற படம் ஏதும் நல்லா இல்லனா என்னைய திட்டிராதீங்க, நானே இருட்டுல தடவி தடவி, குத்து மதிப்பா போட்ருக்கேன். லேப் டாப்ல கண்ணே தெரியல. டிஸ்ப்ளே மாத்தணும். மறுபடியும் ஆன்லைன் வரணும்னா ஒரு மாசம் கூட ஆகலாம். 

Wednesday, 28 May 2014

சந்திரமண்டலம் போவோமா?


ரொம்ப நாளா உங்கள எல்லாம் சந்திரமண்டலத்துக்கு கூட்டிட்டு போகணும்ன்னு ஆசை. அதனால வாங்க, முதல்ல உங்கள வேற ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன். 

இப்ப நாம நின்னுட்டு இருக்குறது மொட்டை மாடி. அங்க இருந்து பாத்தா சந்திர மண்டலம் தெரியுது பாருங்க...

என்னது, தெரியலையா?

அதெப்படி, நான் தான் தெரியுதுன்னு சொல்லிட்டேனே, அப்புறம் ஏன் தெரியாது?

சரி சரி, ரொம்ப பிகு பண்ணாதீங்க, இந்தா ஒரு தீபாவளி ராக்கட் வந்து மொட்டை மாடியில லேன்ட் ஆகுது பாத்தீங்களா, இது மேல ஏறிக்கோங்க, நாம சந்திரமண்டலம் போய்டலாம்...

இப்போ நாம விண்வெளில பறந்துட்டு இருக்கோம். பஞ்சு பஞ்சா மேகங்கள். எவ்வளவு அழகு பாத்தீங்களா? ஹலோ யாருங்க, மேகத்த பஞ்சு மிட்டாய்ன்னு நினச்சு திங்குறது? அட, தின்னாலும் பரவால, இனிப்பு இல்லன்னு சலிச்சுக்க வேற செய்றீங்க, பேசாம பயணத்த கண்டிநியூ பண்ணுங்க, இல்லனா ராக்கெட் அடியில தண்ணி ஊத்தி அணைச்சுடுவேன்.. ஆங்க்... அந்த பயம் இருக்கட்டும்.

ஆஹா... கிலோ கணக்குல தங்க பூக்கள கொட்டி வச்ச மாதிரி இந்த நட்சந்திரங்கள் என்னமா ஜொலிக்குது பாருங்க. ஹே ஹே... நட்சத்திர பூக்கள் என்ன நம்ம ஊரு பூ மாதிரி சாப்ட்டாவா இருக்கும்? சுட்டுடும்... பாத்து பறிச்சுக்கோங்க. கிறிஸ்த்மஸ் அன்னிக்கி நம்ம வீட்ல அலங்காரமா கோர்த்து தொங்க விடலாம்.

அச்சச்சோ, அப்படியே வலது பக்கமா திரும்புங்க, உடனே திரும்புங்க, சீக்கிரம் சீக்கிரம், ஒரு எரி நட்சத்திர கல்லு நம்மள நோக்கி தான் வந்துட்டு இருக்கு. ம்ம்ம்ம் வேகமா போங்க, அப்படியே வலது பக்கம் தான்... ஆமா, ஆமா அப்படி தான்... ஹப்பாடி, நூலிழை இடைவெளில தப்பிச்சாச்சு.

வாங்க, இன்னும் மேல மேல மேல பறக்கலாம்... 

அந்தா, கொஞ்சம் நிலப்பரப்பு தெரியுதே, அங்க தான் நாம தரையிரங்கணும். அட, மெதுவா குதிங்க, என்னமோ திருட்டு பஸ் ஏறிட்டு கண்டக்டர் பாக்குறதுக்கு முன்னாடி குதிக்குற மாதிரி குதிக்க பாக்குறீங்க.. இது நிலாங்க... அதான் சந்திரன். நாம இறங்கி இருக்குறது சந்திர மண்டலம். இங்க காற்றுல மிதக்குற மாதிரியே தான் ஒவ்வொரு அடியா எடுத்து வைக்க முடியும். ரெடி, ஒன், டூ, த்ரீ... ஜம்ப்.. 

அப்படியும் இப்படியுமா,ஒருவழியா சந்திர மண்டலத்துக்கு வந்து சேர்ந்தாச்சு. ஏன்ப்பா அந்த டீக்கடை எங்க இருக்குன்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்க, ஒரே டயர்ட். இனிமேல் இந்த தீபாவளி ராக்கெட் மேல எல்லாம் ஏறி வரக்கூடாது. பத்ரமா சைக்கிள்லயே வந்துடணும். அஞ்சலி பாப்பா மட்டும் தான் சைக்கிள்ல விண்வெளி போகணுமா என்ன?

அப்படியே அந்த வடை சுடுற பாட்டி எங்கன்னு தேடுங்க, நல்ல ஆம வடையா வாங்கி திங்கணும். கூடவே இட்லி சப்ளை பண்றாங்களான்னும் பாக்கணும். பசிக்குதுல..

ஹஹா பாத்தீங்களா, பசி வந்த உடனே உங்கள மறந்துட்டேன், சரி சரி, நீங்களும் பாட்டிய கண்டுபிடிச்சு போய் சாப்பிடுங்க. 

அப்புறம், இன்னொரு விஷயம் மறந்துட்டேனே......

குட் மார்னிங்